சிந்திக்க   முக்கியமான விஷயம்.

உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும், வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை தயாராகவே இருக்கிறது.  ஆனால் நாம் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே சாத்தியம் இயற்கையின் ஆற்றலை பேணி காத்து இணைந்து வாழ்ந்தால் பூலோகம் சொர்கலோகமாகும், மாறாக இயற்கையை அழித்து நாம் விரும்பும் படி வாழ்ந்தால் இயற்கையும் நம்மை அழிக்கும் அப்போது பூலோகம் நரகமாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 35

 புதன் 2 – ல் நிற்க, செவ்வாய் திரிகோணமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்க, சந்திரன் நட்பில் நிற்க, குரு 9 – ல் இருந்து பார்க்க, சூரியன் லக்கினத்தில் நிற்க, உயர்ந்த காவிய நூல் படைப்பார். குரு திரிகோணமேரி, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் லக்கினத்தைப் பார்க்க, சனி லக்கின கேந்திரமடைய அழியாத கீர்த்தி, காவியம் படைப்பார்.

கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 34

 சுக்கிரனும், புதனும் 2 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.  சந்திரன், சுக்கிரன், புதன் மூவரும் கூடி 4 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.  2, 3, 4, 5, 7, 9, 10 இதற்குடையவர்கள் சுபர்களாயிருந்து ஆட்சி பெற்று நிற்க கல்விமான். சூரியனை 2 – க்குடையவர் பார்க்க, செவ்வாயை குரு பார்க்க நூல்களை கற்றவர். தமிழ்ப்புலவர்.  புதனை லக்கினாதிபதி பார்க்க, சனி நட்புடன் இருக்க தமிழ் புலவர்.  சுக்கிரன் உபய…

சுந்தர யோக சிகிச்சை முறை 54

                யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு                 யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில் உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும், விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 53

                நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனஸ்நத                 ந சாதி ஸ்வப்னஸீவஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஸுன மிதம் மீறி உண்பவனுக்கும், உண்ணாமலே இருப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குகிறவனுக்கும், தூக்கத்தைக் கெடுத்து சதா விழித்திருப்பவனுக்கும் யோகம் கிட்டாது. இவ்விரு பான்மையர்களும் யோகிகளல்லர், இவர்கள் வாழ்க்கை   நோய் தடுக்கும் யோக வாழ்க்கை ஆகாது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  17

ஒருவன் தனது ஆத்மாவைப் புண்ணியம் பாவம், சென்றது வருவது, காரணம் காரியம் என்ற எல்லாத் தளைகளினிறும் விலகிச் சுதந்திரமாய் விளங்கும் பரப்பிரம்மம் என்று அறியவேண்டும்

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  16

எதுவரை ஒருவன் உடலே தான் என்ற எண்ணமுடையவனோ அதாவது ஆத்மானுபவம் பெறவில்லையோ அதுவரை உலகக் காட்சியும் அதனுடைய உண்மையும் பாதிக்கப்படுவதில்லை.

வெற்றிக்கு வித்திட 3

எந்த ஒரு செயலை செய்வதாய் இருந்தாலும் அதற்க்குண்டான மனநிலை இருக்க வேண்டியது அவசியமாகும் செய்யும் செயலுக்கு உண்டான இல்லாத மனநிலையையே பெரியோர்கள் எண்ணம் சேராத செயல் உயிரற்ற உடலை போன்றது என்றார்கள்.  லோகாதயமான வாழ்வில் ஆகட்டும், லெளகீக வாழ்வில் ஆகட்டும், அல்லது ஆன்மீக வாழ்வில் ஆகட்டும் செய்யப்படும் செயலுக்கு ஏற்ப உண்டான மனநிலையை உருவாக்கிய பிறகு செயலுக்கு சென்றால் அந்த செயல் மூலம் ஆனந்தமும், திருப்தியும் கிடைக்கும்.

வெற்றிக்கு வித்திட 2

 கற்றுக்கொள்ள – ஆர்வமும் – கற்றுக்கொண்டதை செயல் படுத்தவும் உங்களுக்குள் ஆர்வத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.  அடுத்தது எதைப்பற்றியும் அதாவது எந்த செயலைப் பற்றியும் திட்டமிடல் அவசியம் என்று போதித்து இருக்கும். அடுத்து காலம் தவறாமை எனும் விஷயத்தையும் விவரிக்கும்.

