32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே. ஈசனின் இடபாகத்தில் இருக்கும் தேவியே மண் பெண் பொன் எனும் மூன்றின் ஆசைக் கடலில் சிக்கி இரக்கமற்ற யமனின் பாச கயிற்றுக்கு அகப்பட்டு துன்ப்படும்படி இருந்த என்னை மணமுள்ள தாமரை மலரை போன்ற திருவடியை என் தலையின் மேல் வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட…

31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர் அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால் பெற்று எடுக்க இனி தாயும் இல்லை…

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும் தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும் தவம் செய்பவர்கள் பெறும்  ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும் மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!

உரையாடலின் ஒரு பகுதி  124

நான் ஒரூ மனிதன் எனும் நிலையில் இருந்து இயந்திரம் எனும் நிலைக்க மாறிவிட்டோம் ஆமாம் நீங்கள் செய்வது எல்லாம்  உங்கள் திறமை, தேர்ச்சி காரணமாக தானியங்கி மயமாகியிருப்பதை அறிவீர்கள் அப்படி தானியங்கிமயமாவதே வாழ்க்கையின் வெற்றி நிலை என்ற சிந்தனை எப்படியோ எந்த காலத்திலோ ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் கல்வி மூலமாகவோ, உங்களின் சூழ்நிலை மூலமாகவோ அறிந்து அதை பிடித்தே உயிரற்ற இயந்திரமாய் இருந்து கொண்டு உங்கள் குழந்தைகள் முதற்கொண்டு மற்றவர்களையும் இயந்திரமாக்க எல்லா முயற்சிகளை எடுத்துக்கொண்டு…

உரையாடலின் ஒரு பகுதி  123

கார் ஒட்ட கற்றுக்கொள்ளும் போது இருந்த கவனம் நீங்கள் ஒட்டுவதில் தேர்ச்சி அடைந்ததும் உங்களிடம் இருக்கிறதா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் அப்போது உங்களுக்கு தெரியும் நீங்கள் இது போல் எத்தனை விஷயங்களில் பிளவு பட்டு சிதறுண்டு இருக்கின்றீர்கள் என்று இன்னும் சரியாய் உங்களை நீங்கள் பரிசோதித்து பார்த்தீர்களானால் கலவியில் கூட நீங்கள் செயலில் இருப்பீர்கள் கவனத்தில் இருந்திருக்க மாட்டீர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை கண்டு கொள்வீர்கள் அப்போது உங்களுக்கு புரியும்

உரையாடலின் ஒரு பகுதி  122

நாம் எல்லா வேலைகளையும் சரியாக செய்கிறோம் இன்னும் சொன்னால் திறமையோடும் செய்கிறோம் ஆனால் கவனமோடு செய்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் பைக் ஒட்டுகிறீர்கள், கார் ஒட்டுகிறீர்கள் உண்மையாய்  சொன்னால் சரியாய் ஒட்டுகிறீர்கள் திறமையுடனும் ஒட்டுகிறீர்கள் ஆனால் கவனமாய் ஒட்டுகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்

உரையாடலின் ஒரு பகுதி  121

உண்மையில் நாம் நமக்குள் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை நம்மை சுற்றியும் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை உண்மையை சொல்லப் போனால் நமக்கு நம்மிடமும் கவனம் இல்லை நம்மை சுற்றி நடப்பவற்றிலும் கவனம் இல்லை

உரையாடலின் ஒரு பகுதி  120

இதில் ஒற்றுமையை யார் செய்வார்கள் அடுத்தவர்களா அடுத்தவர்களால் செய்ய முடியுமா? அப்படி அடுத்தவர் செய்தால் அசிங்கமில்லையா அந்த அசிங்கம் நமக்கு தேவையா அதனால் நாம் அசிங்கப்டாமல் இருக்க நமக்குள் ஒற்றுமையை நாமே உருவாக்குவோம் நமது சிந்தனை உணர்வு செயல் இந்த மூன்றையும் ஒவ்வொரு வினாடியும் ஒற்றுமையாய் இருக்கும்படி செய்வோம் அப்படி செய்ய முயற்சியையும் பயிற்சியையும் மேற்கொண்டு அதில் நிற்போம் அப்படி நின்ற பின் நாம் அடுத்தவரிடம் ஒற்றுமையாய் இருப்பது பற்றியும் அடுத்தவருக்கு ஒற்றுமையை பற்றியும் உபதேசிப்பதையும் செய்வோம்.

உரையாடலின் ஒரு பகுதி  119

நமக்குள் நாம் எத்தனை முரண்பட்டு இருக்கிறோம் ஒவ்வொரு வினாடியிலும் இதை என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா, கவனித்தது உண்டா நாம் ஒரு செயல் செய்து கொண்டிருப்போம் எண்ணம் வேறு ஒன்றில் பிரயாணபட்டு கொண்டு செல்கிறது எண்ணம், செயல் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறது என்றால் நமது உணர்வுகள் வேறு பக்கம் ஒடுகிறது.   இப்படி பிரிந்து பிளவுபட்டு இருப்பதை ஒன்றாக்க வேண்டாமா இதில் நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டாமா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  94

நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர்  அனைவரிடமும்  ஆன்மா உள்ளது   

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  93

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  92

குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான் . அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப் பற்றி எண்ண என்னதான்  இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  91

ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   90

அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை

கீதைகள் மொத்தம்\ – 60 – 47 to 50

*விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி,…

கீதைகள் மொத்தம்\ – 60 – 43 – 46

*சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்படுகிறது. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில் சூர்யன் தனது சாரதியான அருணனிடம்…

கீதைகள் மொத்தம்\ – 60 – 38 to 41

*மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு கூறுவது. *வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின் சொற்பொழிவு. வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது. ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கு ம் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய விரும்புவோருக்கும் சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன் செபவருக்கும், வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும் இந்த கீதை பொருந்துகிறது.…

