பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம். இதன் பொருள் நம்மிடமே உள்ளது.  அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம். பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக…

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..3

ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.. வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2

ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன்   சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்    சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன்    சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன்     சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன்.  குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 26

இயற்கையாகவே மனம் அமைதியற்றது. ஆகவே, மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு முன், ஒருவன் மூச்சைக் கட்டுப்படுத்தித் தியானம் செய்யலாம். அது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் அதை செய்தல் கூடாது. ஏனெனில் அதனால் மூளை சூடடையும். நீங்கள் ஈசனது தரிசனத்தைப் பற்றியோ, தியானத்தைப் பற்றியோ பேசலாம். ஆனால் மனமே முக்கியம் என்பதை நினைத்துக் கொள். மனம் ஒரு நிலைப்படும்போது ஒருவன் எல்லா சித்திகளையும் பெறுகிறான். தொடர்ந்தாற்போல் தியானம் செய்தால் மனம் உறுதி பெற்று விடும். அப்போது…

வாழ்க்கையில் முடிவு செய்ய

நீங்கள் சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையை அதற்கு வைக்கும் சட்னி முடிவெடுக்கும் போது….. இந்த வாழ்க்கையை  உங்களால் மட்டும் தனியாக எப்படி முடிவு செய்ய முடியும்……..!! தனியாக யோசியுங்கள்; அவரவரது  அனுபவங்கள் நிறைய ஞாபகப்படுத்தும் நிறைய சொல்லித்தரும் கற்று கொள்ளுங்கள் காலத்திற்கும் பயன்படும் 

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வ வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான். இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார், ‘‘மனமது நினைய வாக்கு வழுத்த…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 12

பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும்…

பகவத்கீதை தத்துவம் 2

ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே ! ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே ! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனதுபிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும்,…

மனித பிறவியின் பணி

சிவஞானசித்தியாரில், “மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம் ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக்காக அன்றோ” (182) என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார். மனம், வாக்கு, காயம்,( உடல்) இம் மூன்றைக்கொண்டும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது.   இதுவே  மனித பிறவியின் பணி  

ஷோடச உபசாரங்கள் என்பவை யாவை?

ஷோடச உபசாரங்கள்  என்பது  ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்னானம், வஸ்த்ரம், யஞ்யோபவீதம், ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிண நமஸ்காரம் இவைகள் அனைத்தும் சேர்ந்ததே ஷோடச உபசாரங்கள் எனப்படும் 

பகவத்கீதை தத்துவம் 1

“உத்தவர் கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை…

வாழ்க்கை வாழ்வதற்கே,

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள். இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால்..நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே, குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டியதை உடனே கொடுத்து விடு, குழந்தைகளுக்கு தரவேண்டியதை பிறகு கொடு. மாற்ற முடியாததை மாற்ற முனையாதே, அமைதியாக மகிழ்ச்சியோடு இரு. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.. நண்பர்களிடம் அளவளாவு. நல்ல உணவு உண்டு.. நடை பயிற்சி செய்து..நல்ல புத்தகங்கள் படித்து  உடல் நலம், மன நலம்,பேணி..இறை பக்தி கொண்டு..…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம் தூமகேதுவின் துவாதச பாவ பலன்.2

தூமகேதுவின் துவாதச பாவ பலன்.2 7. ஏழாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் ரக்த பீடையுடையவன், காமி, நேர்மாறுபாடான வழிகளுடையவர், போகத்துடன் கூடியவர், வேசிகளிடத்தில் சினேகமுடையவர். 8. எட்டாமிடத்தில் தூமகேது இருந்தால் நீச்ச செய்கையுடையவர், பாபி, வெட்கம் கெட்டவர், எப்போதும் நிந்திக்கப் படுபவர், நிந்திப்பவர், குற்றவாளி, பிறர் பக்ஷமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சந்தோஷி லிங்கத்தைத் தரிப்பவர் எல்லா ஜீவன்களிடமும் இன்பம்,அன்பு உடையவர், தர்ம காரியங்களின் அறிவும், ஆற்றலுமுடையவர். 10. பத்தாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன்…

