கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 28

56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க, செவ்வாய் திரிகோணமடைய லக்கினாதிபதி நீச்சம் பெற்று, 3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம். 57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும் லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் ஆகிய நால்வரும் 6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 27

54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க ( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க ( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க ( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க…

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதி யோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

கல்வியும் வித்தையும்

கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது. அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது. ஆனால் அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம். அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள் திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது. அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 14

கடவுள் அவனவனுக்கே உரிய பொருள். அத்தொடர்பே நிலையானது. இறைவனிடத்து அவனவன் கொள்ளும் அன்பின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒருவன் அவனை உணர்கிறான். அஞ்சற்க யாரோ ஒருவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதாக எப்பொழுதும் எண்ணிக்கொண்டிரு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 13

இறைவனைத் தொழுதாலும், தொழவிட்டாலும், மணம் புரிந்துகொள்ளாத ஒருவன் பாதியளவு விடுதலை பெற்றவனாகிறான். கடவுளிடம் அவனுக்குச் சிறிதளவு பற்று ஏற்டுவதாக உணரும்போது, அவன் வெகு வேகமாக இறைவனைச் சென்றடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 12

இறைவனது அருளே காசி முழுதும் நிரம்பியிருக்கிறது. ஆஸ்திகனோ, நாஸ்திகனோ, வேறு மதத்தவனோ, பூச்சியோ அங்கு இறக்கும் எந்த உயிரும் முக்கியைடையும். அனேக பாவிகள் காசிக்கு வந்து, விசுவநாதரது உருவைத் தொட்டு தம் பாவத்தினின்றும் விடுதலை பெறுகின்றனர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 40

ரோக சாத்திய குறி ….. அந்த தைலபிந்துவானது தாமரை புஷ்பாகாரமாயும், சங்குசக்கிராகாரமாயும், வீணை ஆகாரத்தைப் போலும் சிம்மாசனத்தைப்போலும் மல்லிப் பூ மொக்கைப்போலும் தோன்றினால் அந்த ரோகம் சாத்தியமென்று அறிய வேண்டியது. மரண குறி ….. அந்த தயில பிந்துவானது பக்ஷியைப்போலவும், ஆமையைப்போலவும், எருதைப்போலவும், சிங்கத்தைப்போலவும், பன்றியைப்போலவும், சர்பத்தைப் ( பாம்பு ) போலவும், குரங்கைப்போலவும், விருச்சிகத்தைப் ( தேள் ) போலவும், குக்குடத்தைப்போலவும் தோணுமாகில் அந்தரோகி எமபுரத்திற் கேகுவானல்லது மீளான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 39

தோஷ குறி  பாத்திரத்தில் விட்ட தயில பிந்துவானது பரவினதுப்போல் இருந்தால் வாத ரோகமென்றும், குமிழி குமிழிப்போல் கிளம்பினால், பித்தரோகமென்றும் உருவமாய் தோணினால் கபரோகமென்றும் தயில பிந்து உண்ணாக முழுகிவிட்டால் அசாத்தியமென்றும் அறியவேண்டியது. சாத்தியா சாத்திய ரோக குறி …..  அந்த தையில பிந்துவானது வியாபித்தால் ரோகம் சாத்தியமென்றும் மேலாக முட்டை முட்டையாய் கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும், மேல் எம்பாமல் முழுகிவிட்டால் அசாத்தியம் என்றும் அந்த ரோகி சீவிக்க ( மரணம் ) மாட்டானென்றும் அறியவேண்டியது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 38

