ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 2

சடைதரித்தவானாலும், மொட்டையடித்தவானாலும், குடுமியைக் கத்தரித்தவானாலும், காவித்துணியணிந்து பலவாறான வேஷம் பூண்டவானாலும், மதிமங்கியவன் பார்த்தாலும் பார்க்காதவனேயாகிறான். பலவகைப்பட்ட வேஷமெல்லாம் வயிற்றுப் பிழைப்பாகவே முடிகின்றது. எவனால் பகவத்கீதை சிறிதளவாவது படிக்கப்பட்டதோ, கங்கை நீர் ஒரு துளியாவது பருகப்பட்டதோ, முராரியான பகவானுடைய பூஜை ஒரு தடவையாவது செய்யப்பட்டதோ அவனுக்கு யமபயமில்லை

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 1

பகலும், இரவும், மாலையும், காலையும், பனிக்காலமும், இளவேனிற்காலமும் திரும்பித் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது, வயது கழிகிறது, என்றாலும் காற்றுப்போல் வியாபித்திருக்கும் ஆசைமட்டும் மனிதனை விடுவதில்லை. மதிமங்கியவனே! மரண சமயம் நெருங்கிய பொழுது இலக்கணச் சூத்திரம் உன்னை ஒரு பொழுதும் காப்பாற்றாது. ஆகையால் கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி, கோவிந்தனைச் சேவி. எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாயிருக்கிறானோ அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் ஆசை வைத்திருக்கும். நோயினால் உடல் தளர்ந்து போன பின்பு…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 20

சப்ததிவசாந்தரமிருத்யு நாடி ….. தேகமானது சாபவர்ஜிதமா இருக்கும்போது நாடிதனது கதியை தவிர்த்து க்ஷணகாலத்தில் தீவிரமாயும், க்ஷணகாலத்தில் சாந்தமாயும் நடையுள்ளதாயும் இருக்குமாகில் அவர் ஒரு வாரத்திற்குள்ளாக மரிப்பான். மூன்றா நாள் மிருத்தியு நாடி ….. அதிகோரமான சுரம் அடிக்கும்போது நாடியானது பனிக்கட்டிப்போலும், சீதளமாயும் இருக்கிறதல்லாமலும் திரிதோஷ ஸ்பரிச சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த நாடியையுடைய மனிதன் மூன்று நாளுக்குள்ளாக மரணமடைவான். நாலா நாளில் மரணமடையும் நாடி லக்ஷணம் …. வலது பாதத்தில் ஒரு நாடி அதி தீரவிரமாய் நடக்கிறதுடன் முகத்திலும்…

ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 10

பிந்து (விந்து) வீரியம் இருக்கின்றது இதை வெளிப்படுத்தும் பொழுது சுகம் ஏற்படுகின்றது. உடல், புலன், மனம், பிணைந்து சுகம் ஏற்படுகின்றது. இதனின் இயற்கை முறையான உபயோகம், இகத்திலிருப்பவர்க்கு, இல்லற வாழ்வுக்கு அவசியமென்றே கூறுவோம். இயற்கை அனுபதிக்கப்பட்ட சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று இயற்கை வளர்ச்சிக்கு இயற்கை தூண்டும். மறுக்க மிக்க கடினமான சுகங்களில் சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. தர்ம விரோதமின்றி ஆண், பெண் சேர்க்கையால் உடல் நிலை, காலதேச வர்த்தமானத்திற்குகந்தவாறும், மக்கட்பேறுக்கென்றும் முடிவில் இதை புறக்கணிக்க,…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 37

கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே. அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே, அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி, நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும், இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும் ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும். குழந்தாய்,  இவ்வுடல் எனப்படுவது யாது? (எரித்த பின்) மூன்று கிலோ சாம்பலேயன்றி வேறல்ல. பின் அதைப்பற்றி ஏன் அவ்வளவு ஆடம்பரம்? உடல் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அதன் முடிவு மூன்று கிலோ சாம்பலே தான், இப்படியிருந்தும் மக்கள்…

அறநூல்களில் சொல்லப்பட்ட விதி களின்படி நடந்துகொண்டால்போதாதா? இறைவழிபாடுவேறுசெய்யவேண்டுமா?

அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில், “காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை, மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 24

தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற  நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே,…

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்து

1 சோமாஸ்கந்தர்  2 நடராஜர் – 3 ரிஷபாரூடர் – 4 கல்யாணசுந்தரர் – 5 சந்திரசேகரர் – 6 பிட்சாடனர் – 7காமசம்ஹாரர் – 8 கால சம்ஹாரர் – 9 சலந்தராகரர் – 10 திரிபுராந்தகர் – 11 கஜசம்ஹாரர் – 12 வீரபத்திரர் – 13தட்சிணாமூர்த்தி – 14கிராதகர் – 15 கங்காளர் – 16சக்ரதானர் – 17 கஜமுக அனுக்கிரக மூர்த்தி – 18சண்டேச அனுக்கிரகர் – 19 ஏகபாதமூர்த்தி –…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 19

அசாத்திய ரோக நாடி ….. சந்நிபாத அசாத்திய நாடியானது மந்தமாயும், சிதிலமாயும் வியாகுலமாயும், நின்றும் தீவிரகதியாயும் இல்லாததுப்போலும் தனது இடத்தை விட்டு கீழாகவும், மேலாகவும் விரல்களிலும் நடையுடையதும் வேரானகதியுடையதாயும் நாடி நடக்கும். இதுவுமது ….. அதிகவேகமான பாய்ச்சலும், மிகவும் மந்தமாயும் தாமதமாயும் நரம்பைவிட்டு மாமிசதாதுவில் சஞ்சரித்துக்கொண்டும் அதிசூஷ்மமாயும் வக்கிரமாயும் விவிதமாயும் நடக்கும் நாடி சந்நிபாத அசாத்திய நாடியென்றும் அறியவும். மரண குறி நாடி ….. அதிக உஷ்ணமாயிருக்குங்காலத்தில் சீதளநாடியும், அதிக சீதளமாய் இருக்கும்போது உஷ்ண.நாடியும், விவிதபேதங்களான நடையையும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 9

கண்களால் கண் பார்வையால் சுகம் அனுபவிக்கிறோம். பார்க்க முறையானதைப் பார்க்குமளவு பார்த்து, பாதுகாப்பு முறையில் உபயோகிப்பதால், நீண்ட காலம், உண்மையான இதன் சுகத்தை அனுபவிக்கிறோம்! நம் கண்களை மூடி, இம்முறையாய் அனுபவிக்கும் சுகத்தைத் தடுக்க, யாருக்கு அதிகாரமிருக்கிறது. யாருக்கு சக்தி இருக்கிறது? நம்மைத் தவிர, இச்சுகத்தை இழக்கக் காரணம் வெளியிலிருந்து ஏற்படுவதில்லை. பார்க்கக் கூடாத சிற்றின்ப முறையில் பார்த்து நிற்கின்றோம். இயற்கை விரோதமாக, அதிகமான ஒளியையோ, குறைந்த ஒளியையோ பார்க்க உபயோகிக்கிறோம். அசைந்து, அசைந்து அதிக ஒளியில்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36

ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும் நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கிவை. நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும் தியானத்தையும், பழகிவந்தேன்…. மனக் கவலையிருப்பதாக முறையிடும் என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும். நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக, பிறகும், அவளிடம் அக்கவலைகள் உள்ளனவா என்பதைக் காண்போம். ஆனால், அவள் தன்னுடைய துன்பங்களைப் பற்றிப் பேசுவாளே அல்லாது அவ்வாறு செய்யமாட்டாள், அவளுக்கு என்ன துன்பம்? குழந்தாய், கவலை இன்னதென்பதை நான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 23

நான் ஒன்றாயிருப்பவன் ‘ இது அது, ‘ இப்படி, அப்படி, இதைப் போல் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. ஆசையற்றவர்களால் பூஜித்தற்குரியவன் எவனோ  அவன் நானே. புண்ணியம், பாவம் என்ற உள்ளுணர்வு என்னிடம் இல்லை. ஒற்றுமையை விளங்கவைப்பவன் நான். வேதாந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து பரிசுத்தமான மனது படைத்தவர்களிடம் விளங்கும் பரதத்துவம் நானே. இரவின் இருள் போன்ற அஞ்ஞானத்தைப் போக்கும் சூரியன் நானே.

