ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 34

பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும், வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர். பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள். ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம். ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன் பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

மன முதிர்ச்சி 2

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

மன முதிர்ச்சி – 1

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே (நிறை, குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 17

வாத கதி …. . காற்று அடிக்கும்போது அதற்க்கு நேரில் இருக்கும் பொருள் விசேஷமாயும், பின்புறமாகிய பொருள் மந்தமாயும் அசைவதுப்போல் மத்தியிலிருக்கும் வாதம் தன் எதிரில் இருக்கும் பித்தநாடியை அதி வேகமாயும், பின்புறமாயுள்ள கபத்தை மந்தமாயும் நடக்கச்செய்யும். பித்த கபநாடிகளுக்கு சுதந்திரமாகதானே நடக்கும்படியான சக்தி கிடையாது. வாதநாடி கமனத்தை அனுசரித்து மற்ற நாடிகளுக்கும் கமனம் உண்டாகின்றது. வக்கிரமமாய் சஞ்சரிக்கிற உலூகத்தைப்போல் நாடிகளின் முதலில் இருக்கும் வாதநாடி நடந்தால் மற்ற இரண்டும் நடக்கும் வாதம் நடக்காவிட்டால் மற்ற நாடிகள்…

நட்சத்திர இயக்கம்.. 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இல்லை. பலவகையான கணிதங்கள், ஆய்வுகள், செய்தும் பலன்கள் தவறுவதை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது. இவ்வகை கோலாட்டத்தை ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும் வழிகாட்டியாக இருக்கும். ஜாதகத்தில்சொல்லப்பட்டுள்ள எத்தனை வர்க்க கணிதங்கள் உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை அனுசரித்து…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 33

பெண்களுக்கு உபதேசம். ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன். தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான் ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது. இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது. ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 19

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான். காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன். எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன். நான் தான் உலகங்களின் ஆதி. உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான். பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான். மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால் நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன். வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும், நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 16

ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 11 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…. * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நின்று இயங்குகிறார். இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும். க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும்தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல… * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 10 கோள்களின் கோலாட்டத்தின் படி

‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 32

கேள்வி – தியானம் செய்யும் போது என் மனத்தை என்னால் ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அடிக்கடி மாறக்கூடியதாகவும், நிலையில் நில்லாததாகவும் இருக்கிறது. பதில் – அதில் என்ன உள்ளது? அதுவே மனிதன் இயல்பு, பார்த்தலும், கேட்டலும் முறையே கண், காது இவற்றின் இயல்பாக இருத்தலைப் போலவே, தியானத்தை ஒழுங்காகச் செய்துவா, இறைவனது பெயர் இந்திரியங்களைக் காட்டிலும் மிக பலமுள்ளது. எப்போதும் உங்களைக் காத்து வரும் தாகூரை (ஸ்ரீ ராமகிருஷ்ணரை) யே மனத்தில் நினைத்துக் கொண்டிரு. உன்னிடமுள்ள தவறுகளைக்…

யோக மஞ்சரி.6

மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில் அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள் ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால் அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும் குறைந்தும்நடைபெறும். கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 15

ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…

யோக மஞ்சரி.5 துருதுரா யோகம்

பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன் கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும், கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற ஜோதிஷ நூல் என்று சொல்கிறது சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும் கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில் பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின் அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…

பிரமாணம் அப்படீன்னா என்ன 3

சத்துவ குணத்தோடு உள்ள தூயவனால்தான் பிரபஞ்ச சக்தியின் உண்மைகளை உணர்ந்து கிரகிக்க முடியும். அதனால ஆப்த வாக்கியம் தருகிற ஆப்தன்ங்கிறவன் முற்றிலும் தூயவனாக புலன்களை கடந்தவனாக, கடந்த கால அறிவுக்கும் முரண்படாத கருத்தை சொல்லறவனாக இருக்கணும் புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட உண்மை என்று நாம் சொல்லும் எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாய் இருக்ககூடாது அடுத்தது அந்த ஆப்தனின் வாக்கியபடி பயணப்படும் அனைவரும் ஆப்தன் ஆவார்கள். ஆப்தனின் வாக்கியம் அப்படிபட்டதாகவே இருக்கும். அதைவிட்டுட்டு ஆப்தனின் வாக்கியம் ஆப்தனுக்கு மட்டுமே சொந்தம்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 14

நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…

பிரமாணம் அப்படீன்னா என்ன 2

தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது  கரெக்ட்டா  கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 16

சொற்களின் கூட்டம் ஒரு பெரியகாடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகின்றது. ஆகையால் உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படவேண்டும். அஞ்ஞானமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு பிரம்மஞானமாகிற மருந்தல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களாலாவதென்ன? வேறு மருந்துகளாவெதென்ன? ஆகையால் எல்லாவிதமான வழிகளையும் கைக்கொண்டு நோய் முதலியவற்றினின்று விடுபட முயலுவது போல் பிறவித்தளையினின்றும் விடுபடுவதற்குத் தனக்குத்தானாகவே அறிவாளிகளால் முயற்சி செய்யப்படவேண்டும். முக்திக்கு முதல்படி நிலையற்ற பொருள்களில் தீவிரமான வைராக்கியம், பிறகு அகக்கரணங்களின் அடக்கமும், புறக்கரணங்களின் அடக்கமும், அதன்…

பிரமாணம் அப்படீன்னா என்ன 1

 காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.  காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர்  காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு  எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…

காலம் மறப்பதில்லை 1

மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது. இது புரிந்தது என்றால் நமக்கு வினை, விதி பற்றிய அடிப்படை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 13

அதோகாமி நாடி கதி ….. ஆமை போன்ற நாபியின் மேல் மார்பில் சூழ்ந்திருக்கும் நாலு நாடிகளில் இரண்டு இடுப்பின் மார்க்கமாய் தொடைகளின் சந்திகளின் வழியாக பாதத்திர் சேர்ந்து ஐந்து பிரிவுகள் உடையதாய் பாதாங்குலத்தில் வியாபித்து காலை முடக்கவும், நீட்டவும் செய்யும். இன்னம் மற்ற இரண்டு நாடிகள் தொடைகளின் பின்புறத்து சந்திகளின் மார்க்கமாய் பாத அந்தியம் வரையிலும் வியாபித்து காலை நீட்ட செய்கின்றது. லிங்க நாடி ….. அந்த நாபி கூர்மத்திலிருந்து ஒன்பதாவது ஆகிய லிங்கநாடி பிறந்து ஆண்குறி…

யோக மஞ்சரி.4 அனபா யோக பலா பலன்கள்

சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில் பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும் இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான கடக…

யோக மஞ்சரி.3 சுனபாதி யோக பலன்கள்.

சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ, அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். ) குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும் தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும், ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில்…

யோக மஞ்சரி.2 சந்திரனும் குஜாதி பஞ்சக் கிரகங்களும்.

சூரியன் தவிர சந்திரன் இருக்கிற இராசிக்குஇரண்டாவது இராசியில் கிரகங்கள் இருந்தால் சுனபாஎன்ற யோகமும், பன்னிரண்டாவது இராசியில்இருந்தால் அனபா என்ற யோகமும் இரண்டிலும்பன்னிரண்டிலுமிருந்தால் துருதரா என்ற யோகமும்சந்திரனுக்கு இரண்டாவது ராசியிலும்,பன்னிரண்டாவது ராசியிலும் கிரகமேஇல்லாவிட்டால் கேமத்துரும என்ற ஒரு அசுபயோகமும் ஏற்படுகின்றன.இவ்விதம் சந்திரனுக்கு இரண்டாவதுபன்னிரண்டாவது இராசியில் இருக்கிற கிரகங்கள்பூர்ண பலத்துடனிருந்தால் அதற்குத் தகுந்தபடி பலன்கள் நடக்குமென்று கூறுவர். இது சாமானியமான விதியாகத் தோற்றினும் இந்த யோகத்திற்குச்சொல்லிய பலன்கள் அனுபவத்திற்கும் சரியாகவேஇருக்கின்றன. மீன இராசியில் இருந்து அதற்கு இரண்டாவதான மேஷ இராசியில்…

யோக மஞ்சரி.1

ஜாதக பலன்களை அறிவதற்குரியசித்தாந்தப்படி லக்கின கிரகஸ்புடாதிகளை கணித்துக் கொண்டு ஸ்ரீபதி தம்முடைய பத்ததியில் உபதேசித்துள்ளபடி, 1. பாவஸ்புடம், 2 – கிரக ஷ்ட்பலம்,அதாவது ( ஸ்தான, ஜேஷ்டா, அயன, கால, திக், திருக்,ஆகிய இவ்வாறு பலமும் ), 3. சகமஸ்புடம், 4.அஷ்டக வர்க்கம், 5.ஆயுர்த்தாயம் இவ்வைந்தையும்கணித்துக் கொண்டு பலாபலன்களையறிவது சாஸ்திரீய மென்றும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படாதமுறை யென்றும் சொல்வர். பிராணன் என்றுசொல்லப்பட்டுள்ள உதய லக்கினம், சரீரகாரகன்என்று பெயர் பெற்ற சந்திரன் இருக்கும் லக்கினம்,ஆத்மகாரகனான சூரியன் இருக்கிற கிரகங்களின்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 15

தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படம் துன்பம் பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஆக்கப்பட்ட துன்பமோ எனின் தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாதது. கட்டுப்படான உணவும் மருந்தை உட்கொள்ளுதலும் எந்த நோயாளியால் பின்பற்றப்படுகிறதோ அவனுக்க உடல் நலம் கைகூடுவது காணப்படுகிறது. மற்றொருவனால் அனுஷ்டிக்கப்பட்ட இச்செயல்களால் இவனுக்கு உடல் நலம் சிந்திப்பதென்பதில்லை. அறிவின்மை ஆசை தொழில் முதலிய வலைகளாலான தளையை நீக்குவதற்குத் தனக்குத் தானேயல்லாமல் நூறு கோடி கல்பகாலமானாலும் எவன் திறமை உடையவனாவான்? போகத்தாலன்று, ஸாங்கியத்தாலன்று, கர்மத்தாலன்று,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்

அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம்  பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 29

மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமி நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும். இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளியான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர், மகான், யோகி, மகரிஷி, போன்றவர்கள் இந்நிலையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்..