கீதைகள் மொத்தம்\ – 60 – 35 to 38

*பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கீதை கொண்டுள்ளது. *போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல். மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது. *யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம், பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம்…

கீதைகள் மொத்தம்\ – 60 -31 to 34

*ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள். ஈஸ்வர கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும் . பகவத் கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல் மற்றும் சிவபெருமானிடம் சரணடைதல் ஆகியவை சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும் விடுதலையும் அடையச் செய்கிறது என்பதை விளக்குகிறது. *கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது. கணேஷ புராணத்தின் க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. *தேவி கீதை*…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு இருந்தால்:-எதிரிகளால் அபாயம், மறைமுக நோய், பாக்கியம் இல்லாததிருத்தல், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கடன் தொல்லை பிதா ஆதரவு இல்லாதிருத்தல், மேலோர் சாபம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி தன் ஊரைவிட்டு வெளியேறுதல், சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம், இரகசிய மனவருத்தல், நிலையான புத்தி இல்லாமை, எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள், பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல், இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு, அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.

நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8

கடக  லக்னம். லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு, தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம், குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை, தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். ராகு நின்றால்:-  பொருளாதார பாதிப்பு, பிற மதத்தினரால் வரும் கெடுதல் விஷபயம், மாந்திரீக தொல்லை அறுவறுக்கத் தக்க நோய்கள் மன பேதம், செயற்கை மரணம். கேது நின்றால்:- நாஸ்தீக தன்மை.  பிற மதத்தினால் வரும் பயம் தொல்லைகள், விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்து, துர்தேவதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு கெட்ட ஆவிகளின் தொல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே. பேரழகியே என் கர்மத்தால் வந்த பிறவியை தகர்த்து என் உள்ளம் உருகும்படியான அன்பை உண்டாக்கி தாமரை போன்ற நின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் தொண்டினை தந்தாய் என் கர்மத்தால் விளைந்த என் நெஞ்சில் இருந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற அழுக்கையெல்லாம் நின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே. பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர் நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே, என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே. மும் மூர்த்திகளின் தாயே உலகின் உயிர்கள் அனைத்திற்கும் பிறவி பிணியை போக்குவிக்கும் அருமருந்தே முற்பிறப்பின் நின் அடியார்களின் பின் சென்று அவர்களுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து பிறவி பிணியை நீக்கும் தவங்களை செய்து வைத்த நான் உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே மாணிக்கமே – மாணிக்கத்தின் ஒளியே அப்படி ஒளிரும் மாணிக்க கற்களால் செய்த ஆபரணத்தை அணிந்தவளே நீ அந்த ஆபரணம் அணிந்ததால் அந்த ஆபரணத்திற்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகி இருப்பவர்களுக்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகாமல் இருப்பவர்களுக்கு நோய் போன்றவளே உன்னை அணுகிய பக்தர்களுக்கு பிறவியெனும் நோயை போக்குபவளே,…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே. என்னுடைய மனதில் நின் திருகோலத்தை தவிற வேறு எதையும் நினையேன் நின் அன்பரை தவிர வேறு யாருடனும் இணையமாட்டேன் .மூன்று உலகத்துள்ளும் அதையும் தாண்டியிருக்கின்ற பொருளாய் இருந்தாலும் எதனுடனும் இல்லாதிருப்பவளே, பக்தர்களின் உள்ளத்தே இன்பத்தை சுரக்க வைக்கும் ஆனந்த கள்ளே என் கண்ணின் மணி போன்றவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன் இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே. கொடி போன்றவளே இளைய வஞ்சி கொம்புக்கு இணையானவளே எனக்கு பக்குவமில்லா நிலையிலும் அருள் புரிந்த தேவி வேதமாகிய மலரின் மணத்தை உடையவளே இமயத்தில் இங்கும் அங்கும் விளையாடும் யானையே பிரமன் முதலான தேவர்களை  பெற்ற தாயே நான் இவ்வுலகில் இறந்த பின் மீண்டும் பிறவாமல்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே. நித்திய மங்களையாகிய அபிராமி அம்மை சிவந்த கலசத்தை போன்ற தனங்களும் மலை மகள் நிறம் பெற்ற சங்காலாகிய வளையல்கள் கொண்ட சிவந்த திருகரங்களை உடையவள் எல்லா கலைக்கும் தலைவி மயிலை போன்றவள் பாய்ந்து வரும் கங்கையினை தன் முடியில் தாங்கிய சிவபிரானின் இடபுறத்தை கொண்டவள் பொன் நிறம் படைத்த…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ, அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ, மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. பூரண அருளால் நிறைவான நித்திய மங்கலையே நீ வாசம் செய்யும் ஆலயம் நின் பதியாகிய சிவனின் ஒரு பக்கமோ அல்லது நின் புகழை எப்பொழுதும் பாடும் வேதங்களின் மூலமோ அல்லது அவற்றின் முடியாய் விளங்குகின்ற உபநிடதங்களோ அமுதம் நிறைந்த வெள்ளிய சந்திரனோ வெண் தாமரையோ அல்லது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 கோணங்கள் ஒளி வீச காரணமாய் உள்ள தாயே நின் திருவடிவை புறக்கண்ணிலும் அந்த தேஜஸ்யை அகக்கண்ணிலும் கண்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்த வெள்ளத்திற்கு கரைகளே இல்லை இந்த காட்சியின் அருளுள் என் உள்ளத்து உள்ளே மெய்ஞானம் விளங்குகின்றது. இவ்வளவு பேரருளை செய்வதற்கு காரணம்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. அம்மையே உன்னால் அடையப்பெற்ற வாம பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் கோலமும் உங்கள் திருமண கோலமும் என் உள்ளத்து உள்ளே இருந்த ஆணவத்தை போக்கி தெளிவு பொலிவு பெற்ற திருவடிகள் என் உயிரை பறிக்க பாசக் கயிறுடன் காலன் என் முன் வரும்…

