தர்மம் என்பதற்கு 3

இந்த சிந்தனை வர காரணம் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட சமுதாய மாற்றமே காரணம் வேறு என்ன சொல்வது இருந்ததை தொலைத்து இல்லாததற்க்கு ஏங்கி இல்லாததை இருப்பதாய் நினைத்து தலை தெறிக்க தறிகெட்டு ஓடும் இந்த மனித சமுதாயத்தில் தர்மம் என்று சொல்லுவதே கூட பாபம் என்று தான் தோன்றுகிறது.

தர்மம் என்பதற்கு 2

இப்போது நம் முன் உள்ள கேள்வி, அல்லது சிந்தனை அப்படி பட்ட தர்மம் என்று ஒன்று உள்ளதா என்பதே காரணம் வெற்றியும், தனக்கு வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவம் ஊறி தடித்து விட்ட மனதினால் தற்கால மனிதர்கள் இருக்கும் போது மேலே கூறிய அம்சங்களை கொண்ட தர்மத்தை எங்கே காண்பது எப்படி தேடுவது ஏதாவது பண்டைய நூல்களில் கிடைத்தால் உண்டு

தர்மம் என்பதற்கு 1 மாதவராவ், சதாசிவ கோல்வல்கர்

தர்மம் என்பதற்கு மாதவராவ், சதாசிவ கோல்வல்கரின் விளக்கம் எது உண்மை வடிவில் உள்ளதோ, எது அனைவரையும் ஒரு நூலில் இணைக்குமோ எது பிரிவினையையும், விளைவையும் உண்டாக்காதோ எது வழிபாட்டு பிரிவுகளிடையே மோதல்களின் மூலம் மக்களை கட்டி போடாதோ, எது பல்வேறு கொள்கைகளில் இடையே ஒத்திசைவை உண்டாக்குமோ, அதுவே தர்மம்

உரையாடலின் ஒரு பகுதி 19

எப்போது நாம் பிறருடன் ஒப்பிடுதல் , என்கிற நிலைக்கு நகர்கின்றேமோ அப்போது நாம் வாழ்தலில் பகுதியாக உள்ள அனுபவித்தல் என்கிற நிலையில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விடுவோம் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

உரையாடலின் ஒரு பகுதி 18

ஆனாலும், அதில் அவனுக்கு நிம்மதி கிடைக்காமல் அடுத்த ஒப்பீடுகளுக்கு நகர்ந்து தன் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடுகிறான். இந்த நுண்ணிய வலைபின்னலில் இருந்து தப்பித்து தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து எந்த அளவு வேண்டும் என்பதையும் தீர்மானித்து தான் வேண்டியதை அடைவதற்க்கு உண்டான தகுதியையும் வளர்த்து தான் வேண்டியதை அடைந்து விட்டால் ஏற்படும் திருப்தி என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கும் காரணம் இங்கு யாரோடும் ஒப்பிடுதல் இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி 17

நம்முடைய வாழ்க்கை முறையில் ஒப்பிடுதல், ஒப்பிட்டு பார்த்தல் என்ற விஷயமே நமக்கு அதிக அளவு அழுத்தத்தை தருகிறது. இந்த ஒப்பிடுதலின் காரணத்தால் போட்டி, பொறமை, வெறி போன்றவற்றால் மனிதன் தாக்கப்பட்டு சீர் குலைந்து விடுகிறான். ஆனாலும் அவன் போராடுகிறான் வெற்றி அடைகிறான்

சூரியன் எழுவதற்க்கு

சூரியன் எழுவதற்க்கு முன் நீ எழுந்தால்.. அது உன் வாழ்க்கை! அலாரம் அடித்த பின்னும் நீ எழவில்லை என்றால்.. வாழ்க்கையின் போக்கில் தான் நீ

வேண்டியது வேண்டாதது

வேண்டியது வேண்டாதது என எதுவும் இல்லை இவ்வுலகில்.. காலமறிந்து நாம் தேடுவது வேண்டியவை.. காலம் கடந்து பின் நாம் தேடுவது வேண்டாதவை!  