தோஷாதிகளின் மூத்திர நிறம் மூத்திரமானது வாதத்தில் சிகப்பாயும், பித்தத்தில் மஞ்சள் நிறமாயும், கபத்தில் வெண்மையாயும், சந்நிபாதத்தில் கருப்பு நிறமாயும் இறங்கும். துவந்த தோஷ மூத்திர நிறம் வாத பித்தத்தில் பொகை நிறமாயும் ( புகை ) வாத சிலேஷ்மத்தில் நுறை, நுறையாயும், பித்தசிலேத்துமத்தில் மிசிரமாயும் மூத்திரம் இறங்கும். மூத்திர பரீ¬க்ஷவிதி அதிகாலையில் துத்திநாகம் அல்லது வெங்கலபாத்திரத்தில் ரோகியை மூத்திரம் பெய்யச் செய்து அதில் முதல் தாரையும், அந்திய தாரையையும் நிலத்தில் பெய்யும்படி செய்து மத்திஸ தாரையைமாத்திரம் அந்த…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 26

53) 2 – க்குரியவர் சந்திரன், குரு மூவரும் கேந்திர திரிகோணம் அடைந்து, 2 – ல் சுபர் இருக்க, ( பி ) 2, 4 – க்குரியவர், சந்திரன் – ராகு நால்வரும் கூடி, 2 – ல் நிற்க ( சி ) சுக் – சந்திரன் – குரு மூவரும் கூடி 2 – ல் நிற்க, ( டி ) 2 – ஆமிடத்தை 4, 9, 10 –…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 25

51) லக்கினாதிபதி நீச்சம் அடைந்து 4 – ல் உள்ள சனியோடு, 8 – க்குரியவர் சேர, ( பி ) 2 – க்குரியரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ( சி ) 2 -க்குரியவர், 6 – க்குரியவர், சுக்கிரன், தூமன் மூவரும் 6, 8 – ல் நிற்க, ( டி ) 2 – க்குரியவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி நிற்கப்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 24

49) 11 – ல் குரு இருந்து, சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி, 6 பேர்களையும், பார்க்க, தனம், கல்வியில் சிறப்புடன் இருப்பர். காவிய நூல் படைப்பார். பல மொழிகளில் தேர்ச்சி கிடைக்கும். ஞானநூல் ஆசிரியர் ஆவார். 50) லக்கினத்தில் ராகு நிற்க, 7, 6 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க பல நூல்களை கற்று புகழ் பெற்றவர்களோடு இருந்து பல வினோத வித்தையில் கீர்த்தியும் – புகழும் பெறுவர்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 11

துக்கத்திலடிபட்ட உங்கள் இதயத்தை இறைவனுக்குத் திறந்து காட்டுங்கள். கண்ணீர் சிந்தி, ‘ இறைவனே, என்னை உன்பால் இழுத்துக் கொண்டு மன அமைதி தந்தருள்க ‘ என்று மனமாரப் பிரார்த்தியுங்கள். அவ்வாறு எப்போதும் செய்வதன் மூலம் படிப் படியாக உங்கள் மனம் அமைதி அடையும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 10

அஞ்சேல், இறைவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குரிய பணிகளைச் செய். சாதனங்கள் பழகு. தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும் மனத்திலிருந்து விணான நினைவுகளை நீக்கிவிடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள்க. அவன் தனது கருணையை உன் மீது பொழிவான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 9

உண்மையில் இவ்வுலகமாகிய கடலைக் கடக்க விரும்பும் ஒருவன் எப்படியாவது தன் பந்தங்களை அறுத்துக் கொண்டு விடுவான். யாராலும் அவனை அவற்றில் சிக்க வைக்க முடியாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 34

தூக்கத்தில் உடலியந்திரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கின்றன. செத்த அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உழைப்பில் செலவான பிராண சக்தி. மறுபடி சேகரிக்கப்படுகின்றது. மூளை, நரம்புகள், அமைதி, ஆரோக்கியம் பெறுகின்றன. ஓய்வற்ற இருதயமும் ஸ்வாசக்கருவிகளும், சிரமக் குறைவுடன் வேலை செய்து, வீரியம் பெறுகின்றன. சுவாசம் நிதானமும் அமைதியும் அடைகிறது. செத்த, உதவாத அணுக்கள் ஒதுக்கி அகற்ற ஏற்பாடாகின்றன. உணவற்றுப் பலநாள் இருந்தாலும் உடலுக்குக் கேடு அவ்வளவு இல்லை. ஒரு நாள் தூக்கமில்லாமல் இருந்தால் ஜீவன் படாத பாடு படுகின்றது. பைத்தியம் பிடித்துவிடும் போல்…