வாழ்வென்பது

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.. தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி.. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்   இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.. அதிகமான சிக்கனம் அவசியமில்லை. . மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே… உயிர் பிரிய தான் வாழ்வு.. ஒரு நாள் பிரியும்.. சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.. உன் குழந்தைகளை…

பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். தூமகேதுவின் துவாதச பாவ பலன். 1

தூமகேதுவின் துவாதச பாவ பலன். 1 1. ஜென்ம லக்கினத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் எல்லாக் கல்விகளிலும் சந்தோஷமுடையவர். சுகி, வாக்கு சாலகன், வாக்கு நிபுணர்களிடம் பிரியர், எல்லாவற்றிலும் ஆசையுடையவர். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் உபன்னியாசகர்களுக்கு ( ப்ரியம் சொல்பவர் ) யஜமானன் ஆவார். 3. மூன்றாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் காவியங்களைச் செய்பவர், பண்டிதர், மானி, விநயமுடையவர், வாகனத்துடன் கூடியவர், மன்மதன் போன்றவர், குரூரச் செய்கையுடையவர், மெல்லிய தேகமுடையவர், தனமில்லாதவர்,…

பரிசு பொருள்

பரிசு பொருள் என்பது பரிசு பொருள் அல்ல நம் இதயத்தில் ஊற்றடுக்கும் அன்பின் வெளிப்பாடு  நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது…

விமர்சனம் தேவையில்லை

அடுத்தவர் புத்தி பற்றி வாழ்க்கையைப் பற்றி அசிங்கமாகப் பேச யாருக்கும் யோக்தையில்லை. அப்படிப் பேசினால் அது அலட்டிக்கிறது தானே தவிர வேறென்றும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்கிறார்கள் அத்தைனைதான்   இதை எப்படி புரிந்து கொள்வது விமர்சனம் செய்யாமல் அதாவது சரி, தப்பு சொல்லாமல் வாழ முடியுமா குடும்பத்தில், அலுவலகத்தில், அரசியலில், இத்தனையிலும் விமர்சனம் வருகிறதே சரி, தப்பு சொல்வது விமர்சனத்தின் பகுதியல்லவா ஒரு வேளை நன்றும், தீதும், பிறர் தர வாரா என்பது விமர்சனம்…

இன்றைய தலைமுறையினருக்கு

இன்றைய தலைமுறையினருக்கு, நிதானம் என்னும் வார்த்தையின் பொருள் மறந்தே விட்டது. எதிலும் அவசரம் கண்டிப்பாய் இந்தத் தலைமுறையினருக்கு நிதானத்தின் பொருள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும், அவர்களும் அதை புரிந்து கொண்டால் மட்டும் தான் எதிர்கால தலைமுறையாவது கொஞ்சமாவது சரியான பாதைக்குத் திரும்பும். நிதானம் இல்லாத காரணத்தால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. சிந்திக்காததின் விளைவு எல்லாம் அள்ளி தெளித்த கோலம் ஆக மாறிவிட்டது. அதில் வாழ்க்கையும் வாழும் நெறியும் கூட அடங்கிவிட்டது. இதனாலேயே நிதானத்தை கண்டிப்பாய் கற்று…

ஒரு சின்ன கதை பகுதி 2

ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,…

நேசிப்பது இயற்கை பால குமாரனின் பார்வையில்

மனிதனை மனிதன் நேசிப்பது இயற்கை    ஏனோ அது செயற்கை ஆகிவிட்டது. ஆண், பெண்ணை நேசிப்பதும், பெண், ஆணை நேசிப்பதும் இயற்கை, இயல்பு ஆனால் அதே செயற்கை ஆகிவிட்டது. இயல்பு தொலைந்தும் போய்விட்டது. சிநேகத்தை மறந்த மனிதன், பரஸ்பர விரோதத்தில் மடிந்து விடுவது நிஜம். ஆண்களும், பெண்களும் தங்களுடைய இளமைக்காலங்களில் அதிகமாக நெருங்கி பழகக்கூடிய ஒரு சுதந்திரத்தினால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விபரீதங்களுக்கு நெருங்கிப் பழகக் கூடியது தான் வாய்ப்பு என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட…

ஒரு சின்ன கதை பகுதி 1

ஒரு கிராமம்.சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.…

கொஞ்சம் சிரிக்க

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர் தான் தலை வலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்” “யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?” நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!” “என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க” “நான் தான் அப்பவே சொன்னேனே பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!”

