வேதமலை கருட மலை:

வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை (ஸ்ரீனிவாசன்) பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

வேங்கட மலை:

வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்க டாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

பூனையை விட

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!

எனது போர் முறை  19

எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக்…

எனது போர் முறை 18

ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்க்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.

எனது போர் முறை 17

சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதையெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்;

எனது போர் முறை 16

எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிரசமணர் க்ஷத்திரியர், வைசியர் ஆகிய…

எனது போர் முறை 15

இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம என்று ஓதிக்கொண்டு யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் ,…

செவ்வாய் 10

செவ்வாய், சனி ஒன்றுக்கொன்று சமசப்தமாக இருந்தாலும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளே வாழ்க்கையாக அமைந்துவிடும். செவ்வாய் பலம் பெற்ற இடங்களில் மகரம், மேஷம், விருச்சிகம் அகிய இடங்களில் சூரியனோடு இணைந்து, இருப்பின், பொடி, புகையிலை போடுபவராக இருப்பர். செவ்வாய் லக்கினத்தோடு அமைந்து அதுவே மேஷம், விருச்சிகம், மகரமாக அமைந்து ஆணாய்இருப்பினும் பெண்ணாய் இருப்பினும் வாழ்க்கை துணைவரை இழப்பர். செவ்வாயும், லக்னமும் மகரத்தில் நின்றுவிடில், அநீதி வழிசெல்வார், நீதி வழியில் பொருள் ஈட்டமாட்டார்.

செவ்வாய் 9

செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றவர்கள், பாதுகாப்பு படையில், காவல் துறையில் பணியாற்றுவார்கள். செவ்வாய் சுக்கிரன் சனி இவர்களுக்குள் ஏதாவது ஒரு தொடர்பு ஜாதகத்தில் இருப்பின் அந்த ஜாதகர் மறைக்கப்பட்ட பொருளை அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பர். செவ்வாய்க்கு மகரத்தில் உச்சநிலை காரணமாக நிலம், மனை, வீடு வாகனம் பொறியியல் துறைகள் மூலம் நன்மைகள் ஏற்படும். செவ்வாய்க்கு கேந்திர, திரிகோணங்களில் குரு, புதன், ராகு நின்றால் யோகமேற்படும். செவ்வாய் நீசம்பெற்று பலமுற்று பாபகிரகங்களுடன் சேர்ந்து 12ல் இருப்பின் இடது…

செவ்வாய் 8

செவ்வாய் ஆட்சி உச்சம் வீட்டில் இருப்பது ருசிகர யோகம்.  இது போன்ற யோகம் அமைவது காவல்துறை, இராணுவம், கப்பல் துறைக்கு அதிகம் பயன்படும். செவ்வாயும், சுக்கிரனும் 1,4,7,10ல் கூடி இருக்குமாயின் இல்லாளை இழந்தவராய் அல்லது விவாகரத்து செய்தவராய் இருப்பர். செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் தன் பந்துதுக்களிடத்தில் எப்போதும் விரோதித்துக் கொள்வர். செவ்வாய் கடகத்தில் நீச்சம்பெற்று அதில் லக்னம் அமையப்பெற்றவர்கள் படிப்பு குறைவாக இருப்பினும், சிறு தொழில் செய்து ஜீவிப்பர்.

செவ்வாய் 7

செவ்வாய் கும்பத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் செல்வம் குறையும், கவலைகள் சூழும், கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டி வரும்.  சூதாட்டத்தில் பொருள் இழக்க நேரிடும். செவ்வாய் தசையில் சனி புத்தியில் பகைவர்களின் கொடுமை, துன்பம், துயரம் அதிகரிக்கும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் தொடர்பு இருந்து செவ்வாய் பலம் பெற்றால் பொறியியல் கல்வி ஏற்படும். செவ்வாய்க்கும் 4ம் வீட்டுக்கும் புதன், சனி கூடி இருப்பின் இன்சினீயரிங் கல்வி பெறக்கூடும். செவ்வாய், குரு பலமாக இருந்து வித்யாஸ்தானத்தோடும் தொடர்பு இருப்பின் சட்டம்…

செவ்வாய் 6

செவ்வாயுடன் தொடர்பு கொண்ட சனி பலம் பெற்றிருந்தால் ஒருவர் தொழில் நுட்பக்கலை வல்லுநராகவும், மெகானிக்கல் இன்சினியராகவும் முடியும். செவ்வாய் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் லாகிரி வஸ்துக்களில் நாட்டம் செலுத்துவர்.  சிற்றின்பத்து செலவு செய்வார்கள், கடுமையாக பேசுவார்கள். செவ்வாய் மீனத்தில் இருக்க பிறந்தவர்கள், நல்ல பதவி வகிப்பார்கள், முன்னேற்றம் திருப்தியாக இராது.  வெளிநாட்டு வாசமிருக்கும். செவ்வாய் கடகத்தில் இருக்க பிறந்தவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பர், உடல் நலம் குறைந்திருக்கும், விவசாயத்துறை லாபம் அளிக்கும்.

