கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 43

1, 4,9 – க்குடையவர்கள் மூவரும் கூடி 4 – இல் நிற்க, குரு லக்கினத்தைப் பார்க்க பொருள், லக்கினம் ஆடை, ஆபரணம், அரச சுகம் பெறுவார். சந்திரன் 4 – க்குடையவர், குரு, சுக்கிரன் நால்வரும் கூடி இருந்து ராசியாதிபதி நட்பு ஆட்சி உச்சம் அடைய மேற்படி பலன். சுக்கிரன் நின்ற ராசிக்கு 9, 10 – க்குடையவர்கள், லக்கினாதிபதியோடு கூடி 4 – இல் நிற்க, கணக்கில்லாத பொருள்கள், பூமி ஏவலாட்கள் உடையவர். குரு…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 42

சந்திரனுக்கு 4 – க்குடையவரும், லக்கினத்திற்கு 4 , 8 – க்குடையவரும் மூவரும் கூடி நிற்க, சனி, சந்திரன் பார்க்க தாய்க்கு மரணம் 4 – இல் சனி நீச்சமடைய, 8 – க்குடையவர் பார்க்க, 4 – க்குடையவர் நிற்க மேற்படி பலன். தேய்பிறை சந்திரன் 6, 8, 12 – இல் நிற்க, 8 – இல் , 4 – க்குடையவர் நிற்க, மேற்படி பலன். 6, 4 – க்குரியவர்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 41

4 – க்குடையவர் ஆட்சி பெற்று சந்திரனுக்கு திரிகோணத்தில் நின்றால் தாய்க்கு பூரண வயது. சந்திரன் 9 – இல் நிற்க, 9 – க்குடையவர் 4 – இல் நிற்க தாய்க்கு பூரண வயது. லக்கினாதிபதி 4 – க்குடையவரோடு கூடி 9 – ல் நிற்க, 7 – க்குடையவர் பார்க்க மேற்படி பலனே. 1, 4 – க்குடையவர் திரிகோணமடைய, லக்கினாதிபதிக்கு திரிகோணத்தில் குரு நிற்க, தாய்க்கு பூரண வயது.

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 40

 4 – இல் 4 – க்கு 6 – க்குரியவர் சாரம் பெற்று பாவருடைய தொடர்பை பெற்றால், தாய்க்கு மனநோய், நரம்பு தளர்ச்சி, நீர், தோல் சம்பந்தப்பட்ட வியாதி வரும்.  4 – ஆம் பாவாதிபதி, பாதகாதிபசாரம் பெற்று, தாய்க்காரகர் கர்மாதிபதி சாரம் பெற்று, 4 – க்கு, 4 – ஆம் பாவாதிபதி மறைந்தால், பால்ய முதல் சுகமற்றவன். தனது உடல் உழைப்பால் மக்களை பேணிக்காப்பான். மக்களால் அபகீர்த்தி உண்டு பல கர்மாக்களுக்கு உட்படுவார்.…

புதன் 5

புதனும், சந்திரனும் பரிவர்த்தனமாகிவிடில் அவர் நினைத்த படிப்பை படிக்க முடியாது.  பட்டப்படிப்பும் ஏற்படாது. புதனுக்கு புதன் 6,க்கு8ல் நின்றிடில் ஆண் குடும்பத்தினரை பெண்ணுக்கு பிடிக்காது. அதேபோல் பெண் குடும்பத்தினரை ஆணுக்கு பிடிக்காது. புதன் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ, அதுவும் கேந்திரத்தில் இருப்பின் புத்திரயோகம் ஏற்படும். அதனால் செல்வந்தராகவும், சிறந்த பேச்சாளராகவும், பொதுமக்களிடையே பேரும், புகழும் அடைவர். புதன் நீச்சனாக இருந்தால் வேறு மதம், வேறு இனம், வேறு மொழியைச் சேர்ந்தவர் வாழ்க்கைத் துணையாக அமையும். புதனும், குருவும்…

புதன் 4

புதன் மீனத்தில் நீசம் அடைந்திருந்தால் கல்வித்தடை, தாமதக்கல்வி படிப்பை பாதியில் நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டமேற்படும். புதன் நீசமாகி, சந்திரனோடு தொடர்பு இருக்குமானால் தாயை பகையாளியாக்கிக்கொள்வார்கள். புதன் நீசப்பட்ட ஜாதகர், பெண் சபலம் ஏற்படு நீர்த்துப்போன விந்து பலத்தால் புத்திர பாக்யம் ஏற்படாது.  சுய இன்பம் அனுபவிப்பவர். புதன் ( நீசம் பெற்றால் ) ஒரு அலி கிரகமென்பதால் சிலருக்கு திருமணத்தின்மீது பற்று இருக்காது சில ஆண்கள் பெண் குரலில் பேசுவது பெண்கள் போல் நடந்து கொள்வார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 107