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம் உபகேது .

இந்திர தனுசுடன் 17 பாகையை கூட்ட வரும்  ராசி உபகேது உள்ள ராசியாகும். லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் வழுக்கைதலை, தலைமுடி அற்றவன் 2 – ல் இருப்பின் பணமில்லாதவன் 3 – ல் இருப்பின் மூக்கரையன் வாசனை திரவியம் உ உபயோகிப்போன் 4 – ல் இருப்பின் வாசனை திரவியம், இருதய நோய் இரட்டை ஜெனனம் பிறப்பு 5 – ல் இருப்பின் இரட்டை ஜெனனம் 6 – ல் இருப்பின் ஆஸ்துமா, அன்னிய…

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம்.இந்திர தனுசு.

360 பாகையிலிருந்து பரிவேடன் ஸ்புடத்தை     கழிக்க வரும் ராசி இந்திர தனுசு உள்ள ராசி லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் வாதரோகம், அதிக சரீர பீடை                                2 – ல் இருப்பின் செவி நோய், காது கேளாமை 3 – ல் இருப்பின் பல கொலைகள் செய்த பாதகன்       …

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். பரிவேடன்.

வியாதீபாதன் ஸ்புடத்தோடு 180 பாகை கூட்ட வரும் ராசி   பரிவேடன் ராசியாகும் லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் விஷஜந்து, பாம்பு கடியால் கண்டம்        2 – ல் இருப்பின் அதிக சம்பத்தை தேடுவான் 3 – ல் இருப்பின் மன வியாதி, சித்தப்பிரமை                          4 – ல் இருப்பின் அந்நிய தேசவாசம், சஞ்சாரி 5…

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். வியதீ பாதன்

360 பாகையிலிருந்து தூமன் ஸ்புடத்தை கழிக்க  வருவது வியதீபாதன் லக்கினத்திற்கு, 1 – ல் இருப்பின் தோல் வியாதி                                    2 – ல் இருப்பின் அதிக சாமார்த்தியம் 3 – ல் இருப்பின் சங்கீத ஞானம்                         …

கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம். தூமன்

சூரியன் ஸ்புடத்தோடு 4 ராசி 13 பாகை கூட்ட வருவதுதூமன் இருக்குமிடம். ஆகும்  லக்கினத்திற்கு, 1 – ல் தூமனிருப்பின், தற்கொலை, ஜலகண்டம்       2 – ல் தூமனிருப்பின், பேச்சு சாதுர்யம் குறை, திக்குவாய். 3 – ல் தூமனிருப்பின், உடன் பிறப்பு பாதிப்பு, ஊனம்  4 – ல் தூமனிருப்பின், தாய்மாமன் வர்க்கம்,தெய்வகாரியம் செய்தல் 5 – ல் தூமனிருப்பின், மகா கோபி         6 – ல் தூமனிருப்பின்,…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1-1.21 .சில துர்யோகங்கள். 2

4)  5 – ல் சூரியன், கேது, குரு சேர்க்கை இருப்பின் இவர்களை செவ்வாய் பார்த்தால் பொய் சாட்சி சொல்வதாலோ, தர்மத்திற்கு விரோதமாக நடப்பதாலோ கெட்ட நடவடிக்கையாலோ வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டிவரும். குழந்தை இல்லாமல் வீட்டை பங்காளி எடுப்பார். 5)  லக்கினத்தில் ராகு, லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் அவர் பார்வை இல்லாமல் இருக்க, லக்கினாதிபதி நீச்ச நவாம்சத்தில் இருப்பின் தன் வீட்டை விட்டு வேறு வீட்டில் போய் வசிப்பான். இவன் வீடு நியாயமில்லாத முறையில் பிறருக்கு போய்…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1-1.21 .சில துர்யோகங்கள். 1

