சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.

சந்தோஷம் என்பது 3

மனிதனின் மனம் உறவுகளில் இன்பம் கொள்கிறது. அடுத்ததாக கலை, இலக்கியம், புகழ், வெற்றி, ஏதாவது ஒரு துறையில் அங்கீகாரம், போன்றவற்றில் இன்பம் பெறுகிறது. இதுகளில் ஒன்றின் பின் ஒன்றாக சிந்திப்போம். உறவுகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த உறவுகளை பற்றி ஒரு முழுமையான புரிதல் வேண்டும் அப்படி புரிந்து கொள்ள உறவுகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் மனிதர்கள் பெரும்பான்மையோருக்கு அதில் ஏனோ அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை

சந்தோஷம் என்பது 2

சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட அடிப்படையானது அக காரணியான மனமே அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.   அப்படி அந்த முடிவிற்கு வந்த பின் இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின் அதில் நாம் கவனம் செலுத்தி அதை கையாள பழகிக் கொண்டால் நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும் அதற்கு உண்டான விஷயங்கள் எது,…

குருசந்திர யோகம் 1

குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் “குருசந்திர யோகத்தை “வாரி வழங்குகிறார் “கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே” பாடல் விளக்கம்:- குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும். மனைவி வழியில் தனலாபம்…

சந்தோஷம் என்பது  1

இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால் மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.    ஒவ்வொரு  சந்தர்ப்பத்தில்  ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால் படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது இன்னொருவருக்கு இன்பம் படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு  இன்பம், சந்தோஷம் தருகிறது.  இதை ‍இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே  போகும்  இதிலிருந்து…

மனம் எனும்  7

இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால் அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம். இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை. சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும், அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.

மனம் எனும்  6

 நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால் முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை, காரணம்,  மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும், வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய் இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது. அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக…

மனம் எனும் 5

உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும், மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து பழக, பழக தெரிந்துவிடும். இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது, ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள் அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்…

மனம் எனும் 4

இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன் என்ற வினா வரலாம், பதில் இதுதான் தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம், அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால் சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். அதாவது, பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்  முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்

மனம் எனும் 3

 தவறு நடக்காததின் காரணம், அறிவானது மனதை ஆட்சி செய்ததால் வேறு சிலருக்கு அறிவு ஆட்சி செய்யப்படாத மனமிருக்கும் அங்கே தவறு என்பது சர்வ சாதாரணமாக நிகழும், நிகழ்த்தப்படும் அதில் பயமோ, குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்காது.  அவரவர் வாழ்க்கையில் மேலே சொன்ன விஷயங்களை எத்தனை முறை கடந்துள்ளீர்கள், அதில் உங்களின் செயல்பாடுகள் எந்தெந்த நிலையில் இருந்தது என்பதை கவனித்தலே தன்னை அறிதலுக்குண்டான முதல்படி.

மனம் எனும்  2

மனம் பற்றி படறும் விஷயத்தை, பலதுடன் இணைத்து சீர் தூக்கி பார்த்து அதனால் ஏற்படும் விளைவுகளை  சொல்லுவது அறிவு.  ஆனால், பல சமயங்களில் அறிவு சொல்லுவதை மனம் கேட்பதில்லை எதார்த்தமான உண்மைநிலை இதுதான்.         யாருக்கும் தவறு செய்ய பயமே கிடையாது.   ஆனால், தவறு வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் மட்டுமே உண்டு.  இங்கு நாம் இதை கவனித்தால் பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது.   தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டது.

மனம் எனும்  1

        மனம் எனும் வார்த்தை ஒன்றுதான் ஆனால் மனம் எப்போதும் இரண்டானது ஏமாந்தால் அது மூன்று, நான்கு, ஐந்தாகவும் இருப்பது சலனப்படுவதும், சஞ்சரிப்பதுவுமே அதன் குணம் மனம் ஒரு விஷயத்தை பற்றும் போது அது எதைப்பற்றியும் சிந்திக்காது அதாவது நல்லது, கெட்டது, சரி, தவறு, தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம், என்கிற எதையும் கவனிக்காது, கண்டு கொள்ளாது.  ஆனால், அறிவு இதையும் இதற்கு மேலே உள்ளதையும் சொல்லும்.  மனம் அறிவாக மாறும் போது அல்லது மனம் அறிவால்…