பிராணனைப் பற்றி.

பிராணன் என்பது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோக ஜீவ ராசிகளுக்கும் அதுவே ஆதாரம் அப்படி ஆதாரமாய் இருக்கும் பிராணனை நாம் போற்றி வழிபடுவோம். நமது உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் நம்மை நாம் என்று சொல்வதற்கும் வேண்டிய சக்தியை தருவது பிராணணேயாகும். புலன்களுக்கு வேண்டிய அளவு சக்தியை வழங்குவதும் பிராணணே ஆகும். ஒவ்வொரு புலனுக்கும் பிராணன் தேவைப்படும் அளவு மாறுபடும் அப்படி மாறுபடும் அளவை அறிந்து பிராணன் புலன்களுக்கு தனது சக்தியை வழங்கட்டும் என்று…

மறு பிறவியை நிர்ணயிப்பது எது ?

மனிதனுடைய வாழ்க்கை பயணம் முடிந்தது என்பதற்கு அறிகுறி மரணம். மனிதனுடைய வாழ்க்கை பயணம் நடக்க உதவி செய்வது பிராணன் ஆகும். மரணத்திற்க்கு பின் ஜீவன் அதாவது உயிர் பயணிக்க உதவி செய்வதே உதானனின் பணியாகும். மரணமடையும் தருவாயில் மனிதனின் புலன்கள் செயலிலக்கின்றன. அப்படி செயலிலக்கும் போது முதலில் பேச்சு அவனிடம் இருந்து விடைபெறுகிறது. பின் படிப்பபடியாய் தொடர்ந்து ஒவ்வொரு புலனும் அவனைவிட்டு விலகுகிறது. கடைசியாய் மனம் விடைபெறும். அவனிடமிருந்து மனம் விடைபெறும் சமயத்தில் என்ன சிந்தனை அந்த…

நீதி மொழிகள்

மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம். யாராலும் செய்ய முடியாததை நல்லதோ கெட்டதோ ஒரு பெண் செய்வாள். கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும் போது அது ஒரு போதும் சிரித்ததில்லை. பூவாக இருந்தாலும் அதில் வாசனை இருந்தால் தான் அழகு. நட்பாக இருந்தாலும் அதில் நம்பிக்கை இருந்தால் தான் அழகு.

கற்பனை வாழ்க்கைக்கு

கற்பனை வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டால்.. எதார்த்தமான வாழ்க்கை நமக்கு எரிச்சலைத் தான் தரும்! இதை எத்தனை பேர் அறிந்து உணர்த்திருக்கிறீர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் அறிந்து உணர்ந்தவர்கள் வாழ்க்கை பாடம் கற்று கொண்டவர்கள்

மனிதனுக்கு ஏனோ 2

பல வேளைகளில் மனிதனால் எதையும் எல்லாவற்றையும் மாற்றி விடமுடியும் என்ற ஆணவத்தோடு கூடிய சிந்தனையின் நிலைதான் தற்போதைய நாகரிகம் என்றும், வளர்ச்சி என்றும் கொண்டாடப் படுகிறது. ஏதோ படத்தில் சொன்ன வசனம் போல, ஒடிக்கொண்டிருக்கும் போது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடாது. கடைசியில் தான் முடிவு செய்ய வேண்டுமென்று அது போல இந்த வளர்ச்சி, நாகரீகம் என்பதின் முடிவு ஒரு விதத்தில் நினைத்தால் பயம் தருகிறது. இன்னொரு விதத்தில் தன்னை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனிதன்…

மனிதனுக்கு ஏனோ 1

மனிதனுக்கு ஏனோ வினைகளில் முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை அதிலும் வெற்றி அடைந்து கொண்டிருப்பவரைப் பற்றி பேசவே வேண்டாம் அவன் என்னுடைய அறிவு, புத்தி,ஆற்றல் கொண்டே ஜெயித்ததாய் நினைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், உபதேசித்துக் கொண்டும் திரிவான். ஆனால், உண்மையில் மனிதனின் வெற்றி தோல்விகள் அவனவன் கர்ம வினைகளினாலேயே விளைகிறது. தோற்றவன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் விதி, வினை என்று நினைக்கிறான், சிந்திக்கிறான்.