உரையாடலின் ஒரு பகுதி  118

ஆனாலும் நாம் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய தொண்டை வரள பேசிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கிறோம் எத்தனை அபத்தம் இது எத்தனை ஏமாற்றுத்தனம் இது ஆனால் கொஞ்சம் கூட கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் இதை செய்து கொண்டே இருக்கிறோம் நமக்கு பின் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம்

உரையாடலின் ஒரு பகுதி  117

 ஒற்றுமை என்றால் என்ன? ஒன்றாய் இருத்தல் இணைந்திருத்தல்  கருத்தொருமித்து இருத்தல் என்று நிறைய  வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அதன் பொருளை அறிந்து அதனை நம்முள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோமா  என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எதையும் நம்மிள் இருந்தே தொடங்க வேண்டும் என்ற நியதியின் படி ஒற்றுமையை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் நாம் எத்தனை விதமாய் பிளவுண்டு சிதறி போயிருக்கிறோம் என்பதே நமக்கு தெரிவதில்லை அதை தெரிந்து கொள்ளும் ஆவலும்…

உரையாடலின் ஒரு பகுதி  116

ஒற்றுமை எனும் வார்த்தையை கேட்டவுடனேயே நமக்கு தோன்றுவது அண்ணனிடம், அக்காவிடம், தம்பியிடம், தங்கையிடம், அம்மாவிடம், அப்பாவிடம், மனைவியிடம், குழந்தைகளிடம், நண்பர்களிடம் என்று தான் தோன்றுகிறதே தவிர தன்னிடம் தான் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை என்னிடம் நான் ஒற்றுமையாய் இருப்பதா இது என்ன புது பைத்தியகாரதனமான பேச்சாய் இருக்கிறது என்றுதான் மனமும் அறிவும் சிந்திக்கிறதே அல்லாமல் இது என்ன? என்ன சொல்ல வருகிறது என்று கூட யோசிப்பதில்லை காரணம் நம் கல்வி, அறிவு, மற்றும் சூழ்நிலைகள்

உரையாடலின் ஒரு பகுதி  115

ஒன்றை கவனித்து மனதில் கொள்ளுங்கள் சிலரிடம் காணப்படும் பதற்றம் படபடப்பு ஆர்பாட்டம் உற்சாகம் அல்ல உண்மையான உற்சாகத்தில் படபடப்போ, ஆர்ப்பாட்டமோ, பதற்றமோ இருக்காது.

உரையாடலின் ஒரு பகுதி  114

நாம் ஒரு லட்சியத்தை குறிக்கோளை வைத்திருந்தால் அதற்கு தக்கபடி நாம் மாறியே ஆக வேண்டும். நாம் மாறும் விதம் அல்லது மாறிய விதம் உறவினர்களாலோ அல்லது நண்பர்களாலோ கேலி செய்யப்பட்டாலும் நாம் நம் குறிக்கோளை அடைய நாம் மாறிவிட்டோம் என்று அவர்களுக்கு காட்டியபடி இருக்க வேண்டும் அப்போது தான் இலக்கை அடைய முடியும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 163

முடிந்தவரையில் மலத்தைக் கழித்துக் கொள்ளவும் உட்டியாணா, நெளலி சில தடவைகள் செய்து வயிற்றுச் சதைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவும், சுமார் முக்கால் அல்லது ஓரடி உயரமுள்ள முக்காலி மேல் அகலப் பாத்திரத்தில் சுமார் அரைப்படி தண்ணீரை ஊற்றி அமர்த்தவும், மூங்கில் குழாயின்  மேல் சுமார் நான்கு அங்கலத்திற்கு வெண்ணெய், நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசவும். மலப்போக்குக் காலத்தில் முக்கி மலத்துவாரத்தைத் திறப்பது போலத் திறந்து, எண்ணெய் தடவிய மூங்கில் பாகத்தை ஆசனவாய் வழியாய்  மலக்குழாய்க்குள் சுமார் மூன்றங்குலம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 162

இதை செய்ய விரும்புவோர், சுமார் ஆறு மாதங்களாவது உட்டியாணா, நெளலியுடன் யோகாசனங்களைப் பழகி இருக்க வேண்டும்.  சிரமமின்றி நெளலி எந்நிலையிலும் செய்ய வேண்டும். இக்கிரியை நெளலி செய்யும் பொழுது, மலத்துவாரம் திறந்தே இருக்க வேண்டும். கருவியின்றி இது சாதாரணமாய் இயலாது.  இதற்காக ஒரு மூங்கிலை உபயோகிக்கலாம். இதை எட்டங்குல நீளமுள்ளதாயும், தடுப்பற்றதாயும் அமைத்துக் கொள்ளவும், காலையில் இதைச் செய்வதே உத்தமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 161

உலக வாழ்க்கையில் ஈடுபட்டுப் பயிலும் சாதகர், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும். அன்று சிறிதளவு சத்துள்ள ஆகாரத்தை உட்ககொள்ள வேண்டும். மோரும், கீரையும் சேர்க்கவும், பருப்புகளை விலக்குவது உசிதம். பாசிப்பருப்பு கஞ்சி நன்மை தரும். அன்று உடலுழைப்பு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 160

மந்திரத்தை நம்பாத நாகரீகரும், ஆங்கில வைத்தியர்களும் வேறு காரணமில்லாத காரணங்களைக் கற்பனை செய்து கொண்டார்கள். ஆன்ட்டி பெரிஸ்டால்டிக் ஆக்ஷன் ( ANTI-PERISTALTIC  ACTION ) என்பதால் முடிகிறதென்று பிதற்றினார்கள். ஏழைகளை ஏமாற்றினார்கள்.  ஏழைகளை ஏமாற்ற எண்ணிய பல பைராகிகள், இதை காசுக்குச் செய்து காண்பித்து வந்தார்கள். இதன் காரணம் உடல்சாதனை ஹடயோகியால் கண்டுபிடிக்கப் பட்டது. நிகரற்றது, பலன் பெற்றது, எவரும் பழகியாள முடியும். இதன் நுட்பத்தையறியுமுன் பழகும் வகையை கவனிப்போம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 159