1) 8 – ல், 8 – க்குரியவர், பலம் குன்றி சந்திரன், சனி, சூரியன் சேர்க்கை இருந்தால், இவர் பிறந்த வீடு இயற்கை சீற்றத்தாலோ, விபத்தினாலோ, அந்த வீட்டை விற்றோ சென்றுவிடுவார். 2) 8 – க்குரியவர் சுபராக இருந்து பாக்கியத்திலிருந்தால் பெரிய வீட்டை விற்று சிறிய வீட்டிற்கு போக வேண்டியது வரும். அஸ்தமனம் பெற்றால் பிறந்த மனை ஜலத்திற்கோ, நெருப்பிற்கோ இரையாகும். 3) 8 – ல் சந்திரன் ,செவ்வாய் சேர்க்கை 3 பாகைக்குள்…

நட்சத்திர எதிரிடை 6

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைய நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 11 – ஆம் பாவாதிபதி இருந்தால் இன பந்துக்களால் தொல்லை எடுத்த காரியத் தோல்வி, உடல் பாதிப்பு, தாயின் நீண்ட ஆயுள் கெடுதல், மருமகன், மருமகளால் தொல்லை, கடிதங்கள் மூலம் வருத்தம், எதிரியால் தோல்வி, மூத்த சகோதர வகையில்திருப்தியற்ற நிலை அல்லது இல்லாமை 2 – ஆம் தாரத்தினால் விவகாரம்,பாட்டன், பாட்டிமார்களால் தொல்லை பாதிப்பு போன்றவை உண்டாகும்.. லக்னாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்களில் 12 – ஆம்…

நட்சத்திர எதிரிடை 5

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் அதன் திரிகோண நட்சத்திரத்தில் 8 – ஆம் பாவாதிபதி இருந்தால் செயற்கைமரணம். நீர், நெருப்பு கயிறால் பயம், நம்பிக்கை, மோசம்,  கெட்ட பெயர் எடுத்தல், எதிரிகளால் பயம், கடத்தப்படுதல், பலாத்காரம்,அறுவை சிகிச்சை, தொத்து நோயால் தொல்லை, கற்பழிப்பு, ஜெயில் தண்டனை, கீழே விழுதல், கீர்த்தி பங்கம் முதலியவை உண்டாகும்.. லக்னாதிபதி எதிரிடை நட்சத்திரத்தின்  திரிகோண நட்சத்திரங்களில் 9 – ஆம் பாவாதிபதி இருந்தால் பாக்கியம் இழப்பு, பதவி பறிபோதல், அவமானம்…

நட்சத்திர எதிரிடை 4

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் அல்லது அதன் திரிகோண நட்சத்திரத்தில் 5 – ஆம் பாவாதிபதி இருந்தால் பூர்வீக சொத்துகளில்வில்லங்கம், வழக்கு வியாஜ்ஜியங்கள், திருமண விஷயத்தில் கோளாறு, புத்திர தோஷம், மத்திம வயதில் புத்திர, புத்திரிகளை இழந்து புத்திரசோகம் அடைதல் மனக் கோளாறு காதல் தோல்வி, லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி இருந்தால் பட்டப்படிப்பு தடைபடுதல், கடுமையான நோய் தொல்லைகள் வேண்டாத வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளுதல் அகால போஜனம், திருட்டு, பொருள்களை பறி…

நட்சத்திர எதிரிடை 3

லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் நின்ற எதிரிடை நட்சத்திரத்தில் 2 – ஆம் பாவாதி இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குடும்பத்தை விட்டு பிரிதல் பண தட்டுப்பாடு, பணத்தொல்லை, கண் கோளாறு, பல வகையில் பாதிப்பு திருட்டு பயம், நீச்ச வார்த்தை பேசுதல், திக்கி பேசுதல், வாக்கு நாணயம் தவறுதல் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படுதல்.. லக்னாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரங்கள் அதன் திரிகோண நட்சத்திரங்களில் 3 . ஆம் பாவாதி நின்றால் உடன்பிறப்பு வகையில் பகை, பிரயாணத்தில…

