தெய்வம் ஒன்று.. வடிவம் மூன்று

கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமான் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதிகாலை தொடங்கி காலை 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் வேடுவ வடிவிலும், மாலையில் பார்வதி, விநாயகர், முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சகிதமாகவும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

விடாமுயற்சியே வெற்றி தரும்

வெற்றி பெறுவதற்கு நிறைந்த  விடாமுயற்சியையும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று  சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

பசு மனிதனாகி விடாது

போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  63

பிர்மாவுக்கு கல்பகாலம் பிராப்தமாகிற்து.  காலத்தை தவிர வேறுவித தெய்வங்கள் கிடையாது. அயன் மால் ருத்திரன் என்கிற மூன்று உருவமே காலத்தின் உண்டாக்கல், ரக்ஷித்தல், சம்மரித்தல் என்ற தொழில்களுக்கு நாமங்களாம் (பெயர்கள்). (சத மாயுர்பவ) நூறு வருடங்கள் மனிதர்களின் ஆயுட் நாட்களென்று வேதங்கள் முறையிடுகின்றது. வேதவாக்கியத்தின் பிரகாரம் சீவிக்காமல் சுவல்பகாலத்தில் அதாவது இளந்தை பருவத்தில் கௌமார பருவத்தில் யவ்வன பருவத்தில் வார்த்தீக திசையில் அல்லது பிரக்கச்சே தானே மரணம் அடைவதற்கு காரணம் அவர்கள் செய்யும் பாவகர்மங்களேயாம்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  62 

காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம் என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான் பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள். பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான் திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால் விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது.  தானியங்கள் பலிக்கின்றது. ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும் மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும் உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும் தேவேந்திரர்கள் பிறந்து…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  2

 3 – க்குரியவர் பரிவர்த்தனை பெற்று, செவ்வாய் பலம் பெற்று சுபரால் பார்க்கப்பட்டால், 6, 7 உடன் பிறப்புக்கள் உண்டு. உடன் பிறப்புக்கள் ஒருவருக்கொருவர் முன்னேறுவர். ஒற்றுமையில் குறைவு இருக்காது. சொத்துக்கள் சேரும். இவர்களுக்கு வரும் மனைவிமார்களால் குடும்பம் பிளவுபடும்.  3 – ஆம் பாவாதிபதி எத்தனை அம்சம் கடந்து உள்ளாரோ, அத்தனை உடன்  பிறப்புக்கள் உண்டு. 3 – ஆம் பாவாதிபதி வர்க்கோத்தம், உச்சம் பெற்றிருந்தால், எத்தனை அம்சம் கடந்துள்ளாரோ அதற்கு இரு மடங்கு சகோதர,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்

3 – க்குரியவர், 7, 8 – லிருந்து, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றால் அரசாங்க தொல்லைகளால் அவதி, பண விரயம், அரசாங்கத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுதல், காம இச்சையின் விளைவால் பல துர்க்காரியங்களை செய்தல், பல பெண்களின் தொடர்பு ஏற்படும். 3 – க்குடையவர், 11 – ல் செவ்வாயின் தொடர்பை பெற்றால் ஆண், பெண் உடன் பிறப்புகள் உண்டு. இளைய சகோதரர்களால் லாபம், சுகம் அனுபவிப்போன். அன்னியவர்களின் சகாயம் கிடைக்கும். 3 –…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  40

சனி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய சந்திரனுக்கு 10 – ல் 8 – க்குடையவர் நிற்க, ஊமை 5 – ல் குரு நிற்க, 11 – ல் சந்திரன் நிற்க காவியங்கள் செய்வார். 2 – க்குடையவரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ஊமை. 6 – க்குடையவர், சுக்கிரன், புதனும் கூடி 6, 8, – ல் நிற்க 8, 2 –…

சந்தோஷம் என்பது 15

மனிதர்கள்  சிந்தனையில் அதிக அளவு ஆக்கிரமித்துள்ள விஷயம் எது என்று சிந்தித்தோமானால் பணம் என்பது தான் விடையாக வரும் அதுவும் பணம், நிறைய, நிறைய பணம் என்று சிந்திக்காதவர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்று உறுதியாக சொல்ல முடியும் இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தால் மனிதன் நிகழ்காலத்தில் வாழுவதில்லை.

சந்தோஷம் என்பது 14

ஆனால் வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒரு கட்டத்தில் நின்று திரும்பி பார்க்கும் போது அதாவது இந்த சூழ்நிலை சாதாரண மனிதரில் இருந்து மிக உயர்ந்த வெற்றி பெற்ற மனிதர் வரை அனைவருக்கும் ஒரு கணமாவது தோன்றியிருக்கும் என்னென்ன இழந்துவிட்டோம் என்றும் எதற்கு வேண்டி இத்தனை ஓட்டம் என்றும். இதை பட்டியல் இட வேண்டியது உங்கள் வேலை ஏனென்றால்  எதை, எதை இழந்தீர்கள்  எதை, எதை இழந்ததாக நினைக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

சந்தோஷம் என்பது 13

நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்  எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் அதிகமாக உழைப்பது, ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது, வெற்றிக்கு வேண்டி ஊண், உறக்கமின்றி செயல்படுவது, பணம் சம்பாதிப்பது , பதவியை அடைய முயற்சிப்பது  இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால் ஒரே ஒரு பதில்தான் சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான் வேறு எதுவாக இருக்க முடியும்.

ஓட்டமட காளியம்மன்

ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள். ஒவ்வொரு முறையும், இப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக பாலங்கள், வீடுகள் கட்ட ஜல்லி மற்றும் செங்கற்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்கள், அவற்றிலிருந்து சிறுபகுதியை காணிக்கையாக அம்மனிடம் வைத்து வழிபாடு செய்துவிட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களின் பயணமும், கட்டுமானத் தொழிலும் விபத்துகளோ, தடைகளோ எதுவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 63

 சாந்தி யோகம் என்ற என்நூலைப் படித்தால், கருத்து நன்கு விளங்கும், ருத்ரம், சமகம் முதலிய வேதாந்த மந்திரங்கள், சாந்தி பஞ்சகம், அஷ்டாங்க யோகம் என்ற எல்லா மன சிகிச்சைகளும், நாம் இவைகளில் பெற்றுள்ள தேர்ச்சியையும் இவைகளின் அவசியத்தையும் புலப்படுத்துகின்றன. நம் மேதாவிகள் உடல்பிணி, மனப்பிணி என்பவைக்கு மேலாக பவப்பிணி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். சுகம் சாந்தியாக நிலைக்கும்.  தன்மைக்கு விரோதமான அவித்தை பிறப்பிறப்புப் பிணியைப் போக்கும் சிகிச்சையை யோகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். எனவே உடல் பிணி மனப்பிணி, மனப்பிணி,…

சுந்தர யோக சிகிச்சை முறை 62

 இன்னும் இரண்டு சுலோகங்கள் இந்த விசாரணையில் கலக்க வேண்டி யிருக்கிறது.  உடல்பிணி மட்டும் கவனித்தோம்.  உடல்பிணி, மனப்பிணியை உண்டாக்கும். மனப்பிணி, உடல்பிணியை உண்டாக்கும். தற்காலப் பிணி, விஞ்ஞான மேதாவிகள் மேல்நாட்டு ஆராய்ச்சி சிகரத்திலிருந்து முறையிடுகின்றனர்.  மன சிகிச்சை, அதாவது, சைகியாட்ரி (  PSYCHIATRY OR PSYCHOANALYSIS ) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இவர் கூற்றைக் கேட்டு, மருந்துக் கடலில் மிதக்கும் நம் மக்களுக்கு, இதைப் பற்றி ஏதோ உளறவும், விசாரிக்கவும், சிறிது ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த மன சிகிச்சை  யோகத்தின் …

சுந்தர யோக சிகிச்சை முறை 61

யோகியார்- யோகம் யாருக்குக் கிட்டுகிறது? என்ற கேள்விகளுக்குப் பரமாத்மா சொன்ன ” யுக்தம் ” பிணைந்ததான உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களை ஆராய்ந்தோம். இங்கு நோய் தடுத்தல் என்று விசாரணை  செய்யும் பொழுது, மேல் வறிய ஆராய்ச்சிகளுக்கு இடம் ஏது என்று வினவலாம்.  பரமாத்மா துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது எனக்கூறுகிறார்.  யோகத்தால் பிணியைத் தடுத்தலே நாம் எடுத்த விஷயமாகும்.  பிணி என்பது துக்கத்தின் ஒரு தொகுதி.  பிணி வந்தபின் அதைப்போக்கும்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 7

 பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல.   உண்மையனுபவத்தை அடைந்தபின் ஒருவன் உலகை அத்வீதீயப் பிரம்மமாகவே காண்கிறான். ஒரு பானையை எண்ணும் பொழுது மண்ணினுடைய ஞாபகம் நமக்கு தானே எழுவது போல், வியாவரிகப் பிரபஞ்சத்தை எண்ணும்பொழுது நமக்கு பிரம்மத்தின் எண்ணம் உதிக்கிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 6

உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும் ( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று. உலகம் பிரம்மமே, பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை. பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால் அது கானல் நீரைப் போல் பொய்யானது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் பிரம்மம் 5

ஆதியந்தமற்ற பிரம்மம் அவித்தையின் நீக்கத்தாலன்றி வேறெந்த ஸாதனத்தாலும் அடையப்படமாட்டாது. எது ஆத்மாவோ அதுவே நிகரற்றதும் அளவு கடந்ததும் உண்மைப் பொருளுமான பிரம்மம் என்று அறிய வேண்டும். அது ( ப்ருஹத் ) பெரிதாயிருப்பதால் பிரம்மம் என்று கூறப்படுகிறது.

