வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க

வாழ்க்கையில் நிஜத்தைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். நிஜங்கள் தவிர்க்க முடியாதவை, வாழ்க்கையை விட்டு விலக்க முடியாதவை, விலக்க முடியாதவைகளோடு கை குலுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புகள் எப்போதும் நம்மை ஏமாற்றாது.. நாம் எவரிடம் எதிர்பார்க்க வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகிறோம்! தாய் தந்தையிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பதும் குழந்தைகளிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதும் கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதும் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பதும் மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பதும் பக்தன் கடவுளிடம் எதிர்பார்ப்பதும் கூட பல சமயங்களில் ஏமாற்றத்தை தந்துவிடுகிறதே இப்படி இருக்கும் போது யாரிடம் தான் எதிர்பார்ப்பது

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 28

வாத பித்த, வாத சிலேஷ்ம நாடி லக்ஷணம் வாத பித்த தோஷத்தில் நாடியானது சாஞ்சலியமாயும், பிரகாசமாயும், ஸ்தூலமாயும் கடினமாயும் நடக்கும். சிலேஷ்ம வாத ரோகத்தில் நாடியானது உஷ்ணமாயும் மந்தமாயும் நடக்கும். சிலேஷ்ம தோஷ வாத தோஷ உஷ்ணவாத தோஷ நாடி லக்ஷணம் ….. சிலேஷ்ம தோஷத்திலும் பிரபலமான வாத தோஷத்தில் நாடியானது தீக்ஷணமாயும், உஷ்ணமாயும் நடக்கும். உஷ்ணவாதத்தில் நாடி பிண்டத்தைப் போல் பௌத்தாகாரமாய் நடக்கும். வாத நாடி ….. வாதத்தில் நாடி சூக்ஷ்மமாயும், ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 18

பிராணாவை உடலைமைப்புகளே, தமக்குத் தாமே சரி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமாக என்ன வேண்டும்? உணவு, ஒழுக்கம், உழைப்பு இம்மூன்றும் இயற்கைக்கு இணங்கி ஏற்பட்டு நடந்தால், பிராணா சமாதானத்தில் நின்று சரிசெய்யப்பட்டு, பிணி தடுக்கப்படுகின்றது. நோய் வந்தபின் சிகிச்சையைத் தேடுவதைக் காட்டிலும், தேடியும் சிகிச்சை கிட்டாமல், இறப்பதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக் கொள்ளுதலே மேலானது. பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்றதானது, சுலபமானது, சுகத்தைப்பற்றிச் சுகிக்தது வாழ இயல்பானது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 46

நீ ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லும் போது உன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களை உற்று நோக்கி அறிந்து கொள். நீ வாழும் இடத்தில் என்ன கிடைக்கின்றது எனபதைப் பற்றியும் நீ அறிந்து கொள். ஆனால், உன் வாயை மட்டும் திறவாதே. உங்களது அன்னைக்குப் பணி செய்வதாகச் சாக்குக்கூறி உலகப் பற்றிற்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

மனித முன்னேற்றத்திற்கு தேவை

மனித முன்னேற்றத்திற்கு தேவை அதிர்ஷ்டம் தான். ஆனால், அது ஏன் வருகிறது? எவரால் வருகிறது? எப்படி வருகிறது? எப்படி மாறுகிறது? என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும், அப்பாற்பட்டதாய் இருக்கிறது. உதாரணமாக பார்த்தால் அன்றய லிங்கன் முதல் இன்றய நரேந்திர மோடி வரை

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 11

நான் பிராணன் எனப்பட்டவனன்று, நான் ஐந்து வாயுக்களன்று, ஏழு தாதுக்களுமன்று, ஐந்து கோசங்களுமன்று, வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் எனப்படுவையுமன்று, அறிவும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். எனக்கு விருப்பும், வெறுப்புமில்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, பேராசையும் மதிமயக்கமுமில்லை, கொழுப்பும் மாச்சரிய பாவனையுமில்லை, அறமும், பொருளும், இன்பமும், வீடும் இல்லை. அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? எப்படி வருகின்றன? எதற்க்காக வருகின்றன? எப்போது வருகின்றன? யாருடன் நம்மை சேர்க்கின்றன? யாரிடமிருந்து நம்மை பிரிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஏன்,

