இணைக்கும் செயல் 

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.…

எடை அளவு

ஒருமுறை, ஒரு விவசாயி ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் அளவு சரியாக இல்லை என்று கண்டுபிடித்தார் எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.  வெண்ணெயை எடைபோட ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “யுவர் ஹானர், நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம்…

நஞ்சு

அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.  கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…

உரையாடலில் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

காலத்தின் நிலை 2

காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும் யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம். அதனால் கற்றலோ, கற்பித்தலோ, விளையாட்டோ, ஆலயவழிபாடோ, தவமோ, வேலையோ எதுவானாலும் உரிய காலத்தே செய்து பழவோம்

காலத்தின் நிலை 1

காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள், காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர் அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால் உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய். காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது. வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான் நம்மாள் அதை பிடிக்க முடியாது. அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் காலத்தே பயிர் செய்,…

உலகில் கடினமானது

உலகில் கடினமானது எத்தனையோ உண்டு அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.   1. ரகசியத்தை காத்தல், 2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை, 3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல். .

கோபம்

கோபம் என்பது உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, சுற்றுபுறம் சார்ந்த பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லாத சூழ்நிலை காரணமாக உண்டாகிறது கோபம் உண்டாக அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதில் ஒன்று சிந்திக்காமல் செயல்படுத்தும் அதிர்ப்த்தி தான் கோபம், மேலும் பிறர் நம்மை தாழ்த்தும் போதும் உண்டாகும் எதிர்வினை  உணர்வே கோபம், எவனால் சிந்தித்து தனது கோபத்தை தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி கொள்கிறானோ அவன் தனது வாழ்நாளின் மிக பெரிய எதிரியை வெற்றி கொண்டவன்…

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை   7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி தமிழ்..!

உரையாடலில் ஒரு பகுதி 62

சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும் எதுவும் திருப்திகரமாய் இல்லை இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல் விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பார்க்கும்  சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள் நிலைமை இப்படி இருக்க…

உரையாடலில் ஒரு பகுதி 61

அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.  ஒரு 75 வருடங்களுக்கு  முன்  இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால் இல்லையென்ற பதில் தான் வரும் ஏன்? எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும், நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை. அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.…

உரையாடலில் ஒரு பகுதி 60

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது   என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்  

உரையாடலில் ஒரு பகுதி 59

உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.

உரையாடலில் ஒரு பகுதி 58

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.  சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.

உரையாடலில் ஒரு பகுதி 57

உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.  பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்கலும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியேதான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.

உரையாடலில் ஒரு பகுதி 56

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.

உரையாடலில் ஒரு பகுதி 55

அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.

உரையாடலில் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.

உரையாடலில் ஒரு பகுதி 53 

பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.  உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.  

உரையாடலில் ஒரு பகுதி 52

பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து  இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது.  ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது.  என்ன கொடுமையடா சாமி.

உரையாடலில் ஒரு பகுதி 51

ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது.  அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும் சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

எது மெச்யூரிட்டி 6

காணும் அனைத்திலும் பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர்  தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால்…

எது மெச்யூரிட்டி 5

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து நாம் மாறி மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது தான்  மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 4

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து நமக்கு நேரெதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 3

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 2

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே. . அந்த பாடத்தை படித்து வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம் அது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 1

மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று. ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார் அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் தான் மெச்யூரிட்டி வருகிறது.

பலவீனத்தை எல்லாம்

பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்! அங்கேயே தான் உள்ளன பகல்கள்.. எப்படியும் வந்தே தீரும் இரவுகள்.. அது அது அப்படியே இயங்கட்டும் இயைந்து கொள்ளுங்கள்! ஒடிந்த முருங்கை மரத்தின் கிளை மீண்டும் ஒரு மரமாகும்.. எடுத்து அதே தோட்டத்தில் நட்டு வையுங்கள்!!

தேட வேண்டாம் அவர்களை

விலகியது விலகியதாகவே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.. மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்! பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்.. காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள் நீண்ட நேரம் நிற்காது! சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில் தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்.. தேட வேண்டாம் அவர்களை வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!

உரையாடலில் ஒரு பகுதி 50

அந்த அமைதியில் மனிதன் பழகிவிட்டான் என்றால் நிம்மதி அவனுக்கு என்றும் நிரந்தரம் இல்லாவிட்டால்  எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்பது சாஸ்வதம். ( என்று தேடி அலைவது ) எத்தனை பேர்களால் நான் நானாக எனக்குள் எனக்காக தன் பொருட்டு தானே அமைதியாய் இருக்கும் நிலையை அடைய முடிந்திருக்கிறது. அப்படி எந்த இரைச்சலும் இல்லாமல் _வேறு வெளி எந்த இரைச்சலும் கேட்காமல் ஆடாமல், அசையாமல், ஆனந்தத்தை அமைதியாய் பருகிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை பேருக்கு வாய்க்கிறது. எத்தனை…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  5

21 சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது. 22 கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது. 23 மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும். 24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  4

16 முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர். 17 தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும். 18 பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது. 19 கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும்…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  3

1 1வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர். 12 துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர். 13 ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும். 14 சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை,…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  2

6 திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைப் பெறுவர். 7 காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர். 8 சாவித்ரி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும். 9 சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  1

1 முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர். 2 தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர். 3 வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும். 4 லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய…

எல்லா “பிரச்சனைகளுக்கும் 

புன்னகை பிரச்சனைகள் “வருவதை தள்ளி போடும்..!! மெளனம் “பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா “பிரச்சனைகளுக்கும்  இந்த வாய் காரணம்..!!!

வாழ்க்கையில் கஷ்டங்களும்

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிகும் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 34

மனித குலத்திற்க்கு தவம் செய்யாமலேயே கிடைத்த மிகப்பெரிய வரம் கற்பனா சக்தி ஆகும் அந்த சக்தியின் அளவை எதனைக் கொண்டும் அளக்க முடியாது அப்படி அளவற்ற ஆற்றலை முறைப்படுத்தி செயல்படுத்தினால் நம் வாழ்வு என்றும் ஆனந்தம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 108

 எல்லா பாகமும் விஷஸ்னானம் பெறவே வீரன், இருளன், காட்டேரியைக் போன்ற பலவித வியாதிகள்  ஒழியாக்குடி  புகுந்து கொட்ட மடிக்கின்றன. சீகத்தில் உண்டாகும் விஷய்ஙகள் சிறுகுடலுக்குள்ளும் உறிச்சென்று, அதன் சதைச்சுவர்கள் மூலம் கிரகிக்கப்பட்டு, குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்து விடுகின்றன. இந்தச் சீகம் இவ்வளவு மோசமானது! இப்பெருங்குடலின் மற்ற பாகங்கள் சாதுவல்ல. ஆனால் இதைப் போல் அபாயத்தைக் கொடுக்காது. அங்க மலம் தங்கக் கூடுமாகையால், கெடுதி உண்டு. வெட்டி விட்டால் – இந்த சீகத்தையே தொலைத்து…

வியாழன் 5

குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள்.  உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர்.  அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.

