அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 18. மரண பயம் நீங்க
வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. அம்மையே உன்னால் அடையப்பெற்ற வாம பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் கோலமும் உங்கள் திருமண கோலமும் என் உள்ளத்து உள்ளே இருந்த ஆணவத்தை போக்கி தெளிவு பொலிவு பெற்ற திருவடிகள் என் உயிரை பறிக்க பாசக் கயிறுடன் காலன் என் முன் வரும்…