உண்மையாய் இருக்கும் போது

பாசம் உண்மையாய் இருக்கும் போது அது குடும்பத்திற்க்கு பல நன்மைகளை செய்துவிடுகிறது. துறவு உண்மையாய் இருக்கும் போது அது உலகிற்க்கு நிறைய நன்மையை செய்துவிடுகிறது. இங்கு பாசமோ துறவோ விஷயம் அல்ல உண்மை தான் விஷயம் உண்மையாய் இருந்தால் நல்லதுகள் நடந்துவிடுகின்றன தற்போதைய காலத்தில் உண்மையாய் இருக்க எத்தனையோ பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது அதிலும் உள்ள சிக்கல் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லவேண்டியிருக்கிறது என்ன செய்ய

சுந்தர யோக சிகிச்சை முறை 33

ஒழுக்கத்தை சில முக்கிய பழக்கங்களாகப் பிரிக்கலாம். அவைகளாவன, குளித்தல், தூக்கம், போகம், பழக்கம். ஸ்நானம் அல்லது குளித்தல் உடலின் வெளிப்பாகத்தை சுத்தமாக வைக்கின்றது. தோல்களில் பதிந்துள்ள வியர்வை, தைலம் கசியும் எண்ணற்ற துவாரங்களை அடைத்து விடாமல் அழுக்குகளை வெளியே தள்ளி தம் தொழிலைச் சரிவரச் செய்ய உதவுகின்றது. நரம்பு சக்தியைப் பொதுவாக அதிகரிக்கின்றது. தோல் நோய் ஏற்படாமல் காக்கின்றது. உடல் சூட்டைக் குறைக்கின்றது. தினம் குளித்தல் அவசியம். குளிர் நீரில் குளித்தலே சீதோஷ்ண ஸ்திதி மாற்றத்தால் உடல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 32

16. தோப்பையும் விற்பரே, பற்களும் காட்டுவார், காப்பி குடிக்கும் வெறிக்கு. 17. புகையிலை, ஊனைத் தொலைக்கும் பணத்தைப் புகைத்திடும் கோடரிக் காம்பு. 18. சுருட்டுப் பழக்கம் குருட்டுப் பழக்கம்! விரட்டிப் பழக்கம் வெறு!

ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை.

வாழ்க்கை போராட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுத்து வரும் விலை. அவர் அவர்களின் நுண்ணிய உணர்வுகள். நுண்ணிய உணர்வுகள் என்பது எது காதல், காமம், வாஞ்சை,பரிவு, நேசம், பாசம், போன்றவை  இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை தொலைத்தபின் போராட்டத்தில் வெற்றி பெற்று என்ன பயன் யோசிக்க வேண்டும் ஆனால் யோசிக்காமல் இருப்பதே நல்லது காரணம் அவரவர்களே சொல்லிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவரவர்கள் தொலைத்தது அவரவர்களுக்கு தானே தெரியும் 

கடவுள் இருக்கிறாரா? 9

 போன பதிவில் குறிப்பிட்ட ஒவ்வொன்றை பற்றியும் சிந்தித்தால் முதலில் நமக்கு தெரிவது கடவுள் என்ற வார்த்தையில் கடவுள் இல்லை என்பது தான், அதனால் நாம் அவசரப்பட்டு கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது, வரக்கூடாது இனி அடுத்த நிலைக்கு நகர வேண்டும் அப்படி நாம் நகர நாம் இதுவரை நாம் படித்த, கேட்ட, பார்த்த, எல்லா விஷயங்களில் இருந்தும் வெளியேறி தன்னே நிற்க வேண்டும் எப்படி யென்றால், நல்லதும், கெட்டதும் நான் என்பதும் மறந்து என்ற நிலையை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 8

