குணம் – செயல்

” ஒரு சாதுவிடம் அந்த ஊர் முக்கியஸ்தர்கள் சிலர், நாங்கள் வட இந்திய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடி எங்கள் பாவங்களை போக்க வேண்டி செல்ல உள்ளோம். தாங்களும் எங்களுடன் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூற, சாதுவோ நீங்கள் சென்று வாருங்கள் என கூறி, ஒரு பாகற்காயை அவர்களிடம் கொடுத்து நீங்கள் எந்தெந்த புண்ணிய நதிகளில் நீராடுகிறீர்களோ, அப்போது இந்த பாகற்காயையும் நனைத்து எடுத்து வாருங்கள் என்றார். வந்தவர்களுக்கோ…

கோள்களின் கோலாட்டம் -1.14 மகரம். திரேக்காணத்தின் பலன்கள்.

மகரம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ நிகடத்திரேக்காணம்– மயிர்கள் அடர்ந்தவன், மீனின் பல்களை போல் பல் அமைந்தவன், பன்றியின் தேகம் போன்ற அமைப்பு உள்ளவன் மாடு கட்டும், தும்பு, வலை விலங்கு இவைகள் தரித்தவன் பயங்கர முகம் உள்ளவன். சனி நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– கீதம், வாத்தியம் முதலிய கலைகளில் சமர்த்தானவன் தாமரை இதழ் போல் நீண்ட கண்ணுள்ளவள் கருத்த நிறம்…

கோள்களின் கோலாட்டம் -1.14 தனுசு  திரேக்காணத்தின் பலன்கள்.

தனுசு 1 முதல் 10 பாகைக்குள் — நரநாற்கால் ஆயுததிரேக்காணம்– மனிதனின் முகம் உள்ளது, குதிரைக்கொப்பான சரீரம் ஆஸ்ரமம்  வேள்வியில் பங்கு பெறும்அமைப்பும்  உண்டு. புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– மனதைக் கவரக் கூடிய அமைப்பு, செண்பக புஷ்பம், தங்கம் இவற்றிற்கொப்பான நிறமுள்ளவளும், கடலில் விளையும் பொருள்களை தரித்தவளும், பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும் ஆவாள். செவ்வாய் நாயகன். ஆண் கிரகம் பலம் – தொப்புள்…

கிரக பெயர்ச்சி பலன்கள் அறிய

அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம். கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம். சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான்…

எண்ணங்களின் வலிமை

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக்…

ஜாதகத்தை கொண்டு தோஷங்கள் அறியும் விதம்.

ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…

கோள்களின் கோலாட்டம் -1.14 விருச்சிகம் திரேக்காணத்தின் பலன்கள்.

விருச்சிகம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– வஸ்திரம் ஆபரணம் சரிவர இல்லாதவளும் தனது இருப்பிடத்திலிருந்து விலகியவளும், பாம்பினால் கடிபட்ட பாதத்தையுடையவளும் அழகு பொருந்தியவளுமான தோற்றம், கடலில் இருந்து கரையை நோக்கி வரும் தன்மை செவ்வாய் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– ஆமை, குடம் இவற்றிற்கொப்பான சரீரமுடையவள் பாம்பினால் சுற்றப்பட்ட ஸ்திரீயானவள். கணவனுக்காக இடம், சுகம் இவைகளை விரும்புகிறாள். குரு…

கோள்களின் கோலாட்டம் -1.14 துலாம் திரேக்காணத்தின் பலன்கள்.

துலாம். 1 முதல் 10 பாகைக்குள் — நரதிரேக்காணம்– வீதியின் நடுவில் உள்ள கடையை உடையவனும் தராசை கையில் தாங்கியவன், சாமான்களை எடை போட்டு நிறுப்பதிலும், படியால் அளப்பதிலும் சமர்த்தன், சுக்கிரன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நரபட்சிதிரேக்காணம் – கழுகு முகம். பசிதாகம் உள்ளவன், பாத்திர பண்டங்களில் அதிக பழக்க வழக்கமுள்ளவன். மனைவி, குழந்தைகளை மனதில் சதா சிந்தித்துக் கொண்டு இருக்கும் சனி நாயகன் ஆண்…

கோள்களின் கோலாட்டம் -1.14 கன்னி திரேக்காணத்தின் பலன்கள்.