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 27

இயற்கை நாடி லக்ஷணம் ….. நாடியானது அதிகாலையில் கோமளமாயும், பகலில் உஷ்ணமாயும் சாயங்காலம் வேகமாயும் இரவில் மந்தமாயும் நடக்கும். அதிக தாப சுர நாடி லக்ஷணம் …. அதிக தாபமுடன் கலந்த சுர ரோகிக்கு மிகவும் வியர்வையும் நாடியானது சந்நிபாத நாடியைப்போலும் நடக்கும். சுர நாடி ….. சுரத்தில் நாடியானது உஷ்ணமாயும், வேகமாயும் நடக்கும்.சுரம், வாத ரோகம், சையோக நாடி லக்ஷணம் ….. சுரம், வாத ரோகம் இவைகளில் நாடி குறுக்கியும் நடக்கும். மேலும் ஸ்திரி சம்போகம்…

பயம் வேறு, பக்தி வேறு

பயம் வேறு, பக்தி வேறு தான். பயம் மனதின் உளைச்சலில் இருந்து முளைக்கிறது. பக்தி அன்பின் ஆழத்திலிருந்து முளைக்கிறது. இரண்டும் இணைவது கஷ்டம் என்றாலும், அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்.

சுந்தர யோக சிகிச்சை முறை 17

சாதாரண வைத்தியம் சுற்று வழியில் பிராணாவை சமாதானம் செய்ய முயலுகின்றது. நேர் வழியில் பிராணாவைச் சரி செய்வதே யோக சிகிச்சை. இந்த விளக்கங்களிலிருந்து பிராணாவை சமாதான நிலையில் வைத்திருப்பதே பிணி தடுத்தலுக்கு வழி என்ற முடிவுக்கு நாம் வரலாம். பிராணா சூக்ஷமமாயிற்‍றே! நாம் அதை எவ்வாறு பார்த்து அறிந்து சரி செய்து கொள்ள முடியும்? குழம்பு கூட்டானால் குறைந்து சேர்த்து சரி செய்து கொள்ளலாம். கைகளுக்கு எட்டாத, புலன்களுக்கு விளங்காததாயிற்றே எனலாம். இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத்…

பெண்களுக்கு

பெண்களுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்புகளில், அச்சமும் ஒன்று. இந்த இயற்கை தந்த பாதுகாப்பை செயற்கை தனமான நாகரிகத்தை முன்னிட்டு பெண்கள் உடைத்துக்கொண்டால் எத்தனை,எத்தனையோ விபரீதங்கள் ஏற்படும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 45

ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்தக்கூடாது. அனாவசியமாக ஒருவன் பிறருக்குப் பிரியமாயிராத மெய்யை உரைத்தலாகாது. கடுமொழிகள் பேசுவதால், ஒருவனது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி ஒருவனுக்கு இல்லாது போயின், அவன் தனது மனநுண்மையை இழக்கிறான். ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானான் என்று வினவக் கூடாது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம்.

இக்கட்டான நி‍லையை சமாளிக்க

அபாயத்தால் மனிதன் மனம் துணிவு பெற வேண்டும். துணிவினால் தான் இக்கட்டான நி‍லையை சமாளிக்கமுடியும். அழையா வீட்டில் நுழைவதுதான் நட்பின் உயர்ந்த லட்சணம்

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 10

உன்னுடைய குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி உலகத்திற் கடிமையாயிருப்பதினின்று உன்னை விடுவித்துக்கொள். இந்திரியங்களையும், மனதையும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார். நான் மனதும், புத்தியும், சித்தமும், அஹங்காரமும் அன்று, காதும், கண்ணும் , நாக்கும், மூக்குமன்று, ஆகாயமும், பூமியும், தீயும், காற்றுமன்று, அறிவும், ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 19

