உறவு சிக்கல் ஏற்படும் போது 2

நிலை 1: அதிர்ச்சி நாம் கொண்டிருக்கும் அன்பு திடீர் என சம்பந்தப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படும் போது முதலில் நமக்கு ஏற்படும் உணர்வு அதிர்ச்சி ஆகும். அதனுடன் தொடர்ந்து ஆச்சர்யமும் சில சமயங்களில் பயம் கூட ஏற்படும். இதனால் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனும் உணர்வு தான் பயமாக வெளிப்படும். இந்த சூழ்நிலை ஏற்படும் போது மன பயிற்சிக்காக தியானம் செய்யுங்கள். உடல் உழைப்பை அதிகப்படுத்துங்கள். பாதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட வேறு பல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 2

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ – சந்திரனோ அமைந்தால் லக்கினாதிபதியால் கிடைக்கக்கூடிய பலன்கள் சிறப்புகள் உயர்வுகள் ஜாதகருக்கு உறுதியாக கிடைக்கும்.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில்  லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து பலன்களும் ஜாதகருக்கு கிடைக்கும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் சாதகமான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமர்ந்தால் 3 – க்குரியவரால் கிடைக்கும் அனைத்து…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்தால் முன்னிற்கு முரணாக செயல்படும் ஜாதகமாகும். லக்கினாதிபதியால்கிடைக்கும் பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது சரிவர செயல்படாது.. 2 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ அமர்ந்தால் 2 – க்குரியவரால் கிடைக்கும் பலன்கள் ஜாதகருக்கு கிடைக்காது.சந்திரன் அமர்ந்தால் அனுபவிக்க இயலாது.. 3 – க்குரியவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில் லக்கினமோ, லக்கினாதிபதியோ, சந்திரனோ அமைந்தால் 3 – க்குரியவரால் 3 – ஆம் பாவத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள்…

உறவு சிக்கல் ஏற்படும் போது 1

அன்பு உடைந்துகொள்வது மிக மோசமான விஷயமாகும் அது உங்களுக்கு பயனற்றது என்பதை உணர்வீர்கள் . நீங்கள் நம்பிக்கையை இழந்து துயரப்படுவீர்கள். ஆனால், பல முறை, ஒரு உறவு இருக்கும்போது நீங்கள் சந்தித்த எல்லா பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாகும். ஒருவரை தைரியமாக முகம் கொடுப்பதன் மூலம் பிரேக்-அப்களை இன்னும் சமாளிக்க முடியும். நினைவில், வலி தவிர்க்க முடியாதது ஆனால் துன்பத்தை விருப்பமாக்குங்கள் நீங்கள் வெற்றியாளராக வெளிப்படுவீர்கள். இதில் நீங்கள் ஏழு விதமான உணர்வுகளை அடைவீர்கள் அவைகளை பின்வருமாறு…

திதிகள் – ஆட்சி -கிரகங்கள்

பிரதமை—சூரியன் துவிதியை—சந்திரன் திரிதியை—செவ்வாய் சதுர்த்தி—புதன் பஞ்சமி—குரு சஷ்டி—சுக்கிரன் சப்தமி—சனி அஷ்டமி—ராகு நவமி—சூரியன் தசமி—சந்திரன் ஏகாதசி—செவ்வாய் துவாதசி—புதன் திரியோதசி—குரு சதுர்த்தசி—சுக்கிரன் பௌர்ணமி—சனி அமாவாசை—ராகு

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 22

வானத்து நிலா மேகத்தால் மூடப்பட்டிருக்கிறது. காற்று கொஞ்சங் கொஞ்சமாக அம்மேகத்தை விலக்க வேண்டியதாகிறது, அப்போதுதான் நிலவைக் காணமுடியும். அது திடீரெனப் போய் விடுகிறதா? ஆத்மிகப் பூரணத்துவமும் அது போலத்தான். பழைய செயல்களின் பலன் கொஞ்சங் கொஞ்சமாகவே தீரும். ஆண்டவனை உணர்ந்தால் அவ்வாறு உணர்ந்தோர்க்கு ஆண்டவன் ஞானத்தையும் உள்ளொளியையும் அளிப்பான், அதனை அவரே உணர்வர்.

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு  7

பாம்பு என்ற மதிமயக்கம் பழுதை என்ற அறிவால் எங்ஙனம் நீங்குமோ அவ்வாறு பரிசுத்தமான இரண்டற்ற பிரம்ம ஞானத்தால் மாயையானது அழிவுறும். பிரசித்தமான தத்தம் செயல்களால் ரஜஸ், தமஸ், ஸத்துவம் என்று நன்குணரப்பட்ட குணங்கள் அந்த மாயையைச் சார்ந்தவை. அவித்தை என்பது மனதிற்குப் புறம்பானதன்று. பிறவித் தளைக்கும் பிறவிச் சுழலுக்கும் காரணமான அவித்தை மனதேயாகும். அது (மனது) அழிந்தால் அவித்தை அனைத்தும் அழியும். ஆத்மா உடலை ஆள்வதாய் அதனுள் உறைவது, உடல் ஆளப்படுவதாய் வெளியே இருப்பது, அப்படியிருந்தும் மனிதர்கள்…

பத்மாசனம் — PADMASANAM

விரிப்பின் மேல் அமர்ந்து இருகால்களையும் நேராக நீட்டி சுவாசத்தை வெளிவிட்டு வலது முழங்காலை மடித்து மடிக்கப்பட்ட வலது காலின் குதிக்கால் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும். பின்னர் இடதுகாலை மடக்கி மடித்து வலது காலின் தொடையின் அருகில் அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கவும். இவ்வாறு மாற்றி வைக்கப்பட்ட இரண்டு குதிகால்களும் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதவாது, மார்பு, முகம் ஆகியவற்றை நேராக நிமிர்த்தி முதுகை வளைக்காமல் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டு நிமிர்ந்து இருந்து இரண்டு கைகளையும்…

தாவரங்களின் உணர்வுகள்.

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? ஆமாம் அது சாத்தியம்தான். சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், அவற்றுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுரசு.6

மாயை என்பது அவ்யக்தம் எனப்பெயருடையது. அது ஆதியற்றது, அஞ்ஞான வடிவானது. முக்குணமயமானது, பரமேசவரனுடைய உன்னத சக்தியாயிருப்பது. சிறந்த புத்திமானால்தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் பிறப்பிக்கப்படுகிறது. மாயை இருப்புடையதன்று, இருப்பில்லாதது மன்று, இரு வகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அங்கங்களை உடையதாகவோ, அங்கங்களில்லாததாகவோ, இருவகைப்பட்டதாகவோ அது இல்லை, அது மிகவும் ஆச்சரியமானது. இப்படிப்பட்டதென்று கூற முடியாத ரூபமுடையது.

வீட்டுக்கடனும் வரிச்சலுகையும்.

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்கடன்தான் வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கு நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீத தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை ‘ டவுன் பேமென்ட் ‘ என்ற சொல்லுவார்கள். உதாரணத்துக்கு ரூ.50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிவராத்ரி ஒரு விளக்கம்: ஜோதிட கலாநிதி டாக்டர் எஸ்.சுயம்பிரகாஷ்

சிவராத்ரி ஒரு விளக்கம்: மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும் பதிநான்காம் நாள் சிவமும் ஆகும். நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம். குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது அதிக கால அளவு த்ரயோதசியும், குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும். அமாவாசை…

சிவராத்திரியின் பலன்கள்

சிவபெருமானை வழிபடும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று சிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை  சதுர்த்தசியில்  சிவராத்திரி வரும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே  மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ‘நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி’ என சிவராத்திரி ஐந்து வகையாக வருகின்றன. நித்ய சிவராத்திரி — ஒரு வருடத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் 12,  மற்றும் வளர்பிறை சதுர்த்தசியில் 12 என 24 சிவராத்திரிகள் தான்…

புறாக்களின் வகைகள்

அரசர் காலத்தில் புறாக்கள் தூது போயின. எனவே காலம் காலமாக மனிதனோடு புறாக்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. புறாக்களில் மிகவும் விலை உயர்ந்தது பந்தயப் புறாதான். இதனை ஐதாராபாதில் கொண்டு போய் விட்டாலும் சரி, காஷ்மீரை தாண்டி விட்டாலும் சரி, ஒரு சின்ன ரவுண்டு அடித்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்த வகைதான் பந்தய புறாக்கள் என்கிறார்கள். இவை பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நீண்ட தூரம் பறக்க கூடிய அந்த நாட்டு புறாக்களின்…

குதபாத ஆசனம்

.குதபாத ஆசனம் ( குருவாய் ) படத்திலுள்ளபடி இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து ஆசனவாயின் பக்கத்தில் சேர்த்து இரண்டு கைகளையும் இடுப்புக்கு நேராகக் கீழே ஊன்றிச் சைக்கிள் சீட்டின் மேல் அமருவதுபோல் இரண்டு பாதங்கள் மேல் உட்கார வேண்டும். பிருஷ்ட பாகம் பூமியில் படக்கூடாது. இரு கைகளையும் இரண்டு முழங்காலின் மேல் சின் முத்திரையுடன் வைத்து 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும். சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். குறிப்பு — புத்திர…

அமெரிக்க டாலரை பற்றி சில வரிகள்

1929 – ம் ஆண்டு முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 30 சதவீதம் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் வேலையிழந்தனர். 1929 – ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3 சதவீதம் ஆக இருந்த வேலையில்லா திண்டாட்டடம் 1933 – ல் 25 சதவீதம் ஆக உயர்ந்து விட்டது. 85, 000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக் கணக்கானோர்…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்தமுர சு. 4

