அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 49

குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி சம்பவித்ததென்று அறியவேண்டியது. சுகதயில பிந்து லக்ஷணம் ….. தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில் வியாதி கிடையாதென்று அறியவேண்டியது. வியாதி நிவர்த்தி குறி ….. பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால் வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும்

எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சில ஆதங்கங்கள் இருக்கும் அந்த ஆதங்கங்கள் நிறைவேறுமா என்பது வாழ்க்கையின் ஒட்டத்தில் நம் தகுதியை பெறுக்கிக் கொள்வதில் அமைகிறது. ஆனால் அந்த ஆதங்கங்களில் சிலது நம்மை பிடிவாத காரனாக, தன் நினைப்பை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படாத மனோ பாவத்தை வளர்த்து விடுகிறது. இந்த நிலை தொடரும் போது நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை. விளைவு ஆதங்கம் ஆதங்கமாகவே சற்று மாறுதலடைந்து கோபமாகவே இருக்கிறது.