 சந்திரனுக்கு 3 – க்குடையவர் உச்சமடைய, அந்த உச்ச ராசியில் நின்ற ராசியாதிபதி 5 – ல் நிற்க, புண்ணிய குணம் உடையவர்.  செவ்வாயும், 9 – க்குடையவரும் கூட 5 – ல் நிற்க ஆதாரம் உள்ளவர்.  3 – க்குடையவரை 2 – க்குடையவர் பார்க்க, லக்கினாதிபதி 2 – ல் நிற்க புதன் பார்க்க நாராயண பக்தி உடையவர்.  குரு லக்கினத்தில் நிற்க, அவரை 5, 2,9 – க்குடையவர்களால் 7 –…

துக்கம் ஏது?

எதையும் வெறும் கனவு, வெறும் மாயை, என்று நினைக்கும் அப்பியாசம் மட்டும் மனதிற்கு இருந்துவிட்டால் எப்படி கவலைகள் வரும்.  அத்தகைய அறிவாளிக்கு துக்கம் ஏது?

உச்ச கட்ட ரகசியம்

ஒன்றை அழித்து, ஒன்றை காப்பதுதான் ஆத்மிக ரகசியம். உலக பரிபாலனத்தின் உச்ச கட்ட ரகசியமும் அதுதான். இந்த ரகசியத்தை அறிந்து செயல்படுத்துபவர்கள் தான் அரசியல் ஆட்சியாளர்கள். துரதிஷ்ட்டவசமாக மக்கள் அழிவதும், ஆட்சியாளர்கள் அவர்கள் சம்பந்தபட்டவர்களை மட்டும் காப்பதுமாக ஆட்சி பரிபாலனம் நடைபெறுகிறது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 18

 3 – க்குடையவர், லக்கினாதிபதி மாறி நிற்க, புதன் பார்க்க வீர, தீரம் உடையவர்.  4, 2 – க்குடையவர்கள் கூடி லக்கினத்தில நிற்க, புதன் பார்க்க வீர தீரம் உடையவர்  2, 3, 11 – க்குடையவர்கள் மூலவரும் கூடி 9 – ல் நிற்க, அவர்களை 5 – க்குடையவர் பார்க்க, சுகம், தனம், வாகன யோகம் உடையவர். 7, 2 – க்குடையவர் கூடி 4 – ல் நிற்க, 4 –…

காதலும், வேதாந்தமும் ஒன்றா?

காதலும், வேதாந்தமும் ஒன்றா? ஆம் என்றால் வேதாந்தம் என்பது சிருஷ்டியின் தத்துவம். காதலும் சிருஷ்டியுடன் சம்பந்தப்பட்டது. இல்லையென்றால் வேதாந்தத்தில் உணர்வுகள் இருக்கும் தாமரை நீர் போல. காதலில் உணர்ச்சிகள் இருக்கும். புயலும், சூறாவளியும், பூகம்பங்களும் போல.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 17

லக்கினாதிபதி 11 – ல்நிற்க, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 5 – க்குடையவரை குரு பார்க்க, பிரபுவாக இருப்பான்.  லக்கினாதிபதி 9 – ல் நிற்க, 2 – க்குடையவர் 11 – ல் நிற்க, 2 – ல் குரு நிற்க, அன்னிய தேசம் போய் வாழ்வார்.  5 – க்குடையவர் லக்கினத்திற்கு 12 – ல் நிற்க, குரு திரிகோணத்தில் நிற்க, 4 – க்குடையவர் 9 –…

தர்க்க ரீதியில்

மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம் போல் காட்ட வல்லவன். அப்போது அவன் வேதாந்தம் பேசுவான், சாஸ்திரங்கள், புராணங்களை தனக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துவான். காரணம், மனிதன் உணர்ச்சிகளின் அடிமை. அவனின் உள் உள்ள சுயநலம் அப்படி அவனை ஆக்குகிறது

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 16

 லக்கினாதிபதி 10 – ல் நிற்க, 2 – க்குடையவர் 9 – ல் நிற்க, 4 – க்குடையவர் 4 – ல் நிற்க சிவபக்தி உடையவர். லக்கினாதிபதி கேந்திரமடைய, அக்கேந்திராதிபதி திரிகோணம் அடைய, சந்திரன் ஆட்சி அடைய. லக்கினாதிபதியும், 2- க்குடையவரும் கூடி கேந்திரமடைய, 4 – க்குடையவர் 9 – ல் நிற்க, 10 – க்குடையவர் திரிகோணமடைய இவர்களை குரு பார்க்க, தர்மம், கல்வி, தெய்வ பக்தி உடையவர். லக்கினாதிபதியும் 2…

நவீன நாகரீகம்

ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் காட்டு மிரண்டிதனமே நவீன நாகரீகமாகிவிட்டது. இப்படி ஏன் தோன்றுகிறது எதனால் இப்படி தோன்றியது என்று சிந்தித்தால் சுற்றுப்புற சூழ்நிலையில் இருக்கும் நிலைகளே காரணம் என்று தோன்றுகிறது பணத்திற்க்குவேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனோபாவம் பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மனோ போக்கு பெரியவர்களை இலக்கியங்களை உதாசீனப்படுத்தும் பேச்சுக்கள் செயல்கள் உறவுக்கும்,உணர்வுக்கும் மதிப்பே இல்லாத சூழ்நிலைகள் தான் இப்படி தோன்ற வைத்திருக்கிறது எனக்கு ஏனோ அப்படிதான் தோன்றுகிறது

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 15

 லக்கினாதிபதியும், 2 – க்குடையவரும் ஆட்சி அடைய, 9 – க்குடையவர் 4 – ல் நிற்க, 10 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, கல்விச் செல்வம், நிறை பெற்ற வாழ்வு பெற்றவராவார். 9, 11 – க்குடையவர் கூடி 3 – ல் நிற்க, சத்தியம், தர்மம், பூமி, கல்வி உடையவர். லக்கினத்தில் சூரியன் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 9 – க்குடையவர் 11 – ல் நிற்க, பொருள் உடையவர்.…

அடுத்தவரின் பாதிப்பு

ஒரு நபரின் வாழ்க்கையில் இன்னொரு நபரின் பாதிப்பு எந்த விதத்திலாவது இருந்தே தீரும். இதை நாம் நமக்குள் இறங்கி பார்க்கும்போதுதான் அந்த நபர் யார் என்பதே தெரியும். சமூகத்தில் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் மனிதர் ஆண் என்றால் மனைவியாகவோ, பெண் என்றால் கணவராகவோ இருக்க வேண்டும் என்ற ஆசையில் உண்டான நியதியே திருமணம். ஆனால் எல்லா தம்பதியருக்கும் அப்படி அமைகிறதா என்பது வினாவிற்குரிய விஷயம் தான் என்பதே உண்மை. அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், ஆன்மீக பேச்சாளர்கள்,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 26,

இறைச்சி, பால், மதுபாண்டங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ….. இறைச்சிகளை அருந்தினவனது நாடி ஸ்திரமாயும், பாலைகுடித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், மதுரியமான பண்டங்கள் புசித்தவனது நாடி ஸ்திரமாயும், மந்தமந்தமாயும் நடக்கும். மதுர பதார்த்ததங்கள், உஷ்ண பதார்த்ததங்கள், உலர்ந்த பதார்த்தங்கள் தின்பவனது நாடி லக்ஷணம் ——- வெல்லம், வாழப்பழம், மாமிசம், உஷ்ணபதார்த்தங்கள், உலர்ந்த பதார்த்ததங்கள், முதலியவைகளை புசித்தவனுடைய நாடி வாத பித்த ரோகநாடி கதியைப் போல் நடக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 16