சூரியன் 6

சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள். சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும். சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர், மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார்.  மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர். சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும் அதேபோல் மனவிக்கும்…

சூரியன் 5

சூரியன் 9ம் வீட்டில் இருந்தால் பட்டப்படிப்பில் வெற்றி, வாழ்க்கை வசதிகள் ஏற்படும். சூரியன் 12ம் வீட்டில் இருந்தால் எதிலும் தடை என்று ஒன்றை ஏற்படச்செய்வார்.  வெற்றி அடையும் தருணத்தில் தோல்வி ஏற்படும். சூரியன் 9ல் இருந்தால் செல்வ சீமானாவார், உறவினர்களை வெறுப்பார்,கடவுள் பக்தி இருக்கம், பெற்றோருக்கு அதிக நலமிராது. சூரியன் நீசமாக பிறந்தவர்களுக்கு, எத்தொழில் செய்யினும், எதிர்பாராத பாதிப்புகள்,விளைவுகள், உருவாகும். சூரிய உதயத்திலிருந்து 12.30 நாழிகை முதல் 15 நாழிகை வரையிலுள்ள காலகட்டத்தை அபிஜித் முகூர்த்தம் எனப்படும்.…

சூரியன் 4

சூரியன் சிம்மத்திலிருந்து சிம்ம நவாம்சத்திலேயே இருக்கப்பெற்றால் துணிவுள்ளவராகவும், கீர்த்திமானாகவும், செல்வச்சீமானாகவும் விளங்குவார். சூரியனும், சந்திரனும் 3ல் ஒன்று கூடி இருந்தால் சகோதர, சகோதரிகளால் அனுகூலம் பெற வாய்ப்பிராது. சூரியன் மகர ராசியில் இருக்கப்பெற்றால் நிரந்தரமான தொழில் அமையாது, வாழ்க்கையில் சந்தோஷம் இராது.  மனதில் உறுதி இராது. 1ல் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை தாரதோஷத்தை உண்டாக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஒரு ஜாதகத்துக்கு அதேபோல் சூரியன், சுக்கிரன் இணைவுள்ள ஜாதகத்தை சேர்த்துக்…

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

அதிசய முருகர்

தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப் பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  4

சூரியனையும், சந்திரனையும் போன்றே ஒளி மண்டலங்கள் எதனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றனவோ, ஆனால் எது அவற்றின் ஒளியால் பிரகாசிக்கப்படமாட்டாதோ, மேலும் அனைத்துமே எதனால் பிரகாசிக்கின்றதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. தீயானது ஒரு இரும்பு குண்டை உள்ளும், புறமும் வியாபித்து எப்படித் தனது சக்தியால் பிரகாசிக்குமோ அப்படியே பரப்பிரம்மம் உலகனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்து தனது சக்தியால் பிரகாசிக்கிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  3

எல்லாப் பொருள்களும் அதில் பிணைக்கப்பட்டுள்ளன. எல்லாச் செயல்களும் அந்த அறிவுடன் தொடர்புள்ளன, பாலில் எங்கும் நெய் வியாபித்திருப்பது போல் பிரம்மம் உலகில் எங்கும் வியாபித்திருக்கிறது. ஸ்தூலமாயில்லாமலும் ஸூக்ஷ்மமாயில்லாமலும், நீளமாயில்லாமலும், குட்டையாயில்லாமலும், பிறப்பில்லாமலும், தேய்வில்லாமலும், வடிவும் குணமும் வண்ணமும் இல்லாமலும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

இல்லை என்று சொல்லாதே

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும், எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ

உங்களை நீங்களே நம்புங்கள் 

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை – இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் (தேவ தேவியர்களிடத்தும்) மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதிமோட்சமில்லை. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  61

கால பிரசம்ஸை …..  காலமானது  சகல பூதங்களை உண்டாக்கவும், காப்பற்றவும், அழிக்கவும் செய்கின்றது.  தூக்கம் ஜாகரணை இவைகளை செய்கிறது. மிகவும் பராக்கிரமம் உள்ளது. கால பிராப்தமானதால் தேவர், சித்தர், சாத்தியர், உரகர் முதலிய தேவர்களையும் பிடித்து ஆட்டுவிக்கின்றது. சகலமும் காலத்திற்கு அடங்கியிருக்கின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  60

கால ஞானம்              இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.  சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…

சுந்தர யோக சிகிச்சை முறை 60

கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ   நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் .  இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம். மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது. அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.                       

சுந்தர யோக சிகிச்சை முறை 59

ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும் உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும், சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம். மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல் உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும்.  சுத்தமான படுக்கையில் தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம். விழிப்பு– மிதம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 58

உழைப்பு — மிதம் –உடல் சக்தி ஏற்கும்.  வாழ்வுக்கு அவசியமான  உழைப்பே மிதம்.  உடல் தாங்காத அதிக உழைப்பு யுக்தமாகாது. ஹிதம் — பயன் தரக்கூடிய கெடுதலை விளைவிக்காத, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான உழைப்பே ஹிதம். மேத்யம் — உழைப்பு அல்லது செயல், எவ்விதத்திலும் சுத்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அசுத்தச் செயல் துக்கத்தை விளைவிக்கும்.  சுத்தமே, மங்களமே யதார்த்தைத்க் கொடுப்பதே மேத்யம் – யுக்தம். தூக்கம்–மிதம்–தூங்குவது அவசியம்.  ஆனால் அளவில்லாது உறங்கிக் கம்பளிக்கடியில் பாதி வாழ்வைக் கழிப்பது…

சந்தோஷம் என்பது 12

 தாழ்வு மனப்பான்மைக்கு முதல் அறிகுறி தேவையில்லாததிற்க்கு கூட அனுசரித்து போதல் இரண்டாவது அறிகுறி நம்மை நாமே வெறுப்பது  நம்மைப்பற்றி நாம் கவனிப்தைப் போல் மற்றவர்கள் ஆராய மாட்டார்கள் மற்றவர்களுக்கு இதை தவிர எத்தனையோ முக்கியமான அவசரமான வேலைகள் இருக்கிறது.  நாம் செய்வது நமக்கு  தெளிவாக தெரிந்தால் போதும் அதில் நமக்கும், பிறருக்கும் தீங்கு நிச்சயமாய் இல்லை எனற நம்பிக்கை நமக்கு இருந்தால் போதும்.

சந்தோஷம் என்பது 11

உண்மையில் உறவு சிக்கல் என்பது நமக்கும் பிறருக்கும் உண்டான உறவு சிக்கல் அல்ல நமக்கும் – நமக்கும் உண்டான உறவு சிக்கலை இங்கு குறிப்பிடுகிறேன். நாமே நமக்குள் எத்தனை விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தால் மட்டுமே அதை சீர் செய்ய முடியும் செய்ய கூடாத விஷயத்தை  செய்ய நமக்குள் வரும் ஆர்வத்தைத்தான் நாமே நமக்குள்  முரண்படுதல் என்கிறேன்.

சந்தோஷம் என்பது 10

 இப்படி விஷயத்தை சிந்திக்கும்  போது அடித்தல் என்கிற விஷயமே வரவில்லை அதனால் நாம் புரிந்து கொள்ளலாம் அடித்தால் குழந்தை அதிக மதிப்பெண் பெறமுடியாது என்று இப்படி தர்க்க ரீதியாய் சிந்திக்கும் போது அடித்தல் எனும் செயல் நடைபெறாது அதற்கு மூலமாய் இருக்கிற கோபம் செயலற்றதாகிவிடும்.  கோபம் செயலற்றுவிட்டாலே அதிக பட்ச உறவு சிக்கல்களில் இருந்து விடுபட்டு விடுவோம்

சந்தோஷம் என்பது 9

உண்மையில் மார்க் வாங்குவது என்பது எது, எது சம்பந்தப்பட்ட விஷயம் என்று யோசித்தால் அதிக மார்க் வாங்க அதிகம் படிக்க வேண்டும், அதிகம் படித்ததை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும் நினைவில் வைத்ததை சரியாக நேரத்திற்கு நினைவுக்கு கொண்டு வரும் ஆற்றலும் வேண்டும் அது மட்டுமல்ல புரிந்துகொள்ளும் பக்குவமும் வேண்டும் எதையும் புரிந்து கொள்ளும் போது சுலபமாகிவிடும். அப்படி சுலபமானால் பரிட்சை சுலபமாகும் அதில் மார்க்கும் அதிகம் வரும்.

J கிருஷ்ணமூர்த்தி

வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் அமைப்புகள் அனைத்தும் உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன நீங்களும் இணங்க விரும்புவதால் அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது   J கிருஷ்ணமூர்த்தி   இது நிஜமா என்று அறியவேண்டுமானால் நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும் அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும் அப்படி எல்லோராலும் முடியுமா முடிந்தால் J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா தவறா என்பது தெரியவரும்

கல்யாண சுப்ரமணியர்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம்  108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும் 

அதிசய கருடன்

நாச்சியார் கோயிலில் கல் கருடன் சன்னிதி உள்ளது. ஒன்பது நாகங்கள் அவர் உடலில் இருப்பதால், நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஆகும். கல் கருடனே உத்ஸவத்தில் வலம் வருவார். அதன் எடையை ஆரம்பத்தில் 8,16,32,64 பேர்கள் வரை சுமப்பதும், திரும்ப கோயிலில் நுழைந்து கர்ப்பக்கிருஹம் செல்லும்பொழுது 64, 32, 16, 8 பேராகப் படிப்படியாகக் குறைந்து கடைசியாக நான்கு பட்டர்கள் மட்டும் சுமப்பதும் ஒரு அதிசயம் என்றால், கருடன் உத்ஸவத்தில் வீதிஉலா வரும் பொழுது கருடனுக்கு வியர்ப்பதும், பட்டர்கள்…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

செல்வ வளம் தரும் வல்லக்கோட்டை முருகன் கோவில் காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  39

சூரியனும், சந்திரனும் கூடி நட்பு உச்சமடைய 2 – ல் 4, 10 – க்குடையவர்கள் நிற்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். லக்கினாதிபதியும், 4 – க்குடையவரும் கூடி 9 – ல் நிற்க, ராகு கூடி நிற்க, புதன் 6 – ல் நிற்க, குரு லக்கினத்திலிருந்து பார்க்க விநோத வித்தையில் கீர்த்தியுள்ளவர். 3 – ல் 3, 4, 6, 8 – க்குடையவர்கள் நிற்க, 9 – லிருந்து செவ்வாய் பார்க்க விநோத…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 38