பிரமிக்கச் செய்யும் பஸ்தி உட்கார்ந்த நெளலி வந்த பிறகே, விசித்திரமான ‘பஸ்தி’ என்ற கிரியை கைகூடும்.  மலச்சிக்களை ஒழிக்கவும், நெருங்கவிடாமல் தடுக்கவும் இதைக் கையாளலாம்.  முன்காலத்தில் சாதகர்கள் தண்ணீரின் மேல் உட்கார்ந்து மலத்துவாரம் வழியாய் நீரை உள்ளிழுத்துக் குடலைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.  இப்படிச் செய்ய மலக்குழாய் உள்சதைகளினாட்சி (  CONTROL OF THE SPHINCTER  MUSCLES ) வேண்டும். சாதாரணமாக இதைச் சுலபத்தில் பெறமுடியும். இதன்  இரகசியத்தை அறியாத மக்கள் இந்தக் கிரியையை ‘ஜால’ வித்தை…

பழ மொழிகள் 20

ஒளவை வாக்கு செவ்வை வாக்கு. புலி இல்லாத ஊரில் பூனை தான் ராஜா. பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற அணிகலன் வேறில்லை. ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். எறும்பு ஊறக் கல்லும் தேயும்.

பழ மொழிகள் 19

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ? அரைக்கிணறு தாண்டுவது ஆபத்தானது. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள். உனக்கு நேரமிருந்தால் காலத்திற்காகக் காத்திருக்காதே

பழ மொழிகள் 18

பேராசையின் இருப்பிடம் நிம்மதியின் இறப்பிடம். வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு. வில்லம்பை விடச் சொல்லம்பு வேதனை தரும். அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

பழ மொழிகள் 17

இதயத்தின் மொழி பெயர்ப்பு தான் வாய். இனிய முகம் உறவை வளர்க்கும். பணமில்லாத வியாபாரி நிலமில்லாத விவசாயியைப் போன்றவன் ஆத்திரம் அறிவுக்கு எதிரி. பெண்கள் இருக்குமிடம் சண்டைகள் பெருகுமிடம்.

பழ மொழிகள் 16

அகம் குளிர முகம் மலரும். அகப்பை அறுசுவை அறியுமா? அச்சம் ஆண்மையைக் குறைக்கும். அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா? அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 16

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்குசென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 15

தேப்பெருமாநல்லூர் குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 14

நஞ்சன்கூடு கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 13

சுருட்டப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 12

திருவோத்தூர் காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும் கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே இந்த அளவிற்கு பெரியவளான நீ இரங்கத்தக்க எளியேனின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார், மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. இனிய இசையின் ராகங்களை ஒத்த மொழிகளை பேசும் நல்ல வாசனையுடைய மேனியை உடைய யாமளை யாகிய பச்சை கிளியே முன் பிறவிகளில் நின் திருவருளை பெற பலகோடி தவங்களை செய்தவர்கள் இப்பூமியின் உள்ளசெல்வமாகிய அரசு செல்வம் போன்ற இவற்றை மட்டுமா பெறுபவர்கள்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே. தேவர்களும் அசுரர்களும் ஆகிய இரு இனத்தினரும் அபிராமி தாயே நின்னை வழிபடுகின்றனர். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை தியானம் செய்பவர் தம் உள்ளத்தின் உள்ளே அன்பினால் பூட்டி வைப்பவர் ஆனந்த உருவினரான சிவபெருமான் இத்தனை இருந்தாலும் பூவுலகில் உன்னை தரிசிப்பவர்க்கு உன் திருவருள் எளிதாக கிட்டுகிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே, மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே? அபிராமி தாயே உன் திருவருளால் உலகம் பதினான்கையும் ஈன்றாய் அந்த திருவருளோட அதை காத்துக்கொண்டும் இருக்கின்றாய் பின்  சிந்தனைக்கேற்ப அழிக்கவும் செய்கின்றாய். திரு நீல கண்டருக்கு முன் பிறந்தவளே என்றும் இளமையாய் இருக்கும் திருமாலுக்கு தங்கையே மிக பெரும் தவத்தை உடையவளே உன்னை தவிர என்னால் வேறு தெய்வத்தை வழிபட இயலுமோ.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. நான் முன் ஜென்மத்தில் எத்தனை புண்ணியங்கள் செய்திருந்தால் உன் அடியார் கூட்டத்தோடு மட்டும் கலக்கும் பேறு பெற்று இருப்பேன் இது மட்டுமல்லாது ஏழுலகங்களையும் பெற்ற தேவியே நான் கருதுவது உன் புகழ் கற்பது உன் பெயர் மனமுருகி பக்தி செய்வது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. ஆனந்தமாயும் அறிவாயும் அமுதமாயும் இருக்கின்ற அபிராமி தேவியே நான்கு வேதங்களுக்கும் முடிவாய் நிற்கும் நின் திருவடி தாமரை வெண்ணிறத்தையுடைய  சிவபெருமான் தன் ஆடும் இடமாக கொண்ட மயான பூமியில் ஆடும் போது அவரின் திருமுடி மாலையாக உள்ளது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை, என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத் தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே. இமய மலையில் அவதரித்த தாயே எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதங்களின் பொருளாய் இருப்பவளே சிவபெருமானுக்கு அருளாய் இருப்பவளே உமாதேவியே என்றும் அழியாத முக்தியின் உறைவிடமாய் இருப்பவளே உன்னை நான், நின்ற போதும் நடக்கும் போதும் படுத்து இருக்கும் போதும் உன் திருவடி தாமரையை தியானம் செய்து கொண்டிருக்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 9. அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே. தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. என் தந்தையாகிய சிவபெருமானின் தேவி சுந்தரி என் பாச தளைகளையல்லாம் அழிக்கும் சிந்தூர வண்ண தேவி மகிஷனின் தலை மேல் பாதம் வைத்து அழுத்தும் அந்தரி நீல நிறம் கொண்டவள் என்றும் அழிவில்லாத கன்னி பிரம்மனது கபாலத்தை திருக்கரத்தில் தாங்குபவள் தாமரை மலரைப் போல் திருப்…