பிணியை அறிந்தபின் பிணியைப் போக்க பிராண சக்தி அளிக்கப் படுகின்றது. வைத்தியர் மருந்து மூலமாக இதை அளிக்க முயலுகிறார். அந்தப் பிணியைப் போக்க, தேவையான பிராணாவை எந்தப் பொருளிடமிருந்து கேடுண்ட கருவி, பாகம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்ந்தெடுத்தலே, தகுதியான மருந்தைக் கண்டுபிடித்தல், பிராணாவைச் சரிசெய்ய, மருந்துடன் சிலபுத்தியுள்ள வைத்தியங்கள் உணவு ஒழுக்கத்தையும் கையாளுகிறார்கள். ரண சிகிச்சை ஏற்பட்டிருக்கிறது. காக்கத் தெரியாமல், சரி செய்யத் தெரியாமல் போய் விட்டால், கேடுண்ட பாகத்தை அறுத்தெறிந்துவிடுகிறார்கள். ரண சிகிச்சை எல்லாம்…

வியாபார லக்ஷ்ணங்ள்

இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று. இதை புரியாதவர்கள் வியாபாரத்தில்  நியாயம், தர்மம், வியாபாரத்தில் வெளிப்படை சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் உண்மையாகவே   பாவம்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 44

ஒருவன் போகப் பொருள்களினிடையே வாழ்வானாயின், இயற்கையாகவே அவன் அவற்றால் வெல்லப்படுகிறான். மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் உருவத்தையும் கண்ணெடுத்துப் பாராதே, அதன் அருகிலும் செல்லாதே சீடர் – அன்னையே, தீய எண்ணங்கள் என் மனத்துள் புகுவதில்லை உடனே, அன்னையார் அவரைப் பேசவிடாமல் தடுத்து,  அவ்வாறு உரைக்காதே, இவ்வாறு ஒருவர் பேசுவது தவறு” என்றார்.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 9

பிரணயாமம், மனதை உள்முகமாய்த் திருப்புதல், அழியும் பொருளையும் அழியாப் பொருளையும் ஆராய்ந்தறிதல், ஜபமும், ஸமாதியும் கூடுதல் ஆகிய மகத்தான ஸாதனைகளில் உன்னுடைய முழுமனதையும் செலுத்து. தாமரையிலை மேலுள்ள தண்ணீர் மிகவும் சஞ்சலமானது. அதே மாதிரிதான் ( உடலில் ) உயிரும் அதிசயிக்கும்படி சஞ்சலமானது. உலகனைத்தும் நோயாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டடுத் துன்பத்தால் கொல்லப்படுகிறதென்பதை அறிவாயாக.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 14

 கேந்திரத்தில் குரு இருந்து, சனி பார்க்க, 8 – க்குரியவர், திரிகோணம் பெற, 3 – ல் 2 – க்குடையவர். சந்திரனும் கூடி இருக்க பிறந்த ஜாதகர்கள் தீர்க்காயுளைப் பெற்றவராவார்.  லக்கினாதிபதி கேந்திரமடைய லக்கினத்தில் குரு 2 – க்குடையவர் நிற்க கல்வி, தனம் உடையவர். லக்கினாதிபதி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் லக்கினத்தில நிற்க திரிகோணத்தில் ராகு நிற்க, சந்திரன் கேந்திரமடைய கல்விச் செல்வம் உடையவர்.  லக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணமடைய,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 13

லக்கினாதிபதியும் 9 – க்குரியவரும் கூடி 3 – ல், 6 – க்குரியவர் கேந்திரத்தில், சந்திரன் நீச்சம் அடைந்து, சனி, ராகு சேர்க்கை பெற்றால் ஒரு காசும் இல்லாத தரித்திரன், துர்க்குணம் உடையவன், கையில் ஓடு எடுத்து திரிவான். பாவர்கள் லக்கினத்தை பார்க்க, 9 – க்குரியவர், 12 – ல், 12 – க்குரியவர் 4 – ல், 3 – க்குரியவர் பலம் குறைந்து இருக்க, தாய், தந்தையின் பாவத்தை உருக்கொண்டு வந்தவன்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 12

