உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
பேரழகியே
என் கர்மத்தால் வந்த பிறவியை தகர்த்து என் உள்ளம் உருகும்படியான அன்பை உண்டாக்கி
தாமரை போன்ற நின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் தொண்டினை தந்தாய்
என் கர்மத்தால் விளைந்த என் நெஞ்சில் இருந்த
ஆணவம், கன்மம், மாயை போன்ற
அழுக்கையெல்லாம் நின் கருணையால் போக்கி
அருள் பாலித்த உன்னை என்ன சொல்லி போற்றுவது!