லக்கினாதிபதி சூரியனுடன் கூடி 5 – ல் நிற்க, லக்கினத்தை குரு பார்க்க கணிதத்தில் வல்லவர். சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்க்க மேற்படி பலன்.  4 – ல் குரு நின்று சனியைப் பார்க்க, புதன் லக்கினத்தில் நிற்க, 2 – ல் சூரியன், சுக்கிரன் கூட வாகடநூல் பண்டிதர் லக்கினத்திற்கு 4 – லிலும், சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சனி நிற்க மேற்படி பலன். 7, 6 – க்குடையவர்கள் கூடி 4 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  37

11 – ல் ,குரு இருந்து சுக்கிரன், புதன், சந்திரன், செவ்வாய், கேது, லக்கினாதிபதி பார்க்க  ஞானநூல் ஆசிரியர். 11 – ல் குரு இருந்து, சூரியன், பூர்ண சந்திரன், புதன்  கல்வியில் தேர்ச்சி உள்ளவர். 11 – ல் குரு இருந்து சூரியன், பூர்ண சந்திரன் புதன் நால்வரையும் பார்க்க வீரத்தன்மை உடையவர்.  4 – க்குடையவரும் லக்கினாதிபதியும் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, கணிதத்தில் வல்லவர்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 36

லக்கினத்தில் குரு இருந்து, புதன், சந்திரன், சுக்கிரனைப் பார்க்க ஸ்திர லக்கினத்தில் ஜெனனமானவர் தனம். கல்வியில் சிறப்புடன் இருப்பார். லக்கினத்தில் குரு இருந்து கேது – சந்திரன் – செவ்வாய் – புதன் நால்வரையும் பார்க்க மேற்படி பலன்.  11 – ல்  சந்திரன், இருந்து சுக்கிரன், சூரியன், சனி, ராகு ஐவரையும் பார்கக கல்வி அறிவு உடையவர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  59

சப்த  பரீக்ஷ வாத தோஷ குறி …..  வாதத்தில் சமானமான வார்த்தைகள் உண்டாகும். பித்த தோஷ குறி ……  பித்த தோஷத்தில் சிரிப்பும் பிதற்றலுமான வார்த்தைகளுமாக இருக்கும். கப தோஷ குறி …..  கபதோஷத்தில் ஹீனசுரமான வார்த்தைகளுமாயிருக்கும். துவந்த தோஷ குறி …..  துவந்ததத்தில் (சார்ந்து ) மிசிரமமான வார்த்தைகள் உண்டாகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  58          

ரூப பரீக்ஷ வாத ரூப பரீக்ஷ …..  வாத தோஷத்தில் தேகத்தைப்  பார்த்தால் கருநிறமாக தோணும். பித்த ரூப பரீக்ஷ …..  பித்த தோஷத்தில் தேகத்தைப் பார்த்தால் மஞ்சள்  நிறமாயும் அல்லது  சிகப்பு  நிறமாயும் தோணும். கப ரூப பரீக்ஷ …..  கபதோஷத்தில் தேகமானது வெளுத்த நிறமாய் காணப்படும். துவந்த ரூப பரீக்ஷ …..  துவந்த தோஷத்தில் தேகமானது இரண்டு தோஷ நிறம் கலந்து சார்ந்து காணும். சந்நிபாத தோஷ ரூபம் …..  சந்நிபாத தோஷத்தில் தேகமானது…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 3

கடவுளைக் காண வாக்குவாதம் உதவுமா ? ஆன்மீக அனுபவம் ஒன்றுதான் நமக்கு ஞானமாக அல்லது உண்மை மதமாக இருக்கிறது. ஆன்மாவைப் பற்றி காலங் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதால் அதை நாம் அறிய முடியாது. வெறும் கொள்கைகளைப் பேசுவதற்கும்  நாத்திகத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. வெளிச்சத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் எப்போதும் எனக்குச் சொந்தமாகிறது. ஓரு நாட்டைச் சென்று பார்த்தால் பிறகு அது உன்னுடையதாகிவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் சுய அனுபவத்தைப் பெறவேண்டும். ஆசிரியர் உனக்கு…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார்  2

அறிவு வேறு  உணர்வு வேறு உணர்வு என்பது ஒரு தளை. உருவத்துக்கு முந்தியது அறிவு என்னும் ஒரு விவாதம் இருக்கிறது. ஆனால் அறிவு தான் எதற்கும் காரியமாகிறது எனில் முறைப்படி அதுவே காரணமாகவும் ஆதல் வேண்டும். இதுதான் மாயை, கடவுள் நம்மைப் படைக்கிறார். நாம் கடவுளைப் படைக்கிறோம். இதுதான் மாயை. காரண காரியமாகிய வட்டத்திற்கு முடிவு இல்லை மனம் உடலைப் படைக்கிறது. மனத்தை உடல் படைக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படுகிறது, குஞ்சிலிருந்து முட்டை வெளிப்படுகிறது. மரத்திலிருந்து விதை…

கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் 1

நீ  நான் என்றும் வேற்றுமை உணர்வு எனக்கு இருக்கும் வரை கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்று பேசியே ஆகவேண்டும். அதன் விளைவுகளுக்கு நான்உட்பட்டுத்தான் ஆகவேண்டும். நம் இருவருக்கும் இடையில் இலட்சியமாக விளங்கும் மூன்றாவது ஒன்று இருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முக்கோணத்தின் சிகரமாகத் திகழ்வது இந்த மூன்றாவது சக்தி. நீராவி பனியாகி பின்னர் நீராகிறது. அந்த நீர் பிறகு கங்கையாகிறது. ஆயினும் நீராவி நிலையில் இருக்கும் போது அங்கு நீர்  இல்லை. படைப்பு அல்லது மாற்றம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 57

உணவு — மிதம்  — மிதமாக தேவைக்குகந்தவாறு உண்ண வேண்டும். ஹிதம் — உடலுக்குகந்தவாறு இருக்க வேண்டும். மேத்யம் — சுத்தமானதாக, உன்னதம் பெற்றதாக சத்துள்ளதாக இருக்கவேண்டும். ஓய்வு — மிதம் — அமிதமான ஓய்வு சோம்பலாகும். ஹிதம் –நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும்.  ஓய்வு சங்கம், இடம் தன்மை என்பவைகளால் பாதிக்கப்படும்.  சினிமா, டிராமா கொட்டகை, சூதாடும் இடம், சாக்கடை முதலிய அசுத்த நிலம், உகந்த ஆட்டம், கலை, கானம் சம்பந்தமற்றவையே ஹிதம் ஓய்வாகாது. மேத்யம் —…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  2

எதையடைந்த பின் வேறு அடைய வேண்டியது எதுவுமில்லையோ, எந்த ஆனந்தம் அனுபவிக்கப்பட்ட பின் அதற்கு மீறிய ஆனந்தம் வேறு ஒன்று வேண்டப்படுவதில்லையோ, எதையறிந்த பின் வேறு அறிய வேண்டியது எதுவுமில்லையோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.  பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்கள் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி அந்த அளவு கடந்த பிரம்ம ஆனந்தத்தின் சில திவலைகளையே அனுபவித்து ஆனந்தமுடையவர்களாகிறார்கள்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம்  1

                                                பி ர ம் ம ம் ஸத் – சித் – ஆனந்தமாயும், இரண்டற்றதாயும், அளவு கடந்ததாயும், என்றுமுளதாயும், ஒன்றேயாயும், உள்ளதையெல்லாம் வியாபித்து நிற்பதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக. இரண்டற்றதாயும், பிளவுபடாததாயும், ஒன்றேயாயும் ஆனந்த வடிவாயும், காணும் பொருளெல்லாம் கனவுபோலொதுக்கப்பட்ட பின் அடிப்படையாக எஞ்சி நிற்பதென்று வேதாந்தத்தில் விளக்கப்படுவதாயும் எது உளதோ அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 21

நான் தேவதைகளை வணங்கவில்லை.  நான் தேவதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அதனால் அவன் எந்த  தேவதையையும் வணங்கமாட்டான்.  அந்த நிலையில் அவனுக்குக் கடமைகளும் இல்லை.  எல்லாச் செயல்களுக்கும் மூலமாயிருக்கும் எனது ஆத்மாவையே நான் மேன்மேலும் வணங்குகிறேன்.

இரண்டாம் பாவம்

இரண்டாம் பாவம் தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

லக்கின பாவம்

லக்கின பாவம் உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால்…

இலை எல்லாம் வெட்டி விட்டு

இருக்கும் இலை எல்லாம் வெட்டி விட்டு, இப்போது வேறு வழியில்லாமல் மின்விசிறி என்னும் இரும்பு இலையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறோம். 

வாழ்க்கை  ஒரு பயணம்..

வாழ்க்கை  ஒரு பயணம்.. நல்லதோ  கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்! இன்பம் வந்தால் ரசித்துக்கொண்டே செல்லுங்கள்.. துன்பம் வந்தால் சகித்துக்கொண்டே  செல்லுங்கள்.. தேங்கி விடாதீர்கள்! உழைத்து ஓய்ந்தாலும் பலருக்கும் வாழ்வில் விடியல் ஏற்படுவதில்லை.. கனவுச் சுமைகளின் பாரம் குறைவதும் இல்லை..!