 3, 12 – க்குடையவர்கள் கூடி திரிகோணம் பெற்று 2 – க்குரியவர், புதனுக்கு கேந்திரம் பெற்றால், புலமை தன்மை, பல நூல்களை எழுதும் ஆற்றல், கதை, கவிதை, கட்டுரை, காவியங்களில் சிறப்பு, கணிதம், ஜோதிடத்தில் வல்லவன்.  லக்கினாதிபதி கேந்திரம் அடைய அக் கேந்திராதிபதி திரிகோணமடைய, சந்திரன் ஆட்சி பெற, 12 – க்குரியவர் சந்திரன், குருவிற்கு கேந்திரத்தில் நிற்க, 5 – க்குரியோர் கேந்திரம் பெற வேத ஆகமம், வாகடவித்தை,கணிதம்,ஜோதிடம்,சித்தாந்தம் போன்றவைகளை கற்று சிறப்புடன் வாழ்வான்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 11

லக்கினாதிபதியும், 3 – க்குரியவரும் கூடி கேந்திரம் பெற்று 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் அழகு மிக்கவன் தர்ம குணம் உடையவன். வசதி வாய்ப்புக்களை பெறுவான்.  லக்கினாதிபதி பலம் பெற்று அந்த ராசியாதிபதி திரிகோணம் அடைய, 5 – க்குரியவர் பார்க்க, பாக்கியம் மிக்கவன். தனம் உள்ளவன் பூமி யோகம் உண்டு. 2, 3 – க்குரியவர் திரிகோணமடைந்து, சந்திரன் பார்க்க, தொடர்பு பெற, ஜோதிடம் சிற்பம், நன்னூல், கணிதம் இவைகள் அறிந்தவன்.  2 –…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 8

பொருள்,சுற்றம், யெளவனம் முதலியவற்றைப் பற்றி கர்வம் கொள்ளாதே, காலம் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் கொண்டு போய்விடும். மாயாமயமான இவ்வனைத்தையும் விட்டு பிரம்மபதத்தை அறிந்து கொண்டு அதனுட் புகுவாயாக. காமத்தையும், கோபத்தையும், பேராசையையும், மதிமயக்கத்தையும் ஒழித்து அஞ்ஞானத்தினின்று விடுபட்ட உனது உண்மை ஸ்வரூபத்தைப் பார். ஆத்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் வீழ்ந்த துன்பத்திற்காளாகிறார்கள். சத்துருவென்றும், மித்திரனென்றும், புத்திரனென்றும் உறவினனென்றும், வேற்றுமையைப் பாராதே. விஷ்ணுபதத்தை நீ விரும்பினால் யாரிடத்தும் பகைமையும், நட்பும் பாராட்டாமல் எல்லோரையும், எல்லாவற்றையும் சமமாகப்பார். 

சுந்தர யோக சிகிச்சை முறை 15

எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே, வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும், நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன் வளர்ந்து கொண்டே…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 25 

திரவ பதார்த்தம் புசித்தவனது நாடி ….. பசபசப்புள்ள பதார்த்தங்கள் புசித்தவனது நாடி கடினமாயும் கடின பதார்த்தங்களை புசித்தவனது நாடி கோமளமாயும் இரண்டும் கலந்தவனது நாடி இரண்டும் சார்ந்துமாய் நடக்கும். வேறு விதம் ….. புளிப்பாகிலும் அல்லது புளிப்பு மதுரம் இவை இரண்டும் கலந்த பதார்த்தங்களை புசித்தவனது நாடி மிகவும் சீதளமாயும், அவல், வறுத்த பதார்த்தங்கள் புசித்தவன் நாடி ஸ்திரமாயும், மந்தமாயும் நடக்கும். காய்கறிகள், கிழங்குகள் திண்பவனுக்கு நாடி லக்ஷணம் ….. பூசணிக்காய், முள்ளங்கி முதலிய கிழங்குகள் இவைகளை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 43

