உரையாடலின் ஒரு பகுதி  130

மனிதனின் மோசமான மறதிதான் கவலையின் கணக்கில் உள்ளது. ஆனால் காலத்தின் ஞாபக சக்தி அப்படிப்பட்டதன்று மனிதன் தன் சக மனிதரோடு கொண்ட தொடர்பையும் பிரபஞ்சத்தில் மற்ற உயிர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் காலம் நினைவில் வைத்திருந்து ஒவ்வொரு கண்ணிமைப் பொழுதிலும் கணக்கை தீர்த்துக்கொள்ள அவனை வற்புறுத்துக்கின்றது ஒவ்வொரு வாழ்வின் தொடர்ச்சியிலும் மரணங்களின் தொடர்ச்சியிலும் அது நிகழ்ந்து கொண்டே வருகிறது

உரையாடலின் ஒரு பகுதி  129

கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நினைக்கிறான் . மரண குத்துக்கு இருவருமே காரணமாவார்கள். கொள்ளை கொடுத்தவன் கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான். கொள்ளையில் இருவருக்கும் பங்கு உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி  128

காலம் மறப்பதில்லை மனிதனுக்கு எல்லாவற்றின் மேலும் விருப்பம் உண்டு. எல்லாமும் மனிதனை விரும்புகின்றன. இந்த பரிமாற்றம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு மாடு – குத்துபடுகிறவன் அதை தன் பக்கம் ஈர்க்காதவரை அது அவனை கொம்பால் குத்தாது. ரத்தம் சிந்தியதில் மாட்டைவிட மனிதனின் குற்றமே அதிகம்.

உரையாடலின் ஒரு பகுதி  127

இப்படி நீங்கள் இருக்க தொடங்கினால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் பரவசபடுத்தும் அந்த பரவசத்தை அறிய ஆசைபடுங்கள் உணர முயற்சி செய்யுங்கள் விடாது அதை அடைய அதை பின் தொடருங்கள் அதில் நீங்கள் பயணப்பட்டு அதை நீங்கள் கண்டடையும்  நேரம் உங்களில் உங்களுக்கு இன்னும் சொல்ல போனால் உங்களுக்காக மட்டுமே இருந்த கொண்டிருந்த ஒன்றை காணுவீர்கள் அதை கண்ட கணம் நீங்கள் அதை பிரிந்த காலம் எல்லாம் மறைந்து காலமில்லா பெரு…

உரையாடலின் ஒரு பகுதி  126

இதற்கு பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்றால் நாம் நம்மை கவனித்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனிக்க வேண்டும் ஒவ்வொரு சிந்தனையையும் சிந்திக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒவ்வொரு  உணர்வுகளையும் கவனியுங்கள் உங்களின் மெல்லிய அசைவுகளையும் கவனியுங்கள் அதாவது நடத்தல் சாப்பிடுதல், குளித்தல் இது போன்று உள்ள எல்லாவற்றையும் கவனியுங்கள்

உரையாடலின் ஒரு பகுதி 125

உரையாடலின் ஒரு பகுதி  125 காரணம் உங்கள் செயல், எண்ணம், உணர்வு  இவற்றில் உங்கள் கவனம் இல்லை இவை பிளவுபட்டு பிரிந்து இருப்பதே காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள் ஒற்றுமை எப்போதுமே வெற்றி தரும் அதில் சந்தேகமே இல்லை அந்த ஒற்றுமையை உங்களிடம் இருந்து துவங்குங்கள் நீங்கள் இதுவரை பார்த்த விஷயங்கள் அனைத்தும் வேறெரு கோணத்தில் அறிய துவங்குவீர்கள் அப்போது உங்களின் புரிதலும் வேறு ஒரு தளத்தில் இருக்கும் அப்போது உங்களுக்கு ஆகாயம் சேதி சொல்லும் நட்சத்திரங்களின்…

வினை தீர்க்கும் வீரபத்திரர்

திருப்பறியலூர் என்று புராணத்தில் அழைக்கப்படும் இடம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர். இங்குதான் வீரபத்திரரின் வாயிலாக தட்சனை, சிவபெருமான் தண்டித்த வீரட்டான தலம் இருக்கிறது. இங்கு கருவறையில் வீராட்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். கோவில் மகா மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் வீரபத்திரருக்கு சன்னிதி இருக்கிறது. மழு, கேடயம், மணி, கபாலம், சூலம், கதாயுதம், கத்தி தாங்கி காட்சி தருகிறார்

‘கமண்டல நதி கணபதி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக…

விசேஷ திருக்கோலங்கள்    3

கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம். திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.