கால பைரவர் வழிபாடு

கால பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை  உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப் பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சுவர்ண கால பைரவர், செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

ஆதி.2

தத்துவங்களில் சில உபநிடதம், லோகாதாய தத்துவம், சமண தத்துவம், பெளத்த தத்துவம், சாங்கிய தத்துவம், யோக தத்துவம், நியாய தத்துவம், வைசேஷிக தத்துவம், மீமாம்ச தத்துவம், அத்வைதம், விஷிஷ்டாவைதம், துவைதம் இன்னும் இப்படி பல உண்டு.  இதில் நாம் செய்ய போவது, தத்துவங்களை ஒரளவாவது தெரிந்து கொண்டு நம் வாழ்கைக்கு தற்போதய சூழ்நிலையில் அது தேவையா? தேவையென்றால் எந்த அளவு என்பதை நமக்குள் நாம் சிந்திக்கவே இந்த முயற்சி பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள கோடானு கோடி விண்மீன்களும், கிரகங்களும்…

ஆதி.1

 மனிதனின் தேடல்கள் பலவற்றில் நான் யார் என்ற தேடலும் அடக்கம் அந்த தேடலின் விளைவாக தோன்றிய கருத்துக்களே தத்துவங்கள் எனப்படுகின்றன.  உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள மனிதர்களின் தேடு பொருளாகவே இந்த நான் யார் என்பது இருந்திருக்கிறது.  இந்தியாவில் இப்படி தேடியவர்களை மகரிஷிகள், யோகிகள், சித்தர்கள் என்று சொல்லுவார்கள் இவர்கள் நான் யார் என்பதுடன் இந்த உலகம், அதன் இயக்கம் இதையும் தாண்டி இந்த பிரபஞ்சம் அதன் செயல்பாடுகள் அந்த செயல்பாட்டிற்க்குண்டான சக்தி எது, எப்படி, அது…

உபநிஷதம்

மனிதன் மூன்று பகுதிகளால் ஆனவன். 1. உடல், 2. மனம், 3. ஆன்மா இது உபநிஷதங்களின் அடிப்படை கருத்து – உபநிஷதங்கள் – மனித வாழ்வை ஆராய்கின்றன.  இதில் நான் யார், எனது மூலம் எது? எனது முடிவு எது?  இது போன்ற நிலையில் ஆராய்ச்சி தொடருகிறது.  அடுத்து, உலகம் – இதன் தோற்றம், மனிதனுக்கும், உலகத்திற்க்கும் உள்ள உறவு போன்ற நிலையில் ஆராய்கிறது. அடுத்து, இது இரண்டுக்கும் மூலமாயும், ஆதாரமாயும் உள்ள சக்தியை அதாவது இறைவனை,…

கடவுளுக்கு உருவம் தேவையில்லை 

ஞானம் பலம் கிரியையே ( அறிவு ஆற்றல் செயல் ) கடவுள். கடவுளுக்கு உருவம் தேவை இல்லை. ஏனென்றால் எல்லையற்ற அறிவை ஏந்தி வைத்திருக்க  ஒரு தகுந்த உருவம் தேவை. உண்மையில் கடவுளுக்கு இத்தகைய உதவி தேவைப்படுவதில்லை. இயங்கும் ஆன்மா என்பது ஒன்றில்லை. ஒரே ஆன்மாதான் உள்ளது. ஐந்து உயிர்த் தத்துவங்கள் சேர்ந்துள்ள இந்த உடலை ஜீவாத்மா அடக்கி ஆள்கிறது. இருப்பினும் ஜீவாத்மா என்பது பரமாத்மாவே. ஏனெனில் பரமாத்மாவே அனைத்தும். ஜீவாத்மாவான நீ உன்னிடம் இல்லாத ஒன்றை…

உண்மையான அறிவும் – மெய்யான அறிவும்

ஒரு பொருளுடன் சேர்த்துப் பார்க்காமல் தனித்தனியே பார்க்கும் போது அதை அதனுடைய குணம் என்கிறோம். வேறுபாடு இன்னது என்பதை நம்மால் நிச்சயமாகக் கூற இயலாது. பொருள்களைப் பற்றி நாம் காண்பது உணர்வதெல்லாம் கலப்பற்ற தனியான இருப்பு என்பதே. மற்றவை அனைத்தும் நம்முள்ளே இருக்கிறது. நம்மிடமிருக்கும் எதற்கும் அது இருப்பது ஒன்றே நிச்சயமான சான்றாகும். ஒன்றைப் பலவாகப் பார்ப்பது இரண்டாம் நிலையிலுள்ள ஒர் உண்மையே. பாம்பு என்பது இருப்பது தன்னளவில் உண்மை. ஆயினும் கயிற்றைப் பாம்பாக நினைப்பது தவறு.…

சுந்தர யோக சிகிச்சை முறை 56

எது நன்மை? என்று ஆராய வேண்டும்.  இந்த ஆராய்ச்சி மேற்கூறப்பட்ட ஐந்து திட்டங்களையும் பற்ற வேண்டும். எது நன்மை என்றால், எது மிதம், ஹிதம், மேத்யமோ, அது தான் நன்மை, மிதமாக மட்டும் இருந்தால் போதாது என்பதால் தான் இம்மூன்றையும் உள்ளடக்கிய ‘ யுக்தம் ‘ என்ற பதத்தை பகவான் வீசுகிறார்.  மிதமான நன்மையைத் தரக்கூடிய சுத்தமான அல்லது உன்னதமானதே உசிதமானதே தகுதியானது.  சிலர் ” மேத்யம் ” என்ற பதம் உணவுக்குத்தான் உபயோகமாகும்.  மற்ற நான்கு…

சுந்தர யோக சிகிச்சை முறை 55

யுக்தம் என்ற பதத்தை பரமாத்மா ஒப்பற்ற அர்த்த புஷ்டியுடன் உபயோகித்திருக்கிறார். யுக்தம் என்ற பதத்தை உசிதமானது என்று மொழி பெயர்த்தால்தான், இதில் யுக்தம் அடங்கிய பல கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம். யுக்தம் என்ற பதத்திற்கு ‘மிதம்’ (MODERATE) என்று மட்டும் பொருள் கூறுவது.  சுலோகத்தின் ஆழ்ந்த விசாலமான கருத்துக்களைக் குறுக்குவதேயாகும். உசிதம் என்ற பதத்தை தகுதியான என்ற தமிழ் வார்த்தை விளக்கும். பரமாத்மா, யுக்தம் என்ற பதத்தை உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களுடன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 54

 யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு  யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில்  உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும்,  விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 57

நேத்திர பரீக்ஷ திரிதோஷ  நேத்திரம் …..  திரிதோஷத்தில் மூன்று  தோஷ  குறிகள் ஒன்றாயும் மேகவர்ணமாயும் புகனநேத்திரமாயும் இருக்கும். திரிதின மரண நேத்திர  லக்ஷணம் …..  சந்நிபாத லக்ஷணங்களுடன் எந்த ரோகயின் ஒர நேத்திரமானது பயங்கர   ரூபத்துடன்  கலந்து  இருக்கிறதோ அந்த மனுஷன் மூன்று நாளையில் மரணமடைவான். மரண நேத்திரக் குறி …..  கண்கள் கறுப்பு  நிறமாயும் சோதி ஹீனமாயும்  கண் உள்ளாகியும் மந்த திருஷ்டியாயும் எவனுக்கு  இருக்குமோ அவனும்  எமனை தரிசனம் பண்ணுவான். ஏக தின…

அனுபவ வைத்திய தேவரகசியம் இரண்டாவது காண்டம் 56

நேத்திர  பரீக்ஷ வாதாதிக்க நேத்திரம் …..  வாததிக்கத்தில் நேத்திரங்கள் சலத்துடன் கூடி கண்ணீர் வடிந்துக் கொண்டு புகை  நிறமாயும், மஞ்சள்  நிறமாயும் இருக்கிறது. பித்தாதிக்க நேத்திரம் …..  பித்தாதிக்கத்தில் நீலநிறம் அல்லது கறுப்பு, சிகப்பு கலந்த  நிறம், தீபதுவேஷியாயும், வெப்பமாயும் இருக்கும். கபாதிக்க நேத்திரம் …..  கபாதிக்கத்தில் மந்தமந்த பார்வை, வெண்மை நிறம், ஜலத்துடன் கலந்து பார்வை ஹீனமாயும் இருக்கும். துவந்த தோஷ நேத்திரம் …..  துவந்தத்தில் இரண்டு தோஷ லக்ஷணம் ஒன்றாயிருக்கும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  55 

நேத்திர  பரீக்ஷ வாத தோஷ நேத்திரம் …..  வாயு தோஷத்தில் கண்களானது  சிகப்பு  நிறமாயும், புகை நிறமாயும், ரவுத்திர  நிறமாயும், கண்களில்  நீர் வடிதலுமாயும் இருக்கும். பித்த தோஷக் கண் ……  பித்த தோஷத்தில் மஞ்சள்  நிறம், சிகப்பு வர்ணம், நீலவர்ணம் மிசிரமாயும் (சார்ந்து) தீபத்தை பார்க்க முடியாமை என்னும் குணங்களுடையது. கபதோஷக் கண் ….. கபதோஷத்தில் கண்களானது  நீர் கோர்த்துக் கொண்டு பார்வையானது, சபலமாயும், வெண்மை நிறமாயும் பார்வை  மட்டாயும் இருக்கும்.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகல யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது தனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபாயோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

முன்பின் அறியாத

முன்பின் அறியாத இருவருக்குள்ளே மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை பெறுவோம். இரண்டு நண்பர்களுக்குள் மத்தியஸ்தம் செய்தால் ஒரு நண்பனை இழப்போம்..  

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  20

 பரமாத்மா பரமானந்த ஸ்வரூபமுடையதாகையால் அதில் அறிபவன், அறிவு அறியப்படுவது என்ற வேற்றுமைக்கு இடமில்லை, அது ஒன்றாகவே பிரகாசிக்கிறது

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  19

 எப்படி ஒரு கயிறு அதை உள்ளபடி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும் இரண்டு வகையாகக் காட்சியளிக்கிறதோ அப்படியே ஆத்மா எப்பொழுதும் ( ஞானிக்குப் ) பரிசுத்தமாயிருப்பினும் அஞ்ஞானிக்கு அழுக்கடைந்தது போல் தோன்றுகிறது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  18

 விழிப்பிலும், கனவிலும் எப்படியோ அப்படியே ஆழ்ந்த உறக்கத்திலும் சக்தி மங்காததாலும் மாறுபடாததாலும் ஆத்மா அறிவுடன் கூடியே இருக்கிறது.  எங்கு துவைதம் உண்டோ என்று சுருதி கூறுகிறபடி அறியும் பொருள்களில்தான் வேறுபாடு.

