அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. என் தந்தையாகிய சிவபெருமானின் தேவி சுந்தரி என் பாச தளைகளையல்லாம் அழிக்கும் சிந்தூர வண்ண தேவி மகிஷனின் தலை மேல் பாதம் வைத்து அழுத்தும் அந்தரி நீல நிறம் கொண்டவள் என்றும் அழிவில்லாத கன்னி பிரம்மனது கபாலத்தை திருக்கரத்தில் தாங்குபவள் தாமரை மலரைப் போல் திருப்…
