ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 5

உன் உள்ளத்தை விண்மீனைப் போல் தூயதாக ஆக்க வேண்டுமென இறைவனை வேண்டு. காலமுறை தப்பாமல், முழுமனத்துடன் செய்யப்படும் ஜபத்தின் பலனாக, இறைவன் உன்னுடன் பேசுவதை நீ உணர்வாய். உன்னுடைய விருப்பங்களெல்லாம் பூர்த்தியடையும், களங்கமிலாப் பேரின்பத்தை நீ காண்பாய்.

இக் கால வாழ்க்கை முறை

இக்கால வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில் யார் ஜெயிக்கின்றானோ அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது. வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே வாழ்க்கை தர்மம். என்ன செய்வது இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள் நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது வெற்றியாளன்…