30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!