சில விஷயங்களை

சில விஷயங்களை பகுத்தறிவைக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு பார்க்க முடியாது. உதாரணம் ஒருவரின் புகழ், பெருமை போன்றவை, ஏன் ஒருவருக்கு பெருமை கூடி வருகிறது? ஏன் ஒருவருக்கு புகழ் போன்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில் சொல்லாது, அப்படியே சொன்னாலும் பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒரே காரணத்தை சொல்லுவதில்லை. காரணம் மனிதனுக்கு அறிவு மட்டுமில்லையே மனமும் இருக்கிறதே, அது மட்டுமல்ல மனிதனுக்கு வாழ்வு மட்டுமல்ல வினையும் இருக்கிறதே.

சுந்தர யோக சிகிச்சை முறை 8

சுகம் நமது பிறப்புரிமை  இதை வெளியார் யாரும், ஈசன் கூட, நம்மிடமிருந்து தடுக்க முடியாது இதுதான் உண்மை சுகத்தை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளுதல், பிறப்புரிமையை இழத்தல் நாமே இதுவும் உண்மைதான் நாம் தானே இயற்கைக்கு விரோதமாக, ஒழுக்கம், அடக்கம், மிதம், காலம் முறையின்றி உண்டு  ஜீவிதத்தில், உடற் பகுதியான, ஆரோக்கிய வாழ்வால் உண்டாகும். மனத்தன்மையான  இச்சுகத்தை, அகற்றிக்கொண்டது,  நாம் தானே!  இந்த நிலைக்கு பொறுப்பு நாம் தானே வேறு யாரும் இல்லையே

உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 7

பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது. சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது, ஆயுளும் குறைகின்றது எவ்வாறு? உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்? வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது. இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 6

உண்ணும் சுகத்தை இன்னொரு விதமாகப் பெரும்பாலாகப் பெற முயலுகிறார்கள். சுகமடைந்ததாக மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கைக்கு விரோதமான முறையில் பழக்கப்பட்ட நாக்கை பிரதிநிதியாகக் கொண்டு, வலிவற்ற மனம், தீயதாய் மாறிய புலன்களை ஆதாரமாக நிறுத்தி, வலிவு, வளர்ச்சி, ஆரோக்கியம் என்ற தொகுதிகளை மறந்து, தேவை மீறி, கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்படாமல் வாழ்வது, கண்டதைக் கண்டபடி சாப்பிடுவதற்கென்றே! என்ற முறையில் வாழ்ந்து அவ்வுண்ணும் சுகத்தை அனுபவிப்பது ஒரு வழியாகும். இது தீயதில் பிறந்து (சுகம்) இல்லாத பொழுது இருப்பதாக…

உரையாடலின் ஒரு பகுதி 7

ஊர்கூடி செக்கு தள்ளினால்தான் எண்ணை உண்டு என்று காத்திருக்க முடியுமா? முடியும் முடியனும் அதுதான் ஜனநாயகம்  ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே சாம்ராஜ்யம், ஒரே இனம், ஒரே கொள்கை, ஒரே மொழி இது சாத்தியமா என்பதைவிட நம் நாட்டிற்க்கு இது சரியானதா? தேவைதானா ? அப்படின்னு யோசிகிச்சா தேவைஇல்லைன்னு சொல்லறதுதான் சரியான பதில் நாட்டுப்பற்று இல்லைன்னு அர்த்தம் இல்லை இதுக்கு சரியான கோணத்துல விஷயத்தை சரியா பாக்கறோம் அப்படிங்கறது தான் பதில் நம் நாட்டில் அது…