காதல்.

ஒரு காலத்தில் நல்ல பண்புள்ளவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், நல்ல உணர்வுகள் உள்ளவர்களுக்கும், இடையே மட்டுமே மிக அபூர்வமாக இருந்து வந்த விஷயம் கால ஓட்டத்தின் வேகத்தில் நிலை தடுமாறி ஒரு சகதியானது துர்பலமே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 8 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம் இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு தக்கபடி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்.. நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வாரத்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான சுக்கிரன்-சந்திரன் திதியையும் நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும் காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும், ஆகாயத்தின் இயக்க கர்த்தாவான சனி,…

எழுதாத விதி

மனிதன் எந்த சூழ்நிலையிலும் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட வேண்டும் என்பது எழுதாத விதி விதியை மாற்றி எழுதினால் மனிதன் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட கூடாது முக்கியமாக தான் மதிக்கத்தக்க விலை மதிப்பில்லாதது எனும் ஒன்றை இழந்துவிட கூடாது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 7 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

 குரூர குணத்தின் செயலாளராக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்று நர்த்தனம் புரியும் லீலையை சொல்லவும் வேண்டுமா? சத்தியம், தர்மம், போன்றவற்றிற்கு குரு, புதன் சுக்கிரன் அதர்மம் கலந்தது சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், ராகு தர்மம் அதர்மம் கலந்தது சந்திரன், கேதுவாக நின்று இயங்கும் இதே போல் நமது தேகத்தின் ஒவ்வொரு மயிர் துவாரத்திலும் நின்றுஇயங்கும் தெய்வம் கிரகம் நட்சத்திரம் தன் தேவதைகள் போன்ற அமைப்பை இதுவரையில் நாம் தத்துவார்த்தமாகவும் சித்தர்கள் ஞானிகள் மகான்களின் வழிமுறைகளிலும்…

ஞானம் அப்படின்னா என்ன

ஞானம்ன்னா என்ன தனக்குள் உண்டான அறிவுக்கு ஞானம்ன்னு பேர் முதிர்ந்த அனுபவ அறிவுக்கு ஞானம்ன்னு சொல்லலாமா கூடாது உனக்குள் உள்ள இருந்து அறிவு வரணும் அப்படி வந்தா மட்டுமே ஞானம் அப்படி வருமா வந்துருக்கே உதாரணத்துக்கு ரிஷிகள், யோகிகள்

பலவான்

மனம் எனும் குதிரையின் கடிவாளத்தை விட்டுவிட்டால் குதிரைகள் நம்மை அதன் இஷ்டபடி இழுத்து செல்லும். அதை இழுத்து பிடித்து நிறுத்துபவனே பலவான். மனதின் அலைகளை அடக்கி ஆள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ்நிலை ‍வெளிப்பாடே செயல் அமைதியோ அதன் உயர்நிலை வெளிபாடு. சோம்பலான மந்தநிலையை சத்துவம் என தவறாக எண்ணிவிட கூடாது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 6 கோள்களின் கோலாட்டத்தின் படி

எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குரு வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம்,சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும்,  நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதன் பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடும் ஆட்டம் தான் கோலாட்டம் 

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் —11

நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது,…

குணங்களின் தன்மை 3

சத்வ குணம் – அமைதியும் சாந்தமும் முழு தெளிவும் கொண்ட நிலை, இது செயலற்ற நிலை அல்ல விளைவுகளின் தன்மையை முழுமையாக உணர்ந்த தீவிர செயல் பாட்டு நிலையாகும். அமைதியாய் இருப்பதே ஆற்றலின் வெளிப்பாடு.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…

குணங்களின் தன்மை 2

ரஜோ குணம் – அதிகாரமும், இன்பநுகர்ச்சி மட்டுமே கொண்டது. அதிகாரத்திற்க்கு வேண்டி எதையும் செய்யும் தேவைப்பட்டால் எதையும் செய்யாமலும் இருக்கும் இது போலவே இன்ப நுகர்ச்சிக்கு வேண்டியும் இயங்கும்

மகரிஷி தயானந்த ஜோதி கோவை

குருவருளும் திருவருளும் துணை நிற்க இந்த இணைய தளத்தில் சஞ்சரிக்கும் அன்பு வாசகர்களுக்கு என்றென்றும்என் மனமார்ந்த வணக்கங்கள். எத்தனையோ பிறவிகளின் தொடர்ச்சியால் ஏற்படும் பந்தம் தாய், தந்தை, மனைவி, மக்கள் மட்டுமல்ல, குருவும் கூட; யார் அந்த குரு? யாருக்கு வேண்டும் குரு? எதற்கு அந்த குரு? இப்படிப்பட்ட சிந்தனைகள் உடையவர்களுக்கும், தன்னந்தனியே முழு வாழ்க்கையைப் பார்க்க தைரியம் இருப்போருக்கும், வேண்டிய விஷயங்களைத் தாங்கி உலா வரும் இந்த இணைய தளத்தில் நான் மகரிஷியுடன் இப்புவிகால கணக்கின்…

எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

மாமனிதர்கள்

துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும் 

ஒரு எடக்கு மடக்கு கதை 2

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……

ஒரு எடக்கு மடக்கு கதை 1

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…

கர்மா செயல்படும் விதம் 4

நமக்கும் இவ்வுலகிற்க்கும் இவ்வுலகம் போல் அல்லது இதற்கும் மேற்பட்ட அண்ட பகிரண்டங்களையும் நாம் காண, அறிய, புரிய, உள்ள ஒரே கருவி நமது மனம் மட்டுமே உடல் பொறிகளும், புலன்களுடனேயே செயல்படும். ஆனால் மனம் இவைகள் இல்லாவிட்டாலும் செயல்படும் மனோவேகம் நம்மாள் கணக்கிட முடியாத வேகமாகும். இந்த அளவு ஆற்றல் உள்ள மனதை புரிந்து அதை நமக்கு பணியாளாகக்கொண்டால் நாம் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய முடியும். நாம் ஏமாந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நாம் அடைந்தது, அத்தனையும்…

இயற்கை அமைத்த ஸ்ரீ சக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’ என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு   அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்…

கர்மா செயல்படும் விதம் 3

மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 5 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது? .

கர்மா செயல்படும் விதம் 2

ஒரு செயல் செய்யப்படும் போது அந்த செயலைப்பற்றிய நினைவு வருவது முதல்படி. பின் அதை செயலாக்கத்திற்க்கு கொண்டு வருவது இரண்டாம் படி. ‍அந்த செயலினால் உண்டாகும் விளைவு என்பது மூன்றாம் படி. நினைவு வரும் இடம் மனம் அதை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் போது அதனுடன் உடல் இணைகிறது. அதன் விளைவுகள் எனும் போது சில சமயங்களில் மனம் மட்டும் அனுபவிக்கிறது பலசமயங்களில் உடலும் மனமும் அனுபவிக்கிறது. இதை நாம் கர்மா என்கிறோம். இதை பெரியவர்கள் மனஸா…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 4 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம், முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும். இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம். இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..

கர்மா செயல்படும் விதம் 1

மனிதன் செயல்படுவதற்க்கு பல உறுப்புகளின் செயல்கள் தேவைப்படுகிறது. அதில் மிக மிக முக்கிய பங்கு வகிப்பது உடலும், உயிரும் ஆகும். உடல் இயங்க காரியமாற்ற, சிந்திக்க, செயல்பட உடலின் பல உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகிறது. அப்படி செயல்பட ஆதாரமாய் இருப்பது கண்ணுக்கு தெரியும் உடலின் உள் கண்ணுக்கு தெரியா காற்று உட்சென்று வெளிவரும் இயக்கமே மற்றஎல்லா இயக்கங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதை நாம் பிராணன் என்றும் உயிர் என்றும் அழைக்கின்றோம். இந்த உயிராகப்பட்டது இருக்க…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 3 கோள்களின் கோலாட்டத்தின் படி

ஜோதிமயமாக நின்று இயங்கும் பராசக்தியின் பல உரு தோற்றப் பிரிவுகளே படைக்கும் தொழிலுக்கான பிரம்மா இவரின் இயக்கத்தில் குரு காக்கும் தொழிலுக்கான விஷ்ணு இவரின் இயக்கத்தில் சுக்கிரன், சந்திரன், அழிக்கும் தொழிலுக்கான ருத்திரன் இவரின் இயக்கத்தில் சனி, ராகு, கேது அருள் பாலிக்கும் தொழிலுக்கான மகேஸ்வரன், இவரின் இயக்கத்தில் புதன் ஆக நவக்கிரகங்கள் அவரவரின் இயக்க கர்தாவின் ஏவலாளிகளாக நின்று செயல்படுவது தான் மனித தேகம்,மரம், செடி, கொடி, புல் பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற…

சரியான கோணம்

பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து  பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 5