அழகும் அறிவும்

அழகும் அறிவும் ஒன்றாய் இருந்து ஒன்றாய் அன்பாய் குடித்தனம் நடத்தும் இடம் சொர்க்கம். அங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். கெட்டதும் நல்லதாய் மாறும் இரசவாதம் போல்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 10

சாம்பாதித்யர் கிருஷ்ண அவதாரத்தின் போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். அவன் வழிப்பட்ட சூரியனை, காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.

அகத்தியர் லோப முத்திரை 4

இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் திறமை தான் ஆணிற்க்கு அழகு இங்கு திறமை என்றால் என்னவென்ற வினா வரும் அதற்க்கு பதில், உழைப்பு, கெட்டி காரதனம், வரும் முன் காக்கும் குணம் எதிலும் தெளிவு. எத்தனை தடை சோதனை வந்தாலும் துணையாய் வந்த மனைவியை இழிவு படுத்தாத குணம் கம்பீரமான மனத்தின்மை இவையே ஆணின் திறமை . இதை வளர்த்துக்கொள்ள ஆண் விரும்பி முயலவேண்டும். அப்போது மனைவி கணவனை உள்ளங்கயில் வைத்து தாங்குவாள் அவளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 44

பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.

அகத்தியர் லோப முத்திரை 3

அவர்கள் மிகுந்த காதலோடு நெல்முனையலவும் பிரிவும் குறைவும் இல்லாமல் குடித்தனம் செய்தார்கள் அவர்களின் இனிய இல்லறத்தாலும் தபோ பலத்தாலும் உலகை உய்வித்தார்கள். இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இரு எதிர் துருவாங்களாக உள்ள ஆண், பெண் எனும் பிரகிருதி வஸ்துகள் ஒன்றை ஒன்று மதித்து கெளரவித்து அன்பு கொண்டு இருத்தலே இனிய இல்லறம் அமைய வழியாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 7

ஆத்மாவையே எப்பொழுதும் தியானம் செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால் ஆகவேண்டியது ஒன்றுமில்லை, ஏனெனில் ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது, அதனிடம் அஞ்ஞான இருளில்லை. ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை, அது வர்ணிக்க முடியாதது, பகுக்க முடியாதது, குணங்களற்றது, பரிசுத்தமானது, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாதது.

அகத்தியர் லோப முத்திரை 2

அகத்தியரோ உருவம் குட்டை ( குள்ளம் ) மனைவியின் அழகிற்க்கு முன் அகத்தியர் சாதாரணம், அவளுடைய ஆடை, அணிகலன்களின் விருப்பம் தனக்கு இடைஞ்சல் என்று அகத்தியர் நினைக்கவேயில்லை அவர் தனது மனைவியை இளவரசியாகவே வாழ வைத்தார். இதிலிருந்து நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது அவரவர் குணங்களை அவரவர்கள் பரஸ்பரம் மதித்தார்கள். அவரவர் விருப்பங்களை பரஸ்பரம் கெளரவித்தார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 30

61) குரு திரிகோணமடையவும், சுக்கிரன், குருவுக்கு கேந்திரமடையவும், புதன் கேந்திரத்தில் நிற்கவும், குருவின் கேந்திரத்தில் சந்திரனும், கேதுவும் கூடி நிற்க, ஜோதிடம், இலக்கியம், கற்றவர். 62) சுக்கிரன் உச்சமடைய, புதன் 3 – ல் நிற்க, தனுசு லக்கினமாயிருந்து 11 – ல் குரு நிற்க, வாக்கில் சிறந்தவராம். 63) 2 – ல் புதன் நிற்க, குரு திரிகோணமடைய 4 – இல் சந்திரன் நிற்க வித்தையில் வல்லவர்.