யாவருடைய பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேனோ அவர்கள் பந்த மற்றவராகும் வரை, எனது இப்பூதவுடல் அழிந்த பிறகும் எனக்கு முக்தியுண்டு என்று நினைக்கிறீர்களா? நான் சதா அவர்களுடனேயே வாழவேண்டும். நன்மையோ, தீமையோ அவர்களைப் பற்றிய முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடையவர் என்று நான் வரித்தவர்களை நான் சர்வசாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 12

முக்தியை விரும்பி ஒருவன் கங்காஸாகரத்திற்கு யாத்திரை செல்லலாம் விரதமிருக்கலாம், ஏழைகளுக்கு தானம் செய்யலாம், ஆனால் ஞானமின்றி இவை முக்கியளிக்க மாட்டா. ஆத்மஞானம் இங்கேயே இப்பொழுதே முக்தியளிக்கிறது. ஞானத்திலிருந்துதான் முக்தி என்பது உபநிஷதங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஞானத்தால் இங்கேயே, இப்பொழுதே, உடனே பயன்கிட்டுவதால், ஞானத்தால் என்ன பயன் என்ற அச்சத்திற்கு இடமே இல்லை.

கடவுள் இருக்கிறாரா? 8

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது வாருங்கள் சிந்திப்போம். முதலில் நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இரண்டாவது ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம். மூன்றாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம் அந்த கலக்கத்திலிருந்து விடுபட நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள். நான்காவது நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம் அது…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 23

47) 1, 12 – க்குரியவரும், ராகுவும் கூடி 2 – ல் இருக்க, 6 – க்குடையவர் பலம் பெற, உண்ண, உடுக்க, இருக்க இடமின்றி மனத்துயர்த்-தோடு, காலம் கழிப்பான். கனவிலும் கூட செல்வம் அடையமாட்டான். 48) 2 – ல் புதன், குரு திரிகோணத்தில், 4 – ல் சந்திரன் நிற்க, வாக்கில் சிறந்தவர் வித்தையில் வல்லவர். தமிழ் பாண்டியத்தியம் உள்ளவர். சாஸ்திர ஆராய்ச்சியில் சிறந்தவர். பல நூல்களை கற்று, வியாக்கியானங்கள் செய்து புகழ்…

கடவுள் இருக்கிறாரா? 7

சொல் அல்லது வார்த்தை என்பது என்ன? சொல் என்பது அவரவர்களின் கடந்த காலமாகவும், ஞாபகமாகவும் இருக்கிறது. அதாவது, மகன் என்றால் எனது மகனையும் என் நண்பனின் மகனையும் அவர் உறவுகளின் உள்ளவர்களையும் என்னுடைய ஞாபகத்திற்க்கு கொண்டு வருகிறது இது அனைத்தும் மனதிலிருந்தே உண்டாகிறது. இப்படி மனதில் தோன்றும் கடந்த கால எதிர் கால நினைவுகளை பிறருக்கு வெளிப்படுத்த உபயோகப்படுவதே சொல் இந்த சொல் எப்போதும் மிக அதிக அளவாக கடந்த கால அல்லது எதிர்காலத்தில் மட்டுமே இருக்கும்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 22

45) 2, 6 – க்குரியவர்கள் நீச்சம் அடைய, பாவர்கள் பார்க்க, மனைவியினால் துயரமடைந்து, சொத்து சுகங்களை இழந்து தனி மனிதனாக காலம் கழிப்பான். 46) சந்திரனும், சூரியனும் 2 – ல் நிற்க, 2 – க்குரியவர் 6 – ல் நிற்க, குரு 12 – ல் இருக்க, பூமி பொருட்கள் அழிந்து வாழ்வான். பலரிடம் அண்டி ஜீவிக்கும் நிலை தவிர வேறு ஜீவனம் இல்லை.