உரையாடலின் ஒரு பகுதி  113

மனிதனின் விதி பிரபஞ்ச சக்தியால் நிர்ணயிக்கபடுகிறது. மனிதனோ உலக இயக்கத்தின், உலக நடப்புகளின் கட்டுபாட்டில் இருக்கிறான் உலக நடப்புகளே நம்மை மீறி நடக்கும் போது பிரபஞ்ச இயக்க நிகழ்வுகளை எப்படி நம்மாள் முழுவதும் புரிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  112 

ஆசான் இல்லாத இடத்தில் ஒழுங்கு இல்லை. ஒழுங்கீனம் ஆளும் இடத்தில் ஆசான் இருப்பதில்லை. இரவு என்பது பகலின் பிரதிபலிப்பு பகலின் வெப்பம் இரவில் சுடும் பகலின் சூரிய ஒளி தான் இரவில் மதியொளியாக மனதை குழப்பும் மனிதனின் பகல் இளமை மனிதனின் இரவு முதுமை.

உரையாடலின் ஒரு பகுதி  111

கணவனே கண்கண்ட தெய்வம் என்பது பற்றி  போன தலைமுறையில் கணவன் என்ன செய்தாலும் அடங்கி ஒடுங்கி எதிர்த்து பேசாமல் அடங்கி இருந்த பெண்ணே மனைவி கணவனுக்கும் இப்படிபட்ட மனைவி தேவைப்பட்டது மனைவியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருந்தார்கள் ஆனால் இப்போதைய மற்றும் வரும் தலை முறையில் கணவன்மார்களின் சிந்தனை எதிர்த்து பேசாமல் அடங்கி ஒடுங்கி மனைவியே கண் கண்ட தெய்வம் என்று மனைவியைப் பற்றி நினைத்துக் கொள்கிறான். அப்படி இல்லாவிட்டாலும்  மனைவி அவனை அப்படி நினைக்க…

உரையாடலின் ஒரு பகுதி   110

ஒரு விஷயத்தை நாம் யேசிப்பதே இல்லை காரணம் மிக எளிதாக நாம் அதை கடந்து விடுகிறோம் கடக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் முதல் தடவை சொன்ன பொய் முதல் தடவை செய்த திருட்டுத்தனம் இன்னும் இதே போல் எத்தனையோ சரியாக கவனித்தால் நமக்குள் நடக்கும் உள் மன போராட்டத்தை விவரிக்க எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அத்தனை பக்கங்களும் போதாது. டைரி எழுத

உரையாடலின் ஒரு பகுதி  109

கோயிலுக்கு போகிறவர்களின் மனோபாவம் இப்படி இருக்குமோ வரிசையில் நிற்கும் வரையில் முன்னால் இருப்பவன் நகர வேண்டுமே என்ற எண்ணம் தன் முறை வந்ததும் சீக்கிரம் நகர சொல்வார்களோ என்ற பரிதவிப்பு இதில் இறைவனை எங்கே சிந்திப்பது புண்ணியத்தை எங்கே சேர்த்துக்கொள்வது

உரையாடலின் ஒரு பகுதி  108

யார் யாரை சீர்திருத்துவது பெற்றோர் பிள்ளைகளை ஆகட்டும், கணவன் மனைவியை ஆகட்டும் மனைவி கணவனை ஆகட்டும் சீர்திருத்த முடியுமா, ஒவ்வொருவரும் நேர்மையை கடைபிடித்தாலே சீர்படுதலும், சீர்படுத்துதலும் தானே நடந்துவிடும் ( சிறை படத்தின் கதை போல ) நேர்மையை கடை பிடிக்காமல் புண்ணியம் தியாகம் பண்பு என்று தங்களிடம் இல்லாத குணங்களை பேசி தங்களுக்குள் பெருமை கொள்வதில் என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  89

முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்தே சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, மிருகத்தனமான வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  88

பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள். பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  87

பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  86

ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது. இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறேன். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  85

நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 5

வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது.. ”யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”, என்பார். நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன.…

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 4

துவர்ப்பு – மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும் .குறைந்தால் குருதி கெடும். கசியும். அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 3

கைப்பு(கசப்பு) – நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது. கார்ப்பு(காரம்) – தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும் செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 2

புளிப்பு – மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும். உவர்ப்பு – நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது இனிப்பு – மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது. எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது உடலைப் பெருக்க வைப்பது. குரலுக்கு நல்லது.

முழுவதுமாய் தொலைக்கவும் மனமில்லை

முழுவதுமாய் தொலைக்கவும் மனமில்லை முழுமையாய் ஏற்றிடவும் முடியாமல் நீ தத்தளிக்கிக்கிறாய் ஆனால் இரண்டிற்கும் இடையில் எந்த தெளிவுமில்லாமல் முழுமையாய் நேசிக்கும் நான் தவிக்கிறேன் புரியாத புதிராய் நமது அன்பு

என்னுள் ஏன் வந்தாய்?

