ஸ்ரீ சங்கரரின் ஞானம் 9

இருளில் ஏற்பட்ட திக்பிரமையானது ஒளியில் நீங்குவது போல் அஞ்ஞான நிலையில் ஏற்பட்ட அகங்காரம், மமகாரம் முதலியவையெல்லாம் தத்துவஸ்வரூப அனுபவத்தில் ஏற்படும் ஞானத்தால் உடனே அழிந்துபோம். தெளிந்த ஞானத்தையடைந்த யோகியானவன், ஞானக் கண்ணால் தன்னிடத்திலேயே உலகனைத்தும் இருப்பதாயும் ஆத்மாவே அனைத்துமாயிருப்பதாயும் காண்கிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 35

நாலு முதல் ஏழு வருஷ சலனம் ….. நாலு வருஷம் முதல் ஏழு வருஷம் வரையிலும் ( 90 ) தகுதி மணி நேரத்தில் நாடி அடிக்கும். ஏழு வருடம் முதல் எண்பது வருடம் வரையிலும் நாடி சலனம் ….. ஏழு வருடம் முதல் பதினான்கு வருடம் வரையிலும் ( 85 ) தகுதியும், பதினாறு வருடம் முதல் முப்பது வருடம் வரையிலும் எண்பது தகுதியும், முப்பது முதல் ஐம்பது வருடம் வரையிலும் ( 75 )…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 21

1,2, 11 – க்குரியவர்கள் அவர்களுக்கு திரிகோண கேந்திரத்தில் நிற்க தன் சுய முயற்சியால் பல தொழில் நுட்பங்களை அறிந்து செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான். 9 – க்குடையவர் 10 – ல், 2 – க்குரியவர் லக்கினத்தில், லக்கினாதிபதி கேந்திரத்தில், 4 – க்குடையவர் 12 – ல் கெடாத வாழ்வும், துயரமில்லாத நிலையும், மங்காத செல்வமும் உடையவர்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 20

 2 – க்குரியவர் 6, 8, 12 – ல் மறைந்து, வக்கிரம், அஸ்தமனம் யுத்தத்தில் இருந்து, 2 – ஆமிடத்தில் சந்திரனுடன் ராகு, சனி சேர்ந்து இருந்தால் பேய், பிசாசுகளின் தொல்லையால் உடல், ஆரோக்கிய குறைவும், நிம்மதி அற்ற வாழ்க்கையும் ஏற்படும். இந்த கிரக அமைப்பை, அல்லது இக்கிரகங்கள் அமர்ந்திருக்கும் ராசிநாதனை குரு பார்த்திருந்தால் தெய்வ பலத்தினால் உடன் நிவாரணமும், தெய்வபலமும் ஏற்படும்.  2, 8, 9 – க்குரியவர் கூடி கேந்திரம் பெற்று லக்கினாதிபதியால்,…

கோள்களின் கோலாட்டம் 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 19

 மேசம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் லக்கினத்திற்கு 2 – மிடமாகவும், நவாம்சத்திற்கும் மேற்படியே 2 – ஆமிடமாக அமைந்து, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், இவர்களில் யாராவது ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் துரிதமாக தெளிவாக வார்த்தைகளை பேசுவார். வார்த்தை சித்தன்.வாக்குஸ்தானாதிபதி யோக காரகனாய், கேந்திரங்களில் உச்சம் பெற்றிருக்க, வாக்குஸ்தானத்தில் கேது இருக்க, புத்திரஸ்தானாதிபதி, நோக்கினாலும், இருவரும் பலமாக இருந்தாலும் இந்நிலை கிரக அமைப்பில் பிறந்தவர்கள் சமயோசிதமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 18

சனி வாக்குஸ்தானாதிபதியாகி வக்கிரமடைந்து எங்கே இருந்தாலும், வக்கிரமடைந்த கிரகம் வாக்குஸ்தானமான 2 – மிடத்திலிருந்தாலும், அல்லது வாக்குஸ்தானாதிபதியை நோக்கினாலும் இந்த அமைப்பில் பிறந்த ஜாதர்கள் மந்த கதியில் வெகு தாமதமாகவே வார்த்தையை உச்சரிப்பான். குடும்பத்தில் குழப்பம், நாணய குறைவு, பணத்தட்டுப்பாடு ஏற்படும். 29 வயதிற்குள் திருமணம் நடந்தால் ஏகப்பட்ட குழப்பம், பிரிவினை போன்றவை ஏற்படும். சுபக்கிரக பார்வை இருந்தால் பாதிப்பு ஏற்பட்டு விலகும்.