வியாழன் 4

வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும்.  இனிமையாக பேசுவார். பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும்.  தியாக குணம் இருக்கும். குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும், தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார். குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார். குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.

வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.

வியாழன் 2

நீச வியாழனுடன் சூரியன் நின்றிடில் மித்திரர்களை பழிகாரர்களாக ஆக்கிவிடும். வியாழன் நின்ற இராசிக்கு அடுத்த ராசியில் சுக்கிரன் தனியே இருந்தால் மணவாழ்வு மகிழ்வுறும். குரு 12ல் இருந்தால் அவருக்கு அவரது குலதருமத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். வியாழனும், லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் கேந்திர, திரிகோணத்தில் இருப்பின் புத்ரபாக்யம் ஏற்படும்.

வியாழன் 1

கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு.  சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 10

நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 9

துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பிய நாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம் ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 8

நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 7

பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கு சவால் விட்டுள்ளனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 6

அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும் உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள்…

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்  10

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரேவழி. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து அதை அனுதினமும் நினைத்து அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம், எண்ணத்தை சீர் செய்து ஆழ்மன சக்தியை உணர்ந்து, ஏற்றமுடன் வாழ்வோம்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 9

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம் நாம் விரும்பியதை அடைய ஒரே வழி நம் எண்ணங்களை சீர் செய்வது தான் அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான் ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது நல்லது எது….??? கெட்டது எது…??? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 8

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது…??? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது…??? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது….??? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும் நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 7

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது .”இது வரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும்,இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும், இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 6

இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது இருக்க நினைப்பவர்களுக்கு வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை மனித மனம்தான் அறிவு மனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 5

நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 4

நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது இதை உணர முடிவதில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இதுவும் உண்மை.” சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது…??? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்தது பிரபஞ்சம்தான் நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை,

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 3

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது ஆனால்“பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அது உண்மை,  

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 2

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம் அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும் நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும் மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாத, மாற விரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்1

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும் ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வசிக்கப் பிறந்தோமா ??? அல்லது வாழப்பிறந்தோமா. ??? என்று

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 43

1, 4,9 – க்குடையவர்கள் மூவரும் கூடி 4 – இல் நிற்க, குரு லக்கினத்தைப் பார்க்க பொருள், லக்கினம் ஆடை, ஆபரணம், அரச சுகம் பெறுவார். சந்திரன் 4 – க்குடையவர், குரு, சுக்கிரன் நால்வரும் கூடி இருந்து ராசியாதிபதி நட்பு ஆட்சி உச்சம் அடைய மேற்படி பலன். சுக்கிரன் நின்ற ராசிக்கு 9, 10 – க்குடையவர்கள், லக்கினாதிபதியோடு கூடி 4 – இல் நிற்க, கணக்கில்லாத பொருள்கள், பூமி ஏவலாட்கள் உடையவர். குரு…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 42

சந்திரனுக்கு 4 – க்குடையவரும், லக்கினத்திற்கு 4 , 8 – க்குடையவரும் மூவரும் கூடி நிற்க, சனி, சந்திரன் பார்க்க தாய்க்கு மரணம் 4 – இல் சனி நீச்சமடைய, 8 – க்குடையவர் பார்க்க, 4 – க்குடையவர் நிற்க மேற்படி பலன். தேய்பிறை சந்திரன் 6, 8, 12 – இல் நிற்க, 8 – இல் , 4 – க்குடையவர் நிற்க, மேற்படி பலன். 6, 4 – க்குரியவர்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 41

4 – க்குடையவர் ஆட்சி பெற்று சந்திரனுக்கு திரிகோணத்தில் நின்றால் தாய்க்கு பூரண வயது. சந்திரன் 9 – இல் நிற்க, 9 – க்குடையவர் 4 – இல் நிற்க தாய்க்கு பூரண வயது. லக்கினாதிபதி 4 – க்குடையவரோடு கூடி 9 – ல் நிற்க, 7 – க்குடையவர் பார்க்க மேற்படி பலனே. 1, 4 – க்குடையவர் திரிகோணமடைய, லக்கினாதிபதிக்கு திரிகோணத்தில் குரு நிற்க, தாய்க்கு பூரண வயது.

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 40

 4 – இல் 4 – க்கு 6 – க்குரியவர் சாரம் பெற்று பாவருடைய தொடர்பை பெற்றால், தாய்க்கு மனநோய், நரம்பு தளர்ச்சி, நீர், தோல் சம்பந்தப்பட்ட வியாதி வரும்.  4 – ஆம் பாவாதிபதி, பாதகாதிபசாரம் பெற்று, தாய்க்காரகர் கர்மாதிபதி சாரம் பெற்று, 4 – க்கு, 4 – ஆம் பாவாதிபதி மறைந்தால், பால்ய முதல் சுகமற்றவன். தனது உடல் உழைப்பால் மக்களை பேணிக்காப்பான். மக்களால் அபகீர்த்தி உண்டு பல கர்மாக்களுக்கு உட்படுவார்.…

புதன் 5

புதனும், சந்திரனும் பரிவர்த்தனமாகிவிடில் அவர் நினைத்த படிப்பை படிக்க முடியாது.  பட்டப்படிப்பும் ஏற்படாது. புதனுக்கு புதன் 6,க்கு8ல் நின்றிடில் ஆண் குடும்பத்தினரை பெண்ணுக்கு பிடிக்காது. அதேபோல் பெண் குடும்பத்தினரை ஆணுக்கு பிடிக்காது. புதன் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ, அதுவும் கேந்திரத்தில் இருப்பின் புத்திரயோகம் ஏற்படும். அதனால் செல்வந்தராகவும், சிறந்த பேச்சாளராகவும், பொதுமக்களிடையே பேரும், புகழும் அடைவர். புதன் நீச்சனாக இருந்தால் வேறு மதம், வேறு இனம், வேறு மொழியைச் சேர்ந்தவர் வாழ்க்கைத் துணையாக அமையும். புதனும், குருவும்…