கடவுள் இருக்கிறாரா? 6

கடவுள் என்ற சொல்லில் என்னென்ன பொருள்கள் அமைந்திருக்கிறது என்றால் பாரம்பரிய மரபு அவரவர் நம்பிக்கைகள், ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும் எனும் ஆசை, கஷ்டங்கள், துயரங்கள், தீரும் எனும் நம்பிக்கை பூரணத்தை அல்லது பரிபூரணத்தை அறியும், அடையும் ஆசை

கடவுள் இருக்கிறாரா? 5

கடவுளை பற்றி ஆராய  நாம் நமது மனதை காலி செய்ய வேண்டும் மனதை காலி செய்வதென்றால் கடந்த காலத்தை மனதில் இருந்து அப்புற படுத்திவிட வேண்டும் கூடவே எதிர்காலத்தையும் இல்லாமல் காலி செய்துவிட வேண்டும் அப்படி செய்தால் என்ன நடக்கும் மனம் இல்லாமல் போயி விடும் அப்படி மனம் இல்லாது போன நிலையில் நாம் ஆராயும்போது சரியான முடிவு கிடைக்கும் அந்த முடிவு மட்டுமே சாஸ்வதமான சக்திய மாக இருக்கும் அப்படி ஆராய நமக்கு நிகழ்கால பிரக்ஞை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 7

இன்னல்கள் நேர்கின்றன. ஆனால், அவை என்றும் இரா. பாலத்தினடியில் ஒடும் நீரைப்போல் அவை ஒடி மறைந்து விடும். என்னைப் பிரார்த்திப்போர்க்கு இறக்கும் தருவாயில் நான் அருகில் நின்று அபயம் அளிப்பேன் ‘ என்று குருதேவர் (ஸ்ரீ ராமகிருஷ்ணர்) சொல்வது வழக்கம். மேற்கூறியவை, அவரது வாயினின்றும் வெளி வந்த சொற்களாகும். உங்கள் மனச்சுமையை ஸ்ரீராமகிருஷ்ணர் முன் இறக்கி வையுங்கள். கண்ணீருடன் உங்கள் துன்பங்களை எடுத்துரையுங்கள். உங்கள் கை நிறைய நீங்கள் விரும்பியவற்றை அவர் தருவதைக் காண்பீர்கள்.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 11

வைராக்கியத்தின் பயன் ஞானம், ஞானத்தின் பயன் விஷய சுகங்களை நாடாமல் ஆத்மானந்தத்தையனுபவித்தல், அதனால் விளைவது பரம சாந்தி. அகங்காரத்தில் வேரையறுத்து அதை எரித்துச் சாம்பலாக்குவது உண்மையான ஞானத்தின் இயல்பு. அப்பொழுது செயல் புரிபவனும் இல்லை. செயலின் பலனை அனுபவிப்பவனும் இல்லை.

கடவுள் இருக்கிறாரா? 4

எந்த ஆராய்ச்சி செய்வதற்கும் மனம் என்ற ஒன்று தேவைப் படுகிறது. இந்த மனதில் உள்ள உணர்வுகள் நமக்கு நம்பிக்கையையோ அல்லது அவநம்பிக்கையையோ தந்துவிடுகிறது. இந்த இருநிலைகளில் நாம் எந்த நிலைகளில் இருந்தாலும் நம்மால் முடிவு செய்யாமல் ஆராயமுடியாது. அந்த நிலையில் வரும் முடிவும் சரியானதாக இருக்காது.

சந்தோஷம் என்பது 3

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் 

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 37

சுராகம்ப கால வாதரோக நாடிகதி ….. சுர ஆரம்பத்திலும், வாதரோகத்திலும் நாடியானது அதிக உஷ்ணமாய் நடக்கும். பலஹீன சுர அதிசார கிரஹனி நாடி சலனம் ….. துர்பலரோகம், சுரம், அதிசாரம், கிரஹணிரோகம், இவைகளில் நாடியானது மிகவும் துர்பலமாயிருக்கும். அப்படியல்லாமல் பிரபலமாயிருந்தால் மரணமாகும். தீர நாடி லக்ஷணம். வெகு காலமாய் ரோக பீடி தனது நாடி தீர நாடி என்றுப் பேர். அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாம் காண்டத்தில் நாடி சாஸ்திரம் சம்பூர்ணம்.