வெற்றிக்கு வித்திட 1

தன்னம்பிக்கை தரும் நூல்கள் ஆகட்டும் வெற்றிக்கு வித்திடும் ஆலோசனைகளை தரும் நூல்கள் ஆகட்டும் யார் எழுதியிருந்தாலும் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அதில் உள்ள மொத்த கருத்துகளை நாம் பார்த்தோம் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும், அதாவது நீங்கள் உங்கள் குண இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் கொண்டிருக்கும் இலக்கிற்க்கு ஏற்ப அதாவது உங்கள் குறிக்கோளிற்க்கு ஏற்ப நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய உங்களிடம் உள்ள சோம்பேறி தனம் எனும் குண இயல்பை மாற்ற வேண்டும்…

உன்னை விட உயர்ந்தவர் இல்லை        

ஒரு கணமாவது உன்னால் சும்மா இருக்க முடியுமா? முடியும் என்று யோகிகள் அனைவரும் கூறுகின்றனர். பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் உன்னை  நீயே பலவீனர்  என்று  நினைப்பதே. உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. பிரம்மமே நீ என்பதை அனுபவ மூலம் தெரிந்துகொள். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்த சக்தியும் இல்லை. நாம் சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள். மனிதனிடம் இருக்கும் தெய்வீக தன்மையை அவனுக்கு கற்பி, தீமையை ஒத்துக் கொள்ளாதே. எதையும்…

எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணாதே

ஏதாவது ஒரு மதத்தில் நீ கட்டுண்டு இருக்கும் வரை கடவுளை நீ காண முடியாது. எல்லாம் தனக்கு தெரிந்துவிட்டதாக நினைப்பவன் எதையும் அறியமாட்டான். அறிபவனை  யார்தான் அறிய முடியும்? நிலையான  தத்துவங்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன், மற்றது பிரபஞ்சம். இறைவன் மாற்றமில்லாதவர். பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருப்பது. பிரபஞ்சம் எப்போதும் உள்ளது. மாற்றத்தின் அளவை உன் மனம் அறிய இயலாதபோது அதை நிலையானது என்று நீ நினைத்துக் கொள்கிறாய். கல் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வடிவம் இவற்றுள்…

உலகம் ஒரு பயிற்சிக் கூடம்

எதிர் செயல் இன்றியே செயல் நடக்கட்டும். செயல் புரிவது இனியது. எதிர்ச் செயல் சகல  துயரத்தையும் தருவது. குழந்தை கைவிரலை தீ எரியும் விளக்கில் வைக்கிறது. அதில் இன்பம் இருக்கிறது. ஆனால் அதன் உடலில் எதிர்ச் செயல் நிகழும்போது அது துன்பம் தருகிறது. எதிர்ச் செயலை நம்மால் நிறுத்த முடியுமானால் பயப்படவேண்டியதில்லை. மூளையைக் கட்டுப்படுத்து. பதிந்ததை அது அறியும்படி விடாதே. சாட்சியாக இரு. எதிர்ச்செயல் புரியாதே. இவ்வாறு இருப்பது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நம்மை மறந்த நிலையில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 52

எங்கிருந்தாலும் தன்கடமையை இயற்றி, உடல் புலனிலேயே ஜீவனைப் புதைத்து விடாமல், உயர்மானிடப் புனிதத்தன்மையும் பற்றி, இயம நியம, ஆசனப் பிராணயாமக் கோட்டைக்குள் வாழ்பவனே யோகி. இவனிடம், மிதம், சமாதானம், ஹிதம், மூன்றும் காணப்படும். இவ்வாழ்க்கை மிக்க எளிது.  நோயைத் தடுத்துச் சுகத்திலூன்றும் யோகி என்பவன் யார்?   யோக வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் பரமாத்மா கீதையில் விளக்குகிறார் அந்த சுலோகங்களைக் கவனித்து இத்தொகுதியை முடிப்போம்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  15

ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்று அறிந்தனுபவிப்பதற்கு முன் இந்திரியங்களால் உணரப்படும் உலகமும் மற்ற பொருள்களும் அவ்வவற்றின் தனி உருவங்களை உடையவையாயிருக்கின்றன.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  14

தன்னுடைய உடலை ஒருவன் அறிவதற்கு எவ்வாறு வெளியிலிருந்து அத்தாட்சி வேண்டுவதில்லையோ அவ்வாறே தன்னுடைய ஆத்மாவை அறிவதற்கும், வெளியிலிருந்து அத்தாட்சி ஏதும் வேண்டுவதில்லை.  எல்லா ஆசைகளையும் விட்டு ஆத்மாவைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மட்டும் தான் ஆத்ம தரிசனத்திற்கு அவசியமான ஸ்தானம்