புதன் 4

புதன் மீனத்தில் நீசம் அடைந்திருந்தால் கல்வித்தடை, தாமதக்கல்வி படிப்பை பாதியில் நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டமேற்படும். புதன் நீசமாகி, சந்திரனோடு தொடர்பு இருக்குமானால் தாயை பகையாளியாக்கிக்கொள்வார்கள். புதன் நீசப்பட்ட ஜாதகர், பெண் சபலம் ஏற்படு நீர்த்துப்போன விந்து பலத்தால் புத்திர பாக்யம் ஏற்படாது.  சுய இன்பம் அனுபவிப்பவர். புதன் ( நீசம் பெற்றால் ) ஒரு அலி கிரகமென்பதால் சிலருக்கு திருமணத்தின்மீது பற்று இருக்காது சில ஆண்கள் பெண் குரலில் பேசுவது பெண்கள் போல் நடந்து கொள்வார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 107

 பெருங்குடலின் இப்பாகமோ உறிஞ்சும் சக்தி வாய்ந்தது.  யோசனையின்றி இந்த விஷங்களையும் சீகம் உள்ளிழுத்து விடுகிறது. ரத்த ஓட்டத்துடன் கலக்கச் செய்கிறது ஒவ்வொரு கருவியும் இவ்விஷத்தை உண்டு விட்டு நோய் வாய்ப்படுகிறது. தம் தம் வேலைகளைச் செய்யச் சக்தியின்றிக் கெடுகின்றது பித்தகோசம் சிறுநீர்க் கருவிகள் கேடுற்று விஷப்பொருள்கள் வெளியே தள்ளச் சக்தியின்றி உடலில் குவியச் செய்கின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 106

 மலச்சிக்கல் நிலையில் இந்த சீகம் இவைகளை வெளியே தள்ளுவதில்லை. இச் சனீஸ்வரக் கூட்டத்துடன் அக்கம் பக்கங்களிலுள்ள சதைக்கோளங்களும் ரசங்களைக் கக்கிக் கலந்து விடுகின்றன. விஷங்கள் கலந்த இக்குழம்பு, உடைந்து கெடுகின்றது. உள் இழுக்கப்படாத புஷ்டி சத்தும் இத்துடன் கலக்கவே இந்த சீகம், பெரிய விஷ இயந்திர சாலையாக மாறிவிடுகிறது. பிறகு கேட்பானேன் இங்கிருந்து விசித்திரமான, பயங்கரமான விஷ லாகிரிப் பொருள்கள் உண்டாகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 105

சிறுகுடலிலிருந்து தள்ளப்படும் உணவு மிகுதியால், நூற்றுக்குத் தொண்ணூறு பாகம், நீர்க் குழம்புமயமாக இருக்கின்றது. விஷப் பூச்சிகள்  விருத்தியாக இன்னும் பல செளகரியங்கள் இக்குழம்பில் அமைந்துள்ளன பித்தகோசம் உணவு ஜீரணமாவதற்குப் பித்தத்தைச் சிறுகுடலில் தாராளமாகக் கொட்டுகிறது. சிறுபாகம் உபயோகமாக, பெரும் பாகம் சீகத்திற்குள் தள்ளப்படுகிறது. இப்பித்தம், விஷப் பொருள் என்றறிய வேண்டும். சிறு குடலில் சதைச் சுவர்கள் ஜீரணத்தின் பொருட்டு விஷ ரசங்களைக் கக்குகின்றன.  இவைகளும் வந்து சேருகின்றன.

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 3

 அருள்மிகு  மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம் அருள்மிகு  வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் அருள்மிகு  அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 2

 அருள்மிகு  திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம் அருள்மிகு  காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம் .அருள்மிகு  ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம் 9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு  அருள்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள். 1

 அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்

பஞ்ச நமஸ்காரங்கள்

:1) ஏகாங்க நமஸ்காரம் : தலை மட்டும் குனிந்து வணங்குதல் 2) துவிதாங்க நமஸ்காரம் : இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல் 3) பஞ்சாங்க நமஸ்காரம் : ( பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் ) இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல் 4) சாஷ்டாங்க நமஸ்காரம் : இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 5

.ஐரோப்பாவில் நடை பெறுகின்ற அரசியல் கிளர்ச்சிகள் பற்றியோ மாற்றங்கள் பற்றியோ அல்லது, மந்திரிசபைகளின் வீழ்ச்சி பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ; சோஷலிசம் , அனார்க்கிசம் என்பவைப்பற்றியோ ஐரோப்பாவின் பிற அரசியல் மாற்றங்கள் பற்றியோ அவர்களுள் ஒருவர்கூட கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் சர்வசமயப் பேரவைக்கு இந்திய சன்னியாசி ஒருவர் அனுப்பப்பட்டது பற்றியும் அவர் அங்கு ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றார் என்பது பற்றியும் இலங்கையில் உள்ள ஆண், பெண், சிறுவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 4

இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன், அறிவுகூட இரண்டாம் பட்சமே ; மதம் ஒன்றே முக்கியமானதாக இங்குக் கருதப்படுகிறது. நமது நாட்டுப் பாமர மக்கள் எதுவும் தெரியாதவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒருமுறையல்ல, நூறுமுறை கேட்டிருக்கிறேன். அது உண்மைதான். கொழும்புவில் வந்து இறங்கியது முதல் அதையே நான் காண்கிறேன்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 3

பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று; உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச், ஆளும் வர்க்கத்தினரின் உடைமை. எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள். கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள்,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 2

கொழும்பிலிருந்து சென்னைவரை என்னிடம் மக்கள் காட்டி வருகின்ற அற்புதமான கனிவும், ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் நிறைந்த வரவேற்பும். எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கடந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் இப்படி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஏனெனில் இது, கடந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததை மெய்ப்பிப்பதாகவே உள்ளது- ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கே உரிய பாதை ஒன்று உண்டு; அது போலவே ஒவ்வொரு நாட்டிற்கும் உயிர்நாடியான லட்சியமும் ஒன்று உள்ளது; இந்திய…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 1

சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று 1.வரவேற்புக்கு பதிலுரை; நாம் விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்- சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரததிலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன். இப்படிதான் நடந்திருக்க…

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான் .ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

ஒரு  குயவன் 10 முறை சுற்றினால் களி மண்ணு கூட அழகான பானை ஆகுது.  பல்லாயிரம் வருடமா இந்த பூமி சுத்திட்டுதான் இருக்கு, இன்னும் சில மனிதர்கள் களிமண்ணாகத் – தான் இருக்காங்க. .

முன்பின் அறியாத

முன் பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பதை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..

இருக்கும் இலை எல்லாம்

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.  .

