32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே. ஈசனின் இடபாகத்தில் இருக்கும் தேவியே மண் பெண் பொன் எனும் மூன்றின் ஆசைக் கடலில் சிக்கி இரக்கமற்ற யமனின் பாச கயிற்றுக்கு அகப்பட்டு துன்ப்படும்படி இருந்த என்னை மணமுள்ள தாமரை மலரை போன்ற திருவடியை என் தலையின் மேல் வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட…

31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர் அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால் பெற்று எடுக்க இனி தாயும் இல்லை…

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும் தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும் தவம் செய்பவர்கள் பெறும்  ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும் மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!