இடைவிடாத தியானத்தால் ‘ நான் பிரம்மம் ‘ எனும் உண்மை மனதில் பதியும் போது அது அஞ்ஞானத்தையும் அதன் திரிசல்களையும் ஒரு ரஸாயனம் ( மருந்து ) நோயைப் போக்குவது போல் போக்கிவிடுகிறது. ஒருவன் படகில் செல்லும் போது கரையிலுள்ள மரங்கள் படகு செல்லும் திக்கிற்கு எதிராக நகர்வது போல் அவனுக்கு பிரமை ஏற்படுகிறது. பிறவிச் சுழலில் ஆத்மா உழல்வதாய்த் தோன்றுவதும் அப்படிப்பட்ட பிரமையே. ஆத்மாவினிடம் அனாத்மக் கற்பனையே அஞ்ஞானம் எனப்படுவது. அஞ்ஞானத்தின் ஒழிவே மோக்ஷம். இருள்,…

கூர்மாசனம்

படத்திலுள்ளபடி குய்யபாத ஆசன நிலையிலுள்ளபடியே இரண்டு கைகளை மட்டும் சிரசிற்குமேல் கும்பிடுவது போல அமைத்து மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் சாதாரணமாக இழுத்தும் விட்டும் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை அப்படியே இருத்தல் வேண்டும் இம்மாதிரி 3 முதல் 5 முறை வரை செய்யவேண்டும். குறிப்பு – கூர்மம், ஆமை, தன் ஐந்து உறுப்புக்களையும் ( தலை, நான்கு கால் ) தன் விருப்பப்படி வெளியில் நீட்டவும், அடக்கவும் செய்யும். அதுபோல இந்த ஆசனத்தைச் செய்பவர்களும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 20

மன ஒருமைப் பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப்பதும், அதில்லாமல் பல மணி நேரம் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது. எல்லோருமே கடமை என்று கருதுவதால் ஏதாவது ஒருவகைப் பயிற்சியை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் எத்தனை பேர் ஆண்டவனை நாடுகின்றனர்? கடமையைச் செய்யத்தான் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மனத்தை நன்னிலையில் வைக்கிறது. ஆனால் ஜபம் செய்தல் தியானித்தல், பிரார்தனை செய்தல், ஆகியவை மிக அவசியம். இவைகளைக் காலையிலும் மாலையிலுமாவது கைக்கொள்ளவேண்டும். அச் சாதனம் படகிற்குள்ள…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 19

குழந்தாய், தவமோ, பூஜையோ இப்போது முதலே தொடங்கு, பின்னால் இவைகளைப் பற்றல் முடியுமா? எதை அடைய வேண்டுமோ அதனை இப்போதே அடை, இதுவே சரியான சமயம். கடவுளின் காட்சி பெறவில்லை என்பதால் சாதனையைத் தளர்த்தி விடாதே. தூண்டில் போடுபவன் தூண்டிலோடு வந்து அமர்ந்த ஒவ்வொரு நாளும் பெரிய மீனையா பிடித்துவிடுகிறான்? அவன் காத்துக் காத்து உட்கார்ந்திருக்க வேண்டும். பலமுறை அவன் ஏமாற்றமும் அடைகிறான்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…

குய்யபாத ஆசனம் ( கருவாய் )

குய்யபாத ஆசனம் இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து, இரண்டு குதிகால்களும் ஆசன வயிற்படும்படி பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே குனிந்து இரண்டு கால் பெருவிரல்களும் நெற்றியில் படும்படி செய்து, பின் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே நிமிரவும் இம்மாதிரி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். குறிப்பு — கர்ப்பத்தடைக்குச் சிறந்த ஆசனம். பெண்கள்விடாமல் காலை, மாலை, மூன்று மாதங்கள் செய்து வந்தால் நிச்சயமாய் கர்ப்பமுண்டாகாது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 17

எப்போதும் ஆண்டவனுக்குரிய பணிகளையே செய்யவும். அதே சமயம் ஜபமும் தியானமும் செய்யவும் முயல்க. அவ்வாறு செய்தால் உன் மனம் தீய நினைவுகளால் பாதிக்கப்படாது. செயல் புரியாது தனியே அமர்ந்திருந்தால் எல்லா வகையான எண்ணங்களும் தோன்றி மன அமைதியைக் கெடுத்துவிடும். இந்த மனிதப்பிறவி பெற்றதால் நீ பாக்கியவான். உன்னால் முடியுமளவுக்கு ஆண்டவனைத் துதி செய். நீ கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உழைக்காமல் எதையும் அடைவது முடியாது. உலகச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் தினந்தோறும் பிரார்த்தனைக்கும் ஞான சாதனை கட்கும் ஒரு…

படித்தல் என்றால் என்ன சு- ப- வீ பார்வையில்

படித்தல் என்பது புத்தகத்தை படித்தல் எதிரிலும் சுற்றிலும் உள்ள மனிதர்களை படித்தல் வாழ படித்தல் வாழ்க்கையை படித்தல் பிறருக்கு உதவ படித்தல் இதை தவிர ஏதாவது விட்டுருந்தால் அதையும் முயன்று படித்தல் வாழ்க்கை என்பதே கற்றுகொண்டே கற்றுக்கொடுப்பது தான்

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4

பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம்…

உரையாடலின் ஒரு பகுதி 6

ஒரு சந்தேகம், விஸ்தாரமாக நாடெங்கும் பொது நன்மைக்காக விரைவில் ஒரு சீர்திருத்தத்தையோ,காரியத்தையோ, வலுவுடன் செய்ய ஏகாதிபத்திய சர்வாதிகார சக்தி வேண்டுமல்லவா சர்வாதிகார சக்தி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி அது ஏதாவது சந்தர்ப்பத்தில் தன்னையோ, பிறரையோ காயப்படுத்திவிடும். ஏகாதிபத்திய ஆட்சியிலும் ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரிக்கு முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும் போது மக்களின் சுதந்திரம் பறி போவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். எந்த சமயமும் கொடுங்கோண்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலைவிட சக்தியற்ற மந்தமான அரசியல்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16

எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க ஆண்டவனையே வேண்டுக. அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான். நித்திய அநித்தியப் பொருள்களைப் பற்றி எப்போதும் விசாரணை செய். உன் மனதைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன என்பதை அறிய முயல்க, உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்3

புதன், சனி சேர்க்கையானது, துலாம், மகரம், கும்பம், மீனம், மிதுனம், கடகம், போன்ற இடங்களில் இருப்பின், உறுதியாக யோகபலன்களைத் தராமலிருக்காது. இவர்கள் தசா – புத்திகாலங்களில், சொத்து சேர்க்கை, கெளரவம், பட்டம், பதவி, உண்டு. துலாம் லக்கினத்திற்கு, ராகு, கேது, செவ்வாய் போன்றவர்கள் அதிக பாதிப்பைத் தருவதில்லை, செவ்வாய் சமத்துவமான கிரகமாக செயல்படுகிறார். ராகு, கேதுவோடு புதன், சனி சேர்க்கை பெற்றால் ராகு, கேது தசாபுத்தி காலங்கள் நன்மையே செய்கிறது. லக்கினாதிபதியான சுக்கிரனோட சேர்க்கை பெற்ற ராகு,…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 2

” கொற்றவனே கதிரவனும் கோணமேற செப்பினேன் ஜென்மனுக்கு யோகம் மெத்த ” என்று  புலிப்பாணி சொன்னபடி சூரியன் 5. 9ல் இருப்பினும் யோகபலனைத் தருவார் எனச் சொல்லி உள்ளது. இது  நடைமுறையில் செயல்படுவதாகும். இதே போல் சுக்கிரன் 1, 4, 5, 7, 9, 10 ல் இருந்து அந்த வீட்டின் அதிபதி சுக்கிரனுக்கு நல்ல நிலையில் இருப்பின் நல்ல யோகங்களை விர்த்தி செய்கிறார். லக்னாதிபதியான சுக்கிரன் 8க்குரிய ஆதிபத்திய தோஷம் செய்யார் என பல நூல்கள்…

கோள்களின் கோலாட்டம் 1- 1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம் 1

துலாம் லக்கினம். துலை தனக்கருணன் புகர்சனிசுபராஞ் சூரியனிலமகன் சுபர் கலைமதிமகனும்ம யோககாரகனாங் காணுமவ்விருவரமருவிற் றலமிசை மிகுந்த பலனத தருவர் தபனனுங்குருவுமாரகராங் குலநவமிரண்டே முடையவர்கொல்லார் கொல்வதம் மாரகர்குணமே. (யவண காவியம்) குருவிரவி சேய்கொடியர்கூறுசனிபுந்தி மருவு நலமுடையார் வண்டில் – திருமருவும் யோகத்தாரிந்து மேயச்சுதனுமொண்ணுதன்மீ தாகுமறகத்தாயறி. (தாண்டவ மாலை) ” போலாந் குலாத்திற் சேய்பரிது குருவும் பாவர் சனிபுதனும் மேலாம் சுபர்கள் மதிபுந்தியோகன் மாரகன் சேயே” (ஜாதக அலங்காரம்) துலையிற் பிறந்தார்க்குச் சூரியன் சேய்பொன்னும் சொலும்பாவி புந்திசனிசுங்கன் நிலை சுபர்கள்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3

எதிர்பாராத வகையில் வாழ்வில் முன்னேற்றம் பெறும் இவர்கள், தாய், உடன்பிறப்பு, புத்திரர் வகையில் நன்மதிப்பு, மன அமைதி பெற முடியாதவர்கள், ஆயினும், இந்த கன்னி லக்கினக்காரர்கள் தாழ்ந்த வாழ்க்கையை நிச்சயமாக அடையமாட்டார்கள். அனேகருக்கு யோகம் உள்ள, லட்சுமி கடாட்சம் பொருந்திய கணவனுக்கு தைரியம் ஊட்டுபவளாக மனைவி அமைகிறாள். சிலருக்கு இரண்டு தாரம் ஏற்படுகிறது. இரண்டாம் தாரம் திருப்திப்படுவதில்லை. சிலர் சின்னவீடு வைத்துக் கொண்டு நாடகமாடுவதும் உண்டு. பெண்களின் அரவணைப்பு இவர்களை அணைக்கத் துரத்தி வரும். இவர்கள் பெண்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2