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

 2 – ல் சனி இருந்து இவருடன் 8, 12 – க்குடையவர் இருந்து செவ்வாய், ராகு, கேதுவின் தொடர்பை பெற்றால் பணம் தங்காத நிலை, பணத்திற்காக, பல தவறுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை, குடும்பத்திற்கு அடங்காமை, காவல்துறை, அரசு வகையால் தண்டனைகள் அடைதல், தூக்குத் தண்டனையும் கிடைக்க வழி உண்டு.  2 – ல், 6 – க்குரியவர் பலம் பெற்று இருந்து 6 – மிடத்தை சனி, ராகு, கேது, சூரியன் பார்த்திருந்தால் சகவாச…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 அல்லது 10, 11 – ஆம் வீடு சுபர் வீடாகி இதற்கு சுபர் பார்வை சேர்க்கை இருப்பினும் 5, 9, 11 – ஆமிடங்களை குரு பார்த்திருப்பினும், 2, 9 – க்குரியவருடன் குரு சேர்ந்து இருப்பினும் இவர்கள் திசாபுத்தி காலத்தில் அக்கிரகங்களின் கிழமைகளில் பணம் வரும்.  2, 5 – க்குரியவர் சேர்க்கை, 6, 8, 12 – லிருப்பின் நோய்த் தொல்லையால் கல்வி தடைபடும். கீழ்த்தரமான வார்ததைகளை உபயோகிப்பர். அகால போஜனம். நீச்ச…

சுந்தர யோக சிகிச்சை முறை 29

ஆரோக்கிய வாழ்வுக்கும் நோய் தடுத்தலுக்கும் அவசியமான திட்டங்களை சுந்தரக் குறள்கள் மூலமாக கொடுத்துள்ளேன். 1. உணவால் உடலுறுதி நீளுமாயுள், நாக்கால் உணவழியின் நொந்தபின் சாவு. 2. நாக்கிற் கடிமை நசிவானே நொந்து, நல் வாழ்க்கைக் கியற்கையே தூக்கு. 3. மென்றே உணவை விழுங்குக, இல்லையேல் தின்றாலும் ஏதே பயன்? 4. திணித்துத் திணித்து நீ தின்பது தீது துணிப்பையா? அல்ல வயிறு. 5. தவிடே உயிரிவ் வரிசியிலே, குத்தின் தவிடு தனம் சுகம் தாழ்வு.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 4

குழந்தாய், கவலையுறாதே, இவ்வுலகப் பந்தங்களெல்லாம் நிலையில்லாதனவே. இன்று அவையே சாரமும் பயனும் எனத் தோன்றும். ஆனால், நாளை அவை மறைந்துவிடும். இறைவனுடன் உள்ள தொடர்பே உண்மையானது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 8

ஸம்ஸாரம் கனவு போன்றது, விருப்பு வெறுப்புக்கள் நிறைந்தது, அதனடைய காலத்தில் அது உண்மை போல் பிரகாசிக்கிறது. ஆனால் ஞான விழிப்பு ஏற்பட்டதும் மறைந்து போகிறது. அரணிக் கட்டையைக் கடைவது போன்ற ஆத்ம தியானம் எப்பொழுதும் செய்யப்பட்டால் அதினின்று எழும் தீயானது அஞ்ஞனமாகிற விறகை முழுவதும் எரித்துவிடும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34  

உத்பவதின நாடி சலனம் ….. மனிதன் பிறந்த உடன் அவனது நாடி ஒரு மணி நேரத்தில் நூற்றிநாற்பது தகுதி சலிக்கும் அல்லது அடிக்கும். பிரதம வருஷ சலனம் ….. பிறந்த நாள் முதல் ஒரு வருஷம் வரையிலும் ஒருமணி நேரத்தில் நாடியானது நூற்றி முப்பது தகுதி அடிக்கும். துவிதிய வருஷ சலனம் ….. பிறந்த காலம் முதல் இரண்டு வருஷம் வரையிலும் 110 – தகுதி அடிக்கும். திருதீய வருஷ சலனம் ….. இரண்டு வருஷம் முதல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 28