கன்னி. 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீதிரேக்காணம்– புஷ்பம் நிரம்பிய குடத்துடன் அழுக்கடைந்த வஸ்திரத்தால் மறைக்கப்பட்ட சரீரமுடையவளாகவும், வஸ்திரம், தனம் இவற்றின் சேர்க்கையை விரும்புவளாகவும் தந்தை வீட்டை விரும்புவளாகவும் உள்ளவள். புதன் நாயகன் ஸ்திரீ கிரகம் பலம், கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திர«க்கானம் — எழுதுகோலை தரித்த கருப்புநிறமுள்ள வஸ்திரத்தை தலையில் சுற்றப்பட்டவனும், செலவு வரவு இரண்டையும் செய்கிறவனும், ரோமங்கள் அடர்ந்த சரீரமுடையவனும் ஆயுதம் தரித்தவனும் ஆவான்.…

கோள்களின் கோலாட்டம் -1.14 சிம்மம் திரேக்காணத்தின் பலன்கள்.

சிம்மம். 1 முதல் 10 பாகைக்குள் — நர நாற்கால் பட்சிதிரேக்காணம்– கழுகு, நரி, நாய் போன்றதாயும், அழுக்கடைந்த துணியுடன் கூடியவன். தாய், தந்தையை விட்டுப் பிரிந்தவன் போல கதறுவான். சூரியன் நாயகன் – ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத திரேகாணம் – குதிரையைப் போல் உள்ளவன். வெண்ணிறமான மாலையை தலையில் அணிந்தவன். எளிதில் அண்ட முடியாதவன், ஆயுதம் தரித்தவனும் வளைந்த நுனி மூக்கை உடையவனும், மான்தோல்…

கோள்களின் கோலாட்டம்- 1.14கடகம். திரேக்காணத்தின் பலன்கள்

கடகம். 1 முதல் 10 பாகைக்குள் — நாற்கால் புருஷதிரேக்காணம்– இலை, கிழங்கு, பழம் இவற்றைத் தரித்தவனும், யானைக் கொப்பான சரீரமுடையவனும், காட்டில் வாசனை நிரம்பிய இடங்களில் வசிப்பவனும், பெருத்த கால் உள்ளவனும், பன்றிக் கொப்பான முகம் உள்ளவனும் ஆவான். சந்திரன் நாயகன் — ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — ஸ்திரீ சர்ப்பதிரேக்காணம்– சிரசில் தாமரை புஷ்பங்கள் உள்ளவளும், சர்மங்கள் கூடியவளும், தனிமையான இடத்தை அடைந்தவளும் கதறும் குணம் உள்ளவளும்…

ஆப்பிள் பழம் — APPLE

ஆப்பிள் பழம் ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் சக்தி நிறைந்த பழமாகக் கருதப்படுகிறது. 30 சதவித தண்ணிரும், வைட்டமின் “சி” மற்றும் தாது உப்புகளும் நிறைந்தது. நெல்லிக்கனியோடு ஒப்பிடும்பொழுது இதன் சக்தி குறைவுதான். ஆப்பிள் பல வகையாக இருந்தாலும், சிவந்த நிறத்தில் மேற்பகுதியும் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழம் சிறந்தது. பயன்கள் 1, இரத்த சோகையை குணப்படுத்தும். 2. உடல் தோல் சுருக்கத்தை நீக்கும். 3. கண், பல் வியாதிகளை குணப்படுத்தும் 4. சிறுநீரகக்…

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் இந்த அன்னாசிப் பழத்தின் அமைப்பு வேறுபட்டிருக்கும், 75 சதவிதம் தண்ணீர் கலந்துள்ள இந்தப் பழத்தின் உள் அமைப்பும் மிக வித்தியாசமாக இருக்கும், இது ஒரு காரல் தன்மையைக் கொண்டது, வைட்டமின் “சி”டிநிறைந்தது.   பயன்கள் அன்னாசிப்பழம் பல், எலும்பு, தோல் வியாதிகளை குணப்படுத்தும், ஸ்கர்வி வியாதிக்கும் நல்ல மருந்து. வாரத்திற்கு மூன்று நாட்கள் பயன்படுத்தினால் போதும். நிமோனியா உள்ளவர்கள் நாள்தோறும் 200 கிராம் வீதம் தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

கோள்களின் கோலாட்டம் -1-14 மிதுனம்.-திரேக்காணத்தின் பலன்கள்.