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 2

இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 7. ஏழாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கடவுள் போன்ற சம்பூர்ண குணமுடைய பிரபு, சாஸ்திரமறிவார், கார்மிகர், பிரியர். 8. எட்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் பிறர் காரியங்களுடையவர், குரூரர், பரதாரகமனமே பிரதானமானவர், சமீப மரணமுடையவர், சீக்கிரத்தில் மரிப்பார். 9. ஒன்பதாமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகன் தபம் செய்வார், நிலையாக விரதத்தை அநுஷ்டிப்பவர், வித்தை அதிகமாயுடையவர் கொண்டாடப்பட்ட ஞானமுடையவர், ஜகம் முழுவதும் ( உலகம் ) கொண்டாடப்படுவர். 10. பத்தாமிடத்தில் இந்திரதனுசு…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 1

இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் இந்திரதனுசு இருந்தால் தனம், தான்யம், சொர்ணம், முதலியவற்றுடன் கூடியவன். நல்லவர்களுக்கு சம்மத மானவன், எல்லா தோஷங்களும் விலகப் பெறுபவன். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன்இஷ்டமானதைச் சொல்பவன். சமர்த்தன், சம்பாதிப்பவன். வினயமுடையவர். அதிக கல்வியுடையவன், ரூபமுடையவர், மேலான தத்துடன், கூடியவர். 3. மூன்றாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன், அதிக கிருபணன். அதிக வித்தையறிபவர், செளரியமுடையவர். அங்கக்குறைவுடையவர். விசேஷ சினேகிதமுடையவர், குடியுமுடையவர். 4. நான்காமிடத்தில்…

சந்தோஷம் பெற

மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் சுகமாக இருக்கவேண்டும்  நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது. இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 8

திரி நாடி ஸ்தானம் ….. இளா என்கிற நாடி தேகத்தின் இடது பக்கத்திலும், பிங்களா என்கிற நாடி வலது பக்கத்திலும், சுஷ்ம்னா என்கிற நாடி இவைகளுக்கு மத்தயிலும் இருக்கின்றது . இந்த மூன்று நாடிகளிலும் வாயுவு சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இளா பிங்களா நாடி சுரூபம் ….. இளா என்கிற நாடி சங்கைப் போலவும், சந்திரனைப் போலவும் பிரகாசித்துக் கொண்டு சுஷ்ம்னா என்கிற நாடிக்கு இடது பக்கத்தில் இருக்கின்றது. பிங்களா என்னும் நாடி கறுப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தையுடையதாய்…

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் குடும்பம் என்றால் கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான் சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது. இந்த உலகத்தில் எந்த இருவருக்கும் இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது காரணம் அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.

சூழ்நிலை

சூழ்நிலை என்பது காலத்தின் வசம் அந்த காலம் எப்போதும் நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த, செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். யாருமே இதற்க்கு விதிவிலக்கல்ல. செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். வேண்டுமானால்  கால அளவுகள், செய்ய வேண்டிய காரியங்கள் மாறுபடலாம் மற்றபடி இதிலிருந்து யாரும் தப்பியது இல்லை  அவ்வளவுதான்.

தேனில் இப்படியா?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோய் எதிர்ப்பு சக்தியை, அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. காலம் காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.

வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 7

நாடிகளின் ரூப நிறங்கள் ….. காந்தாரி என்கிற நாடி மயிலின் கண்டத்தது வன்னமுடியதாய் இடகலை நாடிக்கு பின்புறத்தில் சேர்ந்து சவ்வியபாதம் முதல் நேத்திர அந்தம் வரையிலும் வியாபித்து இருக்கின்றது. ஹஸ்தி ஜிம்மை என்னும் நாடி கருத்த அல்லி புஷ்பத்தின் நிறத்தை ஒத்து இடைகலையின் முன்புறத்தில் வியாபித்து சம்மியபாகத்தில் சிரம் முதல் பாதாங்குண்டம் வரையிலும் வியாபித்திருக்கும். பூஷா என்கிற நாடி கருத்த மேகநிறத்தை அடைந்து பிங்கலை என்கிற நாடிக்கு மேல்பாகத்தில் இருந்து வலது பக்கத்தின் பாத அங்குலம் முதல்…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.2

