திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  4

16 முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர். 17 தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும். 18 பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது. 19 கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும்…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  3

1 1வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர். 12 துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர். 13 ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும். 14 சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை,…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  2

6 திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைப் பெறுவர். 7 காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர். 8 சாவித்ரி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும். 9 சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  1

1 முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர். 2 தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர். 3 வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும். 4 லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய…

எல்லா “பிரச்சனைகளுக்கும் 

புன்னகை பிரச்சனைகள் “வருவதை தள்ளி போடும்..!! மெளனம் “பிரச்சனைகளே வராமல் தடுக்கும்..! எல்லா “பிரச்சனைகளுக்கும்  இந்த வாய் காரணம்..!!!

வாழ்க்கையில் கஷ்டங்களும்

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிகும் அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 34

மனித குலத்திற்க்கு தவம் செய்யாமலேயே கிடைத்த மிகப்பெரிய வரம் கற்பனா சக்தி ஆகும் அந்த சக்தியின் அளவை எதனைக் கொண்டும் அளக்க முடியாது அப்படி அளவற்ற ஆற்றலை முறைப்படுத்தி செயல்படுத்தினால் நம் வாழ்வு என்றும் ஆனந்தம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 108

 எல்லா பாகமும் விஷஸ்னானம் பெறவே வீரன், இருளன், காட்டேரியைக் போன்ற பலவித வியாதிகள்  ஒழியாக்குடி  புகுந்து கொட்ட மடிக்கின்றன. சீகத்தில் உண்டாகும் விஷய்ஙகள் சிறுகுடலுக்குள்ளும் உறிச்சென்று, அதன் சதைச்சுவர்கள் மூலம் கிரகிக்கப்பட்டு, குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்து விடுகின்றன. இந்தச் சீகம் இவ்வளவு மோசமானது! இப்பெருங்குடலின் மற்ற பாகங்கள் சாதுவல்ல. ஆனால் இதைப் போல் அபாயத்தைக் கொடுக்காது. அங்க மலம் தங்கக் கூடுமாகையால், கெடுதி உண்டு. வெட்டி விட்டால் – இந்த சீகத்தையே தொலைத்து…

வியாழன் 5

குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள்.  உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர்.  அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.

வியாழன் 4

வியாழன் ரிஷபத்தில் இருந்தால் நல்லசுகம் வாழ்வில் அமையும்.  இனிமையாக பேசுவார். பொதுமக்களிடையே செல்வாக்கு இருக்கும்.  தியாக குணம் இருக்கும். குரு 9ம் வீட்டோனுடன் இணைந்தோ 9ம் வீட்டோனை பார்க்கும் போது தியானம், யோகத்தில் ஈடுபாடும், தந்தை பெரும் பணக்காரராகவும் அறப்பணியில் நாட்டமும், ஞானவானாக இருப்பார். குருவானவர் நீசம்பெற்று லக்னத்தில் ராகு இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் கவலைப்படுபவராக இருப்பார். குரு 5ல், 5ம் அதிபதி பலம்பெற்ற சுபர்பார்வை பெற்றால் மகன் உண்டு.

வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.

வியாழன் 2

நீச வியாழனுடன் சூரியன் நின்றிடில் மித்திரர்களை பழிகாரர்களாக ஆக்கிவிடும். வியாழன் நின்ற இராசிக்கு அடுத்த ராசியில் சுக்கிரன் தனியே இருந்தால் மணவாழ்வு மகிழ்வுறும். குரு 12ல் இருந்தால் அவருக்கு அவரது குலதருமத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். வியாழனும், லக்னாதிபதியும் 5ம் அதிபதியும் கேந்திர, திரிகோணத்தில் இருப்பின் புத்ரபாக்யம் ஏற்படும்.

வியாழன் 1

கிரகங்கள் நம் விதியைப் பிரதிபலிப்பவர்கள். வியாழன் லக்னத்தில் நின்றிடில் எவருக்கும் நலம் செய்யும் நாட்டம் உண்டு.  சாஸ்திர சம்பிரதாயம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர். வியாழன், சனி, செவ்வாய் சேர்ந்திடில் குழந்தைகளால் பிரச்சனை ஏற்படும். வியாழன் லக்னத்தில் அமர்ந்தாலோ, அல்லது லக்னாதிபதியோடு குரு சேர்ந்தாலோ குரு நட்பு பாவத்திலமர்ந்து பார்த்தாலோ ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்க்கை அமையும். குரு 2வது பாவத்தில் இருந்தாலும், முதல் திருமணம் ஆகி, சில கால கட்டத்தில் 2வது மனைவியும் அமையும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 10

நண்பர்களே! உங்கள் உற்சாகம் கண்டு மகிழ்கிறேன். மிகவும் மகிழ்ச்சி. எனக்கு உங்கள் மீது வருத்தம் என்று எண்ணி விடாதீர்கள். மாறாக , உங்கள் ஆர்வம் எனக்கு எல்லையற்ற திருப்பதியையே அளிக்கிறது. அளவு கடந்த உற்சாகமே நமக்குத் தேவை.ஆனால் இது நிலையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். தீ அணையாமல் இருக்கட்டும். இந்தியாவில் நாம் மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உங்கள் உதவி தேவை. இத்தகைய உற்சாகம் வேண்டும். இனியும் இந்தச் சொற்பொழிவைத் தொடர…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 9

துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ? ஆனால் ஐரோப்பிய நாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம், எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம் ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும், அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும், புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 8

நமது தீர்வு துறவு, விட்டுவிடுதல், அச்சமின்மை, அன்பு. இவையே வாழத் தக்கவை. புலனின்பங்களை விடுவது ஒரு நாட்டை வாழச் செய்யும். இதற்கு வரலாறே சான்று ஏறக்குறைய ஒவ்வொரு நூற்றாண்டிலும் காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 7

பிரச்சினை இதுதான் -யார் வாழ வேண்டும்? ஒரு நாட்டை வாழவைப்பதும் பிற நாடுகளை அழிய வைப்பதும் எது? வாழ்க்கைப் போரில் வெற்றி பெற வேண்டுவது எது அன்பா, பகையா? போகமா, துறவா ? ஜடமா உணர்வா? வரலாறு காணாத அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் என்ன எண்ணினார்களோ அவ்வாறே நாமும் சிந்திக்கிறோம். எந்தப் பரம்பரையும் தலைநீட்ட முடியாத அந்தத் தொலைநாளில், மேன்மை மிக்கவர்களாகிய நமது முன்னோர்கள் இந்தப் பிரச்சினையில் தங்கள் பக்கத்தை எடுத்துக்கொண்டு, உலகிற்கு சவால் விட்டுள்ளனர்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 6

அப்படியானால் மக்கள் எதுவும் தெரியாதவர்களா, இல்லை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களா? இரண்டும் இல்லை. அவர்களின் பண்புடன் எது ஒத்துப் போகுமோ, எது அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுள் ஒன்றாக இருக்குமோ அதைப்பற்றி அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசியலும் பிறவும் வாழ்க்கைத் தேவைகளாக இந்தியாவில் ஒரு போதும் இருந்ததில்லை. இந்திய வாழ்க்கை வாழ்ந்ததும் வளம் பெற்றதும் மதம், ஆன்மீகம் என்ற அடிப்படைமீது மட்டுமே; இனியும் அவ்வாறே அது வாழும், வளம் பெறும் உலக நாடுகளின் முன் இரண்டு பிராச்சினைகள்…

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்  10

எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப்படுத்த ஒரேவழி. ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து அதை அனுதினமும் நினைத்து அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம், எண்ணத்தை சீர் செய்து ஆழ்மன சக்தியை உணர்ந்து, ஏற்றமுடன் வாழ்வோம்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 9

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் காரணம் நம் ஆழ்மனம் நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம் நாம் விரும்பியதை அடைய ஒரே வழி நம் எண்ணங்களை சீர் செய்வது தான் அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான் ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது நல்லது எது….??? கெட்டது எது…??? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 8

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது…??? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது…??? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது….??? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும் நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 7

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது .”இது வரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும்,இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும், இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 6

இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது இருக்க நினைப்பவர்களுக்கு வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை மனித மனம்தான் அறிவு மனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 5

நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 4

நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது இதை உணர முடிவதில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இதுவும் உண்மை.” சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது…??? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்தது பிரபஞ்சம்தான் நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை,

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 3

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும் சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது ஆனால்“பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை நம்பித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அது உண்மை,  

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம் 2

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்த பின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம் தான் மாற்றம் அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும் நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும் மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை மாறாத, மாற விரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்1

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும் ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் வசிக்கப் பிறந்தோமா ??? அல்லது வாழப்பிறந்தோமா. ??? என்று