அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே, மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே? அபிராமி தாயே உன் திருவருளால் உலகம் பதினான்கையும் ஈன்றாய் அந்த திருவருளோட அதை காத்துக்கொண்டும் இருக்கின்றாய் பின்  சிந்தனைக்கேற்ப அழிக்கவும் செய்கின்றாய். திரு நீல கண்டருக்கு முன் பிறந்தவளே என்றும் இளமையாய் இருக்கும் திருமாலுக்கு தங்கையே மிக பெரும் தவத்தை உடையவளே உன்னை தவிர என்னால் வேறு தெய்வத்தை வழிபட இயலுமோ.