4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி  முனிவர். இது மறுக்க முடியாத உண்மை, உண்மையே.. சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம்.1

“கன்னி லக்கினத்தக்கசுரருக்கிறைபொன் காரியுஞ்சுபர்மதியரிசேய் மன்னிய மூவரசுபராங்கவி மாலுமேயோக காரகராம் உன்னியவன்னோர்மருவினுமதிக யோகமே தரவரவசுபர் பன்னுமாரகராமாரகத்தானப் பதிவரிற்கண்டமாம்பலனே ” (யவன காவியம் ) செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர் செவ்வாயர் வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன் பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள் ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ” (தாண்டவ மாலை ) “மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும் காலேயோகம் புந்திபுகர் ” (ஜாதக அலங்காரம் ) மேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 –…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15

ஞான சாதனை ஞான சாதனை என்பது ஆண்டவனுடைய தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்கிக் கிடப்பதாகும். ஞான சாதனைகளைத் தனிமையான இடத்தில் பழகுவது மிக அவசியமாகும். செடி சிறியதாக இருக்கும்போது வேலி மிக அவசியம். அது பெரியதாகிவிட்டால் கால் நடைகள் அதற்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. அது போல் சில காலம் தியானத்தில் ஆழ்ந்த மனம் நிலைத்த பிறகு நீ எங்கு வேண்டுமானாலும் தங்கி யாருடன் வேண்டுமானலும் பழகலாம். உன்மனம் அதனால் பாதிக்கப்படாது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.3

5, 8 க்குரிய குரு இந்த லக்கினத்திற்கு சமநிலையில் நின்று தன்னோடு சேர்ந்த கிரகங்களுக்கு தக்கபடி நன்மை தீமைகளைத் தருகிறார். 6, 7 – க்குரிய சனி மாரகாதிபதி என்ற நிலையில் சுக்கிரன், புதன், குரு இவர்களோடு சந்திரன்இணைவு பெறும் போது பெரும் தீமைகளை தருகிறார். சனி, செவ்வாய், புதன், கேது சேர்க்கையில் சுக்கிரன்,தொடர்பு இல்லாமல் இருந்தால் மிக நல்ல பலன்களைத் தருகிறது. சனி, சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தொடர்பு அவர் தசாபுத்தி காலங்களில் மிகவும் பாதிப்பான…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 14

குழந்தாய் வருத்தப்படாதே, நம் குருதேவரே ம‍கேசுவரரும், மகேசுவரியும், அவரே எல்லாத் தெய்வங்களின் உருவமும் ஆவார். அவரே எல்லாத் தெய்வீக மந்திரங்களின் வடிவமும் ஆவார். எல்லாத் தேவர்களையும், தேவியர்களையும் அவர் மூலமாக வணங்கலாம் அவரை மகேசுவரர் என்றும் மகேசுவரி என்றும் அழைக்கலாம். வெறும் புத்தகப் படிப்பினால் ஒருவர் நம்பிக்கை பெறமுடியுமா? அதிகமாகப் படிப்பது குழப்பத்தை உண்டாக்கும் சமய நூல்களைப் படித்தறிந்து, கடவுள் ஒருவரே சத்தியம் என்பதையும், உலகம் மித்தை என்பதையும் உணரவேண்டும் என அடிக்கடி குருதேவர் சொல்வார்.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.2

 2, 11 க்குரிய புதன் மாரக தன்மை பொருந்தியவனாக வந்தாலும் நல்ல யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை. இவர் நல்ல இடங்களில் இருந்து சூரியன் – செவ்வாய் தொடர்பை பெற்றால் கல்வியில் நல்ல தேர்ச்சியை தருகிறார் மருத்துவத்துறை ,பொறியியல்துறை, கணக்கு துறையில் தேர்ச்சியும் உயர்தர பதவிகளும் கிடைக்கிறது. 3.10 க்குரிய சுக்கிரன் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் தனித்த நிலையில் நன்மைகள் செய்வதில்லை. தனித்த நிலையில் இருந்துவிட்டால் அவர் காலம் வரும்போது பல பாதிப்பான பலன்களை தருகிறார். செவ்வாயுடன்…

பவனமுக்தாசனம்

 பவனமுக்தாசனங்கள் ஆண், பெண், வயதானவர், சிறுவர் யாவரும் செய்யக்கூடிய மிக இலகுவான ஆசனமாகும். உடல் முதுமை அடைந்து இறுகுவதைத் தடை செய்யும். பலவீனமானவர்கள், நோயாளிகள் உடல் கனமானவர்கள் யாவரும் செய்யக்கூடிய மிக எளிமையான யோகாசனம், இரத்த அழுத்த நோய்க்கு மிகச் சிறந்த பயிற்சி. பவன முக்தாசனம் மனிதனை அமைதிப்படுத்தி, ஒரு சிறந்த நல்ல ஆரோக்கியப் பாதைக்கு அழைத்துச் செல்லும், யோகாசனத்தைப் பற்றியோ பிற விரைவுப் பயிற்சியைப் பற்றியோ ஒன்றும் தெரியாதவர்கள் கூட இப்பயிற்சியை வெகு எளிதாகப் பயிலலாம்.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு சிம்ம லக்கினம்.1

“சிங்க வோரையினிலுத்தவர்க் கிரவி சேய் சுபர்கவி புதன்பாவர் மங்கல குசனும் யோககாரனாய் வரினுமம் மண் மகனாலுக் கங்க மாயுள் ளோனாதலிற்றீமை யாம் பலனீ குவன் வெள்ளி பங்குமாரகாரகமாரகத் தானம் பரிவினுங் கண்ட மாய்ப்பகரே” ( யவன காவியம்) “புந்தியும் பார்கவனும் போற்றற் கரும்பாவி செந்நிறத்த செவ்வாயே செம்மைக் கோள்- அந்நிறத்தாய்யோகமுற்றோர் இப்பலனை யோராதளித்திடுவார் ஆகமதியாரார் புகர் ” ( தாண்டவ மாலை ) “முதலே சிங்கம் புந்தி, புகர், மோதும் பாவர், செய்சுபனாம் ”, “சேர்ந்த சிங்க…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 13

ஒரு மனிதனுக்கு உலகத்தில் எங்குமே எவ்வித உறவினரும் இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மகாமாயை அவனை ஒரு பூனையை வளர்க்குமாறு செய்து உலக பந்தத்தில் சிக்க வைத்துவிடுவாள். அவளது விளையாட்டு அவ்வாறானது என்று குரு தேவர் சொல்வது வழக்கம். கேள்வி – நான் ஏன் குருதேவரின் தரிசனம் பெறுவதில்லை? பதில் – தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவா. எல்லாம் தக்க காலத்தில் ஏற்படும். முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டவனை உணர எத்தனை , தவம் புரிந்தனர் என்பது தெரியுமா?…

சவாசனம் ( சாந்தியாசனம் ) SAVASANAM

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி அமைக்கவும். கண்ணை இலேசாக மூடிக்கொள்ளவும். உடல் பாதத்திலிருந்து மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கைகள், முகம் இவைகள் வரிசையாக இணைத்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சு. நாம் இறந்து போனால் எவ்வாறு உடல் இருக்குமோ அது போன்று உடலை இளக்கி சலனமின்றி 3 முதல் 5 நிமிடம் இருந்து, எழுந்திருக்கவும். ஆசனங்கள் செய்தபின் கடைசியாக சவாசனம் செய்யாமல்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 12

நம் குருதேவர் எழுதப் படிக்க அதிகமாக அறியாதவர். உண்மையில் வேண்டுவது கடவுளிடம் பக்தியே. ஏழையையும், பணக்காரனையும், கற்றவனையும், கல்லாதவனையும் அனைவரையும் விடுவிக்கும் பொருட்டே குருதேவர் இம்மண் மீது தோன்றினார். மலயமாருதம் இங்கு வீசுகின்றது. தன் வாழ்வுப் படகின் பாய்களை விரித்துவிட்டுக் குருதேவரிடம் அடைக்கலம் புகுவோர் நிச்சயம் சிறப்புற்றவரே. ஒவ்வொன்றும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று குருதேவர் தீர்மானித்து வைத்துள்ளார். அவரது பாதங்களில் யாரேனும் பூரணமாகச் சரண்புகுந்தால் எல்லாம் நேராக நடக்கும் வண்ணம் அவர் பார்த்துக் கொள்வார். நடப்பது ஒவ்வொன்றையும்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்3

கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ‘ நோட்டம் ‘ விடாமல் இருந்தால் சரி, அப்படி நோட்டம் விடாமல் இருப்பது இவர்கள் வாழ்க்கைக்கு ஒளி சேர்ப்பதாக அமையும். இந்த லக்கினத்தில் பிறந்த பெரும்பாலான ஆண்கள், தம் மனைவியை துன்புறத்தாமல் இருப்பதில்லை. பெண்கள் தன் கணவனிடத்தில் அலட்சிய நோக்கோடு செயல்படாமல் இருப்பதில்லை. நிலையான இடத்தில் தன் தொழிலைப் பலப்படுத்த முடியாத இளைஞர்களுக்கு சனி, ராகு திசைகள் பெரும் யோகத்தைத் தருகிறது. ஆனால் நிலையற்றதாகவே அவை இருக்கும். குரு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 11

எப்போதும் செயலாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். வேலையின்றி ஒரு போதும் இருத்தலாகாது. ஏனெனில் செயல் அற்ற சோம்பல் நிலையில் எல்லாவகைக்கெட்ட எண்ணங்களும் மனத்தில் உதிக்கும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் என்னிடம் கூறுவது உண்டு. கேள்வி — குருதேவர், தம்மை ஆன்மீக இலட்சியமாக ஏற்றுக் கொண்டோருக்குப் பிறப்பில்லை என்று” கூறியிருக்கிறார். பின்னால் சுவாமி விவேகானந்தர் சன்னியாசம் பெறாதவர்களுக்கு மோட்சமில்லை என்று கூறியுள்ளார். அங்ஙனமானால் இல் வாழ் வார்க்கு உய்யும் வழியாது? பதில் — குருதேவர் சொன்னதும் உண்மை, நரேந்திரர் ( சுவாமி விவேகானந்தர்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடகலக்கினம்2