நமக்குத்தான் எல்லாம் தெரியும்

நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள் தான்..

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில்

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில், புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது விநாடிக்கு 48 கி.மீ.,வேகத்தில் 88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும் புதன் தான்..

நில நடுக்கத்தை கண்டறிய

நில நடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி . பி . 132 – ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர்.  ரிக்டர்வடிவமைத்த அளவுகோல் நிலைநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமேகூறும்..

சாப்பிடும் பொழுது

சாப்பிடும் பொழுது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.  சாப்பிடும் பொழுது காலை தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஒட்டம் வயற்றுப் பகுதிகக்ச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.  எனவே ஜீரணம் தாமதமாகிறது.  காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால், சாப்பிட, சாப்பிட சாப்பாடு ஜீரணமாகிவிடும்.  ஏனென்றால் கீழே ரத்தம் ஒட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.  எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி…

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பேச்சு என்றாலே சிறிதும் பிடிக்காது.  ஒரு சமயம் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.  அவ்விருந்தில் அநேக நிபுணர்களும் கலந்து கொண்டார்கள்.  விருந்துக்குத் தலைமை வகித்தவர், வில்பர் ரைட்டை அழைத்து பேசும்படி கேட்டார்.  வில்பர் எழுந்து திக்கிய குரலில் ” இதில் எதோ தவற நேர்ந்து இருக்கிறது. பேசுகிறவன் நான் அல்ல, என் சகோதரன் ஆர்வில்தான் பேசுவான் ” என்றார்.  உடனே ஆர்வில் எழுந்து நின்று ” பேச்சை வில்பர் பேசி…

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஷியாவின் ” கார்காவ் “ சிறையாகும்.  இங்கு கைதிகளை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  மொத்தம் 40 ஆயிரம் கைதி – களுக்கு, மேல் உள்ளனர்.  மிகச் சிறிய சிறை ‘ சார்க் ‘ தீவில் உள்ளது.  இங்கு ஒரு வரை மட்டுமே அடைக்க இயலும்..

உரையாடலில் ஒரு பகுதி 49

இது புரிய அடிபட வேண்டும் அப்போது தான் தெளிவு எது என்று மனம் தேடும் அப்படி தேடும் போதுதான் செய்ததெல்லாம் எத்தனை சிறுபிள்ளைதனமானது என்று தெரிய வரும் அப்போது வரும் தெளிவில் தோன்றும் வாழ்வை அனுபவிக்க ரசிக்க ஆசை மிக பெரிய முட்டுகட்டையென்று அப்போது உண்டாகும் ஞானமே அமைதி  

உரையாடலில் ஒரு பகுதி 48

மனிதனின் நிம்மதி தொலைவதற்க்குண்டான காரணம் எது என்று யோசித்தால் வரும் பதில் இப்படி தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஆசை, அதற்கான முயற்சி, முயற்சியால் பரபரப்பு, வேகம் உடனே வேண்டும் என்கின்ற எண்ணம், அதனால் பயம், பயத்தினால் நாலு பேர் துணை, துணை செய்தவர்க்கு உதவி, உதவி செய்வதற்க்கு விளம்பரம் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செல்லும்போது நமக்கு மிஞ்சுவது நிம்மதி இழந்த நிலை

உரையாடலில் ஒரு பகுதி 47

 நாம் மறந்துவிட்ட காரணத்தால், ஒரு விஷயம் நடைபெறும் விதம் என்பது, நினைப்பது – மனம், செய்வது – உடல் எப்படி இது என்று நினைப்பது  அறிவு – புத்தி. எவர் நினைக்கிறார், எவர் செய்கிறார் இது தான் மிக பெரிய கேள்வி இதற்கு உண்டான பதில்களே வேதம், உபநிதஷம், பல்வேறு மதங்களின் கருத்துகள் இந்த கேள்விக்கு எத்தனை பேர்களால் எத்தனை காலங்களாய் எத்தனை பதில்கள் ஆச்சரியமும் அதிசயமான விஷயம் இது தான்.

உரையாடலில் ஒரு பகுதி 46

இப்படி மனதை புரிந்து கொண்டால் மனதை பழக்க, இயக்க, சுலபமாக இருக்கும் மனதை தன் இஷ்டப்படி இயக்கும் பயிற்சி பெற்றவர்கள் தங்களின் வாழ்நாளை நிம்மதியுடன் திருப்தியுடன் கடத்தி விடுவர். மனதை பண்படுத்தி, அதனை பயன்படுத்தி நித்திய ஆனந்ததிற்க்கு செல்லும் வழியை உபதேசிப்பதே நம் தேசத்தின் வேதா உபநிஷத்துகள் பண்பட்ட மனம் சரியான பயன்பாட்டிற்க்கு வரும் போது இறைவனை அடைய முடியும் என அறியும் அறிவுக்கான கல்வியே நமது நாட்டின் கல்வி அந்த கல்வி மறைந்து இருக்கிறது.

உரையாடலில் ஒரு பகுதி 45

மனிதனின் அடிப்படை குண விஷேசத்தை இப்படி பாகுபடுத்தலாம் அதாவது, ஆசை, பாசம், பற்று, அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்டாவது மனதினாலேயே இதற்க்கு அடிப்படை காரணம் விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு விஷயங்கள் இதற்க்கு அடிப்படையான காரணம், உயிர் வாழ வேண்டும் எனும் ஆசை நான் என்ற நினைவு இது எல்லாவற்றிக்கும் அடிப்படை மூல காரணம் மாயை எனும் அறியாமை.

உரையாடலில் ஒரு பகுதி 44

செயல்களால்,சிந்தனைகளால், மனம் இருப்பதை அறிய முடியும் ஆனால் அதற்க்கு ஆதார மூலமான ஆன்மாவை அறிய முடியாது. மனம் இறந்த நிலையே ஆன்மா பிரகாசிக்கும் இடம்.  நாம் உயிருடன் இருப்பதை அறிய உணர முடியும். ஆனால், உயிரை அறிய உணர  முடியாது. இது போல் தான் மேல் சொன்னது.

புதன் 3

புதன் 9ம் இடத்தில் இருந்தால் அறிவாளியாக முடியும், பேச்சுவன்மை உண்டாகும், வர்த்தகத்துறை கல்வியில் தேர்ச்சிபெறக்கூடும். புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் அந்த ஜாதகி மகிழ்ச்சியோடு வாழ்வதுடன் அடக்கமுள்ளவளாகவும், சுமுகமாகப் பழகுகிறவளாகவும் விளங்குவார். புதன் பொதுவாக சிம்ம லக்கினக்காரகர்களுக்கு தனுசில் இருந்தால் தனயோகம் வரும். புதன், செவ்வாய் ஆகியோர் ஒருவருக்கொருவர் சமசப்தமாக இருந்தால் உயர்ந்த பெரிய சரீரம் அமைந்திருப்பர்.