கடவுள் இருக்கிறாரா? 3

நம்பிக்கையை கொண்டு கடவுளை ஆராய்ந்ததால் மனித குலம் பெற்ற பலன் இதுதான். உதாரணமாக நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூரியனை அதன் ஒளியை அதன் வெப்பத்தை அறிய உணர முடியும் அல்லவா அதுபோலதான் கடவுளை பற்றிய நிலையும் எந்த நம்பிக்கையும் முன்னேற்பாடான முடிவுடன் ஆராயும் போது விஷயங்கள் உண்மையை வெளிப்படுத்துவது இல்லை அப்படியே அது வெளிப்படுத்தினாலும் நம்மாள் அதை சரியாக புரிந்து கொள்ள முடிவது இல்லை அதனால் நாம் எந்த நம்பிக்கையையும் இல்லாமல் இந்த விஷயத்தை ஆராய்வோம்.

கடவுள் இருக்கிறாரா? 2

கடவுளை அறிந்து கொள்ள நம்பிக்கை தேவையா? உண்மையில் அறிந்து கொள்வதைவிட கற்றுக்கொள்ளுதல் மேலானது அல்லவா நம்பிக்கைகளை கொண்டு கற்றுக்கொள்ளும் போது நம்பிக்கைகள் நம்மை ஒரு முடிவுக்கு அழைத்து செல்லுகின்றன அப்படி நம்பிக்கை அழைத்து சென்ற முடிவு சரியானதாக இருக்குமா என்ற ஐயம் குழப்பம் தான் உலகில் உள்ள இத்தனை மதங்களுக்கும் காரணம். அதனால் பிரிவுகள், பிரிவுகளால் பிரச்சனைகள் அதில் எல்லை மீறும் போது வன்முறைகள்

சுந்தர யோக சிகிச்சை முறை 31

11. இடைக்கிடை கீரைகாய் சோறுடன் உண்ணக் கிடைக்குமே பொன்னுடன் பண்பு. 12. காய்கீரை வெந்திடும் நீரைக் கழிக்காதே காய்ந்து கெடுமே உடல். 13. மிளகாய் எரிக்கும், மிளகும் வதைக்கும் அழகு உடலிற் கழிவு. 14. காப்பி கருஞ்சனி போதையே, இவ்வெறி தேத்தண்ணீர் தானும் விலக்கு. 15. காப்பிநீர் நின்று நசிக்கும் உடல் பொருள் காப்பதரி திவ்வடிமை கள்.

கடவுள் இருக்கிறாரா? 1

பொதுவாக இந்த வினாவரும் போது ஆன்மீகத்தில் உள்ளவர்கள் சொல்லும் பதில் நம்பிக்கை வையுங்கள் கடவுளை காணலாம், கடவுளை அறியலாம் அவர் இருக்கிறார் என்று அறியலாம் என்கிறார்கள். நம்பிக்கை இல்லாவிட்டால் இறைவனை மட்டுமல்ல எதையும் அறிய முடியாது என்கிறார்கள். நம்பிக்கை கொண்டு ஆராய்கிறோம் என்றால் என்ன அர்த்தம் முடிவு செய்து கொண்டு ஆராய்கிறோம் என்று அர்த்தம் அப்படி அந்த விதத்தில் ஆராய்ந்தால் சரியான முடிவு கிடைக்குமா? சந்தேகம்தான்,

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 6

ஒருவன் இறைவனிடம் சரண்புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. இத்தகைய மனிதனது தலையெழுத்தை விதியே தனது கரங்களால் துடைத்துவிடுகின்றது.

தற்போதைய காலம் 2

நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின் நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும் சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது. யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை வேறு எப்படி எடுத்துக்கொள்வது உழைப்பின் உன்னதம் சிந்தித்தலின் அழகு அதை செயல்படுத்தலில் உள்ள நளினம் இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர் அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே என்ன செய்வது அறிந்தவர்கள் வருத்தப்படதான்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 10

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.

தற்போதைய காலம் 1

தற்போதைய காலம் உழைக்காது உயர்வு பெற இளைஞர்கள் முயலும் காலம். இப்போது உள்ள சூழ்நிலையில் பணம், பதவி மட்டுமே உயர்வு எனும் எண்ணமும் நானே எல்லாம். நான் மட்டுமே எல்லாம் எனும் மனோ பாவத்தை உண்டாக்கும் சூழ்நிலையே கொண்டிருக்கிறது, இதில் எளிதில் வெற்றி வேண்டும் எனும் எண்ணம் உயர கிளம்பி எல்லாவற்றையும் முடிக்கிறது. அல்லது அழிக்கிறது. எல்லாவற்றையும் என்பது அன்பு, பாசம், நட்பு, உறவு, தியாகம், பணிதல், திருப்தி, போன்ற விஷயங்களை தான் சொல்கிறேன்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 36

பாலியம், கௌமாரம், யவ்வனம், வார்த்திகம் என்கிற அவஸ்தைகளுக்கு தக்கின பிரகாரம் நாடிகளின் சலனம் குறைந்து கொண்டே வரும். சுராதி ரோகங்கள் உண்டாகும் போது நாடிகளின் சலனமானது பேதப்படும். நாடிகள் வாயு சஞ்சாரத்தினால் சரீரத்தில் ரத்தத்தை வியாபிக்கச் செய்கின்றது. அந்த ரத்ததோஷத்தினால் அந்த நாடிகளில் ரத்தபரவல் பந்தகித்தால் அப்பொழுது நாடி சஞ்சரமாயும், வேகமாயும், துர்பலமாயும், க்ஷீணமாயும் நடக்கும். இரத்தத்தால் உஷ்ணமுண்டானால் நாடியானது அதிவேகத்துடன் சஞ்சலமாய் நடக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 30

6. தவிடே விடமினாம் புஷ்டிநற் காப்பு, தவிடற்றால் டோ தெறும்பு. 7. வீரத் தமிழினே நீக்கிவிடு தீட்டுதலை சூரனாவாய் கஞ்சியுடன் உண். 8. கஞ்சி வடிப்பது காலனைக் கூவலாம் கஞ்சியுடன் உண்டுநீ வாழ். 9. சாக்கடை போகும் அரிசியின் கஞ்சியே போக்கும் வறுமைப் பிணி. 10. பாலைக் குடித்துப் பலத்தைப் பொறுவீரே மாலையும் காலை தினம்.

நிகழ்சிக்கு அர்த்தம்

நிகழ்சிக்கு அர்த்தம் காண முயலுவது காரியத்துக்கு காரணம் தேடும் பகுத்தறிவின் சாபக்கேடு. இதை ஏன் சாப கேடு என்று சொன்னார்கள் பகுத்தறிவு என்பது சாப கேடா பகுத்தறிவு எப்படி சாப கேடு ஆகும் இப்படி கேள்வி முளைத்து சிந்திக்கும் போது சில விஷயங்கள் விடையாய் வருகிறது அப்படி வந்ததை வைத்து பார்த்தால் பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது பகுத்து பார்க்கும் போது புத்தி அதிகமாய் வேலை செய்கிறது அப்படி வேலை செய்யும் புத்தி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 5

உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு. காலமுறை தப்பாமல், முழுமனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக, இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய். உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடையும், களங்கமிலாப் பேரின்பத்தை நீ காண்பாய்.

இக் கால வாழ்க்கை முறை

இக்கால வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில் யார் ஜெயிக்கின்றானோ அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது. வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே வாழ்க்கை தர்மம். என்ன செய்வது இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள் நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது வெற்றியாளன்…