இத் தேவை வயது வந்த மனிதனுக்கு, வயது, வளர்ச்சித் தேவை தொழிலுக்குத் தக்கபடி புஷ்டிப் பொருள்கள், தானியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பசிக்கும், பழக்கத்துக்கும், தகுந்தவாறு தான்யாதிகளைக் குறைக்கவும் செய்யலாம். தினம் அளக்கவோ, எடை போடவோ தேவையல்லை, மனதில் நிதானத்தை அறிந்து கொண்டு, ஒரு குடும்பத்தின் ஜன எண்ணிகைக்குகந்தாறு மாற்றிக் கொள்ளவும். நோய் தடுத்தல், உணவுப் பொருள்களை வயிற்றுள் கொட்டுவதால் மட்டும் சித்திக்காது. அவைகளை உண்ணும் விதம், கால திட்டத்தாலும் ஏற்பட வேண்டும். உடலை எரிக்கும். பசி,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 3

எந்த மனிதனும் எப்போதும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கமுடியாது. எவனும், ஆயுள் முழுவதும் துயரத்திற்கு ஆளாக மாட்டான். ஒவ்வொரு செயலும் முறையே அதனதன் பயனைத் தருகின்றது. அதற்கேற்பச் சந்தர்ப்பங்களையும் ஒருவருக்கு கொணர்கிறது. என் குழந்தை சேற்றையும், புழுதியையும் பூசிக்கொண்டிருந்தால், அதைக் கழுவி என் மடிமீது அமர்த்திக்கொள்வது என் கடமையல்லவா?

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 7

மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம் என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல் இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது. தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக் கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால் அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 34

கம்ப ரோக குன்மரோக நாடி லக்ஷணம்  குன்ம ரோகம், கம்பரோகம் இவைகளில் நாடியானது புறாவைப் போல் நடக்கும். விரண பகந்தரரோக நாடி லக்ஷணம் விரணம், பசுந்தரம், இந்த ரோகங்களில் நாடியானது பித்தநாடியைப் போல் நடக்கும். வமன ரோக அபிகாதரோக நாடி லக்ஷணம் வாந்தி செய்தவன், காயத்தை அடைந்தவன் வேகமாய் சஞ்சரிக்கிறவன் இவர்களின் நாடி மத்தித்தயானை, அன்னம், இவைகளின் நடையை ஒத்திருக்கும். சிலேஷ்மத்தில் அதிகமாய் பிரகோபித்திருக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 27

அரிசி,கோதுமை,ராகி தானியங்கள் — சுமார் 10 அவுன்ஸ் வேறு தானியங்கள் — சுமார் 5 அவுன்ஸ் பால் — சுமார் 8 அவுன்ஸ் பருப்புகள் — சுமார் 3 அவுன்ஸ் காய்கள் — சுமார் 6 அவுன்ஸ் கீரைகள் — சுமார் 4 அவுன்ஸ் எண்ணெய்கள் — சுமார் 2 அவுன்ஸ் பழங்கள் — சுமார் 2 அவுன்ஸ் இந்த உணவுச் சேர்மானம் சுமார் 2600 உஷ்ணப் பிரமாணம் கொடுக்கும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 2

அவதார புருஷர்களும், முனிவர்களும், யோகிகளுங்கூட, துன்பம் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில், சாதாரண மனிதர்கட்கு, தகாததைச் செய்தாலும், தக்கதைச் செய்யாமையாலும் ஏற்படும் பாவங்களை அம்மகான்கள் தாங்களே ஏற்றுக்கொண்டு, உலக நன்மைக்காகத் தம்மையே பலியாக்குகின்றனர்.

ஸ்ரீசங்கரரின் ஞானம். 6

அந்தக்கரணம் உள்ளவரை வெளி விஷயங்கள் புலனாகின்றன. அந்தக்கரணமில்லையேல் வெளி விஷயங்கள் இல்லை. அறிபவன் அறிபவனாக எப்பொழுதும் ( விஷயங்கள் இல்லாத பொழுதும் ) இருக்கவே இருக்கிறான். துவைதத்திற்கு இருப்பில்லை. நான் பரிசுத்தமான ஆத்மா என்று ஒருவன் உணரும் பொழுது தான் உடல் என்ற நினைவு அழிந்து போகிறது. ஒருவன் விரும்பாவிடினும் அந்த ஞானம் அவன் மனிதன் என்ற எண்ணத்திலிருந்து அவனை விடுவித்து விடுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 33

பிரமேஹ ஆமதோஷ நாடி லக்ஷணம் பிரமேகத்தில் நாடி மிசிரமாயும், கிரந்திரூபமாயும், ஆமதோஷத்தில் விழித்தவன் போலும் நாடி நடக்கும். விஷ தோஷ குன்மரோகவாயு சமாப்தி கால நாடி லக்ஷணம் விஷ தோஷத்தில் நாடியானது ஊர்த்துவ கதியாயும், குன்மரோகத்தில் அதோ முகமாயும், வாயு சமாப்திகாலத்தில் ஊர்த்துவபாகத்தில் எழுந்து குதித்தாப் போலும் நாடி நடக்கும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள்.1

அஞ்சற்க, மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. இறைவன் பெயரை ஒதிக்கொண்டே அவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இறைவனே மனித உருக்கொண்டு வந்தாலும் அவனால் மனம், உடல் இவற்றின் காரணமாக உண்டாகும் இன்னல்களினின்றும் தப்பிக்க இயலாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 26

சர்க்கரை சத்து — அரிசி, கோதுமை தானியங்களில் தேவைக்கு மீறி இருக்கின்றது. கொழுப்பு — எள்ளு கடலை, தேங்காய், எண்ணெய்கள், வெண்ணெய், நெய், பால். விட்டமின் வகையாறா — தானியங்கள், இதன் தவிடுகள், சிறிதளவாய் பருப்புகளில் காய், கீரைகள், பால், முளை கொண்ட கடலைகள். அயம், கால்சியம், உலோகம் — கீரைகள், ரசமுள்ள பழங்கள், பால், சில பருப்புகள், தினம், நாம் தானியங்கள், பருப்புகள், எண்ணெய், நெய், பால், காய் கீரைகள், பழங்கள் சேர்ப்பதால் மேற்கூறிய சத்துக்கள்…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 5

நான் மாறுபடாதவன், எனக்கு உருவம் இல்லை, குற்றமும் குறைவும் என்னிடமில்லை, நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது. எனக்கு குணமும் இல்லை செயலுமில்லை, நான் என்றுமுள்ளவன், சுதந்திரமானவன், அழியாதவன், நான் அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 32

மலமூத்திர பந்தன விஷ சிகாரோக நாடி லக்ஷணம் ….. மல மூத்திரத்தை அடக்குகிறவனது நாடி அதிவேகமாய் நடக்கும் விஷ சிகாரோகத்தில் தவக்களை நடையைப் போல் நடக்கும். காமிலா மூத்திரகிருச்சிரரோக நாடி லக்ஷணம் ….. காமிலா ரோகம், மூத்திரகிருச்சிரம் இவைகளில் நாடி கரிஷ்டமாய் நடக்கும். வாத ரோக சூலரோக நாடி லக்ஷணம் ….. வாத ரோகம், சூலரோகம், இவைகளில் நாடி வக்கிரமாய் நடக்கும். பித்த ரோக ஆமசூல நாடி லக்ஷணம் ….. பைத்திய ரோகத்தில் நாடி அதிக சுவாலையாயும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 25

இவ்வைந்து தன்மைகள் தேவையானால் உணவில் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் சேர வேண்டும். 1. புஷ்டிச் சத்து 2. சர்க்கரைச் சத்து 3. கொழுப்புச் சத்து 4. விட்டமின் சத்து 5. அயன், கால்ஷியம், உலோக சத்துக்கள். இந்த சத்துக்களை கீழ்கண்ட உணவுப் பொருள்களால் பெறலாம். புஷ்டி — அரிசி, கோதுமை, ராகி போன்ற பிரதான தானியங்கள் துவரை, உளுந்து, முதலிய பருப்புகள், நிலக்கடலை, பாதாமி, பால் , முட்டை ( மிருக உணவுகளை இங்கு கூறவில்லை. ஆனால்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 52 

செல்வம் எப்போதும் மனத்தைக் கறைப்படுத்துகிறது. நீங்கள் செல்வத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவரென்றும், செல்வத்தின் மீது உங்களுக்கு எவ்விதப் பற்றும் ஏற்படாதென்றும் நினைக்கலாம். அதை நீங்கள் விரும்பியபோது விட்டு விடலாம். இவ்வாறு எண்ணற்க, ஒரு சிறிய துளை வழியாக அப்பற்று உங்கள் மனத்தினுட் புகுந்து உங்களையறியாமலே கொஞ்சம், கொஞ்சமாகக், கொன்று விடும். ஸ்ரீராமகிருஷ்ணர் பொருளைத் தொடவும் பொறார். எப்பொழுதும் அவருடைய உபதேச மொழிகளை நினைவிருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் நீங்கள் காணும் இன்னல்களுக்கு மூல காரணமாவது இப்பொருள்தான். அது உங்கள் மனத்தை வேறிச்சைகளிடத்தும்…

ஸ்ரீசங்கரரின் ஞானம் 4

நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன், புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது. நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன், துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 31

கிரஹனி அக்கினிமாந்த தோஷ நாடி லக்ஷணம் ….. மந்தாக்கினி உடையவனது நாடி க்ஷீணித்து அன்னத்தைப் போல் நடக்கும். அக்கினி மாந்தியம், கிரஹனி ரோகம் இவைகளில் நாடியானது பாதத்தில் அன்னத்தைப் போலும், அஸ்தத்தில் மண்டூகத்தைப் போலவும் நடக்கும். விளம்பிகா ஆமாதிசார மலபேத கிரஹணி தோஷ நாடி லக்ஷணம் ….. நாடியானது மலபேதத்தில் சாந்தமாயும் கிரஹணிரோகம், அதிசாரம் இவைகளில் தேஜோவிஹீனமாயும், விளம்பிகை என்கிற ரோகத்தில் படகைப்போலவும், அமாதிசாரத்தில் தொங்குகிறதுப்போலும் நாடி நடக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 24

பிணியை தடுக்க விரும்பினாலும் சுகமாக வாழ விரும்பினால் உட்கொள்ளும் உணவானது 1. தேவையான உழைப்பு, ஜீவித நடைக்குத் தேவையான உஷ்ணப் பிரமாணத்தைக் கொடுக்க வேண்டும். 2. செத்த அணுக்களை புதுப்பிக்கும் சக்தி கொண்டாதாக வேண்டும். 3. வளரும் வயதானால், வளர்ச்சி பெற பொருள் கொண்டதாக வேண்டும். 4. உட்கருவிகள், கோளங்கள் தம், தம் தொழிலுக்குத் தேவையான பொருள்களைப் பெற உதவுவதாக இருக்க வேண்டும். 5. ஜீவிதத்தில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி வாழ, சத்துக் கொண்டதாக இருக்க வேண்டும்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 51

பணியைப் பெறும் அம்மனிதரைப் பொம்மை போல அடக்கியாள அவன் விரும்புகிறான். பின் உணவருந்தல், உட்காருதல், எழுதுதல் முதலான ஒவ்வொன்றிலும் அவரை ஏவ விரும்புகிறான். பணி செய்யும் விருப்பத்தை அவன் இழக்கிறான். அநேக மகான்கள் தம்மைச் சுற்றிலும் செல்வத்தையும், சிறப்பையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல மனிதர் அவருக்கு வேலையாளாக வரப் பிரியப்படுகின்றனர். அவர்கள் தங்கள் பதவியின் சுகங்களில் மதி மயங்கித் தங்கள் அழிவுக்குத் தாங்களே வழிதேடிக் கொள்கிறார். தக்க மனநிலையுடன் பணி செய்ய விரும்புபவர் எத்தனை பேர்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 3

சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது, வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும். ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான், அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.