சூரியன், குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன், புதன் சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும் குடும்ப சூழ்நிலையும் மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக, ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது. சூரியன், சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு,…

முகமூடி

நம் எல்லோருக்கும் இயற்கை முகம் என்னும் சிறிய முகமூடி போட்டு மனம் எனும் பெரிய ராட்சசனை மறைத்திருக்கிறது. அதனால் தான் நாம் நம்மை பார்ப்பதில்லை ஏன்னா ராட்ஷசனை பார்க்க எல்லோருக்கும்  பயம்தானே

நாட்டின் நிர்வாகம் 2

நாட்டின் நிர்வாக நிலைகளில் சில சமயங்களில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய துறையில் உள்ளவர்களின்  நியாயமும்,  நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் நியாயமும் வார்த்தை ஒன்றாய் இருந்தாலும் அர்த்தங்கள் சூழ்நிலை நிகழ்வுகளின் தரம் அதனால் உண்டாகும் விளைவுகளை கொண்டு அர்த்தங்கள் மாறுபடும். இது முழுக்க அரசு அதிகாரிகளின் விஷயம் இதை அறிந்து கொள்ள கட்சி தலைவர்களுக்கே முடியாத போது கட்சியின் தொண்டனுக்கு எப்படி தெரியும் ஆனாலும் அவனும் நாட்டின் குடிமகன்

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 4

இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன், செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மன பயம், காமஇச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார். தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள். இந்த விருச்சிக லக்கினக்காரகளுக்கு ” குருதிசை ” சுபத்தை தருகிறது. குற்றங்கள் நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது. ” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக்…

நாட்டின் நிர்வாகம் 1

ஒரு நாட்டின் நிர்வாகம் எனும் அமைப்பு  பல கிளைகளை கொண்ட அல்லது பல வேர்களை கொண்ட மரம். அது இயங்கும் சூட்சமம் நாட்டின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கே சரியாக தெரியாது. மக்களின் ஆதரவினால் வந்தவர்களிடம் மக்களாகியவர்கள் வேறு எதையும் அல்ல இதையும் கூட எதிர்பார்க்க கூடாது. நாட்டின் நிர்வாக சக்கரத்தின் பற்களில் பல துறைகள் உள்ளது. அதன் இயக்கங்கள் நாம் நினைக்கும் தர்மம், நியாயம், உண்மை போன்றவற்றிற்க்கு வித்தியாசமான அர்த்தங்களை கொண்டிருக்கும்.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 3

செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரகர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம், மது, மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், ‘கொலை பாதகம் ‘ ராகு, கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரகர்கள் நல்ல நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன், சேர்க்கை புத்திர நாசத்தையும் குடும்பம் பாதிப்படைதலும் மூடத்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 28

அநேக நோன்புகள் நோற்றலின் பயனாகவே மனத்தைத் தூயதாக்க முடியும். இறைவன் தூய்மை உருவினன். ஆதலின் நோன்பின்றி அவனைக் காணமுடியாது. ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதினாயிரம் வரை இறைவன் பெயரை ஜபிப்பானாகில், மனத்தை நிலைநிறுத்த முடியும். இது முற்றிலும் உண்மை. நானே அதை உணர்ந்திருக்கிறேன். இம்முறையை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். முயற்சியில் தோல்வியைடந்தால், பிறகு முறையிடலாம். அடங்கிய மனத்தோடு ஒரு முறை இறைவன் பெயரை உச்சரிப்பதானது, அலைக்கழிக்கப்படுகின்ற மனத்தினால் இலட்சம் தடவை அப்பெயரை உச்சரிப்பதற்கு ஈடாகும். நீங்கள் நாள்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 2

இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன், குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒரு வகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வ பலம் ஆகியவை சிறந்து விளங்கும் படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2, 5க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம். 1

”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந் தேவர்கட்கிரை வனுஞ்சுபராய் கோளாறு சேய் மாலுசனனுமதர் குபேரனுமி ரவியும் யோகர் கேளுடன் கூடிலி ராஜயோக மதாங் கிளத்தியவசுபர் மாரகராய் நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார் நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ). ”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர் இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும் நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன் அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை ) ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே இயன்ற பாவர் இந்து சுபன் ”…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 2 கோள்களின் கோலாட்டத்தின் படி

பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றதன்மைகளின் பிரதிபலிப்பாக குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்,செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே பூமி, நீர், நெருப்பு, காற்று,ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும் கர்த்தாவாகதிகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும் ” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே. லம்,  ‘ க்லீம் ’ பீஜத்தின்…

7- வது அத்தியாயம், அர்க்களா பலன் ஜெயமுனிமதம். 2

9. அர்க்கள கிரகத்தினால் உண்டாகக்கூடிய பாபஅர்க்களப்பலனை அந்தக் கிரகத்திற்கு ஐந்தாவது, ஒன்பதாவது, பாவத்திலுள்ள கிரகம் மாற்றிவிடும். 10. மேற்சொல்லிய மூன்று, பத்து, பன்னிரண்டில் உள்ளகிரகம் வலிவாக இருந்தால்தான் சுப அர்க்களப் பலனையோ, பாவ அர்க்களப் பலனையோ மாற்றும்,பலவீனமாயிருந்தால் மாற்றாது. 11. ராசி அர்க்களம் கிரக அர்க்களம் என இரண்டுவிதங்களிருப்பதால் இவற்றால் ஆராய்ச்சி செய்யவும். இவைகளில் எவரெவருடைய தசைகள் நடக்கின்றனவோஅவரவர்களின் பலன்களுண்டாகும், எந்த ராசியில் கிரகமிருந்தாலும் அவருடைய தசையின் புத்தி காலத்தில்பலன்  உண்டாகும். 12. 1 – வது…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.2

7. ஏழாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் பொறுமையுடைவன். எப்போதும் காமீ, அதிக தீவிர கோபிஷ்டன். சிவந்த சரீரமுடையவன், கெட்டவர்களைக் கொண்டாடி பூஜிப்பவன், கெட்ட புத்தியடையவன். 8. எட்டாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் ரோகத்தால் சபிக்கப்பட்ட அங்கங்களுடையவன், அரசன் பந்து வேலையாட்கள் புத்திரன் இவர்களால் பீடிக்கப்பட்டவன் துக்கமுடையவன். 9. ஒன்பதாமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் புத்திரருடையவன், தனம் நிறைந்தவன், புகழுடையவன். இஷ்டமாய்ப் பார்க்கத் தகுந்தவன். எப்போதும், அதிர்ஷ்டமுடையவன், நல்ல ஆழ்ந்த யோசனையுடையவன். 10. பத்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன்…

பராசராஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.1

1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன், பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன் அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன். 2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம், ‍ வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர் இவற்றையுடையவன் ஆவான். 3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன், கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின் யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். குளிகனின் துவாதச பாவ பலன். 2

7. ஏழாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ( ஜிரன் ஸ்திரீ ) திருடன், ஜாரன், பாபத்தைச் செய்பவன், மெல்லிய அங்கங்களுடையவன், சினேகிதத்தையுடையவன். ஸ்திரீயின் திரவியத்திலேயே ஜீவிப்பவன். ஏழாமிடத்தில் சனியிருந்தாலும் இப்பலன் பொருந்தும். 8. எட்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் பசியுள்ளவன், துக்கமுடையவன். குருரன், தீக்ஷண்ணிய ரோஷமுடையவன், கொஞ்சமும் தயையில்லாதவன், தனமின்றியிருப்பவன் பிராணனை அழிப்பவன், குணமும் இல்லாதவன். 9. ஒன்பதாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் வெகு கிலேசமுடையவன், மெல்லிய சரீரமுடையவன், துஷ்டச் செய்கையும் தயவேயில்லாதவனுமாவான். ஒன்பதாமிடத்தில் சனியிருந்தாலும் இதே பலன்தான். மந்தமதியுடையவன். பிசினி…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். குளிகனின் துவாதச பாவ பலன். 1

1. ஜென்ம லக்கினத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் எப்போதும் ரோகபீடையுடையவன், காமீ, பாபாத்மா மூடனில் அதிக கிரமமூடன், நிதானமுடையவன். கெட்ட பாவங்களுடையவன். அதிக துக்கமுடையவன். 2. ஜன்மலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் இயற்கைக்கு மாறுபாடானவன், துக்கமுடையவன், விசனமுடையவன், அடக்கமில்லாதவன், தனமில்லாதவன். 3. மூன்றாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் அழகான அங்கங்கள் உடையவன். சுகமுடையவன், புண்ணியமுடையவன், சரிஜனங்களுடன் கூடியவன், நல்லோரிடம் அதிக அன்புடையவன், ராஜ பூஜையடைவான். 4. நான்காமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ரோகியாவன், சுகமில்லாதவன், எப்போதும் பாபத்தையே செய்பவன், வாதபித்தாதிக்கியமுடையவன். 5.…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 10

பிரம்ம லோக பிராப்திக்கு வேண்டிய உபாசனை செய்தவர்களை சூஷ்ம ரூபமாகிய சுஷம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இடகலை பிங்கலையின் மத்தியமாக சூக்ஷ்மரூபத்துடன் நடுமுதுகிலுள்ள வீணாதண்டமென்கிற எலும்பின் மார்க்கமாய் சஹஸ்ராரத்தையும் பிரம்மாந்திர மூலமாய் சூரியமண்டலம் வரையிலும் வியாபித்து பிரம்மலோகத்தை அடையச் செய்யும். பர பிரம்ம நிலை ….. சகல பிரபஞ்சாத்மக பரஞ்சோதி சொரூபியாகிய பர பிரம்மம் இந்த சுஷம்னா நாடியில்  வசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடி அநேக மார்க்கங்களை உண்டாக்கி அனேக முகங்களுடன் வியாபித்திருக்கும். இந்த நாடிதான் சுத்த பரப்பிரம்மத்திற்கு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27