குடும்ப வாழ்க்கைக்கு அகத்தியர் லோப முத்திரை. 1

லோபா முத்திரை அழகி, இளவரசி ஆபரணங்களின் மேல் அதிகபிரியமுள்ளவள் அகத்தியர் துறவி, ஞானி காட்டில், பர்ணசாலை ஆனால் இவர்கள் இருவரும் ஆண், பெண் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு மிக சிறந்த உதாரணம். எப்படி இளவரசியும் ஆபரணங்களில் அதிக ஆசை உடையவளும் பேரழகியாக இருந்த லோப முத்திரை கணவனின் மேல் தீராத மாறாத காதல் கொண்டு காட்டிற்க்கு வந்து பர்ணசாலையில் வசிக்கும் தன் கணவனுக்கு சற்றும் அலுப்பில்லாமல் பிரியம் குறையாமல் குடித்தனம் செய்தாள்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 29

58) சந்திரனுக்கு 6, 8, 12 – ல் நிற்க, பாபர்கள் சுபஸ்தானங்களில் நிற்க சுபர்களை சனி பார்க்க கொடிய தரித்திரம். 59) லக்கினாதிபதியும் 4 – க்குடையவரும், குருவும், மூவரும் கூடி நன்மையான ராசி, திரிகோண கேந்திரமுடைய சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களில் ஒருவர் 2 – ல் நிற்க, ஜோதிட வித்துவான். 60) குரு கேந்திரமடைய, சுக்கிரன் 4 – ல் நிற்க, புதன் திரிகோணமடைய ஜோதிட சித்தாந்தி.

உரையாடலின் ஒரு பகுதி 16

மதிப்பற்று வாழ உலகில் எந்த உயிரும் விரும்புவது இல்லை தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலும் பிறரை மதித்தலும் வாழ்க்கையின் அடிப்படையான அடித்தளங்கள் அந்த அடித்தளங்களை அமைக்க உள்ள அனுபவங்களே தத்துவங்கள் என்பார்கள்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 9

கேசவாதித்யர் காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள் புரியும் சூரியன் ‘கேசவாதித்யர் ‘ எனப்படுகிறார்.

உரையாடலின் ஒரு பகுதி 15

பிரார்தனையில் ஒரு பாகமாக இருக்க வேண்டியது சொல்லிக்கொடு. எனக்கு எது தெரிய வேண்டுமோ அதை முழுமையாய் சொல்லி கொடு அதை புரிந்து கொள்ளும் சக்தியையும் நீயே கொடு என்று உண்மையாய் பிரார்திக்கும் பக்குவம் அதாவது நான் என்ற நிலை இல்லாத நிலையில் பிரார்திக்கதெரிந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு

சுந்தர யோக சிகிச்சை முறை 43

உழைப்பற்றால் பசி எடுக்காது. ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும். ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும். பூர்ண சுவாசமுண்டாகாது. சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால் முதுமை அடையும். தூங்கும், அழுகும். உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும். சகல வியாதிகளுக்கும் மூல காரணமான மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும். உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது. தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான் ” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும். எளிதில் நோய் பற்றும்,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 6

ஒருவனுக்கு நான் என்னுடையது என்ற சொற்கள் எப்பொழுது முற்றும் அர்த்தமற்றவையாகின்றனவோ அப்பொழுது அவன் ஆத்மஞானியாகின்றான். எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க் கருதுபவன் அப்பொழுதும் தனக்குப் பகைவர்கள் இருப்பதாய்க் கருதுவானேயானால் அவன் நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.