செவ்வாய் 5

செவ்வாய் எங்கிருந்தாலும், கடகம்,சிம்மம் ஆகிய லக்ன\ ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை. செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் பலமுடன் விளங்கினால் சக்தி, முருகன் பூஜை வாயிலாக சித்தியை பெறுவார். செவ்வாயும் 12ம் வீட்டோனும் கூடி பலம் இழந்தால்சகோதரரிடையே சக்கரவு ஏற்படும். செவ்வாயுடன் 12ம் வீட்டோன் கூடி இருந்தால் சிறைப்பீதி ஏற்படக்கூடும்.  செவ்வாய், புதனுடன் சேர்ந்தால் மருந்துகள் சம்பந்தப்பட்ட கடைகளிலும் மருத்துவராகவும், திறமை ஏற்படும். செவ்வாய் 10…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 29

ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதன் ஒவ்வொரு விஷயத்திற்காக போராடுகிறான் பின் அவற்றை அடைகிறான். பின் அதை விட்டுவிடுகிறான் இது அவரவர் வாழ்வில் கண்டிப்பாய் நடந்திருக்கும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் போராட கூடிய விஷயம் என்றாவது ஒரு நாள் அல்லது ஜென்மத்தில் அடைந்தே தீருவோம் என்பதே இங்கு தேவை தொடர்ந்து போராடுவது அதுவும் இறை நம்பிக்கையோடு அதாவது தன் நம்பிக்கையோடு போராடும் விஷயத்திற்கேற்ப நம்மை எப்போதும் கைவிடாது.   பல சமயங்களில் சில பிரச்சனைகள் நாம்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 28

வினைகளை செய்தது நாம் என்றால் 1. நாம் வினைகளை செய்யாமல் இருக்கவும் முடியும். 2. நாம் செய்ததை நமக்கு பிடித்ததை போல் மாற்றவும் முடியும். சாஸ்திரங்களும், வேதங்களும் அதை ஒற்றி பயணித்த மதங்களும் மனிதனின் நிலைக்கு அவன், அவன் செய்த வினையே காரணம் என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாக சொல்கின்றன இதை ஏற்கும் நாம் பின்வருமாறு சிந்தித்தால் நாம் விரும்பும் பயனை அடையலாம் எனும் முடிவுக்கு வரமுடியும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 27

இப்படி போர் என்று  வந்த பின் நமக்கு துணை நம் தன்நம்பிக்கை எனும் இறை நம்பிக்கை தான் இந்த ஆயுதத்தை கொண்டே நாம் அந்த எதிரியை இல்லாதிருக்க செய்ய முடியும்.  இப்படி பட்ட போர் வந்த பின் எதன் மீதும் நாம் நமது பொறுப்பை சுமத்த முடியாது உதாரணமாக நான் ஏழை, அண்ணன் என்னை ஏமாற்றிவிட்டான், நான் படிக்கவில்லை இப்படி எந்த காரணங்களையும் சொல்ல முடியாது காரணம் இவையெல்லாம் மீறி போர் ஆரம்பித்தாகிவிட்டது, வெற்றி ஒன்றே லட்சியம்…

உரையாடலில் ஒரு பகுதி 32

மனிதனிடம் இருக்கும் கருவிகளில் மனம் எனும் கருவியே மிக பலமானதும் எல்லாவற்றிற்க்கும் ஆதாரமாயும் உள்ளது. ஆனால் இந்த மனம் எனும் கருவி இயங்க பிராணன் எனும் சக்தியே அடிப்படையானது. அதாவது, இப்படி வைத்துக் கொள்ளலாம் மனிதன் என்பவன் உடல், மனம், பிராணன் என்ற முக்கிய மூன்று விஷயத்தால் ஆனவன் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இதில், உடல் – 5புலன்கள், 5 பொறிகள், 72 ஆயிரம் நாடி நரம்புகள் என்று அமைந்தாலும் இவைகள் ஐம் பூதத்தின் அடிப்படையிலேயே…

உரையாடலில் ஒரு பகுதி 31 மனிதனின் தேடல்கள்

நித்திய ஆனந்தத்திற்கான வழி முறைகளையும், சூத்திரங்களையும் கொண்டவையே வேதோ உபநிஷத்துகள் அதில் மனிதனைப் பற்றி அறிய அவன் யார் என்ற அறிய ஆசை கொண்டு கேள்வி எழுப்பி விடை தேட தொடங்கினார்கள் உண்மையில் மனிதன் என்பவன் யார் அவனிடம் என்ன உள்ளது அவனிடம் உள்ளதால் அவனுக்கும் இயற்கைக்கும் என்ன நன்மை, அல்லது தீமை என்று தேடி, தேடி முடிவில் கண்டு கொண்டார்கள் அது பற்றி கொஞ்சம் விரிவாகவும், விளக்கமாகவும் அறிய நாம் ஆசைப்பட்டு முயற்சிப்போம்.