என்னுள் ஏன் வந்தாய்? உன்னைப் பற்றியே சிந்திக்கச் செய்து விழுங்கிக் கொள்கிறாய் என் பகல்களை.. என் இரவுகளையும் களவாடிக் கொண்டாய்.. உற்சாக வார்த்தைகளோடு கிறங்கும் வார்தைகளையும் தேடுகிறேன் உனக்காக..   கருவாக என்னுள் உருவான உன்னை அழகாய்ச் சீராட்டிப் பிரசவிப்பது எக்கணமென உன்னையே ஏந்துகிறேன்..   சுகப்பிரசவமாய்ப் பெற்றெடுக்கிறேன் என் பார்வையில்.. குறைப்பிரசவமாய் சில கண்களுக்குத் தெரிவதைப் பற்றிக் கவலையில்லை.. நான் பிரசவித்த நீ.. என் சொந்தம்.. நீ தரும் ஆத்ம திருப்தியின் போதை வேறில்லை.. என்ன…

உங்களின் அத்தனை வார்த்தைக்கும்

உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி  என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.

எப்போதும் தயாராய் இரு

அன்பெல்லாம்  வெறுப்பாகவும் அக்கறையெல்லாம் உதாசீனமாகவும்… உறவெல்லாம்  துரோகமாகவும்  மரியாதையெல்லாம் அவமானமாகவும்.. இருப்பேனென்ற வார்த்தையெல்லாம் ஏனிருக்க வேண்டும் என்று மாறும்.. மாறாது என்று நினைத்ததெல்லாம்  கண்டிப்பாக ஒரு நாள் மாறும் எப்போது என்றும் தெரியாது ஏன் என்றும் தெரியாது அதனால் எப்போதும் தயாராய் இரு எதற்கும் தயாராய் இரு.

வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.

ஒரு சில வார்த்தைகள் ஒரு சில மௌனங்கள்.. ஒரு சில நிகழ்வுகள் ஒரு சில அனுபவங்கள்.. ஒரு சில ஞாபகங்கள் ஒரு சில மனிதர்கள்.. ஒரு சில பாடங்கள் ஒரு சில ஏமாற்றங்கள்.. ஒரு சில நேரங்களின் கண்ணீர் ஒரு சில நேரங்களின் புன்னகை.. இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.  

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே. தயிரை கடைதற்க்காக உள்ள மத்து சுழல்வது போல் எண்ணற்ற பிறவிகள் கடந்து அலைந்து திரிந்து சுழன்று உள்ள எனக்கு தாமரை மலரை இருக்கையாய் கொண்ட பிரம்மதேவனும் சந்திரனை தன் திருமுடியில் தாங்கிய சிவபெருமானும் பாம்பனை மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் செய்யும் அம்பிகையே வீடு பேற்றை தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 6. மந்திர சித்தி பெற

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே, முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. செந்நிறம் கொண்ட சிந்தூரத்தின் வண்ண  மேனியை கொண்ட அம்பிகையின் பொற்பாதங்கள் என் சிரத்தின் மேல் இருக்க என் மனதில் நிலை பெற்று இருப்பது அம்பிகையே உன் திருமந்திரம் உன்னையே  தியானிக்கும் அடியார்களுடன் கூடி முறைபடி நான் உன் ஆகம பத்ததியை பாராயணம் செய்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால், வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே. மனதை ஞான நிலைக்கு எழுப்பும் மனோன்மணி தாயின் செப்பிற்கு உவமை சொல்லும்படியான இரு தனங்களும் அதன்பாரத்தால் வளைந்த இடையும் நீண்ட சடை உடைய ஈசன் உண்ட நஞ்சை தன் கைகளினால் தடுத்து நஞ்சை அமுதாக்கிய அம்பிகையின் மென் பாதங்களில் என் தலை இருக்கிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 2 பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 1 ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும் இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது தமிழும் அழகுக்கு அழகாகிறது அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம் அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம். காப்பு தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி அம்மையை பார்க்கும் இடந்தோரும் பார்க்கும் திசை தோறும் கண்டு ஆராதித்து அகம் மலர்ந்தவர் எண்ணும் எண்ணத்திலும் சிந்திக்கும் சிந்தையிலும் செய்யும் செயல் யாவையிலும் அபிராமியை கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்தவர் அவர் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் இப்படி நமக்கு சொல்லுகின்றார். பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லெல்லாய் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் – வார்க்குங்கும முலையும் மேல் முத்து மாலையுமே என்று நமக்கு சொல்கிறார்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்.

சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர் அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும். சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.  தெய்வ அருள் பெற்ற அபிராமி…

நம்முடைய மதிப்பு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.…

உங்களது பேச்சில் பணிவும்

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது.  அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார்.   சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக்…

வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்

   தந்தை மகனை நோக்கி: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்    மகன்: என்னால் முடியாது    தந்தை: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.   மகன்: டபுள் ஓகே டாட்.   தந்தை பில்கேட்ஸிடம் போய்: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா?   பில்கேட்ஸ்: முடியாது   மகனின் தந்தை: என் பையன் world bank CEO.   பில்கேட்ஸ்: டபுள் ஓகே   தந்தை…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 11

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில்  தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 10

பெண்ணாடகம் விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார். உடனே நந்தியெம் பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 9

 திருவைகாவூர் கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படுகிறது. சிவபக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 8

சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். திருவல்லம் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், “இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும்…

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 7

திருப்புள்ளார் திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம். பட்டீஸ்வரம் இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பொறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   84

இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  83

துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  82

நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்து எழ  செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும் அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 81

எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 80

வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மிதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன் பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!

எத்தனை தர்மங்கள் செய்தாலும்

எத்தனை தர்மங்கள் செய்தாலும் பூஜைகள் செய்தாலும் அதன் பலன்கள் உங்களை வந்து சேர வேண்டுமென்றால்… உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை வாழ்த்த வேண்டும்.

பழ மொழிகள் 15

தை மழை நெய் மழை. படித்த முட்டாள் படு முட்டாள். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. பசு கறுப்பானால் பால் கறுப்பாகுமா?