 பெருங்குடலின் இப்பாகமோ உறிஞ்சும் சக்தி வாய்ந்தது.  யோசனையின்றி இந்த விஷங்களையும் சீகம் உள்ளிழுத்து விடுகிறது. ரத்த ஓட்டத்துடன் கலக்கச் செய்கிறது ஒவ்வொரு கருவியும் இவ்விஷத்தை உண்டு விட்டு நோய் வாய்ப்படுகிறது. தம் தம் வேலைகளைச் செய்யச் சக்தியின்றிக் கெடுகின்றது பித்தகோசம் சிறுநீர்க் கருவிகள் கேடுற்று விஷப்பொருள்கள் வெளியே தள்ளச் சக்தியின்றி உடலில் குவியச் செய்கின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 106

 மலச்சிக்கல் நிலையில் இந்த சீகம் இவைகளை வெளியே தள்ளுவதில்லை. இச் சனீஸ்வரக் கூட்டத்துடன் அக்கம் பக்கங்களிலுள்ள சதைக்கோளங்களும் ரசங்களைக் கக்கிக் கலந்து விடுகின்றன. விஷங்கள் கலந்த இக்குழம்பு, உடைந்து கெடுகின்றது. உள் இழுக்கப்படாத புஷ்டி சத்தும் இத்துடன் கலக்கவே இந்த சீகம், பெரிய விஷ இயந்திர சாலையாக மாறிவிடுகிறது. பிறகு கேட்பானேன் இங்கிருந்து விசித்திரமான, பயங்கரமான விஷ லாகிரிப் பொருள்கள் உண்டாகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 105

சிறுகுடலிலிருந்து தள்ளப்படும் உணவு மிகுதியால், நூற்றுக்குத் தொண்ணூறு பாகம், நீர்க் குழம்புமயமாக இருக்கின்றது. விஷப் பூச்சிகள்  விருத்தியாக இன்னும் பல செளகரியங்கள் இக்குழம்பில் அமைந்துள்ளன பித்தகோசம் உணவு ஜீரணமாவதற்குப் பித்தத்தைச் சிறுகுடலில் தாராளமாகக் கொட்டுகிறது. சிறுபாகம் உபயோகமாக, பெரும் பாகம் சீகத்திற்குள் தள்ளப்படுகிறது. இப்பித்தம், விஷப் பொருள் என்றறிய வேண்டும். சிறு குடலில் சதைச் சுவர்கள் ஜீரணத்தின் பொருட்டு விஷ ரசங்களைக் கக்குகின்றன.  இவைகளும் வந்து சேருகின்றன.

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 3

 அருள்மிகு  மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம் அருள்மிகு  சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம் அருள்மிகு  வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் அருள்மிகு  அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள் 2

 அருள்மிகு  திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம் அருள்மிகு  காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம் .அருள்மிகு  ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம் 9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு  அருள்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்

மேற்கு நோக்கிய சிவ திருத்தலங்கள். 1

 அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம் அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்

பஞ்ச நமஸ்காரங்கள்

:1) ஏகாங்க நமஸ்காரம் : தலை மட்டும் குனிந்து வணங்குதல் 2) துவிதாங்க நமஸ்காரம் : இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல் 3) பஞ்சாங்க நமஸ்காரம் : ( பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் ) இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல் 4) சாஷ்டாங்க நமஸ்காரம் : இரு கைகள் இரு முழந்தாள்கள் சிரசு மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்…

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 5

.ஐரோப்பாவில் நடை பெறுகின்ற அரசியல் கிளர்ச்சிகள் பற்றியோ மாற்றங்கள் பற்றியோ அல்லது, மந்திரிசபைகளின் வீழ்ச்சி பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை ; சோஷலிசம் , அனார்க்கிசம் என்பவைப்பற்றியோ ஐரோப்பாவின் பிற அரசியல் மாற்றங்கள் பற்றியோ அவர்களுள் ஒருவர்கூட கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் சர்வசமயப் பேரவைக்கு இந்திய சன்னியாசி ஒருவர் அனுப்பப்பட்டது பற்றியும் அவர் அங்கு ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றார் என்பது பற்றியும் இலங்கையில் உள்ள ஆண், பெண், சிறுவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 4

இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன், அறிவுகூட இரண்டாம் பட்சமே ; மதம் ஒன்றே முக்கியமானதாக இங்குக் கருதப்படுகிறது. நமது நாட்டுப் பாமர மக்கள் எதுவும் தெரியாதவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஒருமுறையல்ல, நூறுமுறை கேட்டிருக்கிறேன். அது உண்மைதான். கொழும்புவில் வந்து இறங்கியது முதல் அதையே நான் காண்கிறேன்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 3

பிற நாடுகளில் மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்று; உண்மையைச் சொல்வதானால், அது மிகச் சாதாரண அம்சமே. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மதம். ஆங்கில சர்ச், ஆளும் வர்க்கத்தினரின் உடைமை. எனவே மக்கள் தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் தங்களுடைய சர்ச் என்று கருதி அதை ஆதரிக்கிறார்கள். கனவான்களும் சீமாட்டிகளும் சர்சைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். பெரிய மனிதத்தனத்திற்கு அது அடையாளம். இவ்வாறுதான் இதர நாடுகளிலும் அரசியல், அறிவுத் தேடல்கள்,…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 2

கொழும்பிலிருந்து சென்னைவரை என்னிடம் மக்கள் காட்டி வருகின்ற அற்புதமான கனிவும், ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் நிறைந்த வரவேற்பும். எனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் கடந்ததாக உள்ளது. இந்தியா முழுவதும் இப்படி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. ஏனெனில் இது, கடந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததை மெய்ப்பிப்பதாகவே உள்ளது- ஒவ்வொரு நாட்டிற்கும், அதற்கே உரிய பாதை ஒன்று உண்டு; அது போலவே ஒவ்வொரு நாட்டிற்கும் உயிர்நாடியான லட்சியமும் ஒன்று உள்ளது; இந்திய…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 1

சென்னையில் சுவாமிஜி முக்கியமான ஏழு சொற்பொழிவுகள் நிகழ்தினார். 7 பிப்ரவரி 1897 அன்று 1.வரவேற்புக்கு பதிலுரை; நாம் விக்டோரியா ஹாலில் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு. ஒன்று நினைக்கிறோம். தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார்- சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரததிலிருந்து கீதை பாணியில் பேசுகிறேன். இப்படிதான் நடந்திருக்க…

எனது போர் முறை 26

இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான் .ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

ஒரு  குயவன் 10 முறை சுற்றினால் களி மண்ணு கூட அழகான பானை ஆகுது.  பல்லாயிரம் வருடமா இந்த பூமி சுத்திட்டுதான் இருக்கு, இன்னும் சில மனிதர்கள் களிமண்ணாகத் – தான் இருக்காங்க. .

முன்பின் அறியாத

முன் பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பதை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..

இருக்கும் இலை எல்லாம்

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம்.  .

நமக்குத்தான் எல்லாம் தெரியும்

நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள் தான்..

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில்

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்களில், புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது விநாடிக்கு 48 கி.மீ.,வேகத்தில் 88 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும் புதன் தான்..

நில நடுக்கத்தை கண்டறிய

நில நடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி . பி . 132 – ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர்.  ரிக்டர்வடிவமைத்த அளவுகோல் நிலைநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமேகூறும்..

சாப்பிடும் பொழுது

சாப்பிடும் பொழுது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.  சாப்பிடும் பொழுது காலை தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஒட்டம் வயற்றுப் பகுதிகக்ச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.  எனவே ஜீரணம் தாமதமாகிறது.  காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால், சாப்பிட, சாப்பிட சாப்பாடு ஜீரணமாகிவிடும்.  ஏனென்றால் கீழே ரத்தம் ஒட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.  எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி…

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த

ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பேச்சு என்றாலே சிறிதும் பிடிக்காது.  ஒரு சமயம் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள்.  அவ்விருந்தில் அநேக நிபுணர்களும் கலந்து கொண்டார்கள்.  விருந்துக்குத் தலைமை வகித்தவர், வில்பர் ரைட்டை அழைத்து பேசும்படி கேட்டார்.  வில்பர் எழுந்து திக்கிய குரலில் ” இதில் எதோ தவற நேர்ந்து இருக்கிறது. பேசுகிறவன் நான் அல்ல, என் சகோதரன் ஆர்வில்தான் பேசுவான் ” என்றார்.  உடனே ஆர்வில் எழுந்து நின்று ” பேச்சை வில்பர் பேசி…

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை

உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஷியாவின் ” கார்காவ் “ சிறையாகும்.  இங்கு கைதிகளை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  மொத்தம் 40 ஆயிரம் கைதி – களுக்கு, மேல் உள்ளனர்.  மிகச் சிறிய சிறை ‘ சார்க் ‘ தீவில் உள்ளது.  இங்கு ஒரு வரை மட்டுமே அடைக்க இயலும்..