குரு-செவ்வாயின் சம்பந்தம் பெறாத சூரியன்-சந்திரன் யோகத்தைத் தரமாட்டார்கள். கடக லக்கினத்திற்கு யோகாதிகள் என்கிற வகையில் குரு-செவ்வாய்-சூரியன்-ராகு ஆகியவர்களை நாம் எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆனால் புதன், சுக்கிரன், சனி கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றால் நிச்சயம் யோகத்தைத் தருவதில்லை. இது அடியேன் அனுபவம். கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பைத் தரும் கிரக வரிசையில் சுக்கிரன்-புதன்-சனி-கேது கிரகங்களைச் சொல்லியுள்ளனர். ஆனால் பாதிப்பைத் தரும் கிரகங்கள் 3,6,8 ஆகிய ஸ்தானங்களிலிருந்து சூரியன், சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்று…

ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் – HASTHA PADANGUSTHASANAM

கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு, மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி ஒரு காலைத் தூக்கும்போது மூச்சை வெளியிட்டு, மடக்கிய காலை படத்தில் காட்டியபடி உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். இப்பொழுது கால் தூக்கிய நிலையில் வந்தவுடன் இரு கைகளையும் படத்தில் காட்டியபடி நீட்டி, தூக்கிய நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக்கொண்டு சில வினாடியில் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கடக லக்கினம்.1

“கடக லக்கினத்தோர்க்கமைச்சன் சேய்சுபராங்காரகன் யோககாரகனா முடனிருந்திடினும் பிரபல யோக  முற்றவனி ரவியோ கொல்லான் றிடமுள பளிங்கு மாலிவர சுபர்  செப்பிய விவரொடுங்கொடிய முடவன் மாரகனாமாரகத்தான்  முற்றிடிற் கண்டடமு மொழியே” ( யவன காவியம் ) “சுங்கனிந்து மைந்தனிவர் சூழாக்கொடுக்கோட்கள் மங்கலன்மா வேந்தனிவர் மன்னுகின்ற-துங்கமுள்ள நல்லோர் கணல்லயோகக் கிறைவனாகுமவன் சொல்லுறிற்பூ சிதனமாய் சொலல் ( தாண்டவ மாலை ) “நூதலுங்கடகம் புதர்புந்திநேயாய் செய்பவர் குரு செவ்வாய், இதமார் சுபனாம் சேய்யோகம் இருக்கும்” ( ஜாதக அலங்காரம் ) “கர்கடக…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 10

ஸ்ரீராமகிருஷ்ணர் பல சமயக் கொள்கைகளையும் அனுஷ்டித்துப் பார்த்தது  அவைகளில் காணும் ஒரு மேம்பாட்டை எடுத்துப் போதிப்பதற்கு என எனக்குத் தோன்றவில்லை. இரவும், பகலும் எந்நேரத்திலும் அவர் ஆண்டவனைப்பற்றிய ஆனந்த நினைவில் மூழ்கிக் கிடப்பார்  வைஷ்ணவ, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிகளைப் பின்பற்றி நடந்து ஆத்மிக சாதனங்களை மேற்கொண்டதால் அவர் தெய்வீக லீலைகளை அனுபவித்தார் அனால், குழந்தாய், குருதேவரின் சிறப்பான அம்சம் அவர் கொண்ட துறவு நிலையே. அது போன்ற இயல்பான துறவினை யாரேனும் கண்டிக்கிறார்களா? அவரது அணிகலம் துறவே.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 9

சிராத்தத்தில் ( பிதிர்கட்கு ) அளிக்கப்படும் உணவை உண்ணக் கூடாது என்று பக்தர்களுக்குக் குருதேவர் சொல்வதுண்டு, ஏனெனில் அவ்வித உணவு பக்திக்கு ஊறு செய்யும். அது தவிர கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட எவ்வித உணவையும் ஒருவர் உண்ணலாம் . குருதேவர் உன்னைக் காப்பவராக இருப்பார். நீ அவரை நம்பி வாழ வேண்டும். அவர் விரும்பினால் உனக்கு நன்மை செய்யட்டும், இல்லையேல், உன்னை மூழ்கச் செய்யினும் செய்யட்டும். ஆனால் நீ எப்போதும் உன் சக்திக்குட்பட்டு, எப்போதும் நேர்மையானதையே செய்தல்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 4

இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும். ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை. இதே லக்கினத்திற்கு,  அந்தணரும் கேந்திரமேர  அவர் செய்யும் கொடுமையது மெத்தவுண்டு குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு. ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே. செப்புவாய்…

சக்கராசனம் — CHAKKARASANAM

சக்கராசனம் — CHAKKARASANAM முதல் முறை — பிறையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தரையில் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்கவேண்டும். இரண்டாவது முறை — தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் காட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம்.3

மிதுன  ராசி லக்கினத்தில் பிறந்த இவர்களுக்கு சூரியன் குரு, செவ்வாய், இவர்களின் சேர்க்கை (அ) பார்வைக்கு மாரகம் தரக்கூடிய அதிகாரம் உண்டு. இவர்களோடு ராகு, கேதுக்கள் சேர்க்கை பெற்றோ (அ) தொடர்பு பெற்றோ பலமுடன் இருப்பின் இவர்களும் மாரகத்தை தரக்கூடியவர்களே. இந்த மிதுன லக்கினகாரர்களுக்குப் பெரும் பாவியான குரு பகவான் தனது வீட்டிற்கு மறைந்து இருப்பினும் (அ) உடல் ஸ்தானம் என்கிற சந்திரனுக்கு 2,3,6.8,12 ஆகிய இடங்களில் அமர்ந்து இருப்பினும் நல்ல யோகங்களை விருத்தி செய்யக் காரணம்…

இயற்கையும் இறைவனும் 3

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென வழிவழிவந்த ஒரு இயல்பு உண்டு அதை உறுதியாக பற்றி நின்றவாறு செயல்படுத்துவதே அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். இந்த விஷயத்தை சிந்தித்தால் நம் நட்டின் வழிவழி வந்த இயல்பு என்ன என்பது விளங்கும் அது விளங்கிவிட்டது என்றால் நாடு சுபிட்சம் அடைந்து விடும். உண்மையில் நாம் இப்போது நமது பண்பாட்டை மறந்து இருக்கின்ற காலத்தில் இருக்கின்றோம். இது நீடித்தால் பண்பாட்டை இழந்த காலத்தில் கலந்து நமக்கென எந்த அடையாளமும் இல்லாத…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 2

மிதுன லக்கினத்திற்கு குரு-சனி சேர்க்கை ராஜயோகம் என ‘‘ கவி ’’ கூறுகிறது. ஆனால் அனுபவத்தில் குரு-சனி ‘ பரஸ்பர பார்வை’( அ ) 5,9,3,10 பார்வைகள் மட்டுமே யோகத்தைத் தரும். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரி, செவ்வாய், குரு கொடுமைகளை அதிகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்கள் ஆகிறார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் சேர்க்கை எங்கு இருப்பினும் நல்ல யோகத்தை விருத்தி செய்கிறார்கள். சந்திரன் மாரகத்தை செய்யான். ஆனால் குரு பகவான் கேந்திராதிபதி தோஷத்தில் பலம் பெற்றவராகி-…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மிதுன லக்கினம். 1

“மைதுனவோரை வந்தவற்கிரவி மண்மகன் பீத்கன் கொடுமை செய்குவர் பொன்னுஞ்சனியுமே கூடிற் செகமிமை யோககாரகராம் ஐயவெண் பிறையு மாரகனல்ல வந்றியுங் குசனு மாரகனாம் பைரவதனைக் கவர்ந்த ரசிலையைப் பழித்திடுங்கடி தடத்தணங்கே” ( யவன காவியம் ) “சேய்சீவனோடிரவி சேராக் கடுங்கோடியர் ஆயபுகரோ னொருவனான கோள் – சேயிழையாய் மந்தனொடு மந்திரியும் வன்மையுடன் கூடுமெனல் நந்துமேடப்படியே நாடு” ( தாண்டவ மாலை ) “மானேமிதுனல லக்கினத்திற் கரசன் செவ்வாய் கதிர்பாவி தனேசுக்கிரன் சுபனாகு மதியுஞ்“மைதுனவோரை வந்தவற்கிரவி சனியுமற்ற பலன் ”…

இயற்கையும் இறைவனும் 2

உயர்ந்தோங்கிய மலைகள்  அடி வானத்தை தொட்டு விடுமோ என்கிற நிலையில் அடர்ந்த கானகங்கள்  பரந்து விரிந்து இருக்கும் கடல் இவைகளை நாம் இயற்‍கையென்று அழைக்கிறோம். அதன் நிலைகளை கண்டு மனம் மயங்குகிறோம் நம்மையே மறக்கின்றோம். இவைகள் உருவான விதம் அல்லது உருவாக்கிய சக்தி எது என்ற பிரம்மிப்போடு சிந்திக்கிறோம். நம் முன்னோர்கள்  சிந்தித்து அந்த சக்திக்கு இறைவன் என பெயரிட்டு நமக்கு  தந்தனர். அதாவது இயற்கை – இறைவன் அவர்கள் மிக எளிதாக நமக்கு உணரும் வண்ணம்…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4

இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம் மனைவிக்கு அகால மரண தோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்துவிடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜ…

இயற்கையும் இறைவனும் 1

மதம் என்றால் என்ன? வாழ வேண்டிய முறையை உள்ளடக்கியது மதம். வாழ வேண்டிய முறை என்ன? நீயும், நானும் வேறல்ல. நாமும் பிரபஞ்சமும் வேறல்ல என்ற உண்மையை உணர்வது தான் வாழ வேண்டிய முறை இன்னும் சொல்லப் போனால் ஒன்று பலவாகி பலது ஒன்றாவது இயக்க சூத்திரம் அந்த இயக்க சூத்திரத்தை முழுவதும் உணர உள்ள கருவியாய் அமைவது மதம் நான் எனும் பேதம், நாம் எனும் போதமாய் மாற உள்ள படி நிலைகளில் முதல் படியாய்…

நாட்டின் வளர்ச்சிதான் தான் நோக்கம் என்றால்

ஒருவரின் மாத சம்பளம் 10,000 ரூபாயை.. அவர் பணமாக செலவழிச்சா, 10,000 ரூபாயும் செலவு செய்யலாம். ஆனால்!!! அதையே அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா, சேவை கட்டணம் 15% – 1,500 ரூபாய் போக, அவரால் 8,500 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும்.  யோசிங்க  இதோ 130 கோடி பேருக்கு 1500 × 130கோடி = 1,95,000,கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக மாதம், மாதம் வங்கிகளுக்கோ அல்லது கும்பானிகளுக்கோ போய் சேரும். ஒரு…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்3

சூரியன்-சனி போன்றோர் யோகத்தன்மையும், சந்திரன், குரு-சுக்கிரன் போன்றோர் அசுபத்தன்மையும், சந்திரன் குரு, செவ்வாய் மாரகத்தன்மையும் புதன் அசுபனாயினும் மாரகர் ஆகிறார். சந்திரன்-குரு, செவ்வாய் போன்றவர்களோடு சேர்ந்த எந்த கிரகமும் தீமைகளைத் தருவதோடு ஆயுள்தோஷத்தையும் தர காரணமாகிறார்கள் என்று ” யௌவன காவியம்” கூறுகிறது. ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 4 – ல் சந்திரனிருந்து புதன்,குருவின் தொடர்பை பெற்றால் ( அ )பார்க்கப்பட்டால், யோக பலன்கள் விருத்தியாகும். சனி, ரிஷப லக்கினத்திற்கு சூரியன் – புதன் ஆகியோரின் தொடர்பை…

பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதிதுன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை பாலுமின்றிச் செயபுவனம் பாழ் விளக்கம்: அதாவது, பிலவ ஆண்டில் மழை குறைவாக பெய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு துன்பம் அதிகரிக்கும், அதனால் அதிகம் கோபம் கொள்வர், மக்களுக்கு நலமில்லை. ஆடு, மாடு, உள்பட நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்கள் பெருமளவில் மடியும். உணவும், பாலும் இன்றி உலகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆதாரம்:- இடைக்காட்டுச் சித்தரின்-“அறுபது வருட வெண்பா”.

கோள்களின் கோலாட்டம் – 1.7 12லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம் 2

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் ஆதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே. சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதியத்தினால் சுபராயினும்,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்.

ரிஷப லக்கினம். “விடைதனிலுதித் தோற்கிரவியுஞ்சனியு மிக்க வர்சனி யிறையோகன் படிமிசை மதிபொன் சுக்கிரன்பாவர் பனிமதி பொன் குசனிவர்கள் மடியுமாரக ராகம் புந்தியோ கொல்லான் மாடிகருட னெவரேனும் அடையினுங்கண்ட காலமேன்றாய்ந்திங் கறைகுவர் சோதிட முணர்ந்தோர்” ( யவன காவியம் ) “குரு வெள்ளியிந்து கொண்டாடக் கொடியவர் மருவு சுபக்கோண் மந்தனென்றூழ் திருவுமா யோகங்கொடுப்பான் சனி யருவனாமெனவே ஆகுமெனப்பாவாயறி. குரு மதலாய்க் கூறுகின்றகோட்களே கொல்லும் மருவினைய ராராயினென்றுந் – தெரியும் படியிடப் வோரையினிற் பார்மிசையிற்றோன்றும் முடியுடையார் கட்குமொழி.” ( தாண்டவ…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் :-

இந்த மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் 1 – 8 க்குரியவராகிறார். இவர் 1, 5, 8, 9, 10 – ல் இருந்தால் ஆயுள் பலம் ஏற்படுகிறது. சொத்துக்கள் சேரும். ஆனால் அரசாங்க வகையில் பயம் ஏற்படும். காவல் துறையினால் தண்டனைகள் ஏற்படலாம் என்ற விதி சொல்லப்படுகிறது. செவ்வாய் மேற்படி இடங்களில் சுபத்தன்மை இழந்து இருப்பின் வசதி வாய்ப்பை தருவதில்லை.நல்ல நிலையில் இருப்பின் யோகம் தருகிறது.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 2

செவ்வாய் – ஜாதகரை சில தவறான காரியங்களில் ஈடுபடுத்தி, பல பாதிப்புகளைத் தந்து திருத்துபவராக உள்ளார். ராகு, கேதுக்கள் இந்த மேஷ லக்கினத்திற்க உப – ஜெயஸ்தானங்களான 3, 6, 11 ஆகிய இடங்களில் இருந்து சுபத்தன்மை பெற்று இருப்பின் நல்ல பலன்களைத் தருகிறார்கள். ராகு, கேதுக்களுடன் சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எங்கு இருப்பினம் எதிர்பாராத பாதிப்பான பலன்களை தருகிறார்கள். ஆயுதம், நெருப்பு விஷ ஜந்துக்களால் பயம் போன்றவற்றையும் பெண்கள் வகை,…

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு மேஷ லக்னம் 1

மேஷ லக்னம் :- பஞ்சமாபதி சூரியனும், பாக்கியாதிபதி குருவும் சுபத்தன்மை பெற்றவர்கள். இவர்கள் இருவரும் எங்கு கூடியிருப்பினும், அத்தன்மைகளுக்கேற்ப யோக பலன்களை விருத்தி செய்கின்றனர். எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் வீழ்ச்சி பெற வைக்காது. காப்பாற்றி விடுகின்றனர். சூரியன் – குருவானவர் சுப வர்க்கத்தன்மை பெற்று இருப்பின், அவர்கள் தசா – புத்தி – அந்த காலங்களில் யோக பலன்களைத் தந்து விடுகின்றனர். புதன், சுக்கிரன், சனி கொடி தன்மை பெற்றவர்கள் ஆவர். இவர்கள் 2, 7,…

கோள்களின் கோலாட்டம் பாகம்-1  – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு

யவன காவியம் – தாண்டவமாலை – கார்க்ய நாடி – ஜோதிட சாகரம் – சந்திர கலா நாடி – சந்திர காவியம் – குமாரசுவாமியம் போன்ற பல சிறப்பான நூல்களில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்து அனுபவ ஆராய்ச்சி மூலம் நடைமுறையில் கண்ட எனது 20 ஆண்டு கால ஜோதிட ஆராய்ச்சியின் வாயிலாக இதனை உங்கள் முன் படைக்கிறேன். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷ லக்கினத்திற்குரவி பொன்னல்லர் மிகவும் யோககாராங் கூடியேயிரக்கிற்..பிரபல யோகங் கொடுப்பர்மால் கவிசனி தீயோர்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8

கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 7

பரிசுத்தமான தெய்வப் பிறவியாக இருந்தபோதிலும் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறர் பொருட்டுத் துன்புற்றதையும், ஆயினும் அதே சமயம் தமது ஆனந்த பரவசத்தையும் தேவியினைப் பற்றிய தியானத்தின் இன்பத்தையும் ஒரு கணமும் இழக்காமல் வாழ்ந்ததையும் மட்டும் நீ நினைத்தாயானால், உன் துக்கமும், துன்பமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவர் ஆனந்த சொரூபி. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர் பக்தி பரவசத்திலும், களிப்பிலும், சிரிப்பிலும், போதிப்பிலும், கதை சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார். எனக்குத் தெரிந்தவரை அவர் எதற்காகவும் கவலைப்பட்டதாகத்…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஏழு முதல் பன்னிரண்டு வரை

ஏழாம் பாவம் களஸ்திரஸ்தானம்:– காமம், ஆண், பெண் லட்சணம், சையோகம், கூட்டுத்தொழில் விசயம், வழக்கு அபராதம் விவாக பிரிவினை குத்தகை அன்னிய தேச செல்வாக்கு, நீண்ட ஆயுளுக்கு பங்கம், இழந்ததை பெறல் தத்து பிள்ளை. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம்:- அவமானம், அபகீர்த்தி, நித்தி¬, மரணம், தீர்க்காயுள் கொலை செய்தல், தந்திரம், தத்து ஸ்தானம், மறுபிறப்பு, ஆயுள் ஸ்தானம், உயில் விவரம், செயற்கை மரணம். எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர். முற்றுகை, அறுவை சிகிச்சை ,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1

ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம., சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண சுத்தியுடன் தியானித்து ( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல புருஷோத்தராகிய வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம் ஆகும் பொருட்டு திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது காண்டம் எழுதலாயினேன். இக்காண்டத்தில், தன்வந்தரி, சாரங்கதரீயம்,…

கோள்களின் கோலாட்டம் – 1.6 பாவங்களின் செயல்கள். ஓன்று முதல் ஆறு வரை

முதலாம் பாவம் ஜனன தன்மை முடி-மெய்:- பிறர் பணத்தை தனதாக்குதல், தோல் சம்பந்தம், இளைய சகோதர விசயம், தாய்வழி சொத்து, உயர் தர கல்வி, நெடும் பிரயாணம், வெளிநாட்டு வாழ்க்கை, தாய் மாமனுக்கு வரும் ஆபத்து, தந்தையின் தொழில் வியாபாரம், ஜாதகனின் சிறப்பு பழக்க வழக்கங்கள் திடகாத்திர நிலை பலம். இரண்டாம் பாவம் குடும்பஸ்தானம், கற்பனை:- வலது நேத்திரம், முகம், வித்தை, தனம், உணவு, வாக்கு, நெற்றி, ஜீவ காருண்யம், நாசி, பல், பாத்திர பண்டம், அன்னதானம்,…

உரையாடலின் ஒரு பகுதி 5

ஒரு கிராம நிர்வாகத்திலும், சுய ஆட்சியிலும் பங்கு கொள்ளும் அந்த கிராம மக்கள் அனைவரும் சம உரிமைகளின் செல்வாக்கோடும், உற்சாகத்தோடும், கிராம பொது நல முன்னேற்றத்துக்கு பாடுபடுவார்கள் அந்த கிராம ஆட்சியின் சபைக்கு தலைவானக தேர்ந்தெடுப்பவன் அந்த கிராம மக்களின் நன்மையையும் நன்மதிப்பையும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சர்வ சக்திவாய்ந்த அரசு தன்னுடைய பிரநிதியை அனுப்பி அந்த கிராம ஆட்சியை நேரடியாக நடத்தினால் அந்த ராஜ பிரதிநிதிக்கு கிராமமும் தெரியாது கிராம மக்களின் உணர்வும்…

பொன் மொழிகள்

சொர்க்கமும், நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். நனையச் செய்த கடவுளே காய வைக்கவும் செய்வார். கெட்ட பெயரெடுத்த ஒரு மனிதன் ஏற்கனவே பாதித் தூக்கிலிடுகிறான். கடவுளை நெருங்கிச் செல்வதற்கு மலையேற வேண்டிய தேவையில்லை. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழைகளிலும் ஏழை. உன் பெயர் தான் வியாபார அடையாளம், அதை உன் உயிர் போல் காப்பாற்று. நமது அறியாமையை மேலும், மேலும் அறிந்து கொள்வதே கல்வி ஆகும். கடன்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 3

அவித்தையாகிய அஞ்ஞானம் எனப்படுவது இப்படிப்பட்டதென்று விரித்துக்கூற இயலாதது, அது அனாதி, அது இவ்வுலகத் தோற்றறத்திற்கு காரணம். அது ஆத்மாவிடம் கற்பனை செய்யப்பட்ட உபாதி. தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் எண்ணுவது போல் மனதிற்குச் சொந்தமான கர்த்ருத்வம், போக்த்ருத்வம் ( செய்ப வனாயும், அனுபவிப்பவனாயும் இருக்குந்த தன்மை ) முதலிய குறுகிய மன பான்மைகள் ஆத்மாவிடம் தவறாகக் கற்பனை செய்யப்படுகின்றன. அஞ்ஞானி பயனில் ஆசை வைத்துக் கர்மத்தை மேற்கொள்ளுகிறான்.

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2

கருமத்தால் அஞ்ஞானத்தை அழிக்க இயலாது, ஏனெனில் அது அஞ்ஞானத்திற்கு விரோதியன்று எப்படி ஒளியால் மட்டும் இருளைப் போக்க இயலுமோ அப்படி ஞானம் ஒன்றினால்தான் அஞ்ஞானத்தை ஒழிக்க இயலும். ஆத்மா அளவிற்குட்பட்டதாயும் கட்டுப்பட்டதாயும் தோன்றவதற்கு காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் அழியும் பொழுது வேற்றுமையைக் கடந்த ஆத்மாவானது, மேகம் நீங்கியதும் சூரியன் பிரகாசிப்பதுபோல் தன்னுடைய ஸ்வரூபத்தைத் தானே விளக்கிக் காட்டும். உலகம் விருப்பு, வெறுப்புக்களால்நிறைந்துள்ளது. அது ஒரு கனவுக்கொப்பாகும். அஞ்ஞான நிலையில் அது உண்மைபோல் தோன்றினாலும், ஞான விழிப்பு ஏற்பட்டதும்…

ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.

அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6

கேள்வி – நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தந்தை எனக் கருத முடியுமா? பதில் – ஆம், அவர் என் தந்தையாரும், தாயாரும், உடன் பிறந்தாரும், நண்பருமாவார். எனக்கு எல்லாம் அவரே, நீ அவர் உருவப் படத்தின் முன்னின்று பிரார்த்தனை செய்தால் அப்படித்தின் மூலம் உனக்குக காட்சி தருவார். அந்தப் படம் வைக்கப் பட்டிருக்கும் இடம் கோயிலாக ஆகிவிடும். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, ஸ்ரீராமகிருஷ் ண‍ரின் பெயரை, மோனமாக ஜபிப்பது. ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நம்பிக்கை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 5

குருதேவர் மகா சமாதி அடைந்தபோது நானும் போகவே விரும்பினேன், ஆனால் அவர் என் முன் தோன்றி, நீ இங்கேயே இருக்கவேண்டும். செய்து முடிக்கப் பலபணிகள் இருக்கின்றன, என்று கூறினார். சூட்சும சரீரயாய்ப் பக்தர்கள் இதயத்தில் முந்நூறு வருடகாலம் வாழப்போவதாக அவர் கூறினார். உலகிற்குக் கடவுளின் தாய்மைத் தன்மையை எடுத்துக் காட்டவே ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 4

கீழ்நோக்கி ஒடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் கதிரவனின் கிரணங்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோன்ற மனமும் இழிந்த பொருள்களான விஷய சுகங்களை நாடிப் போவது இயற்கை . ஆனால் கடவுளின் அருள் உயர்ந்த பொருளை நாடிச் செல்லும்படி மனத்தை தூக்கிவிடும். நாம் நூறு தரம் கேட்டாலும் கூடத் தன் கையிலுள்ளதைக் கொடுக்க மறுக்கும் குழந்தை மற்றொருவருக்கு கேட்ட மாத்திரத்திலேயே கொடுத்துவிடலாம். அது போன்றே ஆண்டவன் அருளும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்க்கு கிடையாது .

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 3

உலகத்தில் துன்பம் நிறைந்திருக்கிறது. நாங்கள் ஆண்டவனை வணங்கினோம். ஆயினும் துன்பத்திற்கு முடிவுமில்லை, என்று வருந்திப் பலர் கூறுகின்றனர். ஆனால் துன்பமும் கடவுள் தந்த பரிசே. அத்துன்பம் கடவுட் கருணையின் சின்னமாகும். ஒருவருக்கு வேண்டுவதெல்லாம் இறைவனது அருளே. ஒருவர் அதற்காகவே பிரார்த்தனை செய்யவேண்டும். மனிதப் பிறவியிலே எவ்வித மகிழ்ச்சியும் இல்லை, உலகமே துன்பத்தில் மூழ்யிருக்கிறது. மகிழ்ச்சி என்பது பெயரளவில் தான் உள்ளது. குருதேவரின் அருள் பெற்றவனே, அவர் ஆண்டவன் வடிவம் என உணர்வான். அதுதான் ஆனந்தம் என்பது நினைவிருக்கட்டும்.

கிரக பலம். கோள்களின் கோலாட்டம் –பாகம் – 1 1.6

கிரக பலம். சூரியன்-செவ்வாய்-சனி-ராகு-கேதுக்கள், மேசம்-மிதுனம்-சிம்மம்- துலாம்-தனுசு-கும்பம் போன்ற ராசியின் முதல் 15 பாகைக்குள் இருப்பது மிக நல்லது. ரிஷபம்-கடகம்-கன்னி-விருச்சிகம்-மகரம்- மீனத்தில் கடைசி 15 பாகைக்குள் இருப்பது நல்லது. சந்திரன்-புதன்-குரு-சுக்கிரன் போன்றவர்கள் மேஷம்-மிதுனம்-சிம்மம்-துலாம்-தனுசு- கும்பத்தின் பின் 15 பாகைக்குள் இருப்பது நல்லது. தை-மாசி-பங்குனி-சித்திரை-வைகாசி-ஆனி போன்ற மாதங்களில் சூரிய சந்திரருக்கு அதிக பலம்.

கால பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.6

கால பலம். பகலில் பிறந்தவர்களுக்கு … சூரியன், குரு, சுக்கிரன், பலம். இரவில் பிறந்தவர்களுக்கு .. சந்திரன், செவ்வாய், சனி, ராகு,கேது பலம். புதன் பகல் இரவு எந்த நேரமும் பலம். கேந்திரத்தின் வலுத்தன்மை. லக்கின கேந்திர ராசியாக : – மிதுனம், கன்னி, தனுசு ஆக வருவது பலம். சதுர்த்த கேந்திர ராசியாக :- கடகம், மகரம், மீனம் ஆக வருவது பலம். 7வது இட கேந்திர ராசியாக :- விருச்சிகம், ஆக வருவது பலம்.…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்

லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின்…

நட்சத்திரத்தின் சிறப்பு 2

இனி சில அடிப்படை விஷயங்களை காண்போம்: கிழமைகள் – பிருதிவி நட்சத்திரங்கள் – தேயு இந்த அடிப்படையை முதலில் சிந்திப்போம் ஞாயிறு – பிருதிவியில் தேயு திங்கள் – பிருதிவியில் அப்பு செவ்வாய் – பிருதிவியில் தேயு புதன் – பிருதிவியில் வாயு குரு – பிருதிவியில் பிருதிவி சுக்கிரன் – பிருதிவியில் அப்பு சனி – பிருதிவியில் ஆகாயம் இதில் பிருதிவியில் பிருதிவி, பிருதிவியில்-அப்பு மிக நல்லது. மற்ற பிருதிவியில் தேயு, ஆகாயம் ஆன்மிக சாதனைக்கு…

நட்சத்திரத்தின் சிறப்பு 1

ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது. பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த…

அர்க்களா பலன் ( ஜெயமுனிமதம் ) 1

1.  ஒரு பாவத்திற்கு அந்தப் பாவத்திலிருந்து இரண்டு நான்கு, பதினொன்று ஆகிய இந்தப் பாவங்களுக்கு அர்க்களம் என்று பெயர். ஒரு கிரகத்திற்குத் தான் இருக்கும் பாவத்திற்கு 2, 4, 11 ஆகிய இப்பாவங்களுக்கும் அர்க்களம் என்று பெயர். 2.  அர்க்களம்  சுப அர்க்களம் என்றும், பாப அர்க்களம் என்றும் இருவகைப்படும். 3.  சுபக்கிரகங்கள் மேற்குறித்த 2,4, 11 இவைகளில் இருந்தால் சுப அர்க்களம் உண்டாகும், அதாவது சுப பலன் உண்டாகும். 4.  பாபக் கிரகங்கள் மேற்குறித்த 2,…