பழ மொழிகள் 14

கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. தேவையற்றதை வாங்கினால் தேவையுள்ளதை விற்பாய். செயலே புகழ் பேசும். மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். பொய்க்கு எல்லையில்லை.

பழ மொழிகள் 13

திங்களும், சனியும் தெற்கே நோக்க வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். தீயில்லாமல் புகை கிளம்பாது. தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.

பழ மொழிகள் 12

தன் பாவம் தன்னுடன் வரும், கோபத்திற்கு கண்ணில்லை. தீயிலிட்ட நெய் திரும்பி வருமா? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே.

பழ மொழிகள் 11

தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழந்துவிடுகிறான். சிக்கனமாக இருப்பதே பெரிய வருமானம். செய்து முடி அல்லது செத்து மடி. தாய் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.

கீதைகள் மொத்தம்\ – 60-27 to 30

*வியாத கீதை* – கௌஷிக முனிவருக்கு வேடன் வியாதன் ஆற்றிய உரை இது. இது மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *யுதிஷ்டிர கீதை* – யுதிஷ்டிரருக்கும் ஒரு யக்ஷனுக்கும் இடையிலான உரையாடல். இது மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதை நல்லொழுக்கம் மற்றும் தெய்வீக வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்கும் அடிப்படை நெறிமுறைகளை எடுத்துரைக்கிறது. *மோக்ஷ கீதை* – ஸ்வாமி சிவாநந்தா இயற்றிய மோக்ஷ பாடல். *ரமண கீதை* – பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் போதனைகளை கொண்டு முனிவர் ஸ்ரீ வசிஷ்ட…

கீதைகள் மொத்தம்\ – 60- 23 to 26

*ரிஷப கீதை* – உலக நன்மைக்காக நித்ய சத்தியங்கள் மற்றும் விடுதலைக்கான வழி குறித்து ரிஷப முனிவர் தனது குழந்தைகளுக்கு அறிவுறுத்தியது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்வின் நோக்கத்தையும், மனதின் மாறுபாடுகளை அகற்றிவைத்து, சுயத்தை பற்றுகளிலிருந்து விடுவித்து விடுதலையை அடைவது எப்படி என்பதை மனிதகுலத்திற்குக் கற்பிக்கிறது. *சௌனக கீதை* – பிரபஞ்ச உயிரினங்களின் பொது வாழ்வின் ரகசியங்கள் குறித்து யுதிஷ்டிரருக்கு சௌனக முனிவர் அறிவுறுத்தியது. இது மஹாபாரதத்தின் ஆரண்ய பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி கீதை*…

கீதைகள் மொத்தம்\ – 60- 19 to 22

*கபில கீதை* – தாய் தேவாஹுதிக்கு மகன், கபில மஹரிஷி போதிப்பது. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. *நஹுஸ கீதை* – நஹுஸன் மற்று யுதிஷ்டிரருக்கு இடையிலான உரையாடல். மஹாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. *நாரத கீதை* – ஸ்ரீ கிருஷ்ணருக்கும் நாரதருக்கும் இடையிலான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆர்வலரின் பொதுவான தேவைகளை கூறுகின்றது. இது குரு அல்லது ஆன்மீக போதகரின் ஆதிபத்யத்தை வலியுறுத்துகிறது. *பாண்டவ கீதை* – ஆதி நாராயணனின் வெவ்வேறு பக்தர்கள் வழங்கும் பல்வேறு பிரார்த்தனைகளின்…

கீதைகள் மொத்தம்\ – 60-15 to 18

பிக்ஷு கீதை* – பேராசை கொண்ட ப்ராமணரின் வடிவத்தில் கிருஷ்ணர், பின்னர் ஒரு முனிவராகி உத்தவருக்கு ஒரு பாடலைப் பாடுகிறார். சுமையாக இருக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தும் முறையை அதில் கூறுகின்றார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கோபி கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த கோபியரின் பாடல். இந்த கீதை ஆதிமூலத்திடம் கொண்ட மிக உயர்ந்த பக்தியால் நிறைந்துள்ளது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. ஹம்ஸ கீதை* – ஓர் அன்னபக்ஷியின் வடிவில் ஸ்ரீ விஷ்ணு பிரம்ம…