மிதுனம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ திரேக்காணம் – நல்ல ரூபத்துடன் கூடியவள், நகை செய்வதில் பற்று உள்ளவள். சந்ததி இல்லாதவள். உயர தூக்கப்பட்ட கைகளை உடையவள். மாதவிடாய் தோஷம் உள்ளவள் ( அ) காம பீடையுள்ளவள், ஊசியால் செய்யக்கூடிய நெசவு முதலிய காரியத்தை விரும்புவாள். ஸ்திரீ கிரகம் பலம் கழுத்துவரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர ஆயுத பட்சி திரேக்காணம் – தோட்டத்தில் வசிப்பவன். கவசமுள்ளவன். ( கண்ணாடி போன்ற…

பழங்களின் சத்தும் பயன்கள்

சப்போட்டாப் பழம் சப்போட்டா மற்ற பழ வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. அதன் தோல் அமைப்பு பொதுவாக எந்தப் பழத்திற்கும் இல்லை. இதில் பல வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளது. அதிக நீர் சத்து உள்ளதால் இரத்தம் விருத்தியடைய பயன்படுகின்றது. இரத்தப் புற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. பயன்கள் சப்போட்டா குணப்படுத்தும் வியாதிகள் 1, இரத்த சோகையைப் போக்கும் 2, உடலின் கருமை நிறத்தை மாற்றும் 3, இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்தும் 4, அதிக பேதி…

கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள்.ரிசபம்.

ரிசபம். 1 முதல் 10 பாகைக்குள் — ஸ்திரீ அக்னி திரேக்காணம் – சுருட்டையாகவும், அறுக்கப்பட்டதாகவும் இருக்கின்ற மயிர்களை உடையவன் குடம் போன்ற வயிறை உடையவன். ஓரிடத்தில் பொசுக்கப்பட்ட துணி உடையவன் தாகமுடையவன், அதிகமான சாப்பாட்டு பிரியன், ஆபரணங்களை விரும்பும் ஸ்திரீ சுக்கிரன் நாயகன். ஸ்திரீ கிரகம் பலம் – கழுத்து வரை. 10 முதல் 20 பாகைக்குள் — நர நாற்கால் திரேக்காணம் – வயல், நெல், வீடு, பசு  இவைகள் சம்பந்தமான பரீட்சை செய்யும்காரியங்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.14  திரேக்கானதணத்தின் பலன்கள்.மேசம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் -1.14 திரேக்காணத்தின் பலன்கள். மேசம். 1 முதல் 10 பாகைக்குள் — புருஷ அங்காரக ஆயுத திரேக்காணம் பலன்கள். வெளுத்த துணி தரித்தவன், கருத்த நிறம் உள்ளவன். மிகுந்த பலசாலி போன்ற தோற்றம் உள்ளவன். பயப்படும்படியான தோற்றம். சிவந்த கண்கள் உள்ளவன். செவ்வாய் நாயகன், ஸ்திரீ கிரகம் பலம் கழுத்து வரை அதிபதி. 10 முதல் 20 பாகைக்குள் — நாற்கால் பட்சி ஸ்திரீ திரேக்காணம் ஆபரணம்,…

மச்சாசனம் — MATSYASANAM

மச்சாசனம் பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள் –– சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு…

ஹலாசனம் — HALASANAM

ஹலாசனம் — HALASANAM சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும். அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில்வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்கவேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்கவேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுபபிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4

ஜோதிட விதிகள் இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான். இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன். இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால், சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும். இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன். இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன் இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன். இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன் இலக்கினாதிபதி சுக்கிரனாகில்,…

கடவுள்

காந்த ஊசி எப்பொழுதும் வடக்கு திசையையே காட்டுவதால், கப்பல்கள் கடலில் திசை தப்பிப் போவதில்லை. அதுபோலவே மனிதனுடைய மனம் இறைவனையே நாடியிருக்கும்வரை, அவன் வாழ்க்கை கடலில் திசை தப்பிப் போவதில்லை.  — இராமகிருஷ்ண பரமஹம்சர் “ ” மலர்களிலே மணம் இருப்பதுபோலவே ஆண்டவனும் உன்னிடமே இருக்கிறான். இதை அறியாமல், தன்னிடம் இருக்கும் கஸ்தூரியை உணராத மான், புல்லில் தேடுவது போல் நீ ஏன் வெளியில் தேடுகிறாய்?”   — கபீர்தாஸ் . “கடவுளை வணங்குதல் என்றால் என்ன?…

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71

திருமந்திரமாலை பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில் அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம்…

திருமண யோகத்திற்கு தடை செய்யும் அமைப்பு

திருமணம் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும் சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது. குரு பலவீனமாகி…

மயூராசனம் — MAYURASANAM

மயூராசனம் மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர். முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலைய‍ணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம். பலன்கள் – வாத…

வஜ்ராசனம் — VAJIRASANAM

வஜ்ராசனம் கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும். நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும். 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம் ..பலன்கள் — வச்சிரம் போன்று திட மனது ஏற்படும் அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்குரிய ஆசனம்