புதன் 2

புதனுக்கு 1,2,5,6,9,10ல் கேது நின்றிடில் காதல் வரும், குரு, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி பெறும்.  செவ்வாய் பார்க்கில் தோல்வியுறும். புதன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் எழுத்து, சொந்த தொழில், கலைகளில் ஆர்வம் ஏற்படும். புதன் மீன லக்னக்காரகர்களுக்குக்கேந்திராதிபத்திய தோஷம் உடையவரானாலும் கெடுதலை பண்ணமாட்டார். புதன் பலம் கூடிய ரிஷப லக்னத்தாருக்கு விஷயஞானம், பேச்சில் கெட்டிக்காரத்தனம், பொருளாதார தட்டுப்பாடு இராது.

புதன்

ஜோதிட விதிமுறைகள் வாழ்க்கைக்கே வழிகாட்டியாக விளங்குகின்றன.   புதன் லக்னத்தில் நின்றிடில் படிப்பில் நாட்டம், கலையார்வம், பந்த பாசம் உள்ளவராய் திகழ்வர். புதனுடன் சூரியன் சங்கமித்தால் தாய் மாமனுக்கு கெடுதி விளைவிக்கும். புதன் பலமுடன் இருப்பின் விஷ்ணு பூஜை வாயிலாக சித்தி பெறுவர்.  புதன் 10ல் இருந்தால் கணிதம், ஜோதிடம், மனைவியிடம் அன்பு, வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பும் உண்டாகும். புதனுக்கு 1,5,9,2,6,10ல் கேது இருப்பின் காதல் வரும். செவ்வாய் பார்க்கின் தோல்வி, சுக்கிரன் பார்க்கில் காதல் வெற்றி…

செவ்வாய் 12

செவ்வாய் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ அந்த வீடும் கேந்திர வீடாக அமைந்தால் ருசிகரயோகம் ஏற்படும்.  இதனால் தைரியம், சாகஸம், வெற்றி மேல் வெற்றி பெருவர். செவ்வாய் 2ம் வீட்டிலோ, 4ம் வீட்டிலோ, 12ம் வீட்டிலோ இருப்பின் அவர் வீட்டுக்கு மூத்த பிள்ளையாவார். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலோ, கடகம், சிம்மத்தில் நின்றாலோ குரு, சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இவர்களால் பார்க்கப்பட்டாலாவது செவ்வாய் தோஷம் ஏற்படாது.

செவ்வாய் 11

செவ்வாய் கிரகத்திற்கு 7ல் சூரியன் நின்றால், அங்காரகன் வக்ரம் பெற்று உள்ளார் என்று கொள்ளவேண்டும். செவ்வாய் 12ல் நிற்பது தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் பாதிக்கப்படும் ஆயுள் பங்கமும் ஏற்படும். செவ்வாய் பெண் ஜாதகத்திலும், ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனும் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெற்று இருந்தால் தாம்பத்திய உறவு பலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய்7ல் இருந்தால் இருதாரம் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு 8ல் இருந்தால் மனைவியை இழந்து வாழ்வார், பின்னர் பல மாதர்கள் தொடர்பு ஏற்படும்,…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  76

வாதாதி சர பேதங்கள்  சிலேஷ்ம தேஹிக்கு கம்பீரமாக சரம், பித்தேஹிக்கி சீக்கிர சவரம் வாததேகிக்கு சமசரம், பித்ததில் துரிதகதி, சிலேஷ்மத்தில் ஸ்திரகதி, வாதத்தில் மந்தகதி சேஷ்டை உண்டாகி இருக்கும். வாதாதி பிரகிருதி தேஹ லக்ஷணம்  பித்த ரோகி தேகம் உஷ்ணமாயும், வாதரோகத்தால் சீதலமாயும் சிலேஷ்ம ரோகியின் தேகம் சலமயமாயும் இருக்கும் இவைகளைத்தான் தேகத்தின் சேஷ்டைகள் என்று சொல்லப்படுகின்றது. ரோகமானது சாத்தியமென்று, அசாத்தியமென்றும் இரண்டு விதமாயிருக்கிறது கால சம்பிராப்தியால் சகலமும் நிஷ்பலமாகி ஜீவியின் இருப்பு மரணமானது நிச்சயமாகின்றது காலஞானமில்லாததினால்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  75

காலசங்கிய பிரமாணானி இருபத்தோராயிரத்தி  அறு நூறு( 21,600) சுவாசமானது இரவும், பகலும் ஒடுகின்றது இதற்குதான் பிராணன் என்று பேர், இதுகாலபிராப்தியால் நாசம் சம்பவிக்கின்றது. சரீரம் என்கிற வீட்டில் ரக்ஷகப்படுகின்றது, உள்புரமாக மூச்சானது பத்து அங்குலமும் மூச்சு வெளியில் விடும்போது பனிரெண்டு அங்குலமும், போகின்றது ஆகையால் மனது நிறுத்தி வருதலும், போதலும் சமானமாயிருந்தால் காலதரிசனமாகா.  சிரஞ்சீவியாயிருப்பான். காலபேதத்தால் வாத பித்த சிலேஷமென்கிற தாதுவினால் தேகத்தின் சகல குணங்களும் நிச்சயப்படுகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  74

இடகலை நாடி .; நாசிகையின் இடது பாரிசமாக ( வழி ) வரும் காற்றை இடகலை என்றும், சந்திரனென்றும், பித்துரியானமென்றும் பதினாறுகலைகளை உடையதென்றும் சொல்லப்படுகின்றது. இனி சுழிமுனையென்னும் நாடியை குறித்து இது வைத்திய சாஸ்திரமாதலால் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.  ஓ பார்வதி, சர லக்ஷணங்கள் முதலியது சர சாஸ்திரத்தில் புகட்டி இருக்கிறேன் இது வைத்திய கிரந்தம் ஆதலால் அவ்விஷயங்களை விவரமாய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சரம் பலதென்று தெரியக் காட்டினேன் இனி அதுகளின் மாறுதலால் உண்டாகும்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  73

சூரிய சந்திராதி சுர லக்ஷணம் ..  இடாசலாம நிஸ்வாச சோம மண்டல கோசரா  பித்ருயான மிதிஞேயம் வாமமாசிரித்யதிஷ்டதி  தக்ஷிணே பிங்களா நாடி வஹ்ணி மண்டலகோசரா தேவயானமிதிஞேயம் புண்யகர்மானுகாரணி. வலது பக்கத்து நாசிகை துவாரமாய்வரும் உஸ்வாச நிஸ்வாச ரூபமாய் இருக்கும் காற்றை பிங்களை என்றும், சூரியனென்றும், தேவயானமென்றும், புனராவிருத்தி ரஹிதமென்றும் புண்ணிய கருமங்கள் செய்யும்படியானதென்றும் பன்னிரெண்டு அங்குலம் பாயுமென்றும் அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  72