உரையாடலின் ஒரு பகுதி 14

நாம் வளர்வதும் நல்லபடியாய் இருப்பதும் ஒரு தனிமனிதன் கையில் இல்லை. காலம் விளையாடும் இடம் இது காலம் சில சமயம் பெரிய குழுக்களை ,தேசத்தை, இனத்தை, உருமாற்றும் இதையெல்லாம் தனி மனிதனால் தடுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என்று கேட்டால் ஆமாம் என்பதுதான் பதில் உதவி செய்ய கூடாதா என்றால் எது உதவி என்றே தெரியாத போது உதவி எப்படி செய்வது உதவி இதுதான் என்று தெரிவதற்கே ஜென்மம் போதாதே, ஏனென்றால் நாம் கற்க…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 48

பூத தோஷ நிவார தயிலபிந்து ரூபம் ….. மண்டலாகாரமாய் தோன்றுமாகில் கிரஹபீடை ஒழிந்தததென்று ஓளஷத சிகிச்சை செய்தல் வேண்டும். சாகினி கிரஹ தேவதா தோஷ லக்ஷணம் ….. தயிலபிந்து திரிகோணகாரமாய் தோணுமாகில் சாகினிதேவதை வீட்டு தேவதைகளால் நோய் உண்டானதென்று அறியவேண்டியது. பூத பிரேத தோஷ குறி ….. தைல பிந்துவில் சாலனி உருவம் தோன்றினால் பூத பிதேங்களினால் நோய் உண்டானதென்று அறிய வேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 13

எந்த அனுபவமும் ஒருவனுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த அனுபவம் தரும் இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் அனுபவம் தன்னை மீறி ஆட்சி செய்ய தொடங்கிவிட்டால் நாம் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியாது இந்த விஷயம் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 8

உத்திர அர்க்கர் காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘ உத்திர அர்க்கர் ‘ என்பது பெயர்.

உரையாடலின் ஒரு பகுதி 12

மனித சமுதாயம் வாழ வேண்டிய முறை, உலகத்தை உள்ளபடி ரசி உனக்கென்று உள்ளதை முழுமையாக அனுபவி உன்னுடைய எந்த செயலும் பிறரை காயப்படுத்தாமல் வாழ். உன்னையே கவனி உனக்குண்டானது தவிர மற்றதை ஒதுக்க எப்போதும் எச்சரிக்கையாய் இரு ஆனந்தமாய் இரு அப்படி நீ இருந்தால் நீ ஆண்டவனை கூட நினைக்க வேண்டியது இல்லை காரணம் ஆண்டவன் உன்னை நினைத்துக்கொண்டிருப்பான் இயற்கையிடம் பாடம் கேள் அது சொல்லி தருவதை புரிந்து கொள் சுதந்திரமானவனாய் இரு.

சுந்தர யோக சிகிச்சை முறை 42

பொய் நகாகரிகமற்ற பண்டைக்காலத்தில், இயந்திர, விஞ்ஞான முன்னேற்ற செளகரியக் குறைவால் உடல் மேற்கூறிய பலவித உழைப்புகளுக்கு ஈடுபட்டு, நன்றாக வளர்ந்து, திறமை திடம் பெற்று, மானிடர் வனப்பு ஓங்கி, கஷ்ட சுகங்களின் மாறுதலைத் தாங்கும் சக்தியுடன் இருந்தனர். இவர்களுடைய ரத்த நாடிகளும், இருதயமும், ஸ்வாசக் கருவிகளும், பலத்துடன், சுறுசுறுப்புடன், சிரமம் தாங்கி வேலை செய்து நின்றன. எனவே நோய் எளிதில் வரவில்லை. வந்தாலும், நீண்டு நிற்கவில்லை உயர், உயிர் கருவிகளைச் சிதைக்கவில்லை. தாறுமாறான நிலைகளை உண்டாக்கி, புதுப்புது…

