நமக்குத்தான்

சிலவற்றை கண்டும் காணாமல் நடக்கப்பழகிக் கொண்டாலே போதும்.. மனதுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்! நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள்தான்..

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில் உள்ளது! நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்.. நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!  

தானம் 16 வகைப்படும்-

1. அன்னம்,    2. பூமி,      3. கன்னிகை,     4. பசு,     5. காளை        6.பொன்        7. வெற்றி,     8. ஆடை,    9. படுக்கை,      10. வாகனம்,     11. தீபம்,       12. எள்,      13. தானியம்,     14. வீடு,     15. வித்தை,    16. அபயம்   …

வெற்றி எட்டு வகைப்படும்.

1. எதிரிகளின் அதாவது பகைவர்களின் பொருளை கவர்தல். 2. பகைவர் தன்னிடம் இருந்து அபகரித்ததை மீட்டெடுத்தல். 3. பகைவர் மேல் போர் தொடுத்தல். 4. போருக்கு வரும் பகைவரை எதிர்கொண்டு தாக்குதல். 5. தன் குடிகளையும் உடைமைகளையும் காத்தல். 6. பகைவரின் உடைமைகளை, குடிகளை தனதாக்கி கொள்ளல். 7. போருக்கு திட்டமிடுல். 8. போரிடுதல் என்பவையே. இவை அனைத்தும் அரசர்களுக்கு உண்டான நியதிகள் இது ஒவ்வொன்றிக்கும், பூக்களும், மாலைகளும் உண்டு அவை முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி,…

நண்பர்கள் எத்தனை வகை?

வீட்டில் உங்கள் மனைவியும் வெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி) நோயாளிக்கு மருந்தும் இறந்துபோனவனுக்கு தர்மமுமே நண்பர்கள் ஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் க்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு வம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள் ரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள் ஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் ரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம் –காமாந்தகீய நீதிசாரஹ

உங்கள் தவறுகளே காரணம் 2

செம்மறி ஆடுகளாக வாழ்வதா * ஒவ்வொரு நாட்டிலும் மேற்கொள்ளப்படும் வழி முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. வலிமை படைத்த ஒரு சிலர் கட்டளை இடுகிறார்கள். அவற்றை எல்லாம் எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் செம்மறி ஆடுகளைப் போல முடிந்த முடிவுகளாக ஏற்றுப் பின்பற்றி நடப்பார்கள். அவ்வளவுதான் விஷயம். உங்களுடைய பாராளுமன்றம், சட்டசபை வாக்களிப்பு முறை உங்கள் பெரும்பான்மை மக்களுடைய இரகசிய வாக்களிப்பு முறை – ஆகிய இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது நன்பரே இவை எல்லாம் எல்லா…

உங்கள் தவறுகளே காரணம் 1

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே* நமது நாடு என்னும் இந்தக் கப்பல் நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தைக் ஏற்றி கொண்டு வந்திருக்கிறது. தனது எண்ணற்ற அரும் பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும்மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது . பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது. ஆனால் இன்று அந்தக்…

அர்த்தம்!

நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்.. நாம் அதிபுத்திசாலி என்று அர்த்தமில்லை.. நமக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

நன்றி சொல்ல வேண்டிய தருணங்கள்

உங்களை சிரிக்க வைத்தவர்களுக்கு அழ வைத்தவர்களுக்கு உங்களோடு  தொடரப் போகிறவர்களுக்கு உங்களை விட்டு விலகிப் போனவர்களுக்கு … பாராட்டியவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு . அன்பு செய்தவர்களுக்கு வெறுத்தவர்களுக்கு தட்டிக் கொடுத்தவர்களுக்கு இவர்கள் எல்லோரும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை உங்களுக்கே உணர்த்தியவர்கள் அதனால் நன்றி சொல்லுங்கள் எப்போதும் சந்தோஷமாய் இருப்பீர்கள்

எந்த ஒரு உறவும்

எந்த ஒரு உறவும் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர்கள் நுழையாத வரை.. லட்சியங்கள் மாறாதவரை பணம் ஒரு பொருட்டாக இல்லாதவரை எந்த ஒரு உறவும் உடைதல் என்பது.. அவ்வளவு எளிதில் நடப்பதில்லை!

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்

வாழும்போது வணங்கிக் கொண்டே இருந்தான் வெட்டியான். இறந்து போன பின் படுத்துக் கிடந்தார், ஜமீன்தார், நிமிர்ந்து நின்றான் வெட்டியான். இது தான் வாழ்க்கை..

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 5

உன்மத்த பைரவர் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 3

தர்மமும், அறமும் முன்னோர்களின் நெறியும் அறியும் கல்வி இல்லாததால் அந்த கல்வி ஏன் இல்லாமல் போயிற்று. சுயநலமும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாததால் இனி இதைத் தவிர வேறு என்ன செய்வது, சொல்வது, சிந்திப்பது, அதீத ஆளுமைக்கு ஆசைப்படுதலே வன்முறை உண்டாவதற்கு ஒரு காரணம். அன்பு பழக நேரமாகும், வன்முறை அதிகாரம் நொடியில் பிரயோகம் செய்யப்பட்டுவிடும் இந்த அன்பு பழகும் நேரம் பொறுமையாய் இருத்தல் நலம் மற்றும் அவசியம் அந்த பழக்கம்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  நேத்திர பரீக்ஷ.,  55

வாத தோஷ நேத்திரம்   வாயு தோஷத்தில் கண்களானது சிகப்பு நிறமாயும், புகை நிறமாயும் ரவுத்திர  நிறமாயும், கண்களில் நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண்  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண்  கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை மட்டாயும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 4

குரோதன பைரவர் குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 2

வன்முறைக்கு காரணம் என்ன பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாதது. பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஏன் இல்லாமல் போயிற்று. ஆணவமும்,அகங்காரமும் மட்டும் இருப்பதினால் ஆணவமும், அகங்காரமும் மட்டும் ஏன் இருக்கிறது. அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் இல்லாததால் அன்பும் எதையும் உணரக்கூடிய பண்பும் ஏன் இல்லாமல் போயிற்று

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 3

சண்ட பைரவர் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 2

ருரு பைரவர் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

எங்கு வன்முறை வரும் 1

எங்கு எதிர்ப்பு வராதோ, எவரால் பதிலுக்கு அடிக்க முடியாதோ, எவர் பதிலுக்கு அடிக்கமாட்டரோ, அவர்களிடமே வன்முறையை பயன்படுத்த எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஒரு கன்னத்தில் அறைந்த பின் மறு கன்னத்தை காட்டுபவரிடமே இப்போதைய தலைமுறை மட்டுமல்ல எந்த கால தலைமுறையும் வன்முறையை பயன்படுத்தியிருக்கிறது.

பெண் அனுபவ பொருள் 4

ஆண் அப்படி நகர இயற்கை வாய்ப்பை தரவில்லை. அந்த நிலையை ஆணே உருவாக்கி கொள்ளும் படிதான் இயற்கை வைத்துள்ளது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் குழந்தையாய், குமரியாய், தாயாய் பெண் மாறும் போது உடலிலும் மனதிலும் ஒரே சேர அனுபவம் பெறுகிறாள். ஆணுக்கு அப்படியல்ல குழந்தையாய் வாலிபனாய் ஆன ஆணுக்கு தந்தையாய் மாறும் போது உடலில் மாற்றங்கள் குறைவாகவும் மனதில் அதிக மாற்றங்களையும் அவன் அடைகிறான். இப்படியெல்லாம், யோசிக்கும் போது அனுபவ பொருள் என்பது உலகத்தில் எத்தனையோ இருந்தாலும்…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள்  1

காசி மாநகரில் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 12

மயூகாதித்யர் கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது.  புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவ – பார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார்.  மனம் இரங்கிய சிவன், சூரியனுக்கு ‘மயூகன்’ ( என்றும் அழியாதவன் ) என்று பெயர் சூட்டினார்.  காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

பெண் அனுபவ பொருள் 3

ஆணுக்கு, பெண் எல்லா காலங்களிலும் அனுபவத்தை தந்து கொண்டிருப்பவள் அதனால் தான் அவள் எப்போதும் புதிரானவள் படித்து மாளாத அனுபவபட்டு தீராத விஷயமாகவே சிருஷ்டிபெண்ணை வடிவமைத்துள்ளது இந்த காரணத்தினாலேயே சாக்த மதம் தோன்றியிருக்கும் என்று கூட நாம் நம்பலாம் அதுபோலவே பெண்ணுக்கு ஆண் அனுபவ பொருளே இதில் சந்தேகம் இல்லை பெண்ணால் ஆணை சீக்கிரம் படித்து விட முடிகிறது. அவன் அனுபவத்தை தன்மையை உணர்ந்து விடுகிறாள் அதனால் அவள் அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுகிறாள்

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 11

விருத்தாதித்யர்      விருத்தன் என்னும் வேதியர் சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார்.  விருத்தன் வழிபாடு செய்த    விருத்தாதித்யர் காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

பெண் அனுபவ பொருள் 2

 ஒவ்வொரு புலனும் மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை ஆனால் மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது. அதனால், அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது. சரி இப்போது விஷயத்திற்க்கு வருவோம். அனுபவ பொருளான பெண் எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள் என்றுபார்த்தால் மற்ற பொருள்களிடம் நமக்கு உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை. பெண்ணிடம் உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும் அதனால் தான் மற்ற அனுபவ பொருள்களை விட பெண்…

யாருக்கு எங்கே பலம்? 6

கேந்திர பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலன்கள் அனுபவத்துக்கு வரும்.  கேந்திரத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்த பலம் பெற்ற கிரகங்களின் திசை புத்தி நடைமுறையில் வரும் போது அந்தந்த கிரங்களின் ஆதிபத்திய பலத்தில் கேந்திர பலம் பெற்ற கிரகத்தின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் மாறுதல்கள் ஏற்படும்.