சந்தோஷம் என்பது 8

அடுத்ததாக இப்படியும் சிந்திக்க வேண்டும் அடித்தால் மார்க் வருமா, வராது, வந்தாலும் வரலாம் இப்படி இரண்டு விடைகள் வரும் காரணம் அடிக்கு பயந்து தனக்குள் இறுகி  எதையும் புரிந்து கொள்ளும் நிலை இழந்து விட்டால் வராது என்பதே விடை அடுத்ததாக அடிவாங்க கூடாது எப்படியாவது முயற்சி எடுத்து ஊக்கமாய் செயலாற்றும் தன்மைக்கு நகர்ந்தால், வந்தாலும் வரலாம் எனும் விடை வரும்

சந்தோஷம் என்பது 7

எதையும் தர்கரீதியாய் சிந்தித்து பழகுங்கள் எப்படி தர்கரீதியாய் சிந்திப்பது என்று கேட்டால் கீழே உள்ள உதாரணம் அதை விளக்கும். தந்தை மகனை அடிக்கிறார் பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் இங்கு தந்தை மகனை அடித்ததில்‍ வெளிப்படையாய் தெரியும் விஷயம் மகன் மதிப்பெண் குறைவாக பெற்றது காரணம் என்று. ஆனால், அது மட்டுமல்ல, காரணம் மகனின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற அச்சம் தான் அப்படி கோபமாக வந்திருக்கிறது.

சந்தோஷம் என்பது 6

கோபம் இதைபற்றி படிப்படியாய் சிந்திப்போம் யாரோ அறிஞன் சொன்னது கோபம் கையாலாகததனத்தின் வெளிப்பாடு என்று.  உண்மைதான் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம்  நிற்கும் போது அதுவும் நாம் நம்மைவிட தாழ்ந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களால் அந்த சூழ்நிலை உருவானது என்று நாம் நினைக்கும் போது நமக்கு வரும் உணர்வு கோபம்.  இந்த கோபம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களின் நிலையையும் அசிங்கப்படுத்தி அலங்ககோலப்படுத்தி விடுகிறது.  கோபம் கொண்டவனுக்கு புறக்கண்களும், அக கண்களும் தெரிவதில்லை.  இவை எல்லாம் மனிதனை…

சூரியன் 3  

சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம். சூரியன் புதனுடன் மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்தால் ஞானியாகவும், தலைவராகவும் திகழ்வார்.  நான்கு கிரகங்கள் ஒரு ராசியில் நிற்க, அதில் ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் சிறந்த ஞானியாக திகழ்வார். சூரியன், செவ்வாய் சேர்க்கை 10 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் அரசியலில் கொடிகட்டி பறப்பார். சூரியனுக்கு 10ல் செவ்வாய் இருந்தால் மதுபானம் அருந்துவதிலும், மாதர் சுகத்தில் ஆர்வம் கொள்வார்.  சூரியனுக்கு 10ல் குரு…

சூரியன் 2

 சூரியனுனும்  செவ்வாயும் கூடி எங்கிருந்தாலும் ஜாதகி இளம் விதவையாகும் அவலநிலை.  குருபார்வை ஏற்படின் இதற்கு விதிவிலக்கு உண்டாகும். சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பூர்வீகச்சொத்து  நிலைப்பதில்லை.   தந்தை காலத்திற்குள் பூர்வீகச் சொத்து விரையமாகிவிடும். சூரியனுன்  புதன் சேரும்போது, புதாத்தியயோகம், நிபுணத்துவயோகம் தரும்.  பட்டப்படிப்பு ஏற்படும்.  படிக்காத  மேதையாக திகழ்வார்கள். சூரியனுடன்  சனி சேர்ந்து இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒற்றுமை இருக்காது கருத்து வேறுபாடு ஏற்படும். சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் மனைவி வழியில் பிரச்சனை…

சூரியன் 1

சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டுப்பட்டுத்தான் உலகம் இயங்குகிறது.  ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் ஆத்மகாரகன், சந்திரன் மனோகாகரகன் தாய், தந்தையர் ஆவார். சூரியனும், சந்திரனும் 0 டிகிரியில் சேரும்போது அமாவாசை ஏற்படுகிறது. சூரியனும், சந்திரனும் 180 டிகிரியில் இருக்கும் போது பெளர்ணமி ஏற்படுகிறது.   சூரியன் 5ம் பாவத்தை அடைந்தால் சந்தானம் தங்காது.  சூரியன் ஒரு ஆண் கிரகம்.  பகலில் பிறந்த ஜாதகருக்க சூரியன் பிதுர்கிரகம் சிம்மம் ஆட்சி வீடு, மேஷம் உச்சவீடு, துலாம் நீசவீடாகும். சூரியன் & செவ்வாய்…

சிந்திக்க   முக்கியமான விஷயம்.

உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும், வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை தயாராகவே இருக்கிறது.  ஆனால் நாம் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே சாத்தியம் இயற்கையின் ஆற்றலை பேணி காத்து இணைந்து வாழ்ந்தால் பூலோகம் சொர்கலோகமாகும், மாறாக இயற்கையை அழித்து நாம் விரும்பும் படி வாழ்ந்தால் இயற்கையும் நம்மை அழிக்கும் அப்போது பூலோகம் நரகமாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 35

 புதன் 2 – ல் நிற்க, செவ்வாய் திரிகோணமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்க, சந்திரன் நட்பில் நிற்க, குரு 9 – ல் இருந்து பார்க்க, சூரியன் லக்கினத்தில் நிற்க, உயர்ந்த காவிய நூல் படைப்பார். குரு திரிகோணமேரி, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் லக்கினத்தைப் பார்க்க, சனி லக்கின கேந்திரமடைய அழியாத கீர்த்தி, காவியம் படைப்பார்.

கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 34

 சுக்கிரனும், புதனும் 2 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.  சந்திரன், சுக்கிரன், புதன் மூவரும் கூடி 4 – ல் நிற்க, குரு பார்க்க கல்விமான்.  2, 3, 4, 5, 7, 9, 10 இதற்குடையவர்கள் சுபர்களாயிருந்து ஆட்சி பெற்று நிற்க கல்விமான். சூரியனை 2 – க்குடையவர் பார்க்க, செவ்வாயை குரு பார்க்க நூல்களை கற்றவர். தமிழ்ப்புலவர்.  புதனை லக்கினாதிபதி பார்க்க, சனி நட்புடன் இருக்க தமிழ் புலவர்.  சுக்கிரன் உபய…

சுந்தர யோக சிகிச்சை முறை 54

                யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு                 யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில் உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும், விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 53

                நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனஸ்நத                 ந சாதி ஸ்வப்னஸீவஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஸுன மிதம் மீறி உண்பவனுக்கும், உண்ணாமலே இருப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குகிறவனுக்கும், தூக்கத்தைக் கெடுத்து சதா விழித்திருப்பவனுக்கும் யோகம் கிட்டாது. இவ்விரு பான்மையர்களும் யோகிகளல்லர், இவர்கள் வாழ்க்கை   நோய் தடுக்கும் யோக வாழ்க்கை ஆகாது.

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  17

ஒருவன் தனது ஆத்மாவைப் புண்ணியம் பாவம், சென்றது வருவது, காரணம் காரியம் என்ற எல்லாத் தளைகளினிறும் விலகிச் சுதந்திரமாய் விளங்கும் பரப்பிரம்மம் என்று அறியவேண்டும்

ஸ்ரீ  சங்கரரின் பார்வையில் ஆத்மா  16

எதுவரை ஒருவன் உடலே தான் என்ற எண்ணமுடையவனோ அதாவது ஆத்மானுபவம் பெறவில்லையோ அதுவரை உலகக் காட்சியும் அதனுடைய உண்மையும் பாதிக்கப்படுவதில்லை.

வெற்றிக்கு வித்திட 3

எந்த ஒரு செயலை செய்வதாய் இருந்தாலும் அதற்க்குண்டான மனநிலை இருக்க வேண்டியது அவசியமாகும் செய்யும் செயலுக்கு உண்டான இல்லாத மனநிலையையே பெரியோர்கள் எண்ணம் சேராத செயல் உயிரற்ற உடலை போன்றது என்றார்கள்.  லோகாதயமான வாழ்வில் ஆகட்டும், லெளகீக வாழ்வில் ஆகட்டும், அல்லது ஆன்மீக வாழ்வில் ஆகட்டும் செய்யப்படும் செயலுக்கு ஏற்ப உண்டான மனநிலையை உருவாக்கிய பிறகு செயலுக்கு சென்றால் அந்த செயல் மூலம் ஆனந்தமும், திருப்தியும் கிடைக்கும்.

வெற்றிக்கு வித்திட 2

 கற்றுக்கொள்ள – ஆர்வமும் – கற்றுக்கொண்டதை செயல் படுத்தவும் உங்களுக்குள் ஆர்வத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.  அடுத்தது எதைப்பற்றியும் அதாவது எந்த செயலைப் பற்றியும் திட்டமிடல் அவசியம் என்று போதித்து இருக்கும். அடுத்து காலம் தவறாமை எனும் விஷயத்தையும் விவரிக்கும்.