ஸ்வர பேதம் …..  சூரிய சுரத்தில் உதயமாகி அஸ்தமானத்தில் சந்திரன் இருந்தால் மிகவும் சுபமாகும்.  இது தவிர்த்து சந்திரனுக்கு பதில் சூரியனும், சூரியனுக்கு பதில் சந்திரனும் உதயமானால் அசுபம் ஹானி பீடை முதலியது உண்டாகும். கிரம சுர லக்ஷணம் .. கிரமமான சுரம் உதயமாகிலும் சுபம் வாய்க்கும் என்றும் வினவ தேவியார் சுவாமியைப் பார்த்து ஓ நாயகா, தாங்கள் கூறியது ஒன்றும் எனக்கு தெரியவில்லை. பார்வதி பிரசனை ..   சூரியனென்னறால் யார், சந்திரனென்றால் யார் அவைகளின் ரூப…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 39

 4 – இல் பாவர், 4 – க்குரியவர் பாதகாதிபதி சாரம் பெற்று பாவரால் பார்க்கப்பட்டால், தாய்க்கும், ஜாதகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். தாயை ஈனமான வார்ததைகளை சொல்லி வேதனைப்படுத்துவார். அதை துச்சமென நினைத்து தாய் ஜாதகருக்காக கடைசி வரையில் போராடுவாள்.  4 – க்குரியவர் பாதகம் பெற்று, 12 – க்குரியவர், 4 – இல் அமர்ந்து பாதகாதிபதியாலும், 6 – க்குரியவராலும் பார்க்கப்பட்டால், இருதயம், மார்பு போன்றவைகளில் நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெறுவர்.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 38

 4 – க்குரியவர் ராகு சேர்க்கை பெற்று, சனி, சக்கிரன், குரு தொடர்பு 5 – க்குரியவருக்கு கிடைத்தால், புதையல் யோகம் அல்லது திடீர் லாட்டரி யோகம்.  4 – இல் 1,2,3, 10 – க்குரியவர் சேர்க்கை, இவரை யாரும் பார்க்காமல் இருக்க, 4 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை இருந்து, 6, 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றிருப்பினும், இவன் தாய், ரோகி, மருந்தீடு, செய்வினை, ஏவல், தோஷத்தால் சித்த சுவாதீனமற்றவன் குடும்பம்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 37

 4 – க்குரியவர் பாவர் சாரம் பெற்று, 4 – க்கு 8 – இல் அமர்ந்து நாலை பாவர் பார்த்தாலும், 4 – க்குரியவர் நீச்சம் பெற்று, 4 – ஆமிடம் உபயராசியாகி, லக்கினாதிபதியின் தொடர்பை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் பலம் குறைந்து, 4 – க்குரியவர் பலம் பெற்று உபயராசியிலிருந்து லக்கினி£திபதியின் தொடர்பை பெற்று உள்ள ஜாதகர்களுக்கு 2 தாய் ஏற்படும். தன் தாயின் வளர்ப்பு குறையும். 4– க்குரியவர் நின்ற வீட்டிற்கு அதிபதி…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36

 4 – க்குரியவர் கேந்திரம் பெற்று சுபரால் பார்த்து லக்கினாதிபதி 8 – லிருக்க, நிலபுலம் உண்டு. 4 – க்குரிய திசையும், 4 – இல் உள்ளவர் திசாபுத்தியிலும் சொந்த வீடுமனை அமையும்.  4 – க்குரியவர் 11 – ல் பாவருடன் சேர, 6 – க்குரியவர் 7 – இல் 4 – க்குரியவரால் பார்க்க, சந்திரன் 2 – இல் அமர பிறந்தவனின் தாய், பல தொல்லைகளுக்கு ஆளாவாள். அந்தக் குடும்பம்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 35

 4 – மிடத்தை பாபர் பார்த்து, 4 – க்குரியவர், 5, 9 – லிருந்து, 5 – க்குரியவர் பார்த்தால், பூர்வீக சொத்துக்கள் மாறி புதிய பொலிவுடன் திகழும். மாதுர் வகை சொத்து அழியும். பிதுர் வகை சொத்து விர்த்தி அடையும். நிலம், வீடு, வாகனங்கள் கடின உழைப்பின் பேரில் கிட்டும். 4 – க்குரியவர், பாதகம் பெற்று, 4 – இல் பாவர் பாதகாதிபதி சாரம் பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றால் பிரயாணங்களில்…

எது பிரம்மமுகூர்த்தம் ?

தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம் கடமையில் வழுவாத நேரம் அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

எது இராகு காலம் ?

அகங்காரம் கொள்ளும் நேரம் பாசம் கண்களை மறைக்கும் நேரம் ஆசைகள் எல்லையை மீறும் நேரம் கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம் தேக கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் தோன்றிய வரலாறு

திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார். வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து  விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர்.…

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 3

சேலம் மாவட்டத்தில் ஆலத்தூர், கல்வராயன்மலை, கராங்காடு, உத்தமசோழபுரம், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் ஔவையார் ஆலயங்கள் இருக்கின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 2

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூா், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, இடும்பாவனம், துளசியாபட்டினம், திருவையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் ஔவையார் கோவில்கள் காணப்படுகின்றன

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஔவையார் ஆலயங்கள் 1

 கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் ஔவையாருக்கு ஆலயங்கள் உள்ளன.

அஞ்சலிவரத ஆஞ்சநேயர்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவரான ஆஞ்சநேயர் 16 அடி உயரத்தில் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை மிகப்பெரிய சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டது.

