ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 10

உன்னுடைய குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி உலகத்திற் கடிமையாயிருப்பதினின்று உன்னை விடுவித்துக்கொள். இந்திரியங்களையும், மனதையும் அடக்கி பகவானை உன் இதயத்தில் பார். நான் மனதும், புத்தியும், சித்தமும், அஹங்காரமும் அன்று, காதும், கண்ணும் , நாக்கும், மூக்குமன்று, ஆகாயமும், பூமியும், தீயும், காற்றுமன்று, அறிவும், ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.