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  33

 செவ்வாய், புதனுக்கு கேந்திரமடையவும், சந்திரன், சுக்கிரனோடு கூடி திரிகோணமடைய குரு 11 – ல்நிற்க, சாஸ்திர ஆராய்ச்சியாளர் சாஸ்திர ஆராய்ச்சி உடையவர். குருவுக்கு 2 – ல் 1 – க்குடையவர் நிற்க, அவரோடு சந்திரன் கூடி நிற்க புதனும், 9 – க்குடையவரும் கூடி 3 – ல் நிற்க 4 – இல் சுக்கிரன் நிற்க கவி மாலை செய்து புகழ் பெறுவார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32

 2 – ல் புதன் நிற்க, 2 – க்குடையவர், லக்கினத்தில் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு 10 – ல்நிற்க, அவருக்கு 3 – ல் சுக்கிரன் நிற்க, யோக்கியவான். வாக்குவளம், யூகம் கல்வி உடையவர். லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு திரிகோணமடைய லக்கினத்தைப் பார்க்க சாஸ்திர ஆராய்ச்சியாளர் ஆவார்  2 – ல் குரு நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  31

 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, 7 – ல் சந்திரன், புதன் நிற்க தமிழ் பண்டிதர் பாக்கியவான். 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, சந்திரனும், புதனும் கேந்திரமடைய 4 – க்குடையவர் 11 – ல் நிற்க செவ்வாய் கேந்திரமடைய அல்லது சுக்கிரன், செவ்வாய்க்கு 3 – ல் நிற்க, பாக்கியம் செல்வம், பல பாஷை பண்டிதர்.

சந்தோஷம் என்பது 5

மனித உணர்வுகளில்,  உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று ஆளுமை அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம்.  அதுமட்டுமல்ல மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும் உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால் அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும் இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.  மனிதன் இவற்றோடு இருப்பவன் இவைகளை இல்லாமல் செய்ய முடியாது ஆனால் இவைகளை செயலற்றதாக்க முடியும் அது…

சுந்தர யோக சிகிச்சை முறை 51

நோய் தடுக்க எல்லாவற்றிலும் மிதம், சமாதானம், ஹிதம் என்பவை பிணைய வேண்டும். சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் யோகியாக வாழ வேண்டும். யோக வாழ்க்கையை கைப்பற்ற வேண்டும்.  யோகி என்றால் தாடி, ஜடை, அழுக்கு, மணி, ருத்திராட்சம், ஆடம்பரம், படிப்புச் சொற்களுடன், மலை மடங்களில் வாழ்கிறவனல்ல. 

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  13

(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம் இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும் எங்ஙனம் பிறவியை அடைவான். ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும் தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ, தள்ளத்தக்கதோ ஆகாது.

ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் 

நாம் அறிபவை அனைத்தும் கூட்டுப் பொருளே. பகுத்துப் பார்ப்பதன் மூலம் புலனறிவை நாம் அடைகிறோம். மனம் எளிமையானது, தனிமையானது, சுதந்திரமுள்ளது எனக் கருகிறது துவைத மதம். தத்துவஞானம் என்பது ஏட்டுக் கல்வி மூலம் கிட்டுவதல்ல. அதிக நுால்களைப் படிப்பதன் மூலம் மனக் குழப்பம்தான் அதிகமாகிறது. ஆழ்ந்த ஆராய்ச்சி இல்லாத தத்துவஞானிகள் மனத்தைத் தனிப்பொருள் என்கின்றனர். அதன் விளைவாக, மனிதன் எண்ணச் சுதந்திரத்துடன் வாழலாம் என்று அவர்கள் முடிவு கட்டினர். மன நுாலோ  மனத்தை ஒரு கூட்டுப் பொருளாகக்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம்  இரண்டாவது காண்டம்    54

வாத தோஷம் …..  வாத தோஷத்தில் தேகமானது தொட்டால் அளவாய் இருக்கும். பித்த தோஷம் …..  பித்த தோஷத்தில் தேகமானது தொட்டால் அதிக உஷ்ணமாயாவது அல்லது சீதளமாயாவது இருக்கும். கப தோஷ குணம் …..  கபரோகத்தில் தேகம் தொட்டால் குளிர்ச்சியாயும் சில்லிட்டு இருக்கும். துவந்த தோஷ குணம் …..  துவந்த தோஷத்தில் தேகமானது தொட்டால் இரண்டு தோஷ  குணங்களை அல்லது சகல தோஷ  குணங்களை பெற்று இருக்கும்.  

