அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 63 அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. ஆறு சமயங்களுக்கு தலைவி அபிராமி தாய் என்று அறிந்திருந்தாலும் இவளை தவிர வேறு சமயங்களும் உண்டு எனும் மதியிழந்தவர்களுக்கு பிரமாணங்களை காட்டி நற்கதிக்கு அறிவுறுத்தப்படுவது மலையை மரத்துண்டால் பொடியாக்குவதற்கு சமம்.