ஒரு சாது எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும். அவனது மார்க்கம் வழுக்கலுடையதாதலின் மிகவும் எச்சரிக்கையாக அவன் அடியெடுத்து வைத்து அதில் நடக்க வேண்டும். சன்னியாசி ஆவது ஒரு விளையாட்டான காரியமா? அவர் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கலாகாது, தெருவில் செல்லும்போது அவரது பார்வை அவரது கால் கட்டை விரலின் மீதே பதிந்திருக்க வேண்டும். கழுத்தில் பட்டயம் அணிந்திருக்கும் நாய் எவ்வாறு ஏனைய தெரு நாய்களைப் போல் கொல்லப்படுவதினின்றும் காக்கப்படுகின்றதோ, அது போல் சன்னியாசியின் காவி நிற ஆடை,…

சுந்தர யோக சிகிச்சை முறை 14

யோக பாஷையில் பிணி என்பதானது பிராணா, பிராண சக்தி ஒழுங்கான ஒருவித சமாதான முறையில் சரீரம், சரீர தர்மங்கள் முழுவதிலும் பரவி நிற்காமல், ஏற்ற தாழ்வுறுவதே, பிராணாவின் சமாதானமற்ற நிலையே ( STATE OF INEQUILIBRIUM ) பிணி. இந்தப் பிராணாவை சமாதான நிலைக்குச் சரி செய்வதே சிகிச்சை எந்த பாகத்தில் எந்த கருவியில் பிராண குறைந்திருக்கிறதோ அதற்கு அதிகமாக இருக்குமிடத்திலிருந்தோ அகண்டக் களஞ்சியத்திலிருந்தோ பிராணாவை அளித்து அக்குறையை நீக்குதல் சிகிச்சை, அதே போல அதிகப் பிராண…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 7

மதிகெட்டவனே! பொருள் சேர்ப்பதில் ஆசையை விட்டொழி, வீணாண ஆசைகளினின்று விலகிய நல்ல எண்ணங்களை மனதில் சிந்தனை செய். உன்னுடைய நிலைக்கேற்ற கருமங்க‍ளைச் செய்வதால் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு மனதைச் சந்தோஷப்படுத்திக்கொள். பொருள் எப்பொழுதுமே துன்பம் விளைவிப்பதென்பதை மனதில் வைத்துக்கொள். அதனால் சிறிதளவு சுகம் கூட இல்லை என்பது உண்மை. பெற்ற பிள்ளையிடமிருந்துங்கூட, பொருள் படைத்தவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 42

நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்துக் குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக, உன் குற்றங்களையே எண்ணிப்பார். இவ்வுலகம் முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொள்ளப் பழகு. குழந்தாய், இவ்வுலகில் யாரும் உனக்கு அன்னியரல்ல. இவ்வுலகம் முழுதும் உனதே. ஒருவன் பிறரிடத்துக்குக் குற்றம் காணப் புகுவானேயாகில், அவன் மனமே முதலில் மாசடைகின்றது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 24

வாத பித்த சிலேஷ்மங்களில் எந்த தோஷத்தை நாடியானது நாடியிருக்குமோ அதன் செய்கையை தான் மற்றவைகளுக்கும்  உண்டாகும். நாடியானது வாத பித்த சிலேஷ்மத்தில் ஏதாவது ஒன்றில் சார்ந்திருக்கும் வாத பிரகோபத்தில் தீவிரம் ஆகும்போது தீவிரமாயும் சாந்தமாகும் போது சாந்தமாயும் நாடி நடக்கும். எண்ணெய், வெல்லம், உளுந்து, பால், தேன் இவைகளை தின்றவனுடைய நாடி ….. எண்ணை குடித்தவனுடைய நாடி வலிவாயும், வெல்லம், உளுந்து இவைகளை தின்றவனுடைய நாடி பெரிய தடியைப் போல் நீளமாயும், பால் குடித்தவனுடைய நாடி ஸ்திமிதமாயும்…