மனிதனின் மோசமான மறதிதான் கவலையின் கணக்கில் உள்ளது.
ஆனால் காலத்தின் ஞாபக சக்தி அப்படிப்பட்டதன்று
மனிதன் தன் சக மனிதரோடு கொண்ட தொடர்பையும்
பிரபஞ்சத்தில் மற்ற உயிர்களோடு கொண்டுள்ள தொடர்பையும்
காலம் நினைவில் வைத்திருந்து
ஒவ்வொரு கண்ணிமைப் பொழுதிலும்
கணக்கை தீர்த்துக்கொள்ள அவனை வற்புறுத்துக்கின்றது
ஒவ்வொரு வாழ்வின் தொடர்ச்சியிலும்
மரணங்களின் தொடர்ச்சியிலும்
அது நிகழ்ந்து கொண்டே வருகிறது