ஆண்களும், பெண்களும் 2

எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம் மனிதனின் தேவைகள் என்பவற்றில் ஆசைகள் ஆட்சி செய்து ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது அப்போதுதான் பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும், ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை. அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல், அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால் அடிப்படை எங்கோ…

ஆண்களும், பெண்களும் 1

ஆண்களும், பெண்களும் எப்போதும் அவர் அவர்களின் குணாதியங்களுக்கும், இயற்கையான இயல்பு தன்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் இதை முதலில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல இவை இரண்டும் எதிர், எதிர் கோணங்கள் ஆண் ஆணாக இருப்பதும், பெண், பெண் ஆக இருப்பதும் இயற்கையின் வடிவமைப்பு அந்த வடிவமைப்பில் மனிதன் மாற்றம் செய்யும் போது அடிப்படை தகர்ந்து விடும் இது ஆணாதிக்க நிலையில் தோன்றிய சிந்தனை அல்ல உண்மை நிலை இதை பகுத்தறிவு கொண்டு மறுதலிக்கும் போது கட்டமைப்பு…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 5

செயல்களைத் துறந்து, காலம், தேசம், திக்கு முதலியவைகளைக் கருதாமல் என்றும் இன்பவடிவானதும், மாசற்றதும், குளிர் முதலியவற்றை போக்குவதும் ஆகிய ஆத்மா எனும் புண்ணிய பூமியை எவன்,  நாடுகிறானோ அவன் அனைத்தையும் அறிந்தவனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சாவைக் கடந்தவனாகவும் விளங்குவான், உடலில் ஒரு கை வெட்டி எறியப்பட்டால் உடலுக்குக் குறைவேற்படும்பொழுது ஆத்மாவிற்குக் குறைவேற்படுவதில்லை. மிகுதியுள்ள உடலின் அங்கங்கிளிலும் ஆத்மாவிற்கு ஒரு பற்றுமில்லை

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 47

சிராயுதயில பிந்து ரூபம் ….. அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ முதலியது நிறைந்த தடாகத்தை போலும், சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல் தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான். பூததோஷ தயில பிந்து ரூபம் ….. தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால் அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால் தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது. கிரஹதேவதா தோஷ ரூபம் ….. புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால் தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.

கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் விதம்.

இதில் வரும் கருத்துக்கள் மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும், வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயண திரவங்களிலும் கழுவப்படுகிறது. அதனால், கன்றுக் குட்டியின் சீரம் முழுவதும் போய்விடுகிறது. அதன்பின் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறது. வைரஸ் வளர்ந்தபின் வெரோ செல்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. அதன்பின் வைரசும் அழிக்கப்படுகிறது. (செயலிலக்கம் செய்யப்படுகிறது )…

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 7

திரவுபதி ஆதித்யர் சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. சூரியனுக்கு திரவுபதி ஆதித்யர் என்று பெயர்.

உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்

மற்ற நாடுகளின் முன்னேற்றத்தின் முன்பு இந்தியாவின் முன்னேற்றம் ஒளி மங்கிக்காணப்படுவதற்கான காரணத்தை நீ சொல்ல முடியுமா ? இந்தியஅன்னை அறிவாற்றலில் குறைந்தவளா ? அல்லது திறமையில் தான் குறைந்தவளா ? அவளுடைய கலை, கணித அறிவு, தத்துவங்கள் ஆகிய இவற்றை பார். பிறகு அறிவாற்றலில் இந்தியஅன்னை குறைந்தவள் என்று நீ சொல்ல முடியுமா ? அவள் தன்னுடைய மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனது நீண்ட நெடுங்கால உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இந்த ஒன்றுதான் உலக நாடுகளின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 41

இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல், இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல், நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள், நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன. சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை உபயோகித்து பலனுண்டாக்குகிறது.

இந்தியா அழிந்து விடுமா ?

இந்தியா அழிந்து விடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே காமமும், ஆடம்பரமும், ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை…