முருகனின் வடிவங்கள். 3

வள்ளி கல்யாணசுந்தரர் –  திருப்போரூர் முரகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுரும் இருக்கிறது. பாலசுவாமி – திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. சிரவுபஞ்சபேதனர் – திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. சிகிவாகனர் – மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது.  ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம்.

முருகனின் வடிவங்கள். 2

குமாரசாமி – கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. சண்முகர் – திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். தாரகாரி – ‘ தாரகாசுரன் ‘ என்னும் அசுரனை அழித்ததால் முருகப் பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார்.  உலகமாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது.  விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார். பிரம்மசாஸ்தா – காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில்…

முருகனின் வடிவங்கள். 1

சுப்பிரமணியர் – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘ சுப்பிரமணியர் ‘ ஆவார். கஜவாகனர் – திருமருகல், மேல் பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக்கோபுரத்தில் யானை மீது இருக்கும் முருகப் பெருமானை தரிசிக்கலாம்.  இவரை ‘ கஜவாகனர் ‘ என்கிறார்கள். சரவணபவர் – சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத்தலங்களில் சரவணபவர்’  திருவுருவை காணலாம்.  கார்த்திகேயர் – கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிரும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம்…

நூற்று ஒன்று சாமி மலை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஒரு ஆவுடையார்.. இரண்டு லிங்கம் :

ஆந்திர மாநிலம் காளேஸ்வரம் என்ற திருத்தலத்தில் காளேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்க மூர்த்தங்கள் அமைந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான, வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இந்த லிங்க மூர்த்தங்கள் முறையே காளேஸ்வரர் என்றும், முக்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன.

தனியாக முருகப்பெருமான்

கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத்தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  71  

ஒரு பக்ஷத்தில் மிருத்தியு லக்ஷணம் …..  பிரகிருதி ரூபமான சீவன் விகுருதம் அடைதலினால் காலசம்பிராப்தியால், பார்வையானது மட்டமாகிறது.  அப்பொழுது சந்திர நாடியில்லாமல்  சூரிய நாடி தானே இரவும், பகலும் ஒடிக்கொண்டு இருக்கும். அப்படி இருக்கும்படியான புருஷன் ஒரு பக்ஷத்தில் மரணம் அடைவான். வேறு வித குறி  எந்த புருஷனது வஸ்திரத்திலும், கண்டகசுரத்திலும், தேகத்திலும், முகத்திலும், துர்நாற்றம் வீசுமாகில் அவன் யோகியாயிருந்தாலும் தடையின்றி ப க்ஷதினத்தில் மரணமடைவான் இது நிச்சயம். வருஷம், அயனம், ருது, மாதம், பக்ஷம் இவைகளெல்லாம்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  70

ஆத்தும நிலை  சுருதி யுக்தி அனுபவம் என்னும் மூவிதங்களினால், சரீரம் ஆத்மாவென்றும், மனது அந்தராத்மாவென்றும், பிராணன் பரமாத்துமா என்றும், இதுதான் பஞ்சத்துவங்களை தாரணை செய்து இருக்கிறதென்றும் தெரியவருகிறது. ஆகையால் ஆத்மாவுக்கும், மனதுக்கும் விகுருமமுண்டாகில் தடை இன்றி மனிதன் இந்தலோகத்தில் சீவிக்கமாட்டான். காலமென்கிறவனால் பார்க்கப்பட்டான்.  அதாவது அந்த சீவிக்கி காலபிராப்தி ஆய்விட்டது என்று ( முடிந்து ) அறியவும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  69

நாலு வித வாஞ்சை  காலமென்கிற அக்கினியானது ஜடாக்கினியில் சேருவதினால் நான்கு விதமான வாஞ்சை உண்டாகின்றது.  அவையாவன 1.  ஆகாரம், 2. சலம், 3. நித்திரை, 4. காமம், இவைகளின் ஆகார மென்கிற அன்னம் இல்லாமற்போனால் தாது நஷ்டமாகின்றது சலம் இல்லாமல் போனால் ரத்தம் சுஷ்கித்துப் போகின்றது காமத்தினால் நேத்திரேந்திரியம் கெட்டுப் போகின்றது தூக்கமில்லாமையால்  சகல வியாதிகளும் தொடர்கின்றன.