கேள்வி – அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. பதில் – இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி. இதற்காக நீ அஞ்ச வேண்டா. குழந்தாய், இம்மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஓடும். ஆகவே, ஒருவன் எந்நேரமும் விவேகத்தால் ஆராய்ந்து வரவேண்டும் இறைவனைக் காண…

பர்வதாசனம் — PARVATHASANAM (பருமன் அல்லது ஊளைச்சதையினைக் குறைத்தல் )

பெண்கள் மெல்லிய உடலமைப்பும் கட்டான உறுப்புகளும் பெற்றிருந்ததால் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். கவனமின்மையின் காரணமாக பெண்கள் தங்கள் உடலை தடிக்கச் செய்து பார்க்க அசிங்கமாக இருக்கிறார்கள். செய்முறை – பர்வதாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு  மேலாக நன்றாக வளைவு இல்லாமல் நீட்டி இரு கைகளின் விரல்களையும் பின்னிக்கொண்டோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இறுக்கமாகச்  சேர்ந்து இருக்கும்படியோ வைக்கவும். விரல்களை மடக்காமல் நீட்டிவிடவும்.  இரண்டு தோள்களையும் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படி செய்து  தலையை நேராக…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 13

குரு  கற்றுணர்ந்தவனே, பயப்படாதே, உனக்கு அழிவில்லை. பிறவிக்கடலைக் கடப்பதற்கு வழி உள்ளது. முனிவர்கள் எதனால் இதன் அக்கரையை அடைந்தார்களோ அந்த வழியையே உனக்குக் காட்டித் தருகிறேன். சிறந்ததொரு வழி (ஸம்ஸார பயத்தைப் போக்குவது) உள்ளது. அதனால் பிறவிக் கடலைக் கடந்து உயர்ந்த ஆனந்தத்தை அடைவாய். உபநிஷத் வாக்கியங்களின் அர்த்தத்தை ஆராய்வதால் சிறந்த அறிவு பிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாக ஸம்ஸார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 9

பிங்களா நாடி ….. யாகம் முதலிய புண்ணிய கருமங்கள் செய்கிறவர்களை பிங்கலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இருதய ஸ்தானத்தின் வலது பக்கமாய் சிரசிலிருந்து சஹஸ்ராசக்கிரத்தை ஆதாரமாய்க் கொண்டு அக்கினி மண்டலம் வரையிலும் வியாபித்து அர்சராதிமார்க்கமாய் தேவலோகத்திற்கு போகும்படி செய்யும் இதற்கு தேவபானமென்றும் சொல்லுவார்கள். இட  நாடி ….. பிதுருலோக பிராப்தி அடையும் படியான கருமங்களை செய்தவர்களை இடகலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து பிரயாணமாகி இருதய ஸ்தானத்து இடது பக்கமாய் சிரசிலிருக்கும் சஹஸ்ராசக்கிரத்தை அடைந்து சந்திரமண்டலம் வரையிலும்…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம். இதன் பொருள் நம்மிடமே உள்ளது.  அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம். பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக…

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..3

ஒருவரின் ஜாதகப்படி ஆதிக்கம் செலுத்தி தன் மூலம் பலன்களை தர தகுதி பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் 2, 6, 10 – க்குரியவர்கள் கோச்சார காலத்தில் வரும்போது சிறப்பு மிக்க பலன்களை பொருள் வசதி, தன விர்ததி, ஆதாயம், காரிய ஜெயம் தொழில் வாய்ப்பு, பதவி, புகழ், விருது, பாராட்டு சத்காரியங்கள் நடைமுறையில் வருவதைப் பார்க்கலாம்.. வக்கிரம், நீச்சம், அஸ்தமம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதியாக உள்ள கிரகங்கள், 3, 4, 12 – ஆம் பாவாதிபதிகள் வரும்போது…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 6 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..2

ஆதிக்கம் செலுத்தும் கிரகம் ஜாதகரின் பிறந்த கிழமை நாதன்   சந்திரன். ஜாதகரின் பிறந்த நட்சத்திரநாதன்    சந்திரன். ஜாதகரின் பிறந்த ராசி நாதன்    சுக்கிரன். ஜாதகரின் லக்கின நாதன்     சுக்கிரன். ஜாதகரின் லக்கினம் நின்ற நட்சத்திர நாதன்.  குரு சந்திரன், சுக்கிரன், குரு போன்றவர்கள் மூலமே ஜாதகருக்கு பலன்கள் கிடைத்து வரும். ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களோடு ராகு, கேது தொடர்பு பெற்றால் அவர்களும் சேர்ந்து நல்ல, தீய பலன்களை தங்கள் மூலம் தர தகுதி…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 26

இயற்கையாகவே மனம் அமைதியற்றது. ஆகவே, மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு முன், ஒருவன் மூச்சைக் கட்டுப்படுத்தித் தியானம் செய்யலாம். அது மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் அதிக அளவில் அதை செய்தல் கூடாது. ஏனெனில் அதனால் மூளை சூடடையும். நீங்கள் ஈசனது தரிசனத்தைப் பற்றியோ, தியானத்தைப் பற்றியோ பேசலாம். ஆனால் மனமே முக்கியம் என்பதை நினைத்துக் கொள். மனம் ஒரு நிலைப்படும்போது ஒருவன் எல்லா சித்திகளையும் பெறுகிறான். தொடர்ந்தாற்போல் தியானம் செய்தால் மனம் உறுதி பெற்று விடும். அப்போது…

வாழ்க்கையில் முடிவு செய்ய

நீங்கள் சாப்பிடும் இட்லியின் எண்ணிக்கையை அதற்கு வைக்கும் சட்னி முடிவெடுக்கும் போது….. இந்த வாழ்க்கையை  உங்களால் மட்டும் தனியாக எப்படி முடிவு செய்ய முடியும்……..!! தனியாக யோசியுங்கள்; அவரவரது  அனுபவங்கள் நிறைய ஞாபகப்படுத்தும் நிறைய சொல்லித்தரும் கற்று கொள்ளுங்கள் காலத்திற்கும் பயன்படும் 

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வ வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான். இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார், ‘‘மனமது நினைய வாக்கு வழுத்த…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 12

பிறவிக் கடலாகிய இதை எப்படி நான் கடப்பேன்? எனக்குச் செல்லும் வழி எது? நான் கைக்கொள்ள வேண்டிய உபாயம் எத்தகையதாகும்? இதை ஒரு சிறிதும் நான் அறிய மாட்டேன். பிரபுவே கருணையால் காத்தருளும். பிறவித் துன்பத்தை ஒழிக்கும் வழியில் என்னைக்கூட்டி வைத்தருளும். இவ்வாறு பேசுபவனும் தம்மைச் சரணடைந்தவனும் காட்டுத்தீ போன்ற பிறவித் துன்பத்தால் பொசுக்கப்பட்டவனுமாகிய அவனைக் கருணாரஸத்தின் கசிவுடன் கூடிய பார்வையால் உற்று நோக்கி விரைவில் பயமின்மையை அளிக்கிறார் மஹாத்மாவாகிய குரு. பாதுகாப்பை விரும்புபவனும் மோக்ஷத்தில் நாட்டமுள்ளவனும்…

பகவத்கீதை தத்துவம் 2

ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே ! ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே ! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனதுபிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும்,…

மனித பிறவியின் பணி

சிவஞானசித்தியாரில், “மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம் ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக்காக அன்றோ” (182) என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார். மனம், வாக்கு, காயம்,( உடல்) இம் மூன்றைக்கொண்டும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது.   இதுவே  மனித பிறவியின் பணி  

ஷோடச உபசாரங்கள் என்பவை யாவை?

ஷோடச உபசாரங்கள்  என்பது  ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்னானம், வஸ்த்ரம், யஞ்யோபவீதம், ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிண நமஸ்காரம் இவைகள் அனைத்தும் சேர்ந்ததே ஷோடச உபசாரங்கள் எனப்படும் 

பகவத்கீதை தத்துவம் 1

“உத்தவர் கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை…

வாழ்க்கை வாழ்வதற்கே,

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள். இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு, ஆனால்..நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே, குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டியதை உடனே கொடுத்து விடு, குழந்தைகளுக்கு தரவேண்டியதை பிறகு கொடு. மாற்ற முடியாததை மாற்ற முனையாதே, அமைதியாக மகிழ்ச்சியோடு இரு. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.. நண்பர்களிடம் அளவளாவு. நல்ல உணவு உண்டு.. நடை பயிற்சி செய்து..நல்ல புத்தகங்கள் படித்து  உடல் நலம், மன நலம்,பேணி..இறை பக்தி கொண்டு..…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம் தூமகேதுவின் துவாதச பாவ பலன்.2

தூமகேதுவின் துவாதச பாவ பலன்.2 7. ஏழாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் ரக்த பீடையுடையவன், காமி, நேர்மாறுபாடான வழிகளுடையவர், போகத்துடன் கூடியவர், வேசிகளிடத்தில் சினேகமுடையவர். 8. எட்டாமிடத்தில் தூமகேது இருந்தால் நீச்ச செய்கையுடையவர், பாபி, வெட்கம் கெட்டவர், எப்போதும் நிந்திக்கப் படுபவர், நிந்திப்பவர், குற்றவாளி, பிறர் பக்ஷமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் சந்தோஷி லிங்கத்தைத் தரிப்பவர் எல்லா ஜீவன்களிடமும் இன்பம்,அன்பு உடையவர், தர்ம காரியங்களின் அறிவும், ஆற்றலுமுடையவர். 10. பத்தாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன்…

வாழ்வென்பது

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.. தேவைக்கு செலவிடு. அனுபவிக்க தகுந்தன அனுபவி.. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்   இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.. போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.. அதிகமான சிக்கனம் அவசியமில்லை. . மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே… உயிர் பிரிய தான் வாழ்வு.. ஒரு நாள் பிரியும்.. சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.. உன் குழந்தைகளை…

பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். தூமகேதுவின் துவாதச பாவ பலன். 1

தூமகேதுவின் துவாதச பாவ பலன். 1 1. ஜென்ம லக்கினத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் எல்லாக் கல்விகளிலும் சந்தோஷமுடையவர். சுகி, வாக்கு சாலகன், வாக்கு நிபுணர்களிடம் பிரியர், எல்லாவற்றிலும் ஆசையுடையவர். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் உபன்னியாசகர்களுக்கு ( ப்ரியம் சொல்பவர் ) யஜமானன் ஆவார். 3. மூன்றாமிடத்தில் தூமகேது இருந்தால் ஜாதகன் காவியங்களைச் செய்பவர், பண்டிதர், மானி, விநயமுடையவர், வாகனத்துடன் கூடியவர், மன்மதன் போன்றவர், குரூரச் செய்கையுடையவர், மெல்லிய தேகமுடையவர், தனமில்லாதவர்,…

பரிசு பொருள்

பரிசு பொருள் என்பது பரிசு பொருள் அல்ல நம் இதயத்தில் ஊற்றடுக்கும் அன்பின் வெளிப்பாடு  நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது…

விமர்சனம் தேவையில்லை

அடுத்தவர் புத்தி பற்றி வாழ்க்கையைப் பற்றி அசிங்கமாகப் பேச யாருக்கும் யோக்தையில்லை. அப்படிப் பேசினால் அது அலட்டிக்கிறது தானே தவிர வேறென்றும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்கிறார்கள் அத்தைனைதான்   இதை எப்படி புரிந்து கொள்வது விமர்சனம் செய்யாமல் அதாவது சரி, தப்பு சொல்லாமல் வாழ முடியுமா குடும்பத்தில், அலுவலகத்தில், அரசியலில், இத்தனையிலும் விமர்சனம் வருகிறதே சரி, தப்பு சொல்வது விமர்சனத்தின் பகுதியல்லவா ஒரு வேளை நன்றும், தீதும், பிறர் தர வாரா என்பது விமர்சனம்…

இன்றைய தலைமுறையினருக்கு

இன்றைய தலைமுறையினருக்கு, நிதானம் என்னும் வார்த்தையின் பொருள் மறந்தே விட்டது. எதிலும் அவசரம் கண்டிப்பாய் இந்தத் தலைமுறையினருக்கு நிதானத்தின் பொருள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும், அவர்களும் அதை புரிந்து கொண்டால் மட்டும் தான் எதிர்கால தலைமுறையாவது கொஞ்சமாவது சரியான பாதைக்குத் திரும்பும். நிதானம் இல்லாத காரணத்தால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. சிந்திக்காததின் விளைவு எல்லாம் அள்ளி தெளித்த கோலம் ஆக மாறிவிட்டது. அதில் வாழ்க்கையும் வாழும் நெறியும் கூட அடங்கிவிட்டது. இதனாலேயே நிதானத்தை கண்டிப்பாய் கற்று…

ஒரு சின்ன கதை பகுதி 2

ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல். காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது. உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு,…

நேசிப்பது இயற்கை பால குமாரனின் பார்வையில்

மனிதனை மனிதன் நேசிப்பது இயற்கை    ஏனோ அது செயற்கை ஆகிவிட்டது. ஆண், பெண்ணை நேசிப்பதும், பெண், ஆணை நேசிப்பதும் இயற்கை, இயல்பு ஆனால் அதே செயற்கை ஆகிவிட்டது. இயல்பு தொலைந்தும் போய்விட்டது. சிநேகத்தை மறந்த மனிதன், பரஸ்பர விரோதத்தில் மடிந்து விடுவது நிஜம். ஆண்களும், பெண்களும் தங்களுடைய இளமைக்காலங்களில் அதிகமாக நெருங்கி பழகக்கூடிய ஒரு சுதந்திரத்தினால் சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விபரீதங்களுக்கு நெருங்கிப் பழகக் கூடியது தான் வாய்ப்பு என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அப்படிப்பட்ட…

ஒரு சின்ன கதை பகுதி 1

ஒரு கிராமம்.சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.…

கொஞ்சம் சிரிக்க

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர் தான் தலை வலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார். என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்” “யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே?” நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!” “என்னங்க இது கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க” “நான் தான் அப்பவே சொன்னேனே பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!”

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 2

இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 7. ஏழாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் கடவுள் போன்ற சம்பூர்ண குணமுடைய பிரபு, சாஸ்திரமறிவார், கார்மிகர், பிரியர். 8. எட்டாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன் பிறர் காரியங்களுடையவர், குரூரர், பரதாரகமனமே பிரதானமானவர், சமீப மரணமுடையவர், சீக்கிரத்தில் மரிப்பார். 9. ஒன்பதாமிடத்தில் இந்திர தனுசு இருந்தால் ஜாதகன் தபம் செய்வார், நிலையாக விரதத்தை அநுஷ்டிப்பவர், வித்தை அதிகமாயுடையவர் கொண்டாடப்பட்ட ஞானமுடையவர், ஜகம் முழுவதும் ( உலகம் ) கொண்டாடப்படுவர். 10. பத்தாமிடத்தில் இந்திரதனுசு…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 1

இந்திர தனுசுவின் துவாதர பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் இந்திரதனுசு இருந்தால் தனம், தான்யம், சொர்ணம், முதலியவற்றுடன் கூடியவன். நல்லவர்களுக்கு சம்மத மானவன், எல்லா தோஷங்களும் விலகப் பெறுபவன். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன்இஷ்டமானதைச் சொல்பவன். சமர்த்தன், சம்பாதிப்பவன். வினயமுடையவர். அதிக கல்வியுடையவன், ரூபமுடையவர், மேலான தத்துடன், கூடியவர். 3. மூன்றாமிடத்தில் இந்திரதனுசு இருந்தால் ஜாதகன், அதிக கிருபணன். அதிக வித்தையறிபவர், செளரியமுடையவர். அங்கக்குறைவுடையவர். விசேஷ சினேகிதமுடையவர், குடியுமுடையவர். 4. நான்காமிடத்தில்…

சந்தோஷம் பெற

மனிதன் தனக்கு எது தேவை என்றும், எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் சுகமாக இருக்கவேண்டும்  நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடாது. இந்த மூன்று கொள்கைகள் கொண்ட மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 8

திரி நாடி ஸ்தானம் ….. இளா என்கிற நாடி தேகத்தின் இடது பக்கத்திலும், பிங்களா என்கிற நாடி வலது பக்கத்திலும், சுஷ்ம்னா என்கிற நாடி இவைகளுக்கு மத்தயிலும் இருக்கின்றது . இந்த மூன்று நாடிகளிலும் வாயுவு சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இளா பிங்களா நாடி சுரூபம் ….. இளா என்கிற நாடி சங்கைப் போலவும், சந்திரனைப் போலவும் பிரகாசித்துக் கொண்டு சுஷ்ம்னா என்கிற நாடிக்கு இடது பக்கத்தில் இருக்கின்றது. பிங்களா என்னும் நாடி கறுப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தையுடையதாய்…

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் குடும்பம் என்றால் கணவன், மனைவி சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. சமூகத்தின் பாதிப்பும் சேர்ந்தது தான் சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்காது. இந்த உலகத்தில் எந்த இருவருக்கும் இரு கட்சிகளுக்கும் எந்த இரு நாடுகளுக்கும் ஏன் தகராறு வருகிறது என்று யாராலுமே தீர்மானமாய் சொல்ல முடியாது காரணம் அவரவர்களை பொறுத்த வரையில் அவரவர்கள் செய்வது தான் சரி.

சூழ்நிலை

சூழ்நிலை என்பது காலத்தின் வசம் அந்த காலம் எப்போதும் நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த, செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். யாருமே இதற்க்கு விதிவிலக்கல்ல. செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். வேண்டுமானால்  கால அளவுகள், செய்ய வேண்டிய காரியங்கள் மாறுபடலாம் மற்றபடி இதிலிருந்து யாரும் தப்பியது இல்லை  அவ்வளவுதான்.

தேனில் இப்படியா?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன். நோய் எதிர்ப்பு சக்தியை, அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. காலம் காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 25

தூய்மையான மனமுடைய ஒருவன் இறைவன் நாமத்தை ஜபிக்கும்போது, அந்நாமம் அவனுள்ளிருந்து தானகவே குமிழியிட்டுக் கிளம்புவதை அவன் உணர்கிறான். நாமத்தை ஒத அவன் பாடுபட வேண்டும். ஒவ்வொருவரும் சோம்பேறித்தனத்தை விடுத்து, குறிப்பிட்ட காலத்தில் ஜபமும், தியானமும் செய்யப்பழகுதல் வேண்டும். மனமே எல்லாம். ” இது சுத்தமானது, இது அசுத்தமானது ” என்பதை மனத்தினாலேயே ஒருவன் உணர்கிறான். பிறரிடத்துக் குற்றம் காணும் ஒருவன், முதன் முதல் தன் மனத்தையே மாசுபடுத்திக் கொள்பவன் ஆகிறான்.

வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 7

நாடிகளின் ரூப நிறங்கள் ….. காந்தாரி என்கிற நாடி மயிலின் கண்டத்தது வன்னமுடியதாய் இடகலை நாடிக்கு பின்புறத்தில் சேர்ந்து சவ்வியபாதம் முதல் நேத்திர அந்தம் வரையிலும் வியாபித்து இருக்கின்றது. ஹஸ்தி ஜிம்மை என்னும் நாடி கருத்த அல்லி புஷ்பத்தின் நிறத்தை ஒத்து இடைகலையின் முன்புறத்தில் வியாபித்து சம்மியபாகத்தில் சிரம் முதல் பாதாங்குண்டம் வரையிலும் வியாபித்திருக்கும். பூஷா என்கிற நாடி கருத்த மேகநிறத்தை அடைந்து பிங்கலை என்கிற நாடிக்கு மேல்பாகத்தில் இருந்து வலது பக்கத்தின் பாத அங்குலம் முதல்…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.2

7. ஏழாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சுகக் குறைவுடையவன். அற்ப புத்திருடையவன், மந்தபுத்தியுடையவன், நல்ல நிஷ்டூரமுடையவன், ஸ்திரீகளுடைய வியாதியுடைவன். 8. எட்டாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் சாந்தமுடையவன், உள்வெளி இரண்டிலும் தெய்வ ( சிரத்தையுடையவன் ) விசாரணையுடையவன், திடசரீரமும் திடவிரதமுடையவன், தர்மவான், சத்துவமுடையவர். 9. ஒன்பதாமிடத்தில் பரிவேடனிருந்தால் புத்திரருடன் கூடியவன். சுகி, நன் மனைவியுடையவன். பர்த்தா, அதாவது யஜமானன் அழகு, வசியமுடையவன். தனம் சம்பாதிப்பவன். சஞ்சலமில்லாதவன், மானி அற்ப சந்தோஷமுடையவர். 10. பத்தாமிடத்தில் பரிவேடனிருந்தால் ஜாதகன் கொஞ்சம் அங்காலப்புடையவன். போகமுமிப்படியே,…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பரிவேடனுடைய துவாதச பாவபலன்.1

பரிவேடனுடைய துவாதச பாவபலன். 1. ஜென்ம லக்கினத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் வித்துவான், சத்தியத்துடன் கூடியவன், சாந்தமுடையவன், தனமுடையவன், புத்திரனுடையவன், சுசியுடையவன், கொடையாளி, குரு அன்புடையவன். 2. ஜென்ம லக்கினத்தில் இரண்டாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஜாதகன் குணத்தில் கடவுள் எனப்படுபவன், பிரபு ரூபமுடையவன், போகி, சுகி, தர்மபாராயணம் செய்பவன், பிரபு ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் பரிவேடன் இருந்தால் ஸ்திரீ வல்லபவன், நல்ல சுரூபமும் அங்கங்களுடையவன், தேவதைகளிடம் அன்புடையவன், சுயஜன சேர்க்கையுடையவன், வேலையாளுடையவன், குருபக்தியுடையவன். 4.…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன்.2

7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தனம், மனைவி, புத்திரன் இவர்களால் விடுபட்டவன் அதாவது இல்லாதவன், ஸ்திரீ ஜிதன், காமீ, வெட்கங்கெட்டவன், பிறருடைய சிநேகமுடையவன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் வக்கிரப் பார்வையுடையவன், அழகில்லாதவன், அபகீர்த்தியுடையவன், பிராம்ணநிந்தையுடையவன், ரக்தபீடை யடையவன், விசனமுடையவன். 9. ஜென்ம லக்கினத்திறகு ஒன்பாதாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அனேக வியாபாரமுடையவன், எப்போதும் அனேக மித்திரருடையவன், வெகு வேத சுருதிகளை அறிபவன், ஸ்திரிகளுக்கு இஷ்டமானதைச் சொல்லவறிந்தவன், பிரயமாகவும் பேசுபவன். 10. ஜென்ம…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். விதீபாதனுடைய துவாதச பாவபலன். 1

1. ஜென்ம லக்கினத்தில் விதீபாதனிருந்தால், ஜாதகன் துக்கத்தினால் அங்கபீடையுடையவன், குரூரமுடையவன், கொலை செய்பவன் மூர்க்கன், பந்துஜன துவேஷி ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கிரண்டாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் அதிக பித்தமுடையவன், போகி, வீண் விசாரமுடையவன், ஆராய்ச்சியுடையவன், பிரசங்கியாவன். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூனறாமிடத்தில் விதீபாதனிருந்தால் ஜாதகன் தயையில்லாதவன், செய்நன்றியுடையவன், துஷ்டாத்துமா, பாபச்செய்கையுடையவன், ஸ்திரமான ( நிலையான ) அறிவுடையவன், சந்தோஷி, தாதா ( அதாவது கொடையாளி ) தனசம்பாதனையுடையவன், ராஜ வல்லவனாவன், சேனாநாயகனாவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 11

சீடன் — ‘ஆண்டவனே, உமக்கு நமஸ்காரம். வணங்கும் ஜனங்களுக்கு உண்மையான உறவினரே, கருணைக் கடலே, பிறவிக்கடலில் வீழ்ந்துள்ள என்னைக் களங்கமற்றதும் அமுதத்தைப் பொழிவதுமான உம்முடைய கடைக்கண் பார்வையால் கரையேற்றிவிடும். தடுக்க முடியாத பிறவித் துன்பமாகிய காட்டுத் தீயால் பொசுக்கப்பட்டவனும்,  துரதிருஷ்டமாகிய காற்றால் அலைக்கப்பட்டவனும், அதனால் பயந்தவனும் தங்களைச் சரணடைந்தவனுமாகிய அடியேனை – வேறு புகலிடம் நான் அறியேனாதலால் – சாவினின்று காத்தருள்வீராக. குரு — மனவமைதியுள்ளவர்களும் வஸந்த காலத்தைப் போல் உலகிற்கு நன்மையைச் செய்பவர்களும் பயங்கரமான பிறவிக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 6

நாடிகளின் குணங்கள் ….. காதுகளில் வியாபித்திருக்கும் நாடிகள் ஓசையை அறியும்படியானவை, கண்களில் வியாபித்திருக்கும் நாடிகள் ரூபத்தை அறியும்படியானவை, மூக்குகளில் இருக்கும்படியான நாடிகள் வாசனையை அறியும்படியானவை, நாவில் வியாபித்திருக்கும் நாடிகள் ரசத்தை அறியும்படியானவை, சர்மத்தில் வியாபித்திருக்கும் நாடிகள் ஸ்பரிசத்தை அறியும்படியானவை, இருதயம் முகம் இந்த இடங்களில் வியாபித்திருக்கும் நாடிகள் பேசுதற்கு உபயோகமானவைகள். மனது புத்தி இவை இரண்டும் இருதய ஸ்தானத்திலிருக்கின்றன. புரீத்தி என்னும் நாடியில் மனது லீனமானால் மனிதனுக்கு தூக்கம் உண்டாகும். மேற்கூறிய பதினான்கு நாடிகளின் நாமங்கள் அல்லாது…

பிரபஞ்ச சக்திகள் 2

பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது.சுக்கிலமும் சுரோணிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு, மூன்றும் சேர்ந்து மண் உரு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள உடலானது உலகில் உள்ள தாதுப்பொருட்கள், தாவரப் பொருட்கள், அனைத்தும் சங்கமமாகின்றது. மனித உடல் ஐம்பெரும் பூதங்கள் அடங்கிய சிறிய பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர்.மேலும் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பிரபஞ்சத்தில் உள்ள…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 5

தச நாடிகளின் ஸ்தானங்கள் ….. இடது நாசிகையில் இடகலையும், வலது நாசிகையில் பிங்கலையும், ( பிரம்மாந்தித்தில் ) சுஷ்ம்மணாவும், இடது நேத்திரத்தில் காந்தாரியும், வலது கண்ணில் ஹஸ்திஜிம்மையும், வலது கையில் பூஷா என்கிற நாடியும் இடது கையில் யசஸ்வினியும், நாவில் அலம்புசை என்னும் நாடியும், ஆண்குறியில் குஹ¨ என்கிற நாடியும், சிரத்தில் சங்கினி என்கிற நாடியும் வியாபித்திருக்கும். தச நாடிகளை ஆக்கிரமித்திருக்கும்  தசவாயுவுகள் ….. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன்,…

பிரபஞ்ச சக்திகள் 1

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது. இதனால்தான் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். இந்த வாத பித்த கபம் எவ்வாறு மனித உடலில் உள்ளது என்பதையும் வாத பித்த கப நிலைப்பாட்டின் தன்மையை இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்புகள்  ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது. அண்டத்திலுள்ளதே பிண்டம்     பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமுமொன்றே   அறிந்து தான் பார்க்கும் போதே என்று சித்தர் பாடுகிறார்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 24

மனம் ஒவ்வொன்றும் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மனத்தூய்மையின்றி, ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. முக்தியை நாடுவோனுக்குக் குரு, இறைவன், பக்தர்கள் ஆகியோரது அருள் கிட்டியிருந்தாலும், தனது மனத்தின் அருளைப் பெறாது போய் விடின் அவன் துன்பத்துக்காளாவான். இறைநெறி நிற்பவனின் மனம் அவனுக்கே அருள் புரிவதாக இருக்க வேண்டும். கடவுளை ஒருவன் தரிசிப்பதால் வேறென்ன அடைகிறான்? அவனுக்கென இரு கொம்புகள் முளைக்கின்றனவா? அல்ல, அவன் மனம் பரிசுத்தமடைகிறது. மனம் பரிசுத்தமடைவதால் அவனுக்கு மெய்யறிவும், ஞானவிழிப்பும் ஏற்படுகின்றன. பரிசுத்தமான மனமுடைய…