7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.1

பரிவேடனுடைய துவாதச பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் வித்துவான், சத்தியத்துடன் கூடியவன், சாந்தமுடையவன், தனமுடையவன், புத்திரனுடையவன், சுசியுடையவன், கொடையாளி, குரு அன்புடையவன். 2. ஜென்ம லக்கினத்தில் இரண்டாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் குணத்தில் கடவுள் எனப்படுபவன், பிரபு ரூபமுடையவன், போகி, சுகி, தர்மபாராயணம் செய்பவன், பிரபு ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஸ்திரீ வல்லபவன், நல்ல சுரூபமும் அங்கங்களுடையவன், தேவதைகளிடம் அன்புடையவன், சுயஜன சேர்க்கையுடையவன், வேலையாளுடையவன், குருபக்தியுடையவன். 4.…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன்.2

7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தனம், மனைவி, புத்திரன் இவர்களால் விடுபட்டவன் அதாவது இல்லாதவன், ஸ்திரீ ஜிதன், காமீ, வெட்கங்கெட்டவன், பிறருடைய சிநேகமுடையவன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வக்கிரப் பார்வையுடையவன், அழகில்லாதவன், அபகீர்த்தியுடையவன், பிராம்ணநிந்தையுடையவன், ரக்தபீடை யடையவன், விசனமுடையவன். 9. ஜென்ம லக்கினத்திறகு ஒன்பாதாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அனேக வியாபாரமுடையவன், எப்போதும் அனேக மித்திரருடையவன், வெகு வேத சுருதிகளை அறிபவன், ஸ்திரிகளுக்கு இஷ்டமானதைச் சொல்லவறிந்தவன், பிரயமாகவும் பேசுபவன். 10. ஜென்ம…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன். 1

1. ஜென்ம லக்கினத்தில் விதீபாதனிருந்தால், ஜாதகன் துக்கத்தினால் அங்கபீடையுடையவன், குரூரமுடையவன், கொலை செய்பவன் மூர்க்கன், பந்துஜன துவேஷி ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அதிக பித்தமுடையவன், போகி, வீண் விசாரமுடையவன், ஆராய்ச்சியுடையவன், பிரசங்கியாவன். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூனறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தயையில்லாதவன், செய்நன்றியுடையவன், துஷ்டாத்துமா, பாபச்செய்கையுடையவன், ஸ்திரமான ( நிலையான ) அறிவுடையவன், சந்தோஷி, தாதா ( அதாவது கொடையாளி ) தனசம்பாதனையுடையவன், ராஜ வல்லவனாவன், சேனாநாயகனாவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 11

சீடன் — ‘ஆண்டவனே, உமக்கு நமஸ்காரம். வணங்கும் ஜனங்களுக்கு உண்மையான உறவினரே, கருணைக் கடலே, பிறவிக்கடலில் வீழ்ந்துள்ள என்னைக் களங்கமற்றதும் அமுதத்தைப் பொழிவதுமான உம்முடைய கடைக்கண் பார்வையால் கரையேற்றிவிடும். தடுக்க முடியாத பிறவித் துன்பமாகிய காட்டுத் தீயால் பொசுக்கப்பட்டவனும்,  துரதிருஷ்டமாகிய காற்றால் அலைக்கப்பட்டவனும், அதனால் பயந்தவனும் தங்களைச் சரணடைந்தவனுமாகிய அடியேனை – வேறு புகலிடம் நான் அறியேனாதலால் – சாவினின்று காத்தருள்வீராக. குரு — மனவமைதியுள்ளவர்களும் வஸந்த காலத்தைப் போல் உலகிற்கு நன்மையைச் செய்பவர்களும் பயங்கரமான பிறவிக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 6