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்

இஞ்சியின் இயல்பு இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில்சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருகவேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்துசாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலேதாஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும் தொண்டை வலி ஆஸ்துமா போன்ற…

உரையாடலில் ஒரு பகுதி 43

மரணத்திற்க்கு பிறகும் உண்டாகும் நித்திய ஆனந்தமே நம் முன்னோர்களின் ஆய்வாக இருந்தது.  மேனாட்டு கல்வி முறை – வாழ்க்கை முறை நமது தேச மக்களின் இயற்கையான  கல்வி முறைக்கும், வாழ்க்கை முறைக்கும் நேர் விரோதமானது.  சாதாரண மக்களால் நன்கு தேர்ச்சியடைய முடியவில்லை இயற்க்கையான கல்வி முறையும் கிடைக்கவில்லை விஞ்ஞானத்தை விரும்பினர், வேதாந்தத்தை விட்டனர். விஞ்ஞானம் இவர்களின் விருப்ப பொருள் ஆனது. வேதாந்தமோ இவர்களின் ‍உதாசீனத்தால் தூசி படிந்து மறைய தொடங்கியது. இதனால் இரண்டிலும் நிறைவு இல்லாத நிலை…

உரையாடலில் ஒரு பகுதி 42

நம் முன்னோர்கள் விஞ்ஞானத்தின் முற்றிய வளர்ச்சியை முழுமையாய் அறிந்திருந்தனர்.  அதனாலேயே அதை மறைத்தும் மறந்தும் விட்டனர் காரணம் அவற்றால் ஆக்க பூர்வமானதைவிட அழிவு பூர்வமானதே அதிகம், அடுத்தது குறுகிய கால தேவைக்கு மட்டுமே பயன்படும்.  அதனால், ஏற்படும் தீய விளைவுகளோ, வெகு காலத்திற்க்கு சமுதாயத்திலேயே படிந்து நிற்க்கும்.

உரையாடலில் ஒரு பகுதி 41

கணிதம், வான ஆராய்ச்சி , கலைகள், தொழில்களில் நம் முன்னோர்கள் ஆக்க பூர்வமான அறிவோடு அளவோடு இருந்தனர். யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இப்போது எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை அதனாலேயே தீமையும் அழிவும் பெருகி விட்டது. அஸ்திர சஸ்திரங்களில் நம் முன்னோர்கள் வெகு அறிவுடனும், திறமையுடனுமே இருந்தார்கள் ஆனால் அதை பொது மக்களின் கைகளுக்கு கிடைக்குமாறு செய்யவில்லை, இப்போது எது வேண்டுமானாலும் பொது மக்கள் கைக்கு மிக விரைவில் வந்து விடுவதால்…

உரையாடலில் ஒரு பகுதி 40

சின்ன, சின்ன விஷயங்களுக்கு மிக பெரிய விலையாகிய தன்னை இழந்தது தான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பதை மனிதன் அறியவில்லை.  அதில், கிடைக்கும் சுகமும், மகிழ்ச்சியும் தற்காலிகமானது என்பதை மனிதன் அறியவில்லை. மன வலிமை பெற்ற மனிதனுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஓர் அளவு போதும் தற்போதய மனிதன் மன வலிமை அடைய உள்ள பயிற்ச்சிகளை மறந்து விட்டான் அதனால் அவன் எப்போதும் சந்தேகம், கவலை, துக்கம் போன்றவற்றின் பிடியில் சிக்கி வாழ்க்கையை அனர்த்தமாக்கி விட்டான். ஆயுத கண்டுபிடிப்புகளே இதற்க்கு…

உரையாடலில் ஒரு பகுதி 39

 நமது முன்னோர்கள் ஆராய்ச்சி பொருளாய் எடுத்தது பிரபஞ்ச இருப்பை, இயல்பை அதனுடன் தொடர்புடைய இயற்கையை இப்படி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டதால் நாம் பேசும் விஞ்ஞானம் போன்றவற்றை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் ஆன்ம விஞ்ஞானத்தை முதன்மை படுத்தியதால் மற்ற விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.  ஒரு விதத்தில் பார்த்தால் நிரந்தரமற்ற வாழ்க்கையை பெரிதாய் எண்ணி வேண்டாத வினைகளை வளர்த்துக்கொள்ள அஞ்சினார்கள் தற்போதய விஞ்ஞான வளர்ச்சி ஆக்கத்தை விட அழிவில் அல்லவா வளர்ந்து நிற்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால்…

உரையாடலில் ஒரு பகுதி 38

பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே மனிதன் திறமாகிறது.  மனிதனின் திறமையாகிறது. பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும். நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது.  ஈரம்  என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது. நெருப்பு –  கோபம், தூய்மை கொண்டுள்ளது. வாயு –  போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது, மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது. ஆகாயம் –  போல பரந்து…

உரையாடலில் ஒரு பகுதி 37

பிராணணின் செயல்பாட்டால் உடலில் நோய் ஏற்படவும் நோய் குணப்படுத்தவும் முடியும் அது போல மன வலிமையையும் மன தளர்ச்சியையும் அடைய முடியும். பிராணணின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடல் நோய்வாய்படுகிறது.   உடல் நோய்வாய்பட்டால் மனம் தளர்ந்து சோர்ந்துவிடுகிறது. மனம் சோர்ந்து விட்டால் புத்தி தெளிவாய் இருப்பதில்லை, தெளிவில்லாத புத்தியின் செயல்கள் நம் வாழ்க்கைக்கு பெரும் கேடு விளைவிக்கின்றது.

உரையாடலில் ஒரு பகுதி 36

இப்படிப்பட்ட மனதை சரியான படி உபயோகித்தால் மனிதன் மாமனிதன் ஆகலாம் இதிலிருந்து நமக்கு ஒன்று தெரியும் மனிதன் வேறு மனம் வேறு என்பது தான் மனிதன் இல்லாவிட்டால் மனம் இல்லை, மனமே சரியில்லையென்றால் அவன் மனிதனே இல்லை மனதின் செயல்பாட்டால் உடலை கட்டுப்படுத்த முடியும் உடலின் செயல்பாட்டால் மனதை கட்டுபடுத்துவது என்பது முழுமையாக முடியாது ஆனால் பிராணணின் செயல்பாட்டால் உடல், மனம் இரண்டையும் கட்டுப்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்,

உரையாடலில் ஒரு பகுதி 35

மனிதன் தான் அறிந்தவற்றை அனுபவித்து சிரிப்பதோ, அழுவதோ, சுகப்படுவதோ, துக்கப்படுவதோ ஆசை, கோபம், சந்தேகம் குழப்பம் போன்றவற்றை மனிதன் அனுபவிப்பது மனதின் மூலமே அன்பு, பாசம், பரிவு, நட்பு, தியாகம் பெருமை பொறுமை போன்றவற்றின் நிலைகளமும் இந்த மனமே.