உரையாடலில் ஒரு பகுதி 30 மனிதனின் தேடல்கள்

வாழ்வை பற்றி நம் முன்னோர்களின் பார்வை மனிதன் அவன் இருப்பில் செய்யப்படும் செயல்கள் வாழ்க்கை என பெயர் பெறுகிறது. வாழ்க்கையில் மனிதனின் பங்கை அதாவது எப்படி வாழ்ந்தால் ஆனந்தமாக இருக்கலாம் அல்லது ஆனந்தத்தை அடையலாம் என்பதே முன்னோர்களின் தேடல்கள் ஆக இருந்தது.  அந்த தேடுதலின் விளைவாக உண்டான விஷயங்களை உள்ளடக்கியதே நமது வேதம், உபநிஷத புராண – இதிகாசங்கள் போன்றவை,

எந்த ஒருவரையும் 2

பாராட்டுக்கும், விமர்சனத்திற்கும்  நிலையான மதிப்பு என்று எதுவும் இல்லை.  இது புரிந்து கொண்டாலே கடவுளைப் பற்றியும், மதங்களை பற்றியும் இன்னும் இது போல் உள்ள எத்தனையோ விமர்சனங்கள் பாராட்டுதல்கள் பற்றியும் நாம் காதிலும், மனதிலும் இடாமல் சகஜமாய் நம் வாழ்க்கையை நாம் சந்தோஷத்தோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால் இது நிச்சயமாய் தெரிய வேண்டும். (முக்கியமாக அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு, அதனை சார்ந்து இருக்கும் , மக்களுக்கு)

எந்த ஒருவரையும் 1

எந்த ஒருவரையும் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் பாராட்டுவது, விமர்சிப்பது என்பது அவரவரின் மனநிலை பொறுத்த விஷயம்.  காரணம் பாராட்டபடும் நபரே சில பல நேரங்களில் பாராட்டுக்கு தகுதியில்லாதவர் ஆகிறார். அதனாலேயே நாம் பாராட்டுக்கோ விமர்சனத்திற்கோ, அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.  

உள்ளே ஒன்று வைத்து

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு, ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம் தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது அழிந்து போயிருக்கலாம் பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.

 தனிப்பட்ட கொள்கைகள்

எவனொருவனுக்கு தீவிரமான தனிப்பட்ட கொள்கைகள் உள்ளதோ அவன் எப்போதும் யாருக்காவது எதிரியாகவே இருப்பான். உண்மையில் தீவிரமான கொள்கைகள் அது எந்த கொள்கைகளாக இருந்தாலும் சரி மனிதனை பிரித்து கூறு போட்டுவிடுகின்றன. கூடி இருக்கவும் கூட்டத்தை பிரிக்கவும் பிடிவாதமான சில கொள்கைகளே காரணமாய் இருக்கின்றன.  எல்லோராலும் வான் பிறையின் வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன என்ற பட்டினத்தாரின் மன நிலையில் இருக்க முடிவதில்லை. இலக்கில்லாத கொள்கையில்லாத பயணம் சுகம் ஆனால் அது எவருக்கும் எப்போதும் வாய்ப்பது இல்லை. அதனால்…

விளையாட்டு என்றால் என்ன 3

செயலுக்கு பலன் என்பதை மனதில் ஊன்றி நிலைக்க விட்ட பின் பலனை எதிர்பாராமல் செயலை செய் எனும் வாக்கியத்தை உணருவது எங்ஙனம் அதோடு அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் என்ற வாக்கியத்தின் பொருளை உணர்வது எப்படி செயலில் இருக்கும் கவனம் பலனில் சென்று விட செயலின் முழுமையை எப்படி அனுபவிப்பது? எப்படி ஆனந்திப்பது?

விளையாட்டு என்றால் என்ன 2

எப்போது விளையாட்டில் இலக்கு தீர்மானிக்கப்பட்டதோ அப்போது அந்த விளையாட்டு சுமையாகிவிடும் அதாவது விளையாட்டு வினையாகும் இடம் அது நம்மில் எத்தனை பேர் விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் பக்குவம் பெற்றுள்ளோம்.  பிறந்து மூன்று, நான்கு  வயதிற்குள்ளேயே இலக்கு நோக்கம் என்று எல்லா செயல்களையும் வடிவமைத்து நம் இயல்பை தொலைத்துவிட்டோமே

விளையாட்டு என்றால் என்ன 1

எந்த நோக்கமும் இல்லாமல் எந்த பயனையும் எதிர்பாராமல் உடலை வருத்திக் கொள்வது அப்படி வருத்தி கொள்வதின் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பது இலக்கில்லாமல் ஓடி, ஓடி மூச்சு இளைக்க, இளைக்க நிற்கும் போது உண்டாகும் சுகம், சந்தோஷம் நமது சிறு பிராயத்திலேயே முடிந்து விடுகிறது.  மூச்சு இளைக்கிறதே என்று விளையாடமல் இருக்க முடியுமா? எந்த குழந்தைகள் தான் அப்படி இருக்கிறது விளையாடி, விளையாடி இளைக்கிற மூச்சு ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் விளையாடாமலே சும்மா இருக்கும் போது இளைத்தால் அது வியாதி.