வெற்றிக்கு வித்திட 1

தன்னம்பிக்கை தரும் நூல்கள் ஆகட்டும் வெற்றிக்கு வித்திடும் ஆலோசனைகளை தரும் நூல்கள் ஆகட்டும் யார் எழுதியிருந்தாலும் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அதில் உள்ள மொத்த கருத்துகளை நாம் பார்த்தோம் என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும், அதாவது நீங்கள் உங்கள் குண இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் கொண்டிருக்கும் இலக்கிற்க்கு ஏற்ப அதாவது உங்கள் குறிக்கோளிற்க்கு ஏற்ப நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைய உங்களிடம் உள்ள சோம்பேறி தனம் எனும் குண இயல்பை மாற்ற வேண்டும்…

உன்னை விட உயர்ந்தவர் இல்லை        

ஒரு கணமாவது உன்னால் சும்மா இருக்க முடியுமா? முடியும் என்று யோகிகள் அனைவரும் கூறுகின்றனர். பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் உன்னை  நீயே பலவீனர்  என்று  நினைப்பதே. உன்னை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. பிரம்மமே நீ என்பதை அனுபவ மூலம் தெரிந்துகொள். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்த சக்தியும் இல்லை. நாம் சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள். மனிதனிடம் இருக்கும் தெய்வீக தன்மையை அவனுக்கு கற்பி, தீமையை ஒத்துக் கொள்ளாதே. எதையும்…

எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணாதே

ஏதாவது ஒரு மதத்தில் நீ கட்டுண்டு இருக்கும் வரை கடவுளை நீ காண முடியாது. எல்லாம் தனக்கு தெரிந்துவிட்டதாக நினைப்பவன் எதையும் அறியமாட்டான். அறிபவனை  யார்தான் அறிய முடியும்? நிலையான  தத்துவங்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன், மற்றது பிரபஞ்சம். இறைவன் மாற்றமில்லாதவர். பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருப்பது. பிரபஞ்சம் எப்போதும் உள்ளது. மாற்றத்தின் அளவை உன் மனம் அறிய இயலாதபோது அதை நிலையானது என்று நீ நினைத்துக் கொள்கிறாய். கல் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வடிவம் இவற்றுள்…

உலகம் ஒரு பயிற்சிக் கூடம்

எதிர் செயல் இன்றியே செயல் நடக்கட்டும். செயல் புரிவது இனியது. எதிர்ச் செயல் சகல  துயரத்தையும் தருவது. குழந்தை கைவிரலை தீ எரியும் விளக்கில் வைக்கிறது. அதில் இன்பம் இருக்கிறது. ஆனால் அதன் உடலில் எதிர்ச் செயல் நிகழும்போது அது துன்பம் தருகிறது. எதிர்ச் செயலை நம்மால் நிறுத்த முடியுமானால் பயப்படவேண்டியதில்லை. மூளையைக் கட்டுப்படுத்து. பதிந்ததை அது அறியும்படி விடாதே. சாட்சியாக இரு. எதிர்ச்செயல் புரியாதே. இவ்வாறு இருப்பது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நம்மை மறந்த நிலையில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 52

எங்கிருந்தாலும் தன்கடமையை இயற்றி, உடல் புலனிலேயே ஜீவனைப் புதைத்து விடாமல், உயர்மானிடப் புனிதத்தன்மையும் பற்றி, இயம நியம, ஆசனப் பிராணயாமக் கோட்டைக்குள் வாழ்பவனே யோகி. இவனிடம், மிதம், சமாதானம், ஹிதம், மூன்றும் காணப்படும். இவ்வாழ்க்கை மிக்க எளிது.  நோயைத் தடுத்துச் சுகத்திலூன்றும் யோகி என்பவன் யார்?   யோக வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் பரமாத்மா கீதையில் விளக்குகிறார் அந்த சுலோகங்களைக் கவனித்து இத்தொகுதியை முடிப்போம்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  15

ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்று அறிந்தனுபவிப்பதற்கு முன் இந்திரியங்களால் உணரப்படும் உலகமும் மற்ற பொருள்களும் அவ்வவற்றின் தனி உருவங்களை உடையவையாயிருக்கின்றன.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  14

தன்னுடைய உடலை ஒருவன் அறிவதற்கு எவ்வாறு வெளியிலிருந்து அத்தாட்சி வேண்டுவதில்லையோ அவ்வாறே தன்னுடைய ஆத்மாவை அறிவதற்கும், வெளியிலிருந்து அத்தாட்சி ஏதும் வேண்டுவதில்லை.  எல்லா ஆசைகளையும் விட்டு ஆத்மாவைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மட்டும் தான் ஆத்ம தரிசனத்திற்கு அவசியமான ஸ்தானம்

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  33

 செவ்வாய், புதனுக்கு கேந்திரமடையவும், சந்திரன், சுக்கிரனோடு கூடி திரிகோணமடைய குரு 11 – ல்நிற்க, சாஸ்திர ஆராய்ச்சியாளர் சாஸ்திர ஆராய்ச்சி உடையவர். குருவுக்கு 2 – ல் 1 – க்குடையவர் நிற்க, அவரோடு சந்திரன் கூடி நிற்க புதனும், 9 – க்குடையவரும் கூடி 3 – ல் நிற்க 4 – இல் சுக்கிரன் நிற்க கவி மாலை செய்து புகழ் பெறுவார்.

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 32

 2 – ல் புதன் நிற்க, 2 – க்குடையவர், லக்கினத்தில் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு 10 – ல்நிற்க, அவருக்கு 3 – ல் சுக்கிரன் நிற்க, யோக்கியவான். வாக்குவளம், யூகம் கல்வி உடையவர். லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க, 2 – ல் புதன் நிற்க, 4 – ல் சந்திரன் நிற்க, குரு திரிகோணமடைய லக்கினத்தைப் பார்க்க சாஸ்திர ஆராய்ச்சியாளர் ஆவார்  2 – ல் குரு நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்  31

 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, 7 – ல் சந்திரன், புதன் நிற்க தமிழ் பண்டிதர் பாக்கியவான். 2 – க்குடையவர் லக்கினத்தில் நிற்க, சந்திரனும், புதனும் கேந்திரமடைய 4 – க்குடையவர் 11 – ல் நிற்க செவ்வாய் கேந்திரமடைய அல்லது சுக்கிரன், செவ்வாய்க்கு 3 – ல் நிற்க, பாக்கியம் செல்வம், பல பாஷை பண்டிதர்.

சந்தோஷம் என்பது 5

மனித உணர்வுகளில்,  உறவுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஓன்று ஆளுமை அதன் தொடர்ச்சியாய் அடக்குமுறை வருவதை காணலாம்.  அதுமட்டுமல்ல மனித உணர்வுகளில் இன்பத்தை பெற மனிதனுக்கு தடையாய் இருக்கும் உணர்வுகள் எவை, எவையென்று பட்டியல் இட்டால் அதில் கோபம், அச்சம் பொறாமை தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை என வரும் இவை அனைத்துமே மனிதன் இன்பமாய் இருக்க தடைகளாய் இருக்கின்றன.  மனிதன் இவற்றோடு இருப்பவன் இவைகளை இல்லாமல் செய்ய முடியாது ஆனால் இவைகளை செயலற்றதாக்க முடியும் அது…

சுந்தர யோக சிகிச்சை முறை 51

நோய் தடுக்க எல்லாவற்றிலும் மிதம், சமாதானம், ஹிதம் என்பவை பிணைய வேண்டும். சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் யோகியாக வாழ வேண்டும். யோக வாழ்க்கையை கைப்பற்ற வேண்டும்.  யோகி என்றால் தாடி, ஜடை, அழுக்கு, மணி, ருத்திராட்சம், ஆடம்பரம், படிப்புச் சொற்களுடன், மலை மடங்களில் வாழ்கிறவனல்ல. 

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  13

(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம் இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும் எங்ஙனம் பிறவியை அடைவான். ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும் தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ, தள்ளத்தக்கதோ ஆகாது.

ஏட்டுக் கல்வியால் குழப்பமே மிஞ்சும் 

நாம் அறிபவை அனைத்தும் கூட்டுப் பொருளே. பகுத்துப் பார்ப்பதன் மூலம் புலனறிவை நாம் அடைகிறோம். மனம் எளிமையானது, தனிமையானது, சுதந்திரமுள்ளது எனக் கருகிறது துவைத மதம். தத்துவஞானம் என்பது ஏட்டுக் கல்வி மூலம் கிட்டுவதல்ல. அதிக நுால்களைப் படிப்பதன் மூலம் மனக் குழப்பம்தான் அதிகமாகிறது. ஆழ்ந்த ஆராய்ச்சி இல்லாத தத்துவஞானிகள் மனத்தைத் தனிப்பொருள் என்கின்றனர். அதன் விளைவாக, மனிதன் எண்ணச் சுதந்திரத்துடன் வாழலாம் என்று அவர்கள் முடிவு கட்டினர். மன நுாலோ  மனத்தை ஒரு கூட்டுப் பொருளாகக்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம்  இரண்டாவது காண்டம்    54

வாத தோஷம் …..  வாத தோஷத்தில் தேகமானது தொட்டால் அளவாய் இருக்கும். பித்த தோஷம் …..  பித்த தோஷத்தில் தேகமானது தொட்டால் அதிக உஷ்ணமாயாவது அல்லது சீதளமாயாவது இருக்கும். கப தோஷ குணம் …..  கபரோகத்தில் தேகம் தொட்டால் குளிர்ச்சியாயும் சில்லிட்டு இருக்கும். துவந்த தோஷ குணம் …..  துவந்த தோஷத்தில் தேகமானது தொட்டால் இரண்டு தோஷ  குணங்களை அல்லது சகல தோஷ  குணங்களை பெற்று இருக்கும்.  

சுந்தர யோக சிகிச்சை முறை  50

உடலுழைப்பே அற்று ஓய்வின்றி மூளை வேலை செய்யும் மானிடரும் உழைப்பின் சீர் தூக்கின்மையால் நோய் கொள்வர், நோயைத் தடுக்க, மூளை வேலையும் வரம்புக்குட்பட வேண்டும். மனஉழைப்பு, இதை மனக்கவலை என்று பொதுவாகக் கூறலாம்.  வாழ்க்கையின் சம்பவங்கள் அதிகமாக மனதைத் தாக்கிவிட்டால், வலிவு குன்றும், சிகிச்சைக்கடங்காப் பிணிகள் உண்டாகும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  12

ஆத்மா வெளியே உள்ள பொருள்களைப் போல் அறியப்படுவதன்று. அதில் பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லை. ஆகையால் அதை எவராலும் கொள்ளவோ தள்ளவோ இயலாது. உள்ளும், புறமும் எங்கும் வியாபித்ததும் பிறப்பு, தேய்வு, மூப்பு, சாவு முதலியவற்றிற்க்கப்பாற்பட்டதுமான ஆத்மா தான் என்ற அறிந்து கொண்ட பின் ஒருவர் எதற்காக ஒரு சிறிதேனும் அஞ்சவேண்டும்?