விசேஷ திருக்கோலங்கள் 2

நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி வடிவில் படிக்கின்ற  கோலத்தில் அருள்பாலிக்கிறாள் சரஸ்வதி தேவியின் கையில் எப்போதும் வீணை இருக்கும். ஆனால் வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.

விசேஷ திருக்கோலங்கள் 1

திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் மலை உச்சியில் சிவபெருமானும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் அருளும் முருகப்பெருமான் வேட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு வியர்வை துளிர்ப்பது விசேஷ அம்சம். செம்பொன்னார் கோயிலில் ஜடாமகுடத்துடனும், கரங்களில் அட்சமாலை ஏந்தியபடியும் தவக்கோலத்தில் அருள்கிறார் முருகன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   104

உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள்  எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் . ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதும் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   103

பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   102

நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என் அனுபவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத்தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   101

எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே . சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு – இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.   

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   100

இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்

ராகு 3

ராகு 1ம் வீட்டில் நோயாளி மனைவி அமைவாள், 2ம் வீட்டில் இருதாரம் ஏற்படும். ராகு லக்னத்திற்கு 3,6,7,11ம் இடத்திலிருப்பது ராகுதிசை நடைபெறின் உயர்ந்த அந்தஸ்க்கு சென்ற பேரும் புகழும் ஏற்படுகிறது. ராகு, கேது ஏதாவது ஒரு கிரகம் செவ்வாயுடன் 6ம்பாவாதியோடு இருந்தால் விஷபயம் ஏற்படலாம். ராகு இருந்த வீட்டின் அதிபதியும், கேது இருந்த வீட்டின் அதிபதியும், ஒருவரின் கர்மாவை வெளிகொணரும் கிரகங்கள்.

ராகு 2

ராகு, கேது கிரகங்கள் பாபருடன் எந்த ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்துள்ளாரோ அக்கிரக பலனை தனது திசையில் வழங்குவர். ராகுவிலிருந்து 5, 9ல் லக்னாதிபதியும், 9மிடத்தின் அதிபதியும் சேர்ந்து இருப்பின் லெளகீக வாழ்க்கையில் நாட்டம் இருக்காது.  துறவி வாழ்க்கை வாழ்ந்து சன்னியாசியாக மாறிவிடுவர். ராகு 12ல் இருந்தால் கண்வியாதி வரும், சனி 12ல் இருந்தால் மாலை கண், அல்லது கண் சிமிட்டல் ஏற்படும்.

ராகு 1

நமது நல்லநேரம், கெட்டநேரம் கிரகங்களின் கையில், பலன், பயன்தரும் கிரகங்களை வழிபடுவோம். ராகு லக்னத்தில் இருக்கும் ஜாதகம், குடும்பத்தில் பிரச்சனைகள், வாழ்க்கையில் சோபிக்க மாட்டார்கள், எதிலும் குறைபாடுகள் மூர்க்கத்தனம் இருக்கும். ராகுவை, குருபகவான் பார்வை கிட்டினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள். ராகு 7ல் அல்லது சுக்கிரனுடன் இணைந்த ஜாதகர் அயல் நாட்டில் வசிப்பர்.  அயல் நாட்டிற்கு அடிக்கடி சென்ற வருவர்.  திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும்.

பழ மொழிகள் 33

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.   பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.   இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

பழ மொழிகள் 32

சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.   சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.   எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 47. யோகநிலை அடைய

வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம் ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. எப்போதும் உள்ள இன்பத்தில் இருக்கும்படியான வாழும் முறையை அந்த பரம் பொருளின் மெய் ஞானத்தால் அறிந்து கொண்டேன் அந்த வழி மனதில் ஒருவர் விரும்பி தியானிக்குமாறு உள்ளதல்ல வாயினாலும் சொல்ல இயலாது கடல் ஏழும் உலகு ஏழும் அசைக்க முடியாமல் இருப்பது அது இரவையும் பகலையும் உண்டாக்கும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே, மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே. ஆலகால விஷத்தை உண்டு கண்டம் கருத்த சிவ பெருமானின் இடபாகத்தில் இருக்கும் தேவியே நான் உனக்கு ஒவ்வொத தவறுகளை செய்தாலும் அவற்றை ( மதி உடையவர் மதி குறைந்தவர் செய்யும் தவறுகளை பொருட்படுத்தாது இருப்பது )  போல பொறுத்து அருள்வாய் எனும் நம்பிக்கையால் உன்னை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்      45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரிசடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே. தாய் நின் திருவடியை தொழுது செய்யாது உண்மை பொருளை இதுவென்று கண்டு கொண்டு இருந்தவர் பழங்காலத்தில் இருந்தனரோ இல்லையோ இருந்தினர் என்றால் அவர்களை போல் நான் ஆசை கொண்டு செய்தால் அது தவறாய் இருந்தாலும் நீ எனை பொறுத்து, வெறுத்து ஒதுக்காமல் இருக்க வேண்டும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 44. பேதபுத்தி நீங்க

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம், துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. தவத்திற்கு முதன்மையான இவள் எங்கள் சங்கரின் மனைக்கு மங்களமாக இருப்பவள் அவரை சீராட்டி அவருக்கு தாயும் ஆனவள் அதனால் தேவர்கள் அனைவருக்கும் மேலான தலைவி இவளே அதனால் இவளை தவிர வேறு தெய்வம் உண்டென்று எண்ணி தொண்டு செய்ய மாட்டேன்.!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 43. தீமைகள் ஒழிய

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல் திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை, எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே. மன்மதனின் ஐந்து மலர்பாணங்களை தரித்தவளே சிறிய திருவடிகளில் சிலம்பை அணிந்தவளே இனிய சொற்களை உடைய திரிபுர சுந்தரியே செந்தூர நிறத்திற்கு ஒப்பான மேனி உடையவளே மனதில் வஞ்சம் கொண்ட அசுரர்களை அழிக்கும் சிவபிரானின் இடபாகத்தை கொண்டவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 42. உலகினை வசப்படுத்த

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே. பருத்த இரு தனங்களை உடையவளே அதில் முத்துமாலையும் அணிந்தவளே மலை போல் கொண்ட அந்த இரு தனங்களை கொண்டு சிவபிரானின் மார்பில் பதித்து சிவனை சந்தோஷபடுத்துபவளே நல்ல பாம்பின் படத்தை ஒத்த அல்குலை கொண்ட தேவியே வேதமாகிய சிலம்பை உடையவளே குளிர்ந்த வார்த்தைகளை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளை உடைய அபிராமியும் அவளது கணவரும் இணைந்து நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து நம்மை தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாலித்து நம் தலையின் மேல் திருவடியை பதிக்க உண்டான…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 40 பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற் கெண்ணிய எம் பெரு மாட்டியை, பேதைநெஞ்சிற் காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ, முன்செய் புண்ணியமே. ஒளி பொருந்திய முகத்தில் நெற்றி கண் உடையவளே தேவர்கள் அனைவரும் நின்னை வழிபடுவதையே லட்சியமாக கொண்டவர்கள் அறியாமை உடைய நெஞ்சினால் காண கிடைக்காதவள் அப்படிப்பட்ட தேவியை தரிசித்து அன்பு கொள்ள எண்ணிய எண்ணத்திற்கு காரணம் முற்பிறவிகளில் செய்த புண்ணியமே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு, உன்தன் அடித் தாமரைகள் உண்டு, அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு, மேல்இவற்றின் மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள், மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. திருமாலாகிய அம்மை தொடு தூது மேரு மலையை வில்லாக கொண்டு திரிபுரங்களையும் அழிக்கும் சிவபிரானின் இடபாகத்தில் ஒளி படர்ந்த திருநுதலை உடைய தேவி உன் திருவடி தாமரைகள் என்ன ஆட்கொண்டுள்ளது காலன் பால் செல்லாமல் என்ன காக்க உன் கடாஷம் உள்ளது இதன் மேல் என்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத் துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திரப் பதவியைப் பெற்றுத் தேவலோகராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனெனின் அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற…