ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை தரக்கூடியவர்களிடம் மட்டுமே பழக்கம் நட்பு கொள்வார்கள். இவர்களிடம் ஏதோ ஒரு வித்தை குடி கொண்டிருக்கும். வாய் சாதுரியம் நாவன்மை மிக்கவர்கள். கலை, இலக்கியம், கதை போன்றவைகளில் ஆர்வம் மிக்கவர். திறமை மிக்கவர், மேடை பேச்சு, அரசியல், திறன் கொண்டவர்கள். கீழ்நிலை, மேல்நிலை உள்ளவர்களின் தொடர்பை வைத்துக்கொள்வர். எல்லா வகை சுகங்களையும் அனுபவிக்கத் துடிப்பவர்கள். தெய்வ பக்தி ஞானம் உடையவர்கள். தன் சிறப்பு வசதி வாய்ப்புகளை வெளியே காட்டிக்கொள்ளாதவர்கள். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 15, 2021Leave a commentTags: aathmaaஅரசியல்இலக்கியம்கதைகலைமேடை பேச்சு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சத்திரிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4NextNext post:சூத்திர பாவ ராசிகள். கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16June 30, 2026மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15June 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14June 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13June 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12June 26, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11May 15, 2026