எண்ணம் என்பது சொல்லின் ஆற்றல்

பிரபஞ்சம் என்பது எண்ணம். அந்த எண்ணத்தை வேதங்கள் வார்த்தைகளால் வெளியிடுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை நம்மால் ஆக்கவும் அழிக்கவும் முடியும். மந்திரங்களை  உச்சரிக்குந்தோறும் காட்சிக்கு எட்டாதிருந்த எண்ணம் உருப்பெற்று புறப்பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இப்படி கர்ம காண்டத்தில் இருப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர். நம்மில் ஒவ்வொருவருக்கும் படைக்கும் ஆற்றல் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். மந்திரங்களை உச்சரிப்பதால் அவற்றுக்குத் தொடர்புள்ள எண்ணம் உருவாகிறது. விளைவையும் கண்கூடாகக் காணலாம். எண்ணம் என்பதுசெயலின் ஆற்றல். எண்ணத்தின் வெளிப்பாடே சொல் என்று மீமாம்சகர்கள் கூறுகின்றனர்.…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  53

ம ல ப ரி க்ஷ வாத தோஷ  மலம் …..  வாத தோஷத்தில் மலமானது  கருப்பு  நிறத்துடனும் பந்தகித்து  இருக்கும். பித்த தோஷ மலம் …..  பித்த தோஷத்தில் மலமானது, மஞ்சள்  நிறம்  அல்லது சிகப்பு  நிறமாயாவது விசர்ஜனமாகும். கப தோஷ மலம் ……  கபத்தில் மலமானது  வெண்மை நிறத்துடன் ஆமத்துடன் கலந்து நுறை நுறையாக வெளியாகும். துவந்த தோஷ மலம் …..  துவந்த தோஷத்தில் இரண்டு தோஷ குணங்கள் கூடி மலம் வெளியாகும். சந்நிபாத…

சுந்தர யோக சிகிச்சை முறை 49

மானிட வாழ்க்கை, இந்த பொய் நாகரீக சுயநல புலனடிமை விலங்குகள் உலாவும் உலகில் எளிதல்ல, அறிவைப் பெருக்கி நற்புத்தியைத் தீட்டி வாழாவிட்டால், கேடும், தோல்வியும் பற்றிக் கொள்ளும். அதிக உழைப்பு உடலை அழிக்கும்.  நோயைத் தடுக்காது.  இந்த அதிக உழைப்பு உடலை மட்டும் குறிப்பதாகக் கருதக்கூடாது.  மூளையையும், மனத்தையும் குறிக்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  11

ஆத்மா  இங்கே இப்பொழுது உளது, இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம் அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி வாக்கியங்களைக் கொண்டு ஒருவன் ஜீவாத்மாவை பிரம்மம் என்று இங்கேயே இப்பொழுதே கண்டு கொள்ள வேண்டும். 

சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.

சந்தோஷம் என்பது 3

மனிதனின் மனம் உறவுகளில் இன்பம் கொள்கிறது. அடுத்ததாக கலை, இலக்கியம், புகழ், வெற்றி, ஏதாவது ஒரு துறையில் அங்கீகாரம், போன்றவற்றில் இன்பம் பெறுகிறது. இதுகளில் ஒன்றின் பின் ஒன்றாக சிந்திப்போம். உறவுகள் என்று எடுத்துக்கொண்டால் அந்த உறவுகளை பற்றி ஒரு முழுமையான புரிதல் வேண்டும் அப்படி புரிந்து கொள்ள உறவுகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் மனிதர்கள் பெரும்பான்மையோருக்கு அதில் ஏனோ அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை

சந்தோஷம் என்பது 2

சந்தோஷத்திற்கோ, துக்கத்திற்கோ புற காரணிகளைவிட அடிப்படையானது அக காரணியான மனமே அந்த மனதில் உண்டாகும் உணர்வுகளே இன்ப துன்பங்களை உருவகித்து கொள்கிறது எனும் முடிவிற்கு காரண காரியங்களோடு சிந்தித்து பார்த்தால் நம்மாள் வர முடிகிறது.   அப்படி அந்த முடிவிற்கு வந்த பின் இன்ப துன்பத்தின் மூலம் மனம் என்று ஆன பின் அதில் நாம் கவனம் செலுத்தி அதை கையாள பழகிக் கொண்டால் நம்மாள் இன்பத்தை மட்டுமே அடைய முடியும் அதற்கு உண்டான விஷயங்கள் எது,…

குருசந்திர யோகம் 1

குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் “குருசந்திர யோகத்தை “வாரி வழங்குகிறார் “கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே” பாடல் விளக்கம்:- குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும். மனைவி வழியில் தனலாபம்…

சந்தோஷம் என்பது  1

இன்பம் அல்லது சந்தோஷம் என்பது என்ன எனும் வினா வந்தால் மனித குலத்தின் பதில் ஒரே விதமாயும், ஒரே மாதிரியும் இல்லை என்பதே உண்மை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று இன்பம், சந்தோஷம் தருகிறது.    ஒவ்வொரு  சந்தர்ப்பத்தில்  ஒவ்வொன்று இன்பமாய் இருக்கிறது படிப்பதில் ஒருவருக்கு இன்பம் என்றால் படித்ததில் உள்ள விஷயத்தை ஆராய்ந்து செயல்படுத்தி பார்ப்பது இன்னொருவருக்கு இன்பம் படிக்காமலேயே இருப்பது இன்னுமொரு சாரருக்கு  இன்பம், சந்தோஷம் தருகிறது.  இதை ‍இப்படி பட்டியல் இட்டால் நீண்டுகொண்டே  போகும்  இதிலிருந்து…

மனம் எனும்  7

இந்த வரத்தால் அவன் கடுமையான, கொடுமையான விளைவுகளை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிறான் என்பதை கூட அவன் அறியவில்லை என்ன செய்வது தன்னை தொலைத்துவிட்டான் என்பதை கூட அவனால் அறிய முடியவில்லை என்பது எத்தனை பெரிய கொடுமையான விஷயம். இதிலிருந்து எப்போது, எப்படி மாறுவான், தெரியவில்லை. சுயநலமும், பேராசையும், வஞ்சகமும், அதீத அறிவும், அவனுடைய உடைமைகள் ஆகிவிட பிறகு மாறுவது எங்ஙனம்.

மனம் எனும்  6

 நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால் முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை, காரணம்,  மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும், வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய் இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது, அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது. அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக…

மனம் எனும் 5

உங்களின் வாழ்க்கையில் அறிவின் பங்களிப்பும், மனதின் பங்களிப்பும் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பதை நீங்கள் உங்கள் செயல்களை, எண்ணங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும். அதாவது உற்று பார்த்து பழக, பழக தெரிந்துவிடும். இதை அறிய நீங்கள் கண்டிப்பாக நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும். அந்த நேரமே வாழ்க்கையில் பொன்னானது, ஏனென்றால் அந்த நேரத்தில் நீங்கள் உங்களை கற்கிறீர்கள் அதாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் எப்பேற்பட்ட வாய்ப்பு அது, அதை தவறவிடலாமா இது வரை தவற விட்டிருந்தாலும்…

மனம் எனும் 4

இந்த தன்னையறிதல் என்ற விஷயத்தினால் என்ன பயன் என்ற வினா வரலாம், பதில் இதுதான் தன்னையறிதலால் நாம் பிறரையும் அறியலாம், அறிய முடியும் நன்றாக கவனித்து பார்த்தோமானால் சரி, தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் உயர்வு, தாழ்வு, பிடித்தது, பிடிக்காதது போன்றவை மனம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். அதாவது, பிடித்தது, பிடிக்காதது என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவும்  முறை, முறையற்றது என்பது அறிவு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்

மனம் எனும் 3

 தவறு நடக்காததின் காரணம், அறிவானது மனதை ஆட்சி செய்ததால் வேறு சிலருக்கு அறிவு ஆட்சி செய்யப்படாத மனமிருக்கும் அங்கே தவறு என்பது சர்வ சாதாரணமாக நிகழும், நிகழ்த்தப்படும் அதில் பயமோ, குற்ற உணர்வோ, வருத்தமோ இருக்காது.  அவரவர் வாழ்க்கையில் மேலே சொன்ன விஷயங்களை எத்தனை முறை கடந்துள்ளீர்கள், அதில் உங்களின் செயல்பாடுகள் எந்தெந்த நிலையில் இருந்தது என்பதை கவனித்தலே தன்னை அறிதலுக்குண்டான முதல்படி.

மனம் எனும்  2

மனம் பற்றி படறும் விஷயத்தை, பலதுடன் இணைத்து சீர் தூக்கி பார்த்து அதனால் ஏற்படும் விளைவுகளை  சொல்லுவது அறிவு.  ஆனால், பல சமயங்களில் அறிவு சொல்லுவதை மனம் கேட்பதில்லை எதார்த்தமான உண்மைநிலை இதுதான்.         யாருக்கும் தவறு செய்ய பயமே கிடையாது.   ஆனால், தவறு வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயம் மட்டுமே உண்டு.  இங்கு நாம் இதை கவனித்தால் பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது.   தவறு என்பது அறிவு சம்பந்தப்பட்டது.

மனம் எனும்  1

        மனம் எனும் வார்த்தை ஒன்றுதான் ஆனால் மனம் எப்போதும் இரண்டானது ஏமாந்தால் அது மூன்று, நான்கு, ஐந்தாகவும் இருப்பது சலனப்படுவதும், சஞ்சரிப்பதுவுமே அதன் குணம் மனம் ஒரு விஷயத்தை பற்றும் போது அது எதைப்பற்றியும் சிந்திக்காது அதாவது நல்லது, கெட்டது, சரி, தவறு, தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம், என்கிற எதையும் கவனிக்காது, கண்டு கொள்ளாது.  ஆனால், அறிவு இதையும் இதற்கு மேலே உள்ளதையும் சொல்லும்.  மனம் அறிவாக மாறும் போது அல்லது மனம் அறிவால்…

எல்லைகளை நிர்ணயித்து  3

சுருக்கமாகச் சொன்னால் — உலக வாழ்க்கையில் எல்லாம் சுலபமாய் கிடைக்கும் வரை , நினைத்ததெல்லாம்  சிறு முயற்சியில் கிடைக்கும் வரை,  எந்த தடங்கலும் இல்லாமல் நினைத்ததெல்லாம் நடக்கும் வரை  தன்னை கவனித்தல் எனும் செயல் நிகழாது , எல்லாவற்றிக்கும் போராட்டம்  சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் போராட்டம் எனும் நிலையில் இருக்கும் மனிதனுக்கு நமக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி வரும் அந்த  கேள்வியில் இருந்து  தன்னை கவனித்தல் தொடங்கும். அது தன்னை அறிதலுக்கு அழைத்து…