மனித உடலைப்பற்றி அறிவோம் 10

மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட் மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட் அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல் வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்

மனித உடலைப்பற்றி அறிவோம் 9

மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது) குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி) பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306 இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5 உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ  உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 26

ஒவ்வொருவரும் போரிட வேண்டியது சக மனிதரிடம் அல்ல அவரவரின் முன் வினையோடு ஆம் அந்த முன்வினைதானே நாம் விரும்பாத துக்கம், துயரம், தோல்வி, வாழ்வில் சிக்கல் அனைத்தும் தந்தது. அதனால், அதனுடன் போர் புரிந்து அதை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அப்போது தான் நாம் ஆனந்தமாக இன்பமாக இருக்க முடியும் அதனால் நாம் நம் கண்ணுக்கு தெரியாத நம் முன்வினை எனும் எதிரியுடன் இறைவனின் துணை கொண்டு வியூகங்கள் அமைத்து சரியாக போர் செய்து வெற்றி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 25

நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று அதாவது முன் பிறவியின் தொடர்ச்சியே இப்பிறவி என்பது இது புரிந்து கொண்டால் நாம் அனுபவிக்கும் அல்லது நாம் சந்திக்கும் சிக்கல்கள் துயரங்கள் தோல்விகள் அனைத்தும் நம்மாளேயே உருவாக்கப்பட்ட‍ தென்று,  தெரிய வரும் அப்படி தெரியவரும் போது நமக்குள் தெளிவு வரும் அந்த தெளிவு இறைவனைப் பற்றிய சிந்த‍னைக்கு அழைத்துச் செல்லும் அதில் பயணப்படும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் சிக்கல்கள், தோல்விகள் எதனால் ஏற்பட்டது…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 24

நாம் ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட நமக்கு உடல் பலம் முக்கியம் என்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும் உடல் பலம் குறைந்தவர்கள் தன் நம்பிக்கை குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள் அதனால் உங்கள் பணிகளை எப்போதும் நீங்கள் உற்சாகமாக செய்ய நல்ல சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்ச்சியையும் செய்யுங்கள் அது உங்களுக்கு உங்களது பணிகளை தொடர்ந்து உற்சாகமாய் செய்ய உதவி செய்யும் இன்னுமொரு விஷயம்…

 சுகமாக வாழ சில ஆலோசனைகள் 23

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலையில்  அவை வெளிப்பட்டு பிறர் நம்மை புகழும் படி செய்திருக்கலாம் என்பது நமக்கு தெரியும் ஒரு விஷயத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதை சரி செய்யவோ அல்லது அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கவோ மேற் சொல்லிய விஷயங்கள் பயன்படும். தன்னுடைய குண நலன்களை ஆராய்ந்து பார்க்கும் வித்தையை அறியாதவர்களுக்கு தான் என்ன செய்கிறோம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் போகலாம்.  அப்படிப்பட்டவர்கள் மேற் சொன்ன முறைகளை கையாண்டு சுய…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 22

அந்த நல்ல குணங்களை மேலும், மேலும் வளர்த்துங்கள் அது உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலில் விருப்பையும் சந்தோஷத்தையும் தரும் அது மட்டுமல்ல உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும். அந்த நல்ல குணங்களை பட்டியல் இட்டால் நேரந்தவறாமை, பிறருக்கு உதவிசெய்தல், செய்யும் பணிகளில் நேர்த்தி, சுறுசுறுப்பு பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம், கற்றதை செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு இனிமையான பேச்சு இப்படி எத்தனையோ நல்ல குணங்கள் ஒளிந்திருப்பதை அறியலாம்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 21

ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி அறிய தினமும் நாட்குறிப்பில் குறித்து பழகுதல் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எந்த அளவு மாறியிருக்கிறது அல்லது மாறவே இல்லையா என்பது தெரியவரும் இது நம்மை நாம் விரும்பும் விதத்தில் தயார் செய்ய உபயோகப்படும்.  உதாரணமாக நம்மை யாரெல்லாம் புகழ்ந்துள்ளார்கள் எந்த சந்தர்ப்பத்தில் புகழ்ந்தார்கள், எந்த விஷயத்திற்காக புகழ்ந்தார்கள் என்பதை பட்டியல் இடுங்கள்  அப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் நன்றாக பதியும் அதாவது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களே…

சுந்தர யோக சிகிச்சை முறை 99

விந்து நோய்கள் ஆண்மை அழியும், இதற்கும் பரிகாரம் விளம்பரத்தில் மட்டும் தானுண்டு மருந்துகளெல்லாம் ஏமாற்றமே மிகக் கெடாதவர், இயற்கை தர்மத்தால் ஒரு வேளை முன்னேறலாம். வெளிப்படையாக அறிய முடியாத கொடிய தன்மை கொண்டவை இவை. மலட்டுத் தனம் பெண் மலட்டுக்கு மருந்து ஏது?  பெண்மலடு நீங்க ரண சிகிச்சை செய்து புண்ணாக்குகிறார்கள்.  குறை நீங்கியவர் இல்லை.  ஆயுர் வேத முறையில் மிகச் சிலருக்குப் பலன் கிடைத்ததாகச் சொல்லுகிறார்கள். மூலம் இதை அறுத்துத் தள்ளுகிறார்கள்.  இராவணன் தலை போல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 98