பெண் அனுபவ பொருள் 1

பெண் அனுபவ பொருள். அப்படித்தான் முன் காலங்களில் கருதியிருந்தார்கள் தற்போது கூட முகமதியர்கள் வழக்கில் பெண் அனுபவப் பொருளே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். அப்படி சிந்தித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவோம். அனுபவம் தருவது பெண் மட்டும் அல்லவே. பஞ்சபூதங்களும் அனுபவத்தை தருகிறது. அது போலவே பஞ்சபுலன்களும் அனுபவத்தை உணர்த்துகின்றதே நாம் புலன்களின் வழியே பெரும் அனுபவம் அனைத்தும் பொறிகள் வாயிலாகவே அமைகிறது. காண்பது எனும் அனுபவம் ஏற்பட கண் என்ற பொறியும் காண்பதற்க்குண்டான…

யாருக்கு எங்கே பலம்? 5

 சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் பகை நீச்சம் பெற்றிருந்தால் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும், பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும் யோக கிரகமாகவும் மாறி ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி. சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும், இவர்களுடன் சேரும் போதும் அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில் இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும். இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட…

புரிதலை எது தருகிறதோ 2

தன்னைப் போல் பிறரையும், பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும். இந்தக் கல்வி கிடைக்க நாம் நமக்குள் போரட வேண்டும். கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது. கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல இந்த கல்வி. இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம். பற்றற்று இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும். தன் மரணத்தை தானே சந்தோஷமாய் அழைக்கும் தகுதியை இந்த கல்வி தரும்.

யாருக்கு எங்கே பலம்? 4

 அணியான ஜென்மம், உயிரான நாதன், அழகான கேந்திரமத்திலே -விரிவான ஆயுள் வெகுவாய் உயர்ந்து கெம்பீரனாவன் குயிலே! மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் எந்த ராசி ஜென்ம லக்கினமாக அமைந்த போதிலும் லக்கினாதிபதி லக்கின கேந்திரத்தில் அமர்ந்திருப்பது எல்லா வகையிலான யோகங்களுக்கும் சூட்டிய யோக லட்சணமாகும்.  இவர்களுக்கு ஆயுளுக்கு குறைவில்லை. விரிவான ஆயுள் ஏற்படுவதுடன் கெம்பீரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்பது விதியாகும். ஆதிபத்தியத்தில் பாதகாதிபத்தியம் பெற்று பாபக்கிரகங்கள் பகை நீச்சம் வீடுகளில் அமர்ந்து கேந்திரம் பெற்று அல்லது…

புரிதலை எது தருகிறதோ 1

பல மரணங்களைக் கண்டு, பல மனிதர்களுடன் பழகி, அவர்களின் நிலைகளை அறிந்து வாழ்க்கை அர்த்தமில்லாதது என்பதை புரிந்து கொண்டு ஊரோடு ஒட்டி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற புரிதலை எது தருகிறதோ, அதுவே கல்வி. அந்த கல்வி ஆணவப்படாது, ஆசைப் படாது, ஆசையும், ஆணவமும் இல்லாத இடத்தில் திருப்தி இயல்பாகவே இருக்கும். திருப்தி எப்போதும் மன நிம்மதியைத் தரும். மனநிம்மதியும், மனநிறைவும் நாணயத்தின் இருபக்கங்கள் போல இப்படி வாழும் வாழ்க்கை நிறைவையும், இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ளவும் மனம்…

யாருக்கு எங்கே பலம்? 3

 உடலாகிய சந்திரன் வளர்பிறை காலத்தில் திரிகோணமாகவும், தேய்பிறை காலத்தில் கேந்திரமாகவும் அமர்ந்திருப்பது மிகமிக உத்தமம்.  சாயா கிரகங்களாகிய ராகு, கேதுக்களில் ராகு 4ம் இடத்திலும் கேது 10ம்  இப்படியாக கிரகங்களின் பலம் அமைந்து இவர்களுடைய திசை வரும் காலம் ஜாதகர்களுக்கு பிரபலமான ராஜயோகம் ஏற்படும்.  இதற்கு மாறுபட்ட வகையில் கேந்திரங்களில் பாபக் கிரகங்களும், திரிகோணங்களில் சுபக் கிரகங்களும் அமர்ந்து சுபக்கிரக பார்வை, சேர்க்கை அமையப் பெற்றவர்களுக்கும் வாழ்க்கையில் உயர்வுகள் அமைகின்றன. லக்கினாதிபதிகள் மேற்கண்ட விதமாக கேந்திர திரிகோணங்களில்…

உரையாடலின் ஒரு பகுதி 21

 நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நமது எண்ணத்தை நமது விருப்பம் போல் உருவாக்க முடியும் அப்படி நாம் உருவாக்க வேண்டிய எண்ணம் முதலாவதாகவும், முன் உரிமை தரபட வேண்டியதாகவும் உள்ள எண்ணம், நான் திருப்தியடைந்த சந்தோஷமுடையவன். என்னால், என் சமுதாயமும், என் மனித குலம் முழுவதும் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் இருக்கும் என்னுடைய செயல்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என்ற எண்ணத்தை முன் நிறுத்தி செயலாற்ற பழகுங்கள் ஆனந்தம் உங்களுடையதே.

யாருக்கு எங்கே பலம்? 2

 கொடுப்பதிலும் கெடுப்பதிலும் நிகரற்ற பலசாலியான சனி பகவான் ஜென்ம லக்கினத்திற்கு 7மிடத்தில் பூரண பலம் பெறுகிறார். 7மிடத்தில் சனி இருக்கும் போது பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைகிறார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.  களத்திர காரகனான சுக்கிரன் சுகஸ்தானமாகிய 4மிடத்தில் இருக்கும் போது பிறந்தவர்கள் மிக்க பலசாலிகள் பாக்கியங்களோடு வாழும் பாக்கியம் அமையும். புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் (முதலாம் திரிகோணம்) மிக்க பலசாலிகளாக பூரண பலத்தோடு விளங்குகிறார்கள்.

உரையாடலின் ஒரு பகுதி 20

எண்ணமே வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு தினம், தினம் எத்தனையோ எண்ணங்கள் நம்மிடம் இருந்து கிளம்பி நம்மிடமே நிறைவடைகின்றன. இதனை, ஊன்றி கவனித்தால் எந்த விதமான எண்ணங்கள் நம்மிடம் தோன்றி நம்மிடம் நிறைவடைய வேண்டும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியும் என்பது தெரியும்

யாருக்கு எங்கே பலம்? 1

கொடியோர்கள் கேந்திரத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதும்  சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் அமர்ந்திருந்தால் சுப யோகத்தைச் செய்வார்கள் என்பதும் பொது விதி. கேந்திரம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,4,7,10. திரிகோணம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,5,9.ஆகும். சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தசம கேந்திரத்தில் பூரண பலம் பெறுகிறார்கள். இப்படியாக பத்தாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். இவர்களுக்கு படிப்பும் நல்ல விதமாக…

குறைகள் கூறி

குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை. நீங்கள் ஒன்றைப்பற்றி ஒருவரை பற்றி குறை கூறும் போது உங்கள் மனதில் விஷ கறை படிகிறது. மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது. குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை. அது மனிதனை பல வழிகளில் நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது. மகிழ்ச்சியை, ஆனந்தத்தை விரும்பும் எவரும் குறை கூறுவதை நிறுத்துங்கள் குறை கூறும் மனதிற்குள் ஆக்கபூர்வமான நல்ல எண்ணங்களை விதையுங்கள் அது உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

இந்த நிலையில்தான் பயிற்சி என்று சொல்லக்கூடிய, செயற்கை உழைப்புகள் அவசியமாகின்றன. இந்தப் பயிற்சி நோய், தடுக்க எவ்விதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால் யாராயிருந்தாலும் கால் நடைக்கும் சாதாரண உழைப்புக்கும் காலம், காரணம், சமயம் இல்லையென்று கூற முடியாது. நம் வாழ்க்கைச் செயல்களை நாமே நமக்குச் செய்து கொள்ளுவதால் உடலின் பல பாகங்களுக்கும் உழைப்பு ஏற்படும்.

துக்கத்திற்க்கு காரணம்

துக்கத்திற்க்கு காரணம் ஆசை. அந்த ஆசையை இல்லாது ஆக்கிவிட்டால் துக்கத்திலிருந்து தப்பிவிடலாம் என்பதே பெளத்த தத்துவத்தின் மைய கருத்து.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 49

குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி சம்பவித்ததென்று அறியவேண்டியது. சுகதயில பிந்து லக்ஷணம் ….. தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில் வியாதி கிடையாதென்று அறியவேண்டியது. வியாதி நிவர்த்தி குறி ….. பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால் வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.