எல்லைகளை நிர்ணயித்து 2

எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும்.  படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும் அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை தனக்குள் பிரயாணிப்பதை தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது ஆனால் எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான் ஏன் என்ற கேள்வி வரும் அது அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.  அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,…

எல்லைகளை நிர்ணயித்து 1

ஓடும் போது அதுவும் எல்லைகளை நிர்ணயித்து ஒடும்போது அந்த ஓட்டத்தில் எல்லையை அடையும் போது மனம் அடையும் நிலை, சந்தோஷம், திருப்தி என்பதைவிட வெற்றி என்ற இறுமாப்புதான் இருக்கும் அது நாம் அடைந்த எல்லையை மீண்டும் விஸ்தாரப்படுத்தி மீண்டும் நம்மை ஓட வைக்கும் அந்த ஓட்டத்திலும் எல்லைகளிலுமே மூழ்கியிருக்கும் மனிதனால், மனதினால் தன்னைப் உற்று பார்க்கவோ, தனக்குள் செல்லவோ தோணாது அப்படி செய்து பார் என்று சொல்லுபவர்களையும் அலட்சியப்படுத்தும் ஏளனமாய் கிண்டல் செய்யும் எல்லை கோடுகளை வகுத்து…

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்

வாழ்க்கை ஒவ்வொரு வகையில்அவரவர் விருப்பம் கேட்காமல்  ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டு போகும் கட்டாறு. திருமணம், குழந்தை, செல்வம் சேர்த்தல் நோய்வாய்ப்படுதல் எல்லாம் பூர்வ வினை இதை புரிந்து கொண்டாலே மனம் அமைதியின் பக்கம் திரும்பிவிடும். அப்படி அமைதியின் பக்கம் மனம் திரும்பிவிட்டாலே மனம் தியானத்திற்கு பக்கம் சென்று விடும்

தியானம் என்றால்

  தியானம் என்றால் என்ன?   ஒவ்வொருவர் ஒவ்வொன்று  சொல்லுகின்றனர் தவறில்லை இதையும் சேர்த்துக் கொள்வோம். வேலையோடு வேலையாய் தன்னை மறந்து மூழ்கி விடுவது.  கடந்த காலத்திலும் இல்லாமல் எதிர்காலத்திலும் இல்லாமல் இடை விடாது நிகழ்காலத்தில் இருப்பதே தியானம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஏங்குதலும் இல்லாமல் இயல்பாய் இருப்பதே தியானம்.

தத்துவம் தெரிந்த வாழ்க்கை

தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை. சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது. இந்த இடத்தில் தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது அந்த வினாவிற்கு பதிலாக பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும் பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும் அதற்க்கு பதிலாக வயது அனுபவம் போன்றவை விடையாக வரும் வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும் கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும்…

உங்கள் தவறுகளே காரணம் 4

நாம் செய்த பாவத்திலிருந்து விடுபடுவோம் கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும். மீனவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழுட்டும். பலசரக்குக் கடைகள்,  பலகாரக்கடைகளிலிருந்து புதிய இந்தியா தோன்றட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தை ஆகியவற்றிலிருந்தெல்லாம் புதிய இந்தியா எழுந்து வெளிவரட்டும். பாமர மக்களைப் புறக்கணித்து ஒதுக்கியது தான் நமது நாடு செய்த பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்களுக்குக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ  52

சந்நிபாத தோஷ ஜிம்மை ….. நாக்கானது சந்நிபாதத்தில் கறுப்பு  நிறமாயும் சுக்கிற வர்ணமாயும் இருக்கும். துவந்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது துவந்தத்தில் இரண்டு தோஷ குறிகளை மிசிரமமாய் கலந்து தோணும். அசாத்திய ரோக ஜிம்மை குறி …..  நாக்கு நீண்டும் சகல வர்ணங்கள் கலந்தும் சொள்ளு வடிந்து கொண்டு நாக்கு பிரண்டும் பேச முடியாமல் செய்யும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 8

சம்ஹார பைரவர் சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 48

உழைப்புக்கும் வரம்புண்டு. அதற்கு மீறி உழைக்கப்பட்டால் உடல் நசியும், உணவின் அதே சேர்க்கையால் திருத்தக் கூடிய இவைக் காட்டிலும் உழைப்பு உடலை நசித்தால், ஆரோக்கியம் குன்றி நோயைத் தடுக்க முடியாது. உழைப்பு இயற்கை வாழ்க்கையில் ஏற்படாமல் வயிற்றுப் பாட்டுக்கென்று ஏற்பட்டால், மனப்போக்கின் கூட்டுறவால் இந்த உழைப்பு ஒரு பங்கு சோர்வைத் தரும். மனதின் உற்சாகத்தால் ஏற்படும் உழைப்புக்கும், நாம் நன்மைக்காகச் செய்கின்றோம் என்ற கருத்துடன் செய்யும் உழைப்புக்கும் முடிந்ததோ முடியவில்லையே, தலை விதியே, என்று செய்யும் கட்டாய…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  10

ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும் அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம் தான் ஆத்மா என்பதேயாகும் .  அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா என்று கொள்வது அறிவாகாது. அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை ஒருவன் விட்டு விலக வேண்டும்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் நாக்கு பரீக்ஷ 51

    வாத தோஷ ஜிம்மை …..  நாக்கானது வாயு தோஷத்தில் மஞ்சள் நிறத்துடன் கறகறப்புமாயிருக்கும். பித்த தோஷ ஜிம்மை …..  நாக்கானது பித்த தோஷத்தில் ரத்த வர்ணத்துடன் கலந்த நீலவர்ணம் போல் தோணும். கப தோஷ ஜிம்மை ……  நாக்கானது கபதோஷத்தில் வெண்மையும் திரவமுடன் கனத்தும் இருக்கும்.

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 7

பீக்ஷன பைரவர் பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி ஏழாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 47

 உழைப்புடன் மட்டும் நிறுத்தவில்லை எப்படி சுகஜீவிதம் உடையவன், உழைப்பு இல்லாமல் வாழுகிறனோ அதற்கு நேரிடையாகப் பாட்டாளிக்கு சக்திக்கு மீறி தொழில் காரணத்தைக் குறித்து, உழைப்பு தினம் ஏற்படுகிறது.  இந்த உழைப்பைத் தாங்க, உழைப்பால் ஏற்படும் உடல் சதை சக்திக்கழிவை மறுபடி நிரப்ப, போதுமான உணவுக்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது உழைக்கப்பட்ட உடல், உணவையும் ஓய்வையும் கேட்கின்றது.  இவைகளைப் பெறமுடியாமல் பாட்டாளியிடம் வறுமை ஒரு முக்கியத் தடையாக நிற்கின்றது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  9

ஒளிவடிவாயுள்ள சூரியனிடம் எவ்வாறு இருள் இல்லையோ அவ்வாறே அறிவு வடிவான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கிடமில்லை. அவ்வாறே மாறுபாடற்ற ஆத்மாவில் மாறுபடும் நிலைகளுக்கிடமில்லை. அப்படி மாறுபடுமேயானால் அது அழிவுடையதாய்விடும்.

உங்கள் தவறுகளே காரணம் 3

நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்ச வேண்டாம் ஒரு நல்ல இலட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்கு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்கு உன் பின்னால் ஓர் அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல் எனது அருமைக் குழந்தைகளே * முன்னேறிச் செல்லுங்கள். பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது.. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றுருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித்தன்மையினாலும் அந்த விளக்கைப் பெற்றிருக்கவில்லை.…

காசி மாநகரில் அஷ்ட(எட்டு) பைரவர்கள் 6

கபால பைரவர் கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இந்த பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.  இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 50

மரண குறி …..  தெற்கு திசையாய் தைலபிந்து பரவினால் சிலநாளில் மரணம் சம்பவிக்கும் அல்லது மீளான் என்று அறியவும். சுக குறி ……  மேற்கு, வடக்கு திசையில் தயிலபிந்து பரவினால் ஆரோக்கியம், என்று அறியவும். மாத மரண குறி ……  ஈசான்ய மூலையாய் தயிலபிந்து பரவினால் ஒருமாதத்தில் எமனைப் பார்ப்பான் என்று அறியவும். மரண குறி ……  நிருருதி மூலைலும், வாயுமூலையிலும் தயில பிந்து பரவுதலால் மரணம் சம்பவிக்கும் என்று அறியவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

கிராம வாழ்க்கையில் ஓய்வுடன் இருப்பவர் இவைகளையும் செய்யலாம் மலப்போக்குக்குக் கூட செம்பு தூக்கப் பண்ணையாள் இருக்கும் பொழுது, இந்த கிராம சுக புருஷர்கள் உழைப்பிற்கு இறங்குவதும் ஆகாததாகத் தோன்றுகிறது. பணம் பெருக, நடையும் இல்லாமல் போய்விடுகிறது. நோய் தடுத்தலுக்கு உழைப்பு, அவசியமென்று விளக்கினேன். இந்த உழைப்பும், ஒழுக்கமும் தானத்துடன் கலந்திருக்க வேண்டும்.  உழைப்பே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமானால்.  ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியிடம் ஆரோக்கியப் பெருக்கைக் காணோமே என்று வினவலாம்.  இந்த சந்தேகத்தை நினைத்தே நோயற்ற வாழ்க்கையை…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  8

விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்க‍ளிலும் ஒன்றாயுமிருக்கும் ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது.  ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன.  சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன.  கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.

நமக்குத்தான்

சிலவற்றை கண்டும் காணாமல் நடக்கப்பழகிக் கொண்டாலே போதும்.. மனதுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்! நமக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுவர்களே மற்றவர்கள்தான்..

சந்தோஷம் என்பது

சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில் உள்ளது! நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்.. நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!  

தானம் 16 வகைப்படும்-

1. அன்னம்,    2. பூமி,      3. கன்னிகை,     4. பசு,     5. காளை        6.பொன்        7. வெற்றி,     8. ஆடை,    9. படுக்கை,      10. வாகனம்,     11. தீபம்,       12. எள்,      13. தானியம்,     14. வீடு,     15. வித்தை,    16. அபயம்   …