பெண் நோய் அல்லது மேகப்படை ( VENEREAL DISEASE ) இதற்கு போட்டுக் கொள்ளும் ஊசிகளெல்லாம், இதன் மேல் சின்னங்களுக்கு குணம் கொடுத்தாலும், இது நன்றாகப் பரவிவிட்டால், இதற்கு உடலையும், உயிரையும் பறி கொடுக்கிறார்கள். லிவர் அல்லது கொலைக்கட்டி நாட்டு வைத்தியத்தில், அபூர்வமாக ஆயிரத்தில் ஒரு கேஸ் பிழைக்கலாம்.  இதற்கு இங்கிலீஷ் வைத்தியமே கிடையாது கிட்னி தாக்கப்பட்டால் சிகிச்சை என்பது மருந்தால் இல்லை.

கெட்ட உள்நோக்கத்துடன்

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை. வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும் கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்

ஆறுதலே கூற முடியாத

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்…. சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது … 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

எனது போர் முறை 14

அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்னை என்று சர்வசமயப் பேரவை ஆரவாரம்…

எனது போர் முறை 13

அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகைவனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராக செயல்பட்டார்…

எனது போர் முறை 12

நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற…

எனது போர் முறை 11

இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப்…

எனது போர் முறை 10

சர்வசமயப் பேரவை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர்…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 34

 4 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4 – ஆமிடத்தை 9 – க்குரியவர் பார்த்து செவ்வாய், பலம் பெற்று இருப்பின் பூமி, தனம் சேர்க்கை உண்டு. தாய் வகை சொத்து கிட்டும். வாகன யோகம் உண்டு. பெறும் தொழில்களை நடத்துவான். 4 – க்குரியவர் செவ்வாய் வலுத்து, 7 – ல் சந்திரன் உச்சம் பெற்று இருப்பின் நிலம், வீடு, சொத்து வசதி உண்டு. கடன் தொல்லையும் உண்டு. 4 – க்குரியவர் உச்சம் பெற்று,…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 33

 4 – க்கு 8 – க்குரியவர், 4 – 10 – இல் அமைந்து 4 – க்குரியவர் 4 – க்கு 7 லிருந்து, 4 – க்கு பாதகாதிபதியால் பார்க்கப்பட்டால், மேற்படி கிரக திசாபுத்தி காலங்களில் மாரகம் ஏற்படும்.  பாதகாதிபதி 4 – இல் அமர்ந்து, 4 – க்குரியவரையும், சக்கிரனையும், சந்திரனையும் பார்த்தால் தாய்க்கு மாரகம் மேற்படி தசாபுத்தியில்.  4 – க்கு, 8 – க்குரியவர் திசையில், 4 –…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32

 4 – க்கு, 10 – க்குரியவர் திசையில் 4 – க்கு, 8 – க்குரியவர்  திசையில் அல்லது 8 – க்குரிய சாரம் பெற்று கிரக புத்தியில் கோச்சாரத்திற்கு 4 – க்கு, 12 – க்குரியவர், 4 – க்கு, 2 – இல் வரும்போது தாய்க்கு மாரகம். நாலுக்குரியவர் 7 – இல் பலம் குறைந்து இவரை பாவர் பார்த்தால் 4 – க்குரியவர் திசாபுத்தி காலத்தில் தாய்க்கு மாரகத்தை தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 31

 4 – ஆமிடத்தை பாவர் பார்த்து நாலுக்குரியவர் நீச்சம், அஸ்தமனம் மறைவு பெற்று 4 – க்கு பாதகாதிபதி திசாபுத்தியில் தாய்க்கு மாரகம்.  4 – க்கு 7 இல் புதன், சனி இருந்தாலும் 12 . இல் சந்திரன், 4 – க்கு, 11 – க்குரியவரோடு சேர்ந்து தனது திசாபுத்தி நடத்தும்போது தாய்க்கு மாரகம். 4 – க்குரியவர் லாபம் பெற்று தாய் காரகர் 2 – இல் 5 – க்குரியவருடன் சேர்க்கை…

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15

எண்ணிறந்த சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள உண்மையை நான் அரை சுலோகத்தில் கூறுகிறேன். ( ப்ரஹ்ம ஸத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர – ) பிரம்மம் மெய், உலகம் பொய், ஜீவன் பிரம்மமேயன்றி வேறன்று. என்னுடைய மனமெங்குளதோ அங்கு உனது உருவம் இருக்கட்டும், என்னுடைய தலை எங்குளதோ அங்கு உன்னுடைய திருவடி இருக்கட்டும்.