இறைவன்

இறைவன் தாம் விரும்பியதைச் செய்கிறார். எவரும் அவரை அதைச் செய், இதைச் செய் எனக்கட்டளையிட முடியாது. அவர் அரசர்க்கெல்லாம் அரசர், சக்கரவர்த்திகளுக்கெல்லாம் மேலான சக்கரவர்த்தி, அவரது கட்டளைக்கும், விருப்பத்துக்கும் இணங்கி வாழ்வதே நாம் வாழ வேண்டிய வழியாகும். ”                                                       …

உத்தித பத்மாசனம் – UTHITHA PADMASANAM

உத்தித பத்மாசனம்  பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது ஒருமுறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் செளகரியம்போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும். பலன்கள் – தொந்தி…

சர்வாங்காசனம் – SARAVANGASANAM

சர்வாங்காசனம் – விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும். சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும். 2 நிமிடத்திற்கு ஒரு முறையாக,…

விபரீத கரணி — VEEBAREETHA KARANI

விபரீத கரணி  விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும் .ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட…

நவாசனம் — NAVASANAM

நவாசனம்  நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்கவேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு . பலன்கள் — இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்‍தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல்…

முயற்ச்சி

கோமு: என்ன பண்ணிட்டு இருக்க காமு: -ப்ளேன் பண்ணிட்டேன் இனி வொர்க்குள்ளே போக போறேன். கோமு – என்ன ப்ளேன் பண்ணீட்டே காமு – எப்படியும் இந்தியன் டீமில செலக்ட் ஆகணும்னு, கோமு அப்படியா வொர்க் என்ன பண்ணப்போற காமு – தினமும் பிராக்ட்டீஸ் கோமு – அப்புறம் காமு – அத்தனை தான் கோமு – அது மட்டும் போதுமா காமு – ஏன் அதுதான் பண்ணனும் அத தவிர வேற என்ன பண்ணனும். கோமு…

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM.

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM. விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் – இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்துது ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் எக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுக்களைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியே விட் நிலையில்…

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியஉணவு உண்ணும்முறைகள்

உணவு உண்ணும்முறைகள் 1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் . 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும். 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும் 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று…

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும் . இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4…

விடுகதைகள்

விடுகதைகள் 1, கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி, அது என்ன? 2. பாடி அழைப்பான் உறவை கூடி உணவை உண்பான், அவன் யார்? 3. ஒரு வாய் தண்ணீரை சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான், அவன் யார்? விடைகள் 1 கரும்பு 2 காகம் 3 தென்னை மரம்

சுக்கிரன்

சுக்கிரன் – களத்திரகாரகன் ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான். ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின்  திசை புக்தியில்  திருமணம் நடக்கும் ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . ஏழாம் வீட்டிற்கு உரியவன் திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். சுக்கிரனும்,…

நாவல் பழம்

பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும். அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. நாவல்…

வெங்காயம்

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. 1. வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். 3. காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே…

களத்திர பாவம்

களத்திரகாரகன் லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் இரண்டாம் வீடு…

இந்த உலகம்

விருந்தாளி :- என்ன பண்ற பையன் :- படிக்கிறேன் விருந்தாளி :- படிச்சு என்னாவா ஆகப்போற ? பையன் :- அதைப் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் விருந்தாளி :- என்னன்னு ? பையன் :- படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு ஒரே குழப்பமா இருக்கு விருந்தாளி :- குழப்பமா இருக்கா ஏன் ? பையன் :- ஒரு ஆசிரியரின் பத்துவருட சம்பாத்தியம் 20 லட்சம் விருந்தாளி :- அப்ப வாத்தியாருக்கு படி பையன் :- ஒரு இன்ஜினியரின்…

முருங்கையின் சிறப்பு

மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம். பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால்…

யோகபாவம் வேலை செய்யும் காலங்கள்

ஜெனன லக்கினாதிபதிக்கு சுகஸ்தானத்தில் ஆட்சிக் கோள்களும், சந்திரன் இருந்த ராசிக்கு 3 – ம் வீட்டோன் உச்சம் பெற்று இருந்தால், 30 வயதிற்கு மேல் சகல விதமான செல்வங்களோடு சௌக்கியமாக இருப்பான். பாக்கியாதிபதி 3 – ம் இடத்திலிருக்க அவனை குரு பார்க்க உள்ள அமைப்பிற்கு சர்ப்பயோகம் என்று பெயர். இதன் பலன் 6 – வயது முதல் 9 வயது வரை பாக்கியத்தோடு இருப்பான். 5 – ம் வீட்டோன் 3, அல்லது 11 –…