உரையாடலில் ஒரு பகுதி 34

மனம் என்ற ஒன்றை கொண்டதாலேயே  அவன் மனிதன் என்ற பெயர் பெற்றான் மனம், அறிவு ஆகும், மனம் புத்தியாகும் எது எல்லாம் எப்படியெல்லாம் ஆனாலும் அதனடியில் மனம் இருக்கும், அதற்க்கும் அடியில் பிராணன் இருக்கும் இதை புரிந்து கொண்டால் நமக்கு கொஞ்சம் வசதியாய் இருக்கும் நம் செயல்கள் சிந்தனைகளை அறிய  –

உரையாடலில் ஒரு பகுதி 33

ஐம் பூதமென்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். ஐம் பொறிகள் என்பது கண், காது, மூக்க, நாக்கு, மனம். ஐம் புலன்கள் என்பது பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், சிந்தித்தல் மேலே சொல்லிய விஷயங்களில் மனிதன் ஈடுபட ஆதாரமாய் இருப்பது பிராணன், இந்த பிராணன் இல்லையேல் அவன் சவமாகி விடுவான்.  சவமானவனிடம் ஆனந்தத்தை அனுபவிக்கும் ஆற்றல் இல்லை எத்தனை பொறிகள் – புலன்கள் இருந்தாலும் அனுபவிக்க பிராணன் மட்டுமே முக்கியம் அதுவே ஜீவ சக்தி, அதுவே…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 33

உருவம் இருக்கும் எதனுள்ளும் அதனை இயக்கும் உருவமில்லா  சக்தி ஒன்று இருந்தே தீரும் என்பதே அது நாம் உருவம்  கொண்டிருக்கிறோம் நாம் இயங்க நம்முள் உருவமற்ற காற்று தேவைப்படுகிறது. அது போல தான் எல்லாவற்றிற்கும் அண்டங்களாலும் அணுவானாலும் இது தான் விதி இதனையே பண்டைய சித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கிறது என்று கண்டு உணர்ந்து கூறினார்கள். மனிதன் செயலில் கற்பனையெனும் பாகம் நம்மை வளமாக்கவும் செய்யும், நாசமாக்கவும் செய்யும் அது என்ன செய்யும், எப்படி செய்யும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 32

நாம் மனதின் ஒரு செயலான கற்பனை எனும் விஷயத்தை பற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டால் அதை செயல்படுத்தும் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நம் வாழ்வில் நாம் துன்பம், சோகம், தோல்வி, விரக்தி போன்றவற்றை அடியோடு ஒழித்துவிட்டு இன்பம், மகிழ்ச்சி, வெற்றி, உற்சாகம் எனும் நிலையினை இறக்கும் வரை அனுபவிக்கலாம் கற்பனையின் திறன் எப்படிப்பட்டதென்றால் அதால் கடவுளையே உருவாக்க முடியும் இன்னும் ஒரு படி மேலேபோய் யோசித்தால் அதனைக் கொண்டு நாம் கடவுளாகவே ஆக முடியும். நான்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 31

 கனவுகள் காண்பதை விட்டுவிட வேண்டாம் அதே போல் எல்லா கனவுகளும் பலித்துவிடும் என்றும் எண்ண வேண்டாம். பலிக்காத கனவுகளுக்கு மாற்று முறை கையாள எப்போதும் தயாராக இருங்கள் தேவைப்பட்டால் அந்த நிறைவேறாத கனவுகளை மறக்கவும், அழிக்கவும் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் அப்படி அதை அழித்துவிட்டு வேறு கனவுக்கு சென்றுவிடுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 30

தோல்விகளும், கவலைகளும் நம்மை அலைக்கழிக்கும் போது நாம் வாழும் வழிக்கான உபாயத்தினை கண்டுணர மிகுந்த அக்கரையை ஏற்படுத்தி நமது முயற்சியினை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் தோல்விகளை தடுக்க தவிற்க சில முன்னேற்ப்பாடான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் ஆக வேண்டும் எப்படி என்றால் எந்த விஷயத்திற்கும் இரண்டு விதமான ஆலோசனைகளும் அதற்கு தகுந்தாற்போல் தற்காப்பு நடவடிக்கைகளையும் வரையறுத்து கொள்ளவேண்டும் அதற்கு உண்டான சூழ்நிலைகளை உருவாக்கி நாம் நமது திறமையினை மெருகேற்றி கொள்ள வேண்டும். அப்போது…

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

எனது போர் முறை 25

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது, நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது.

எனது போர் முறை 24

அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது?…

எனது போர் முறை 23

அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.

எனது போர் முறை 22

நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன்.

எனது போர் முறை 21

இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்தித்த ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை…

எனது போர் முறை 20

இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான…

சுந்தர யோக சிகிச்சை முறை 104

குடலின் பல பாகங்களில் தள்ளப்பட்ட இப்பொருள், அதாவது மலம், தேங்கிக் கொள்ளுகிறது. இந்நிலைமையே மலச்சிக்கலென்று கூறுகிறோம் இப்பொருள்கள் தங்குமிடங்களில் அழுகி, நாறி விஷங்களை உண்டாக்கி அபாயமாக மாறுகின்றன.  எல்லா இடங்களைக் காட்டிலும் சீகம் (CECUM) என்று சொல்லக் கூடிய  குடல் பாகம்தான் மிகவும் அபாயகரமானது! எக்காரணங்களால் இம்மாறுபாடுகள் ஏற்படுகின்றன

சுந்தர யோக சிகிச்சை முறை 103

பல வியாதிகள் மலச்சிக்களிலிருந்து ஆரம்பிப்பது போலவே, எந்த ஜுர வியாதிகள் வந்தாலும் மலத்தைக் கட்டி விடுகிறது. இதை அறிந்தே வைத்தியர்கள், மருந்துகளில் பேதியாகிற வஸ்துக்களை சேர்க்கிறார்கள்.  குடலில் மலம் தங்கவே விஷம் உண்டாகிறது. இது உடலெல்லாம் பரவுகிறது.  இதைச் சுய – விஷ – வெறி ( AUTO – INTOXICATION ) என்கிறார்கள். உடல் தனக்குத்தானே விஷத்தைக் கக்கிக் கொள்கிறது.  இந்த அபாயகரமான நிலை குடலில்தான் ஏற்படுகிறது.  அதாவது, பெருங் குடலினுடையதே இப்பொறுப்பு, இக்குடல் உபயோகமற்ற…

சுந்தர யோக சிகிச்சை முறை 102

நோய்கள் பல— வெளியில் இருந்தால் தான் மலம் கொடியது என்ற நினைவு தவறு. இயற்கை இதை உடலில் வைக்க பாதுகாப்பை நிரப்பி இருக்கிறதென்று எண்ணுவதும் அறியாமையே.  தினம் இது சரியாக வெளியே போகா விட்டால் தலைவலி, பசியின்மை, பாசம் படர்ந்த நாக்கு. அபெண்டிஸைடிஸ், தூக்கமின்மை, நரம்புகளில் சோர்வு, குடல் வீக்கம், கீழ்வாதம் ( ருமேடிஸம் )  காசநோய் இன்னும் பல வியாதிகள் உண்டாகு மென்று டாக்டர் கெல்லாக் ( Dr. KELLOGG )  சொல்லியிருக்கிறார். இந்தப் பட்டியலில்…