வினை தீர்க்கும் வீரபத்திரர்
திருப்பறியலூர் என்று புராணத்தில் அழைக்கப்படும் இடம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர். இங்குதான் வீரபத்திரரின் வாயிலாக தட்சனை, சிவபெருமான் தண்டித்த வீரட்டான தலம் இருக்கிறது. இங்கு கருவறையில் வீராட்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். கோவில் மகா மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் வீரபத்திரருக்கு சன்னிதி இருக்கிறது. மழு, கேடயம், மணி, கபாலம், சூலம், கதாயுதம், கத்தி தாங்கி காட்சி தருகிறார்