சுந்தர யோக சிகிச்சை முறை5

சுகமெது? கெட்ட புலதேலே அல்ல! சுகம் அது, சுத்தம் கொடல். உதாரணம் கூறுவோம். உண்பதில் சுகமென்று வைத்துக் கொள்ளுவோம். நாக்கை இயற்கைக் காவலனாகக் கொண்டு, உடலின் வலிவுக்கும், வளர்ச்சிக்குமாக பசியாற்றலுக்கென்றே, உசிதமான பொருளைத் தேவைக்குத் தக்கபடி, குறிப்பிட்ட காலத்தில் உண்டு, உண்ணும் சுகத்தை அனுபவிப்பது முறை. இச்சுகம் இயற்கை வழியில் தொடங்கி, ஒழுக்கத்திற்கு முறையாக நின்று, நீடூழி எதிர்காலத்தில் அனுபவிக்கவும் காரணமாகின்றது. இது உண்மைச் சுகம் வலிவுள்ள மனம், சுத்தமான புலன், ஆரோக்கியமான உடல், என்ற அஸ்திவாரங்களின்…

ஆரோக்கிய வாழ்க்கை

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நோயற்ற நிலையில் உடல் இருப்பது மட்டும்அல்ல, நன்கு உழைக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் மன மகிழ்ச்சியோடும், உணர்வோடும் செய்தாலே உடல் ஆரோக்கியத்திற்கு இருப்பதற்கு அடையாளம் நல்ல உடற்கட்டு உள்ளவர்கள் கூட வேலை செய்ய மனமில்லாதவர்களாயும், சுறுசுறுப்பு இல்லாமலும் திரிவதை காண்கிறோம் அவர்கள் உடல் ஆரோக்கியமானது அல்ல. உழைப்பிலே ஊக்கம் உடையவராய் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அறிகுறி, அதுதான் ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி. நோய் என்பது காலங்கடந்து நடைபெறும் வெளிதள்ளும் இயக்கமே ஆகும். பசி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 35

ஒரு நாள் ஒரு பெண்மணி, அன்னையாரை அணுகித் தன் பெண்ணை மணக்கப் பணிக்குமாறு வேண்ட, அதற்கு அன்னை அளித்த பதிலாவது  வாழ்நாள் முழுவதும் ஒருவனுக்கு அடிமையாக எப்போதும் அவனது சொற்படி நடந்து கொண்டிருப்பது துன்பம் தரத்தக்கதல்லவா? பிரம்மசாரிணியாக வாழ்வதில் சிறிது ஆபத்து இருப்பினும், ஒரு பெண் இல்வாழ்வு நடத்த விரும்பாவிடில், அவளை வலிந்து புகுத்தி, ஆயுள் முழுவதும் உலகப்பற்றுக்கு உட்படுத்தக் கூடாது. துறவு வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்களை எல்லாம், பிரம்மசரிய வாழ்வு நடத்துமாறு ஊக்குவிக்க வேண்டும்.…

விடை தேடி 4

ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது, முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும் அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது. இது எனக்கு கிடைத்த விடை. இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன். எந்த காரணமும் காரியமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால் நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.

விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு –22

எனக்கு இந்திரிய சுகங்களில் விருப்பமில்லை. ஆத்மானுபவமும் அறிவும், ஆனந்தமும் என்னிடம் நிரம்பியிருக்கின்றன. வெளியுலகத்தைப்பற்றிய எண்ணத்தினின்று நான் வெகு தூரம் விலகியுள்ளேன். வெளியே காணப்படாதது எதுவோ அதனால் என்னுள்ளம் மகிழ்கிறது. மஹாபூதங்களினும் நான் பெரியவனாதலால் அவற்றில் பொதிந்துள்ள சக்தியின் நன்மையெல்லாம் நானே. உற்பத்தி செய்யும் உணர்ச்சி வேகம் என்னிடம் இல்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 4

சுகம் ஏனென்று உணராதது, அறியாமையால் சுகம் போல் வேஷம் தரித்தவைகளைச் சுகமென்று அனுபவித்தலும், அறியாமையால் அறியாமைக் கருவிகள், தாமஸ, ராஜஸ, குணங்கள். இத்தகைய சுகம் கானல் சுகம் ( இன்பம் இருந்தும் இல்லாதது போல ) இயற்கை தர்மத்தை முறிப்பதால் ஏற்படுவது தீயதால் தூண்டப்பட்டு, கணப்பொழுதே நிலைத்து, தீயதை விளைவிப்பது. ஆயுள் ஆரோக்கிய மானிடத் தன்மையின் திட்டங்களுக்குக் கட்டுப்படாதது. உயர்வு, நல்லுணர்ச்சி, ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தப்படாதது கெட்ட தாழ்வு மனம், கேடுண்ட புலன்கள் மூலம் தூண்ட இப்பொய், கணநிழல்…