தூமனுடைய துவாதச பாவ பலன்.2

7. ஜென்ம லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் தூமனிருந்தால் தனமில்லாதவன், எப்போதும் காமமுடையவன், பரதார கமனன், தேஜசில்லாதன். 8. ஜென்ம லக்கினத்திற்கு எட்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் பராக்கிரமமின்றி உற்சாகமுடையவன், பொய் பேசுபவன், இஷ்டமில்லாமல் நிஷ்டூரமாய்ப் பேசுபவன். 9. ஜென்ம லக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திர சம்பத்து முதலிய உடையவன், மானி, தனமுடையவன், தனத்துடன் கூடியவன், பந்துக்களை ரக்ஷிப்பவன். 10. ஜென்ம லக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் புத்திராதி ஸெளபாக்கியங்களுடையவன், அறிவாளி, சுகி, சந்தோஷி, உண்மையான வழியில் இருப்பவன். 11.…

பயம் என்றால் என்ன

எதை பற்றி அறிய வேண்டுமென்றாலும் அதை பற்றி அறிய தடை செய்யும் கணிப்புகள் எதுவும் நம்மிடம் இருக்க கூடாது முடிவை முடிவு செய்து ஆராய்கிறேன் என்று சொன்னால் உள்ளது உள்ளபடி அறிய முடியாமல் போய்விடும் ஆராய்வதில் மட்டுமே நின்றால் சரியான முடிவு தானே வந்துவிடும் இந்த சூத்திரத்தை கை கொண்டு பயம் என்றால் என்ன என்பதை அறிய முற்படுவோம் பொதுவாக பயத்தின் கூறுகள் கடந்த கால நிலைகள்,    நிகழ் கால நிலைகள்,    எதிர்கால நிலைகள்,…

கவனித்து கேட்டல்

இது ஒரு அழகான அற்புதமான கலை கண்டீப்பாய் நாம் அவசியம் கற்று கொள்ள வேண்டிய கலை நாம் இப்போது செய்து கொண்டிருப்பது எந்த விஷயத்தை கேட்டாலும் உடனே அதை எதோ ஒன்றுடன் ஒப்பு நோக்கிக்கொண்டோ அல்லது எடை போட்டுக்கொண்டோ தீர்ப்பு வழங்கிக்கொண்டோ ஒத்துக்கொண்டோ மறுத்துக்கொண்டோ இருந்து பழகியதால் எதையும் நாம் உள்ளபடி கவனித்து கேட்பதில்லை கவனித்து கேட்டால் ஒப்பு நோக்கோ எடை போடுவதோ தீர்ப்பு வழங்குவதோ ஒத்துக்கொள்வதோ மறுப்பதோ எதுவும் இருக்காது விஷயம் விஷயமாக மட்டுமே தெரியும்…

தூமனுடைய துவாதச பாவ பலன்.1 பராரை ஹோரை ) 6-வது அத்தியாயம்.

தூமனுடைய துவாதச பாவ பலன். 1. ஜென்ம லக்கினத்தில் தூமனிருந்தால் ஜாதகன் வெகு ரோஷமுடையவன், சூரன், அழகான கண்ணுடையவன்,தடையில்லாதவன், தயையில்லாதவன், சர்வ முடையவன், ரோகமுடையவன், தனமுடையவன், ராஜ்ஜியத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன் ஆவான். 2. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் அறிவாளி செளரியமுடையவன் இஷ்டமாய்ப் பேசுபவன் ஆவான். 3. ஜென்ம லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன் தனத்தைச் சம்பாதிப்பவன், தனவான், மனைவி முதலியவர்களை இழந்து மனசில் எப்போதும் துக்கமுடையவன். 4. ஜென்ம லக்கினத்திற்கு நான்காமிடத்தில் தூமனிருந்தால் ஜாதகன்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 10

கு ரு வு ம், சீ ட னு ம் வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும்,பாவமற்றவரும், ஆசை வாய்ப்பட்டு அழியாதவரும், பிரம்ம ஞானிகளில் சிறந்தவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், விறகில்லாத நெருப்புப் போல் அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றிக் கடல் போன்ற கருணை உள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ அவரே சிறந்த குரு. அந்த குருவை பக்தியுடனும் நமஸ்காரம், அடக்கம் சேவை முதலியவற்றுடனும் பூஜித்து அவர் ஸந்தோஷமாயிருக்கையில் அவரை அண்டி தான் அறிந்து கொள்ள வேண்டியதைப் பற்றிக்…

யதார்த்தம்

நீங்கள் மிக நெருங்கியவராக நினைப்பவரும் உங்களை போலவே பிறிதொருவரை மிகநெருங்கியவராக நினைத்துக்கொண்டிருப்பார் இது தெரியும் போது நம்மால் ஜீரணிக்கமுடியுமா ஜீரணிக்க முடிந்தால் பாக்கியசாலிகள் இல்லாவிட்டால் வன்மம் வளரும் நமது வாழ்க்கை சீர்கெடும் ஏமாந்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதிப்பு அடைவார்கள் அதனால் அது அப்படிதான் என்று எடுத்துக்கொண்டு போய்விடுதல் நல்லது யாருக்கும் தொல்லை இல்லை முக்கியமாய் நமக்கு தொல்லை இல்லை அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து…

நிலத்தின் உயிர் எது? 2

ஆட்டுப்புழுக்கை, மாட்டு சாணிய மண்ணில் போடுகிறோமே, அதுவும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள்தான். இன்றைக்கு, அதனை பாக்கெட்டுகளில் எல்லாம் போட்டு விவசாயிகளுக்கு கொடுக்கிறோம். அசோஸ்பைரில்லம், ரைசோபியோம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியாத உயிரிகள். கண்ணுக்கு தெரியாத இந்த உயிரிகள் காற்றில் இருக்கும் நைட்ரஜனை எடுத்து செடிக்கு வினியோகம் செய்கிறது. பூமியில் உறைஞ்சு கிடைக்கிற பாஸ்பரசை இளக்கி வினியோகம் செய்கிறது. பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் பொட்டாசியமாக மாற்றி வினியோகம் செய்கிறது. நீங்கள் எதை, எதையெல்லாம் கடையில்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 4

தேஹ வியாபக நாடிகள் ….. மூலாதாரத்தில் ஆசிரயித்து தலைமுதல் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும் எழுநூறு நாடிகளால் மனித தேகமானது மிருதங்கத்தை சருமத்தின் வாறினால் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டு இருக்கிறது. முக்கிய நாடிகள் ….. மேல் கூறிய எழுநூறு நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை, சரஸ்வதி, வாருணி, பூஷா, ஹஸ்திஜிம்ஹ, யசஸ்வினி, விஸ்வோதரி, குஹ¨ சங்சினி, பயிஸ்வினீ, அலம்புசா, காந்தாரி என்னும் பதிநாலு நாடிகள் முக்கியமானவை, இவைகள் பிராணவாஹினிகளாய் ஜீவகோசத்தில் வியாபித்து இருக்கின்றதுகள். இந்த பதிநாலுநாடிகளில் பத்து…

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியே அனைத்திற்கும் தீர்வு என்று சிலர் பேசுகிறார்கள் இது உண்மையா என்று ஆழமாக சிந்தித்தோம் என்றால் நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும் ஒரு தேசம் என்னதான் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் அதன் மக்களிடையே சகிப்பு தன்மையும் பரஸ்பர அன்பும் தேச பற்றும் இல்லாது போனால் அந்த பொருளாதார பலம் அழிவுக்கே வழி வகுக்கும் மேலும் இந்த பொருளாதார வளர்ச்சியே சாத்தியம் இல்லைதான் (பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 5 ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1

ஆதிக்கம் செலுத்தும் கிரகம்..1 ஒருவரின் பிறந்த கிழமைக்குரியவர், நட்சத்திரத்திற்குரியவர், ராசிக்குரியவர், லக்கினத்திற்கு உரியவர், லக்கினம் நின்ற நட்சத்திரத்திற்குஉரியவர்களாக எந்த கிரகங்கள் வருகிறதோ அந்த கிரகத்தின் நட்சத்திரத்திலோ, ராசியிலோ, அந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் உள்ள ராசியிலோ, அந்த கிரகம் உள்ள ராசியிலோ அல்லது அக்கிரகம் பார்த்த ராசிகளிலோ எந்த பாவாதிபதி உள்ளாரோ அப்பாவாதிபதிகளின் இயக்கமே ஜாதகருக்கு மேலோங்கி இருக்கும்.. உதாரணமாக ஒருவர் பிறந்த கிழமை, திங்கள், நட்சத்திரம், ரோகிணி, ராசி, ரிசபம், லக்கினம் துலாம் நின்ற நட்சத்திரம் விசாகம்…

நிலத்தின் உயிர் எது? 1

இயற்கையில் சில விதிகள் உண்டு. வயலுக்கு என்ன போட வேண்டும் என்று கேட்டால் 40 விழுக்காடு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். அந்த ரசாயனத்தை போடப்போட பூமியில் இருக்கும் உயிரெல்லாம் இறக்கின்றன. இந்த மண்ணில் இருக்கும் உயிர்களுக்கு எல்லாம் ரசாயனத்தை போடக்கூடாது. விஷத்தை போடக்கூடாது. போட்டால் அது செத்துப்போய்விடும். அதுக்கும் பதிலா அது கேட்டபது, கழிவுகளைத்தான். ஆட்டு புழுக்கையை போடும் போதும், மாட்டு சாணத்தை போடும்போதும், கோழிக் கழிவை போடும் போதும், இலை…

சிரிக்க

முல்லா தனது மனைவியிடம் சொன்னார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன். மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்  என்று  மனைவி கேட்டார். அப்படி ஆனால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே, அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள். அதற்கு முல்லாசொன்னார்.. நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான். என் அனுபவம் தொழில் நடத்த உதவும். என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம், முல்லாவின் மனைவிக்கு மிகவும் சந்தோஷம். . லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?…

எதையும் சாதிக்கலாம்..