நாடிகளின் குணங்கள் ….. காதுகளில் வியாபித்திருக்கும் நாடிகள் ஓசையை அறியும்படியானவை, கண்களில் வியாபித்திருக்கும் நாடிகள் ரூபத்தை அறியும்படியானவை, மூக்குகளில் இருக்கும்படியான நாடிகள் வாசனையை அறியும்படியானவை, நாவில் வியாபித்திருக்கும் நாடிகள் ரசத்தை அறியும்படியானவை, சர்மத்தில் வியாபித்திருக்கும் நாடிகள் ஸ்பரிசத்தை அறியும்படியானவை, இருதயம் முகம் இந்த இடங்களில் வியாபித்திருக்கும் நாடிகள் பேசுதற்கு உபயோகமானவைகள். மனது புத்தி இவை இரண்டும் இருதய ஸ்தானத்திலிருக்கின்றன. புரீத்தி என்னும் நாடியில் மனது லீனமானால் மனிதனுக்கு தூக்கம் உண்டாகும். மேற்கூறிய பதினான்கு நாடிகளின் நாமங்கள் அல்லாது…

பிரபஞ்ச சக்திகள் 2

பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோணிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு, மூன்றும் சேர்ந்து மண் உரு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள், தாவரப் பொருட்கள், அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 5

தச நாடிகளின் ஸ்தானங்கள் ….. இடது நாசிகையில் இடகலையும், வலது நாசிகையில் பிங்கலையும், ( பிரம்மாந்தித்தில் ) சுஷ்ம்மணாவும், இடது நேத்திரத்தில் காந்தாரியும், வலது கண்ணில் ஹஸ்திஜிம்மையும், வலது கையில் பூஷா என்கிற நாடியும் இடது கையில் யசஸ்வினியும், நாவில் அலம்புசை என்னும் நாடியும், ஆண்குறியில் குஹ¨ என்கிற நாடியும், சிரத்தில் சங்கினி என்கிற நாடியும் வியாபித்திருக்கும். தச நாடிகளை ஆக்கிரமித்திருக்கும்  தசவாயுவுகள் ….. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன்,…

பிரபஞ்ச சக்திகள் 1

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்புகள்  ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம்     பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமுமொன்றே   அறிந்து தான் பார்க்கும் போதே என்று சித்தர் பாடுகிறார்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24

மனம் ஒவ்வொன்றும் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மனத்தூய்மையின்றி, ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. முக்தியை நாடுவோனுக்குக் குரு, இறைவன், பக்தர்கள் ஆகியோரது அருள் கிட்டியிருந்தாலும், தனது மனத்தின் அருளைப் பெறாது போய் விடின் அவன் துன்பத்துக்காளாவான். இறைநெறி நிற்பவனின் மனம் அவனுக்கே அருள் புரிவதாக இருக்க வேண்டும். கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிறான்? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா? அல்ல, அவன் மனம் பரிசுத்தமடைகிறது. மனம் பரிசுத்தமடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞானவிழிப்பும் ஏற்படுகின்றன. பரிசுத்தமான மனமுடைய…

தூமனுடைய துவாதச பாவ பலன்.2

7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் தூமனிருந்தால் தனமில்லாதவன், எப்போதும் காமமுடையவன், பரதார கமனன், தேஜசில்லாதன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் பராக்கிரமமின்றி உற்சாகமுடையவன், பொய் பேசுபவன், இஷ்டமில்லாமல் நிஷ்டூரமாய்ப் பேசுபவன். 9. ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திர சம்பத்து முதலிய உடையவன், மானி, தனமுடையவன், தனத்துடன் கூடியவன், பந்துக்களை ரக்ஷிப்பவன். 10. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திராதி ஸெளபாக்கியங்களுடையவன், அறிவாளி, சுகி, சந்தோஷி, உண்மையான வழியில் இருப்பவன். 11.…

பயம் என்றால் என்ன

எதை பற்றி அறிய வேண்டுமென்றாலும் அதை பற்றி அறிய தடை செய்யும் கணிப்புகள் எதுவும் நம்மிடம் இருக்க கூடாது முடிவை முடிவு செய்து ஆராய்கிறேன் என்று சொன்னால் உள்ளது உள்ளபடி அறிய முடியாமல் போய்விடும் ஆராய்வதில் மட்டுமே நின்றால் சரியான முடிவு தானே வந்துவிடும் இந்த சூத்திரத்தை கை கொண்டு பயம் என்றால் என்ன என்பதை அறிய முற்படுவோம் பொதுவாக பயத்தின் கூறுகள் கடந்த கால நிலைகள்,    நிகழ் கால நிலைகள்,    எதிர்கால நிலைகள்,…