யோசிக்க வேண்டிய விஷயங்கள்

வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது மரம் வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம் ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை. தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது. கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில். நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி.. பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை காரணமே இல்லாமல்…

பிராமண பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

கடகம், விருச்சிகம், மீனம் :- இது பிராமண பாவ ராசிகள் இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்னாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றின் இருப்பில் சரியான பிடிவாத குணம் உள்ளவர்கள். அடிக்கடி பொறுமையை இழப்பவர்கள் அறம், பொருள், இன்பத்தில் பற்று கொண்டவர்கள். தெய்வீக ஆன்மீக வழியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். தான் நினைத்ததை சாதிக்கும் தன்மையுடையவர்கள், தன் விருப்பதிற்கு மாறாக நடப்பவர்களை தூக்கி எறியும் சுபாவம் உள்ளவர்கள். தலைவணங்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்களிடம் சமமாக பழகுபவர்கள். ஜாதி,…

சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மிதுனம், துலாம், கும்பம்:- இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின் பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர். நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள். எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர். சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.…

வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…

சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4

மேஷம் – சிம்மம் – தனுசு :- இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக்…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 2

புதன், சனி 7 ல் நிற்க காம இச்சை குறையும், சனி 8லிருப்பினும் காமம் குறைவே.  குரு, சுக்ரன், சனி, சுக்ரன் சேர்க்கை மந்தமான காமத்தைத் தரும்.  இவற்றை சுக்கிரன், 8 மிடம் ( SEX ORGANS ) சயன ஸ்தானம் இவற்றையும், புத்ரபாவத்தையும் கவனித்து அறிதல் நலம். மிருகசீரிஷம், மூலம், சதயம் இவை நபும்சக நட்சத்திரங்களாகும். ஏழாம் பாவம் இவற்றில் அமைவது கவனிக்கத்தக்கது. சனி, தனுசு, அல்லது ரிஷபத்தில் இருக்க அதுவே லக்னமாக அலித்தன்மை இருக்கும்.…

நபும்ஸக நிலை அறிய விதிகள் 1

( ஆதான ) கருத்தரிக்கும் நேரத்தில் சந்திரன் இரட்டை ராசியிலும், சூரியன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலித் தன்மை ஏற்படும். சனி இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருந்து ஒருவரை ஒருவர் பார்க்க அலியாம். செவ்வாய் ஒற்றை ராசியிலிருந்து சூரியன் இரட்டித்த ராசியிலும் இருந்து செவ்வாய் சூரியனைப் பார்த்தாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், லக்னம் ஒற்றை ராசியிலிருந்து செவ்வாயினால் பார்க்கப்பட்டாலும், சந்திரன் இரட்டை ராசியிலும், புதன் ஒற்றை ராசியிலும் இருக்க, செவ்வாய்…

நபும்ஸக யோகங்கள் ..2

வியாதியினால் புணர முடியாதவர் நஷ்டகர். ஆண்குறி விரைப்பு இல்லாமல் விந்து வெளிவரக்கூடியவர் அசேவ்யர். பெண் உறுப்பை முகர்ந்த பின்னரே புணரக்கூடியவர் சுஷண்டி. பெண்மைத் தன்மை நிரம்பிய ஆண்களும், உறுப்புக்களை அறுத்துக் கொண்டவரும் ஷண்டர்கள். மோக பீஜர் என்று ஒருவகை உண்டு. பெண் தனது உறுப்புக்களை தொட்ட பின்னரே உணர்ச்சிவரக் கூடியவர், மற்றொரு வகை. க்ரஹநிலைகளை கொண்டு இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ள வேண்டும்.

நபும்ஸகயோகங்கள் 1

  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அலித்தன்மைகள் திருமணத்திற்கு முன் இவற்றைக் கவனிப்பது மிக அவசியமாகும். இவை பொதுவில் இருவகையாகும். சிலருக்கு பீஜத்தில் பலம் குறைவாகும், மற்றும் சிலருக்கு பீஜத்தில் பலமே இருக்காது. லிங்கம் இல்லாதவர்கள் நைசர்திக சண்டா வகையினர். பீஜத்தில் சக்தியில்லாதவர்கள் ( ஆண் விந்து வெளிப்படாதவர் ) பாத வகையினர். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை சம்போகம் செய்யக்கூடியவர் பக்க்ஷ ஷண்ட வகையினர், ஒரு பெண்ணை மற்றொருவர் புணர்ந்த உடனே புணர்பவர் கீலகர். குரு சாபத்தால புனர்ச்சி…

தவறு

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை.. செய்த தவறு  வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்.. சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும்.. சில தவறுகள் நாம் யாராக இருக்கவேண்டும் என்பதை சொல்லி தரும்.

திரிம்சாம்சம்

திரிம்சாம்சம் என்பது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும்…

உரையாடலின் ஒரு பகுதி 4

யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்துவிட்டால் மக்கள் அனைவரும் அடிமை, செக்கு மாடுகள், ஆகிவிடுவார்கள் அப்படி பட்ட அரசாங்கம், அரசு, சுயநலத்திற்காகத்தான் பாடுபடும். வரலாறு அதுதான் சொல்கிறது யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஜனங்களுக்காக செயல்பட்டதாக எந்த நாட்டு சரித்திரமும் கிடையாது. அப்ப ஏகாதிபத்தியம் கூடாதுன்னு சொல்லுறயா ஏகாதிபத்தியம்ன்னா என்ன ? ஒரே தலைமை புரிஞ்சுக்கோ நம்ம நாட்டுக்கு ஏகாதிபத்தியம் சரியாகாது ஏகாதிபத்தியம் என்பது சிந்திக்காத சிந்திக்க மறுக்குற அடிமை முட்டாள் பிரஜைகளை…

மதிக்க வேண்டிய உறவு

உங்கள் அன்பு யாருக்கு பலமோ… உங்கள் வார்த்தை யாருக்கு மகிழ்ச்சியோ… உங்கள் புன்னகை யாருக்கு தேவையோ… உங்கள் மௌனம் யாருக்கு கண்ணீரை வர வைக்குமோ… உங்கள் பிரிவு யாருக்கு துன்பத்தை தருமோ… உங்கள் நினைவு யாருக்கு பொக்கிஷமோ… அவரே   உண்மையில் நீங்கள் மதிக்க வேண்டிய உறவு

உரையாடலின் ஒரு பகுதி 3

தேசபக்தி என்றால் என்ன? தேசம் என்பது என்னவென்று தெரிந்தால் தான் சரியான பக்தி செலுத்த முடியும் சரி, இனி கேள்விக்கு வருவோம் தேசம்னா என்ன மண்பரப்பா? மரமா? கல்லா? தேசியக்கொடியா இல்லை. தேசபக்தின்னா மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகள் மீதும், மொழி வழி கலாசாரங்கள் மீதும் கருத்து சொல்வதும் அவற்றை பேணிக் காப்பதும் தான் தேசபக்தி. மொழிகளில், கலாசாரத்தில் கைவைக்கும் ஏதேச்சதிகாரமான ஆசை, துதி பாடுவது, ஏகாதிபத்திய அரசு எது செய்தாலும் சரி என்று ஆனந்த கூத்தாடுவது,…

பரகாயப் பிரவேசம்

தீப ஒளியோக முறையில் மூச்சை உள்ளே இழுக்கும் போது, உள்ளே நிலை நிறுத்தும் போதும், அவைகளுக்கான உச்சரிப்புகளை வாயாலும், பின்னர், மனதாலும், பின்னர் அஜாப முறையில் ஆக்ஞையிலும் சொல்ல – பருவுடன் ஜோதி வடிவாகவும், இதயத்தில் அங்குஷ்ட பிராண ஜோதியையும் காண்பதுடன், பிரணவ தேகத்தையும் அடையலாம். இரண்டு கைகால் விரல்களைக் கட்டி மல்லாந்து படுத்து, மனதைச் சிதறவிடாது நிறுத்தி, மவுனத்தில் அழுந்தினால், மனம் சுழுப்தியில் அடங்கும். இந்த நிலையில், ஐங்கோல உச்சரிப்பை ஏழு ஸ்வரங்களில் எழுப்ப வேண்டும்.…

திருமணத்திற்குரிய காலங்கள் விசேஷ விதிகள்

1. குரு பலம் பெண் – ஆணுக்கு பருவமடையும் முன் செய்யும் திருமணத்திற்குதான் முக்கியமாகும். தந்தை உடனடியாக முயற்சி செய்யாவிடில், பருவமடைந்த பின்னர் பெண் தானாகவே கணவனை தேந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மனுநீதி. ஆகவே பெண் பருவமடைந்த பிறகு நடக்கும் திருமணங்களில் குருபலம் அவசியமில்லை. குருபலம் இருந்தால் அதிக நன்மையாகும். 2. அதாவது, ஜன்ம நக்ஷ்த்திரத்திலிலிருந்து 2, 4, , 8, 9 வது நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் போது நன்மை தரும். உதாரணமாக அசுவனி நட்சத்திரக்காரருக்கு,…

உரையாடலின் ஒரு பகுதி 2

உரையாடலின் ஒரு பகுதி 2 எதிர், எதிர் கருத்து கொண்டு கட்சி ஆரம்பித்து தொண்டர்களும் மாறி, மாறி வசை பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கட்சிகள் தேர்தலின் போது இணையும் அறிக்கை மட்டும் வரும் நாங்கள் கொள்கையில் உடன்படவில்லை ஆனால் சில விஷயங்களுக்கு வேண்டி இணைகிறோம் இணைந்திருக்கிறோம் என்று, இதை ஆழமாக யோசிக்க முடியாதவாறு எப்போதும் கட்சிகள் தொண்டர்களையும் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களையும் வைத்திருப்பார்கள். இதன் அடியில் இருப்பது  என்னவென்று உற்றுப்பார் உணரப்பார் வரும் பதில்  பதவி ஆசை மட்டும்…