கீதைகள் மொத்தம்\ – 60 -11 to 14

சித்த கீதை* – ஜனக மஹாராஜனின் அரண்மனைக்கு அருகே பல சித்தர்கள் பாடிய பாடல். அதன் சாராம்சம் என்னவென்றால் – முடிவெளிக்குள் சுயஉணர்வை விரிவாக்கும் வழி அக-புற பொருள் வேறுபடுத்தலும் சுயகட்டுப்பாடும் தான் என்பது. இது யோக-வசிஷ்டத்தின் உபசாந்தி ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உத்தர கீதை* – பகவத் கீதையின் இணைப்பாக இது பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இது ஞானம், யோகாம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தலைப்புகளைப் பற்றி பேசுகிறது. வசிஷ்ட கீதை* – நித்ய சத்தியங்களை குறித்து…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  சனி நின்றால்:-  கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு, மனைவி வகையினரின் எதிர்ப்புகள், வாத வாயு ரோகங்கள், உடல் ஹீனம், தேக பங்கம், தந்தையின் தொழில் ஜீவனம் பாதிப்பு, உடன் பிறப்பிற்கு புத்திர தோஷம், பூர்வீக சொத்தால் பாதிப்பு, நிலம், வீடு, வாகன விசயங்களால் பொருள் இழப்பு , குழந்தைகளின் முன்னேற்றம் தடைபடுதல், தொழிலில் தடை.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:- பெண்கள் வகையில் ஏற்படும் அவமானம், காதல் தோல்வி, இல்லற வாழ்வு பாதிப்பு, வீரிய பலம் இல்லாத நிலை, தொழில் வகையில் ஏற்படும் தடைகள், குடும்பத்தில் உள்ள பொருள்கள் உடமைகளுக்கு சேதம், உடன் பிறப்பிற்கு ஏற்படும் கண்டாதி தோஷங்கள், பிரயாணங்களில் வரும் பயம், நிலம், வீடு வாகன இழப்பு குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மனைவி அல்லது கணவனின் பாக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, ஜாதகனுக்கு…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு நின்றால்:-  குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் பாதிப்புகள், பூர்வீக சொத்தால் வரும் தொல்லைகள் அச்சொத்து விருத்தியில்லாமை, தெய்வீக விசயங்களால் வரும் இடையூறுகள் மனக்குழப்பம் கௌரவ குறைவு அதிர்ஷ்டமில்லாத நிலை, விபத்துக்களால் ஏற்படும் செலவீனம், பயம் தந்தை இழப்பு, அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் தொழில் முடக்கம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.  புதன் நின்றால்:- பொருளாதார வீழ்ச்சி, எத்தொழிலும் விருத்தயாகாமை, லாபம் பெற முடியாமை, மூத்த சகோதர வகை பாதிப்புகள், மாமன் வகை குற்றங்கள் உடன் பிறப்பின் பாக்கியங்களுக்கு பங்கம், விரையம், தாய்க்கு ஆயுள் பயம், புத்திர புத்திரிகளின் இல்லறம் தொழில் பாதிப்புகள் எதிரிகளுக்கு ஏற்படும் பங்கம் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் நின்றால்:- உடன் பிறப்புக்களால் வரும் தீங்கு, ரத்த சம்பந்தமான பாதிப்புகள், வீண் சண்டை, நில, வீடு, வாகன விசயமின்மை திடீர் வீழ்ச்சி, தாய் – தந்தை வகை சொத்துக்கள் இழப்பு, பூர்வீக சொத்து விரையம், எதிரிகள் பலம் பெறுதல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு.  1

சிம்ம லக்னம் லக்கினாதிபதி சூரியன் இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் .சந்திரன் நின்றால்:- தாய், தாய் வகையில் ஒற்றுமையில் குறைவு, பிரயாணத்தில் பாதிப்பு, இடது கண் கோளாறு, அரசு வகை தொழில் தொடர்புகள் பாதிப்பு, குடும்ப முன்னேற்றம் தடைபடுதல் செய்யும் காரியங்கள் வெற்றி பெறாநிலை, நிலம், வீடு, வாகனங்களால் செலவீனம் பாதிப்பு, குழந்தைகளுக்கு எதிர்பாராத ஆபத்து, ஆயுள்பயம், நாஸ்தீக தன்மை, எதிரிகள் வீழ்ச்சி, கணன், மனைவி விரோத நிலை.

மன முதிர்ச்சி  3

நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். Understanding the difference between the basic needs and what we want. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.  Reaching the status that happiness is not connected. with material things.

மன முதிர்ச்சி  2 

செய்வதை மன அமைதியுடன் செய்வது. Doing whatever we do with peace of mind. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. Avoiding to prove our intelligence on others. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். Avoiding the status that others should accept our actions. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். Avoiding the comparisons of ourselves with others. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை…

மன முதிர்ச்சி – Maturity of Mind 1

மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். Understanding the opinions of others from their perspectives. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். Learning to leave what are to be avoided. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 

சனி 22

சனிக்கு மீனம் 2மிடமாகி நின்றால் பெயர், புகழ், செல்வம், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சனிக்கு துலாம் 2மிடமாகி உச்சம் பெற்று நின்றால் தலைவர், செல்வந்தர், அயர்நாட்டுத் தொடர்பும் இருக்கும், சிறப்பாக வாழ்வர். சனி 5மிடத்திலிருந்து லக்னாதிபதியை பார்ப்பது அல்லது 4, 5 வீட்டையும் 4,5க்குரிய கிரகத்தையும் பார்ப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுகிறது. சனி ஆயுள் காரகன், சனி பலம் பெற்று 8ம் பாவத்துக்கு சம்பந்தம் பெற்றால் ஆயுள் விருத்தியாகும். சனி 8ல் நின்றால் பலம் பெற்றால்…

இருப்பதுவும் பிரிவதும்

இருப்பதுவும் பிரிவதும் அவரவர் விருப்பம்  ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 79

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   78

மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால்  கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகக் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   77

நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   76

நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தனி மனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர் . தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   75

இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.    

உரையாடலின் ஒரு பகுதி  107

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சமாதானமாக போக வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் அதை எவர்கள் அறிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் அதிகம் வருத்தப்படுவது இல்லை. மனித பிறவி எடுத்தாலே பலவீனங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயம். மனித பிறவிகள் அனைத்திற்கும் ஒரு விஷயத்தில் என்று மட்டும் பலவீனம் இல்லை நபருக்கு நபர் சூழ்நிலை, அறிவு அந்தஸ்து மனோபாவம் போன்றவைகளை கொண்டே பலவீனங்கள் வெளிப்பட்டு தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  106

கனவுகளிலும், கற்பனைகளிலும் யூகித்துக் கொண்ட அனுபவம் (இறைவழிபாடு, இறையை தேடுதல் முக்தி போன்றவை) இது போல் காதலும், குடும்ப வாழ்வையும் சேர்த்துக்கொள்ளலாம் யதார்த்திற்கு வரும் போது பல பேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுவதை பார்க்கலாம்.

உரையாடலின் ஒரு பகுதி  105

உலகிலேயே ரொம்ப துர் அதிர்ஷ்டசாலி 10 பேர் நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன். தனிமையில் இருக்கும் போது 10 பேர் வேண்டும் என்று தவிப்பவன்.

கீதைகள் மொத்தம் – 60 9 – 10

இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றாக சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.

கீதைகள் மொத்தம் – 60 = 7 – 8

ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல். இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 =5 – 6

அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார். ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

கீதைகள் மொத்தம் – 60 3 – 4

3  அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது. 4  பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.