சுந்தர யோக சிகிச்சை முறை  50

உடலுழைப்பே அற்று ஓய்வின்றி மூளை வேலை செய்யும் மானிடரும் உழைப்பின் சீர் தூக்கின்மையால் நோய் கொள்வர், நோயைத் தடுக்க, மூளை வேலையும் வரம்புக்குட்பட வேண்டும். மனஉழைப்பு, இதை மனக்கவலை என்று பொதுவாகக் கூறலாம்.  வாழ்க்கையின் சம்பவங்கள் அதிகமாக மனதைத் தாக்கிவிட்டால், வலிவு குன்றும், சிகிச்சைக்கடங்காப் பிணிகள் உண்டாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  12

ஆத்மா வெளியே உள்ள பொருள்களைப் போல் அறியப்படுவதன்று. அதில் பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லை. ஆகையால் அதை எவராலும் கொள்ளவோ தள்ளவோ இயலாது. உள்ளும், புறமும் எங்கும் வியாபித்ததும் பிறப்பு, தேய்வு, மூப்பு, சாவு முதலியவற்றிற்க்கப்பாற்பட்டதுமான ஆத்மா தான் என்ற அறிந்து கொண்ட பின் ஒருவர் எதற்காக ஒரு சிறிதேனும் அஞ்சவேண்டும்?

எண்ணம் என்பது சொல்லின் ஆற்றல்

பிரபஞ்சம் என்பது எண்ணம். அந்த எண்ணத்தை வேதங்கள் வார்த்தைகளால் வெளியிடுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை நம்மால் ஆக்கவும் அழிக்கவும் முடியும். மந்திரங்களை  உச்சரிக்குந்தோறும் காட்சிக்கு எட்டாதிருந்த எண்ணம் உருப்பெற்று புறப்பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இப்படி கர்ம காண்டத்தில் இருப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர். நம்மில் ஒவ்வொருவருக்கும் படைக்கும் ஆற்றல் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். மந்திரங்களை உச்சரிப்பதால் அவற்றுக்குத் தொடர்புள்ள எண்ணம் உருவாகிறது. விளைவையும் கண்கூடாகக் காணலாம். எண்ணம் என்பதுசெயலின் ஆற்றல். எண்ணத்தின் வெளிப்பாடே சொல் என்று மீமாம்சகர்கள் கூறுகின்றனர்.…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  53

ம ல ப ரி க்ஷ வாத தோஷ  மலம் …..  வாத தோஷத்தில் மலமானது  கருப்பு  நிறத்துடனும் பந்தகித்து  இருக்கும். பித்த தோஷ மலம் …..  பித்த தோஷத்தில் மலமானது, மஞ்சள்  நிறம்  அல்லது சிகப்பு  நிறமாயாவது விசர்ஜனமாகும். கப தோஷ மலம் ……  கபத்தில் மலமானது  வெண்மை நிறத்துடன் ஆமத்துடன் கலந்து நுறை நுறையாக வெளியாகும். துவந்த தோஷ மலம் …..  துவந்த தோஷத்தில் இரண்டு தோஷ குணங்கள் கூடி மலம் வெளியாகும். சந்நிபாத…

சுந்தர யோக சிகிச்சை முறை 49

மானிட வாழ்க்கை, இந்த பொய் நாகரீக சுயநல புலனடிமை விலங்குகள் உலாவும் உலகில் எளிதல்ல, அறிவைப் பெருக்கி நற்புத்தியைத் தீட்டி வாழாவிட்டால், கேடும், தோல்வியும் பற்றிக் கொள்ளும். அதிக உழைப்பு உடலை அழிக்கும்.  நோயைத் தடுக்காது.  இந்த அதிக உழைப்பு உடலை மட்டும் குறிப்பதாகக் கருதக்கூடாது.  மூளையையும், மனத்தையும் குறிக்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  11

ஆத்மா  இங்கே இப்பொழுது உளது, இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி வாக்கியங்களைக் கொண்டு ஒருவன் ஜீவாத்மாவை பிரம்மம் என்று இங்கேயே இப்பொழுதே கண்டு கொள்ள வேண்டும்.