திருமண காலம் அல்லது குருபலம்.1 பொது விதி

ஆண் அல்லது பெண்ணுக்கு அல்லது இருவருக்கும் குருபலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். இருவரில் ஒருவருக்கு குருபலம் இருந்தாலும் போதுமானது. மேலும் ஆணுக்கு குரு பலம் தேவையில்லை என சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவில் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11 – ல் குரு கோசர ரீதியாக இருக்கும் காலங்களில் குரு பலம் வந்துவிட்டதாக பொருள். பொதுவாக திருமண கால பலன்களாவன — 1 – ல் குரு வரும்போது திருமணம் நடக்க வம்ச விருத்தி பாதிக்கும்.…

உரையாடலின் ஒரு பகுதி 1

உரையாடலின் ஒரு பகுதி அரசியல் துறை என்பது ஒரே வரியில் சொன்னால் நம்ப வைத்து கழுத்தறுப்பது, அதாவது அரசியல் துறையில் உள்ள ஒருவன்  அல்லது   வாக்கு போட்ட மக்கள்,   அவன் யாரை எல்லாம் நம்பிக்கொண்டிருப்பானோ அவர்கள் எல்லாம் இக் கட்டான சூழ்நிலையில் கைவிட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல. அவனின் உயிரின் கடைசி துளி பிரியும் வரை நம்பிக்கொண்டே இருக்கும்படியான சூழ்நிலையையும் உண்டாக்கி கொண்டே இருப்பார்கள். இதைப் பற்றி கேட்டால் ராஜ தந்திரம், சாணக்கிய வித்தை, என்று சொல்லுவார்கள்.…

சந்தோஷமான விஷயம்

ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி சிந்திக்க ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அது மன சந்தோஷத்தையும், பலத்தையும் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. அதன் அடிப்படையில் தோன்றியது தான் குடும்பம். அதன் அங்கத்தினர்களான கணவன், மனைவி உறவு அதன் அடிப்படை மூல வேர் என்பது உனக்காக எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன், உன்னை பற்றி உனக்கு வேண்டியதை நான் சிந்திப்பேன் அது மட்டுமல்ல செயல்படுவேன் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆசை, எல்லாம் தான் குடும்பம்…

7 – ஆம் பாவமும் அதன் பலன் அறியும் மார்க்கமும். P.ATHMA

12 – ம் பாவத்தை வைத்துக் கொண்டு மானிதர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து விஷயத்தையும் கணிதம் கொண்டு அளந்தரிவது சிரமமான காரியம் தான். குருவின் துணையும், திருவின் அருளும் இருந்தால் சிரமமான காரியம் சுலபமான காரியமாக மாறிவிடும் நிஜம் இதுதான். ஜோதிடம் நமக்கு தெரியவேண்டும் என்றால் அதை படிக்க வேண்டும். எப்படி? புத்தகத்திலா? இல்லை ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டும். ஜோதியிடம் இருந்து படிக்க வேண்டுமென்றால் ஜோதி நமக்கு தெரியவேண்டும். ஜோதியை நமக்கு சுட்டிக் காட்டப்பட வேண்டும்…

ஒலியற்ற ஒசை

வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள். இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள். இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும். இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை. இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும் சர்வ சக்தி வாய்ந்தது. அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால் உங்களால் இயக்கமுடியாதது…

நாடிகள்

மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.

ஞானசொரூபன்.

மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.

என் மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு…

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…

இந்து லக்கினம் பார்ப்பது எப்படி? கோள்களின் கோலாட்டம் -1.16

இந்த லக்கினம் லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு  துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய. விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16.  துலாம் ராசிக்கு  9 – க்குரியவர்  புதன்  இதன் கதிர்  8 இத்தோடு கூட்ட 16+8=24 –  12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.…

கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை  பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.

கிரகங்களின் அவஸ்தா நிலை 2 கோள்களின் கோலாட்டம் -1.17

ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில், 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தாஅவஸ்த்தை 12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை

கிரகங்களின் அவஸ்தா நிலை கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில். 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவனஅவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை

கிரகங்களின் அஸ்தமன நிலை. கோள்களின் கோலாட்டம் -1.16

கிரகங்களின் அஸ்தமன நிலை. சூரியனிலிருந்து 12 பாகைக்குள் சந்திரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 17 பாகைக்குள் செவ்வாய் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 14 பாகைக்குள் புதன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 11 பாகைக்குள் குரு இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 10 பாகைக்குள் சுக்கிரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 15 பாகைக்குள் சனி இருப்பின் அஸ்தமனம்

திரேக்காண பலன். சந்திரன் கோள்களின் கோலாட்டம் -1.14

சந்திரன் சர்ப திரேக்காணத்தில் இருந்தால் கொடூர சுபாவம். ஆயுத திரேக்காணத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான். சதுஸ்பாத திரேக்காணத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான். பட்சி திரேக்காணத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.

திரேக்காண பலன். கோள்களின் கோலாட்டம் -1.14

ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள்…

சிந்திக்க செயல்படுத்த

மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ  கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .

சுதந்திரம்

ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள். பின் சுதந்திரம் பெறுவார்கள். அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம், அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள். இதில் காலம் மாறுபடும் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது என்ன செய்வது நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது எது என்பதே தெரியாததால் சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை அப்படியே வாங்கினாலும் வாங்கிய சுதந்திரத்தை வைத்து வாழவும் தெரியவில்லை பாவம்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 அசாத்திய ராசிகள்:-

அசாத்திய ராசிகள்:- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 சாத்திய ராசிகள்:-

சாத்திய ராசிகள்:- ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படும் சரீர அழகை எடுத்துக்காட்டும். மலட்டுத் தன்மைகளைத் தரும். அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும். நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 யாப்பிய ராசிகள்;-

யாப்பிய ராசிகள்;- மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள். ஆனால் குறைவான பலன்களை தரும். ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும். பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெறுமை-சிறுமை, ஆணவம், அகங்காரம், ஆசை ,போட்டி ,பொறாமை, போன்றவைகளை கொண்டது .

31 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பிறரை சுலபாக எடைபோடுவதில் வல்லவர்கள். பொதுச் சேவை, ஆன்மீக ,ஈடுபாடு போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள், பிரபலம் உடையவர்கள். ஜோதிடம், மந்திர சாஸ்திரம் போன்ற துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றிடுவார்கள் உயர்ரக பதவியை வகிப்பவர்கள். மனோதத்துவ நிபுணர் என்றும் சொல்லலாம்.

ஒரு கனவு

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை.  பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச…

30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.

29 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும்,  ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது.

28 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும்.

27 – ந் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும்  செயல் விதியின் புயலில்,  அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…

அறிவின் தாக்கம்

உங்களின் அத்தனை பொய்களையும் பொய் சமாதானங்களையும்.. ஏற்றுக்கொள்பவர்களை ஏமாளி என எண்ணாதீர்கள்..! அவர்கள் உங்களை இழக்க விரும்பாதவராக இருக்கலாம்..!! இதில் சொன்ன விஷயத்தை நாம் நம் அனுபவத்தில் கடந்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் காரணம் மறதி என்று சொல்ல முடியாது உண்மையான காரணம் மதிப்பு நாம் கொடுக்கவில்லை என்பதுதான் என்ன செய்வது நம்மை இழக்க விரும்பாதவரிடம் கூட நம்மால் உண்மையாய் இருக்க முடியாத அளவு அறிவின் தாக்கம் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது

26 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.

25 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.

அக்கறை

அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…

24 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்.  இவர்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் திடமான, நல்லநிலையைப் பெறுவார்கள். கருணை உடயவர்கள். பிறரின் உதவியால் நல்ல ஸ்தானம் பெற்றிடுவார்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள், சகல வசதிகளையும் சுயமுயற்சியால் ஏற்படுத்திக் கொள்வார்கள். இனிய இல்லறம் இவர்களுக்கு உண்டு.

நம்பிவிடாதீர்கள்..!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை. எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிந்திக்க செயல்படுத்த 5 மூல மந்திரம்

உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின் அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும். இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும். மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும். இவர்களுக்கு, சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு. அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில் சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.

முந்தைய இன்றைய தலைமுறை

முந்தைய தலைமுறைக்கும்,  இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மாறுதல்கள்  காலத்தை மீறி நின்ற போதும், அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம் இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும், சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது . இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும். சந்தோஷத்திற்கு, மன நிம்மதிக்கு, மனமகிழ்ச்சிக்கு, மனநிறைவுக்கு, எதிர்மறையான வளர்ச்சியால் என்ன…

23 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கு உடையவர்கள். அரசாங்கத்தில் புகழ் கௌரவம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் புகழும் அளவில் சகல சம்பத்தும் பெற்று ராஜயோகத்தில் இருப்பார்கள் கணித, விஞ்ஞான, வியாபார, வல்லவர்கள். சாஸ்திர அறிவு நிரம்பியவர்கள்.

ஸ்தூல பரு உடல்

ஸ்தூல உடல், சூட்சும ஆவி உடல், அதி சூட்சும அருள் உடல், காரண உடல், மகா காரண அருவசக்தி இவைகளில் அன்னமய கோசமாகிய ஸ்தூல பரு உடலைத் தவிர மற்ற நிலைகளை மூலாதாரம் எனப்பட்ட வாலறிவால்  தான் பெறமுடியும்.

22 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சிக்கலான வாழ்க்கயை உடையவர்கள். பலவிதத்தில் ஆற்றலும், திறமையும் அமைந்தவர்களே என்றாலும் நேர்மையான பாதையில் நடப்பவர்கள். எனவே தாமாக வரும் தீய நண்பர்களையும், பங்குதாரர்களையும் விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது. பல பேருக்கு வேலை கொடுத்து நடத்தும் தொழிலில் அதிக வெற்றியுடையவர்கள்.