விடை தேடி 2

ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்? அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும், சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது, பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே, ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,

சுந்தர யோக சிகிச்சை முறை 3

இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை. இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி, மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும். இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது. இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது

விடை தேடி 1

எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது. எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும் மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை, ஏன்? என்ன காரணம்? என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா? அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா? வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான், யாரேனும் துணைக்கு வருகிறீர்களா? ம்ம்,…

பிரம்மச்சர்யம் என்றால்

பிரம்மச்சர்யம் என்றால் அது ஒரு மன நிலை, உடல் மட்டும் ஒரு பெண்ணை தீண்டாமல் இருந்துவிட்டால் மட்டும் பிரம்மச்சர்யம்ஆகாது , மனம் ஒத்துழைக்க வேண்டும், மனம் ஒத்துழைக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் அமைய வேண்டும், அப்படி இல்லாவிட்டால் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் சலனப்படும், மனம் சலனப்பட்டால் உறக்கம் போகும், உறக்கம் இல்லாத போது உடல் உபாதை உண்டாகும், உடல் உபாதை பிரம்மச்சரியத்தை முறிக்கும். இது மாலையிட்டு விரதம் இருக்கம் ஐயப்ப பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இல்லறத்தான்…

சுந்தர யோக சிகிச்சை முறை 2

அறியாமை சோம்பல் புகுந்த கூட்டில், யாரும் அறியாமல் ஊன்றுமே நோய்! உடலில் நோய் வந்துவிட்டாலே இன்பம் கெட்ட நிலைதான், மன நிம்மதியும் போய்விடும். மனநோய், மன சாந்தி இவை எல்லாம் ஒன்றே என்றாலும் பெரியதாக இன்பம் ஏதும் இல்லை. மனப்பிணி தொத்துமுடல் ஊண்பிணி தொத்தும் மனதை மனமுடல் கா! உடல் சோர்வு மனதை தாக்கும், மனசோர்வு உடலை தாக்கும். மனநோய், மூளை நோய், நரம்புபிணி, உடற்பிணி! கெட்டதில் பிறவாது. கெட்டது நிலை விளைக்காது. முன்னும், தற்பொழுதும், பின்னும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 1

பிணியும், பிணி தடுத்தலும் சுகத்திற்கே, வாழ்வு பிணிக்கல்ல! ஈசன் சுகத்திற்கெனறீன்றனே வாழ்வு பிறவி, சுகத்தைப் பற்றி சுகித்து வாழ! பிணியால் வாடி வதையுறுவதற்கல்ல! சுகம் நமது பிறப்புரிமை! சுகம் பெறவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன! நம்மிடமிருந்து நம் இன்பத்தை தடுக்க எவராலும் முடியாது. இறைவனாலும் முடியாது. இறைவன் நாம் இன்பமாக வாழவே நம்மை படைத்திருக்கிறான். இறைவனா தடுப்பான்? நம்மிடமிருந்து நம் இன்பத்தை, தடுப்பவன் நாமேதான் அல்லாமல் இறைவன் அல்ல, பிறரும் அல்ல. இந்த மாதிரி செயலுக்கு நமது அறியாமையும்,…

கிரகங்களின் எதிரிடை பலன் அறியும் விதி ராகு – கேது

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகு – கேது நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரமானது ஜாதகரின் பிறந்த நட்சத்திரமாக வந்தால் ராகு – கேதுவால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும். ராகு – கேதுவின் எதிரிடையான நட்சத்திரத்தில் 2 – 3 – 5 – 8 – 12 – க்குரியவர், இருந்தால் ஜாதகரை கீழ்த்தரமாக செயல்படுத்தும்.