ஒருவர் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் ஒன்று அவர்களுக்கு பிறவியிலிருந்து திறமை இருக்க வேண்டும், இல்லையென்றால் யாராவது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்.. பயிற்சியானால் செயல்களை கற்றுத் தெரிந்து கொள்ளலாம். . இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், ஒரு தாய் தன் இருபிள்கைளிடம் இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன் அது நிறைவேறினால் பத்தாயிரம் அரிசி காணிக்கை தருவதாக வேண்டியுள்ளேன் என்றாள். அதற்கு மகன்கள் பத்தாயிரம் அரிசியா எப்படியம்மா எண்ணி கொடுக்கமுடியும் என்றனர். சிறிது நேரம் கழித்து பெரியவன் சொன்னான் சீக்கிரம்…

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 4

5 – ஆம் பாவாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையானநட்சத்திரத்தில் 9 – ஆம் பாவாதிபதி நின்றால் தந்தையால் குழந்தைகளுக்கு எதிரிடையான செயல்கள் இதேபோல் பலன்கள் மாறி மாறி செயல்படும் என்பதை ஜோதிட கலைஞர்கள் வாசகநேயர்கள் யுக்தியோடு தெரிந்து செயல்படுவது நல்லது. இதன் மூலம் மிக நுட்பமான சூட்சுமமான பலன்களை எளிதில் அறியலாம்.. எந்த ஒரு கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது லக்கினம் அல்லது லக்கினாதிபதி நின்றால் அந்த கிரகத்தின் காரகத்திற்கு எதிர்ப்பாக ஜாதக…

ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக  பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள  அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்கள். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்கு ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

நட்சத்திரங்களின் எதிரிடை சாதக நிலை.. 3

 லக்கினாதிபதியாக சுக்கிரன் நின்ற நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதம் எனில் இதன் எதிரிடையான நட்சத்திரம் அஸ்தம் முதல் பாதமாக வரும் இந்த நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் எதுவோ அது இந்த ஜாதகருக்கு எதிரிடையாக செயல்பட்டு பாதிப்பான பலன்களைத் தரும்.. இதே போல் லக்கினாதிபதியான சுக்கிரன் நின்ற நட்சத்திரமான அனுசம் முதல் பாதத்திற்கு சாதகமான நட்சத்திரம் சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதமாகும். இந்த சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நிற்கும் கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் சாதகமாக…

உலகம் பிரம்மாண்டமானது

இந்த உலகம் பிரம்மாண்டமானது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் பிரம்மாண்டமானவர் என்றால் சந்தேகமும், அவநம்பிக்கையும் கூடவே எப்படி என்ற கேள்வியும் வருகிறதே, யோசித்துப் பார்த்தால் நாம் பிறந்து, இறக்கும் வரை உள்ள அனுபவத் தொகுதிகள், அறிவு விஷயங்கள் அனைத்தும் பிரம்மாண்டமில்லையா?, எந்த சிந்தனையும், எதுவுமே தெரியாத நிலையில் பிறந்து, அவரவர் நிலைக்கு இந்த அளவு வந்திருக்கிறோமே என்பது பிரம்மாண்டமல்லவா. சரியாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது எத்தனை பிரம்மாண்டம்.…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு – 9

வானத்தில் நீல நிறமும், கானலில் நீரும், கட்டையில் ஒரு புருஷனும் தோன்றுவது போல் ஆத்மாவில் உலகம் தோன்றுகிறது. வானத்தில் மேகங்கள் நகர்ந்து செல்லும் பொழுது சந்திரன் நகர்வதாய் பிரமை உண்டாகிறது, அவ்வாறே அஞ்ஞானத்தால் ஒருவனுக்கு ஆத்மா உடல் என்ற பிரமை உண்டாகிறது. இங்ஙனம் அஞ்ஞானத்தால் ஆத்மாவிடம் உடலெனும் பிரமை தோன்றுகிறது. ஆத்மானுபவத்தால் அது மீண்டும் பரமாத்மாவிடம் மறைந்து போகிறது. மதிமயக்கத்தால் ஒருவன் பழுதையைக் காணாமல் பாம்பைக் காணுவது போல் அஞ்ஞானியானவன் உண்மையைக் காணாமல் வியவஹார உலகைக் காண்கிறான்.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 23

ஆத்மிகக் காட்சி நிறைவுறும் போது, ஒருவன் தன் இதயத்தில் குடிகொண்டுள்ள ஆண்டவனே அமுக்கப்பட்டவர், துன்புறுத்தப்பட்டவர், தீண்டாதோர், சண்டாளர் ஆகிய மற்றெல்லாரிடத்தும் இருப்பதை உணர்வான்,  இவ்வுணர்வு உண்மையான பணிவுடைமையைத் தரும். ஆண்டவன் எல்லோருக்கும் உரியவன் தீவிரமாகச் சாதனை செய்தால் சீக்கிரமாக அவனை அடையலாம். ஆண்டவனது நாமத்தை விரல்களைக்கொண்டு ஜபித்து அதன் மூலம் அவை புனிதம் அடைதற்காகவே அவன் நமக்கு விரல்களை அளித்துள்ளான். மேகத்தைக் காற்று கலைப்பதைப் போல ஆண்டவன் நாமம் உலகப்பற்றாகிய மேகத்தைக் கலைத்துவிடும்.

பொய் முகம்

உள்ளே ஒன்று வைத்து புழுங்கி வெளியே வேறு முகம் காட்டுகிறவர்களுக்கு ஒரு நாள் தன் உண்மை முகம் தனக்கே தெரியாமல் போகலாம், தெரிய ஆசை வந்து தேடுகையில் உண்மை முகம் உள்ளே இருந்து தெரியாது, அழிந்து போயிருக்கலாம், பொய் முகம் அணிந்து, அணிந்து பொய்யே உண்மையாகவும் காட்சி தரலாம்.  ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம் முகத்தை நாம் மறைத்து வேறு முகத்தை காண்பித்திருப்போம், அப்படி நாம் மறைத்து வேறு முகத்தை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் – 3

வாயு சஞ்சார நாடிகள் ….. மேற்கூறிய நாடிகளில் எழுப்பத்தீராயிரம் ( 70, 000 ) நாடிகள் வாயு சஞ்சரிக்கிற- அதற்கு யோக்கியமானவைகள் இந்த நாடிகளின் மார்க்கமாய் வாயுவானது போகவும், வரவும், குறுக்காக பாயவும் சக்தியுள்ளதாக இருக்கின்றது. நதிகள் எவ்விதம் தமது பிரவாஹங்களினால் சமூத்திரத்தின் சலத்தை அதிகரிக்கச் செய்கிறதோ அதுப் போல் மேற்கூறிய நாடிகள் தேகியால் புசிக்கப்படும். அன்னபானாதிகளின் ரசங்களை தேகமுழுவது வியாபிக்கச் செய்து தேகத்தை போஷித்துக் கொண்டு வருகின்றன. ஸ்தூல நாடிகள் ….. இந்த எழுபத்தீராயிரம் நாடிகளில் ஆயிரத்து…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 2

நாடி பரீக்ஷ விவரணம் ….. இவைகளில் நாடீபரீக்ஷயை மாத்திரம் இந்த ஜம்புவத்தீவிலுள்ள தேவர் முதல் மானிடர் வரையிலும் உள்ள வைத்திய சிகாமணிகள் முக்கியமாய் விஸ்தரித்து எழுதி இருக்கிறார்கள் அவைகள் வடமொழியில் செய்யுட்களாக இருப்பதினால் திராவிட தேசத்தாருக்கு அதனை தெரியும்படி இலேசான சொற்களால் யாவரும் எளிதில் அறிந்து சிகிச்சை செய்யும்படிக்கு எழுதியிருக்கிறேன். வாத பித்த கபங்களாகிய திரிதோஷங்களின் விரோதத்தினால் உண்டாகும் சகல வியாதிகளும் அவைகளின் சாத்தியம், கஷ்டசாத்தியம், அசாத்தியம், அந்தந்த வியாதிகளின் பேதங்கள் முதலியவை அறிந்து சிகிச்சை செய்ய…

ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு   8

ஆத்மா அறிவு மயமானது, பரிசுத்தமானது, உடல் மாம்ஸமயமானது. அழுக்கடைந்தது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறலாம்? ஸத்ரூபமாகிய ஆத்மா அழிவற்றது, அஸத்ரூபமாகிய உடல் தோன்றி மறைவது, அப்படியிருந்தும் மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கின்றனர். இதைக் காட்டிலும் வேறு எதை அஞ்ஞானம் எனக் கூறலாம்? மண்ணாலான குடம் முழுதும் எப்படி மண்ணாகவே இருக்கிறதோ அப்படி பிரம்மத்தாலான உடல் பிரம்மமே. ஆகையால் ஆத்மா என்றும் அனாத்மா என்றும் அஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவது…

இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும். இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அதாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும். கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது  மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் பாராயணம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும். யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது.…