கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது
வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி,
தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும்
செந்தாமரைபோன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது
வெள்ளிமுத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற
குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை
பல மணிகளால் ஆகிய மேகலை வகைகளும் பட்டும்
