நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே.
உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாயே பார்வதி தேவியே
சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே
நாயாக உள்ள எனையும் ஒரு பொருளாக மதித்து
உன்னை உள்ளபடி உன்னை அறியும் அறிவு தந்தாய்
இதற்கு நான் என்ன புண்ணியம் செய்து இந்த அருளை பெற்றேன்.