எல்லைகளை நிர்ணயித்து  3

சுருக்கமாகச் சொன்னால் — உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை , நினைத்ததெல்லாம்  சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,  எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை  தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது , எல்லாவற்றிக்கும் போராட்டம்  சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம் எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும் அந்த  கேள்வியில் இருந்து  தன்னை கவனித்தல் தொடங்கும். அது தன்னை அறிதலுக்கு அழைத்து…

எல்லைகளை நிர்ணயித்து 2

எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும்.  படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும் அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை தனக்குள் பிரயாணிப்பதை தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது ஆனால் எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான் ஏன் என்ற கேள்வி வரும் அது அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.  அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,…

எல்லைகளை நிர்ணயித்து 1

ஓடும் போது அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது மனம் அடையும் நிலை, சந்தோஷம், திருப்தி என்பதைவிட வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும் அது நாம் அடைந்த எல்லையை மீண்டும் விஸ்தாரப்படுத்தி மீண்டும் நம்மை ஓட வைக்கும் அந்த ஓட்டத்திலும் எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால், மனதினால் தன்னைப் உற்று பார்க்கவோ, தனக்குள் செல்லவோ தோணாது அப்படி செய்து பார் என்று சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும் ஏளனமாய் கிண்டல் செய்யும் எல்லை கோடுகளை வகுத்து…

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்அவரவர் விருப்பம் கேட்காமல்  ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டு போகும் கட்டாறு. திருமணம், குழந்தை, செல்வம் சேர்த்தல் நோய்வாய்ப்படுதல் எல்லாம் பூர்வ வினை இதை புரிந்து கொண்டாலே மனம் அமைதியின் பக்கம் திரும்பிவிடும். அப்படி அமைதியின் பக்கம் மனம் திரும்பிவிட்டாலே மனம் தியானத்திற்கு பக்கம் சென்று விடும்

தியானம் என்றால்

  தியானம் என்றால் என்ன?   ஒவ்வொருவர் ஒவ்வொன்று  சொல்லுகின்றனர் தவறில்லை இதையும் சேர்த்துக் கொள்வோம். வேலையோடு வேலையாய் தன்னை மறந்து மூழ்கி விடுவது.  கடந்த காலத்திலும் இல்லாமல் எதிர்காலத்திலும் இல்லாமல் இடை விடாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஏங்குதலும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே தியானம்.

தத்துவம் தெரிந்த வாழ்க்கை

தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை. சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது அந்த வினாவிற்கு பதிலாக பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும் பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும் அதற்க்கு பதிலாக வயது அனுபவம் போன்றவை விடையாக வரும் வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும் கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும்…

உங்கள் தவறுகளே காரணம் 4

நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம் கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும். பலசரக்குக் கடைகள்,  பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ  52

சந்நிபாத தோஷ ஜிம்மை ….. நாக்கானது சந்நிபாதத்தில் கறுப்பு  நிறமாயும் சுக்கிற வர்ணமாயும் இருக்கும். துவந்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது துவந்தத்தில் இரண்டு தோஷ குறிகளை மிசிரமமாய் கலந்து தோணும். அசாத்திய ரோக ஜிம்மை குறி …..  நாக்கு நீண்டும் சகல வர்ணங்கள் கலந்தும் சொள்ளு வடிந்து கொண்டு நாக்கு பிரண்டும் பேச முடியாமல் செய்யும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 8

சம்ஹார பைரவர் சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 48

உழைப்புக்கும் வரம்புண்டு. அதற்கு மீறி உழைக்கப்பட்டால் உடல் நசியும், உணவின் அதே சேர்க்கையால் திருத்தக் கூடிய இவைக் காட்டிலும் உழைப்பு உடலை நசித்தால், ஆரோக்கியம் குன்றி நோயைத் தடுக்க முடியாது. உழைப்பு இயற்கை வாழ்க்கையில் ஏற்படாமல் வயிற்றுப் பாட்டுக்கென்று ஏற்பட்டால், மனப்போக்கின் கூட்டுறவால் இந்த உழைப்பு ஒரு பங்கு சோர்வைத் தரும். மனதின் உற்சாகத்தால் ஏற்படும் உழைப்புக்கும், நாம் நன்மைக்காகச் செய்கின்றோம் என்ற கருத்துடன் செய்யும் உழைப்புக்கும் முடிந்ததோ முடியவில்லையே, தலை விதியே, என்று செய்யும் கட்டாய…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  10

ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம் தான் ஆத்மா என்பதேயாகும் .  அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா என்று கொள்வது அறிவாகாது. அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை ஒருவன் விட்டு விலக வேண்டும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ 51

    வாத தோஷ ஜிம்மை …..  நாக்கானது வாயு தோஷத்தில் மஞ்சள் நிறத்துடன் கறகறப்புமாயிருக்கும். பித்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது பித்த தோஷத்தில் ரத்த வர்ணத்துடன் கலந்த நீலவர்ணம் போல் தோணும். கப தோஷ ஜிம்மை ……  நாக்கானது கபதோஷத்தில் வெண்மையும் திரவமுடன் கனத்தும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 7

பீக்ஷன பைரவர் பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி ஏழாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 47

 உழைப்புடன் மட்டும் நிறுத்தவில்லை எப்படி சுகஜீவிதம் உடையவன், உழைப்பு இல்லாமல் வாழுகிறனோ அதற்கு நேரிடையாகப் பாட்டாளிக்கு சக்திக்கு மீறி தொழில் காரணத்தைக் குறித்து, உழைப்பு தினம் ஏற்படுகிறது.  இந்த உழைப்பைத் தாங்க, உழைப்பால் ஏற்படும் உடல் சதை சக்திக்கழிவை மறுபடி நிரப்ப, போதுமான உணவுக்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது உழைக்கப்பட்ட உடல், உணவையும் ஓய்வையும் கேட்கின்றது.  இவைகளைப் பெறமுடியாமல் பாட்டாளியிடம் வறுமை ஒரு முக்கியத் தடையாக நிற்கின்றது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  9

ஒளிவடிவாயுள்ள சூரியனிடம் எவ்வாறு இருள் இல்லையோ அவ்வாறே அறிவு வடிவான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கிடமில்லை. அவ்வாறே மாறுபாடற்ற ஆத்மாவில் மாறுபடும் நிலைகளுக்கிடமில்லை. அப்படி மாறுபடுமேயானால் அது அழிவுடையதாய்விடும்.

உங்கள் தவறுகளே காரணம் 3

நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம் ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல் எனது அருமைக் குழந்தைகளே * முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது.. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றுருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித்தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 6

கபால பைரவர் கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.  இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 50

மரண குறி …..  தெற்கு திசையாய் தைலபிந்து பரவினால் சிலநாளில் மரணம் சம்பவிக்கும் அல்லது மீளான் என்று அறியவும். சுக குறி ……  மேற்கு, வடக்கு திசையில் தயிலபிந்து பரவினால் ஆரோக்கியம், என்று அறியவும். மாத மரண குறி ……  ஈசான்ய மூலையாய் தயிலபிந்து பரவினால் ஒருமாதத்தில் எமனைப் பார்ப்பான் என்று அறியவும். மரண குறி ……  நிருருதி மூலைலும், வாயுமூலையிலும் தயில பிந்து பரவுதலால் மரணம் சம்பவிக்கும் என்று அறியவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

கிராம வாழ்க்கையில் ஓய்வுடன் இருப்பவர் இவைகளையும் செய்யலாம் மலப்போக்குக்குக் கூட செம்பு தூக்கப் பண்ணையாள் இருக்கும் பொழுது, இந்த கிராம சுக புருஷர்கள் உழைப்பிற்கு இறங்குவதும் ஆகாததாகத் தோன்றுகிறது. பணம் பெருக, நடையும் இல்லாமல் போய்விடுகிறது. நோய் தடுத்தலுக்கு உழைப்பு, அவசியமென்று விளக்கினேன். இந்த உழைப்பும், ஒழுக்கமும் தானத்துடன் கலந்திருக்க வேண்டும்.  உழைப்பே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமானால்.  ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியிடம் ஆரோக்கியப் பெருக்கைக் காணோமே என்று வினவலாம்.  இந்த சந்தேகத்தை நினைத்தே நோயற்ற வாழ்க்கையை…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  8

விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்க‍ளிலும் ஒன்றாயுமிருக்கும் ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது.  ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன.  சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன.  கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.