கவனித்து கேட்டல்

இது ஒரு அழகான அற்புதமான கலை கண்டீப்பாய் நாம் அவசியம் கற்று கொள்ள வேண்டிய கலை நாம் இப்போது செய்து கொண்டிருப்பது எந்த விஷயத்தை கேட்டாலும் உடனே அதை எதோ ஒன்றுடன் ஒப்பு நோக்கிக்கொண்டோ அல்லது எடை போட்டுக்கொண்டோ தீர்ப்பு வழங்கிக்கொண்டோ ஒத்துக்கொண்டோ மறுத்துக்கொண்டோ இருந்து பழகியதால் எதையும் நாம் உள்ளபடி கவனித்து கேட்பதில்லை கவனித்து கேட்டால் ஒப்பு நோக்கோ எடை போடுவதோ தீர்ப்பு வழங்குவதோ ஒத்துக்கொள்வதோ மறுப்பதோ எதுவும் இருக்காது விஷயம் விஷயமாக மட்டுமே தெரியும்…

தூமனுடைய துவாதச பாவ பலன்.1 பராரை ஹோரை ) 6-வது அத்தியாயம்.

தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10

கு ரு வு ம், சீ ட னு ம் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும், ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில் அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்…

யதார்த்தம்

நீங்கள் மிக நெருங்கியவராக நினைப்பவரும் உங்களை போலவே பிறிதொருவரை மிகநெருங்கியவராக நினைத்துக்கொண்டிருப்பார் இது தெரியும் போது நம்மால் ஜீரணிக்கமுடியுமா ஜீரணிக்க முடிந்தால் பாக்கியசாலிகள் இல்லாவிட்டால் வன்மம் வளரும் நமது வாழ்க்கை சீர்கெடும் ஏமாந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதிப்பு அடைவார்கள் அதனால் அது அப்படிதான் என்று எடுத்துக்கொண்டு போய்விடுதல் நல்லது யாருக்கும் தொல்லை இல்லை முக்கியமாய் நமக்கு தொல்லை இல்லை அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து…

நிலத்தின் உயிர் எது? 2

ஆட்டுப்புழுக்கை, மாட்டு சாணிய மண்ணில் போடுகிறோமே, அதுவும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள்தான். இன்றைக்கு, அதனை பாக்கெட்டுகளில் எல்லாம் போட்டு விவசாயிகளுக்கு கொடுக்கிறோம். அசோஸ்பைரில்லம், ரைசோபியோம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியாத உயிரிகள். கண்ணுக்கு தெரியாத இந்த உயிரிகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை எடுத்து செடிக்கு வினியோகம் செய்கிறது. பூமியில் உறைஞ்சு கிடைக்கிற பாஸ்பரசை இளக்கி வினியோகம் செய்கிறது. பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பொட்டாசியமாக மாற்றி வினியோகம் செய்கிறது. நீங்கள் எதை, எதையெல்லாம் கடையில்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 4

தேஹ வியாபக நாடிகள் ….. மூலாதாரத்தில் ஆசிரயித்து தலைமுதல் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும் எழுநூறு நாடிகளால் மனித தேகமானது மிருதங்கத்தை சருமத்தின் வாறினால் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டு இருக்கிறது. முக்கிய நாடிகள் ….. மேல் கூறிய எழுநூறு நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை, சரஸ்வதி, வாருணி, பூஷா, ஹஸ்திஜிம்ஹ, யசஸ்வினி, விஸ்வோதரி, குஹ¨ சங்சினி, பயிஸ்வினீ, அலம்புசா, காந்தாரி என்னும் பதிநாலு நாடிகள் முக்கியமானவை, இவைகள் பிராணவாஹினிகளாய் ஜீவகோசத்தில் வியாபித்து இருக்கின்றதுகள். இந்த பதிநாலுநாடிகளில் பத்து…