சுந்தர யோக சிகிச்சை முறை 78

நாடி சுத்தி, பிராணயாமம் பத்மாசனத்தில் இருந்தபடியே செய்யப் பழகலாம். இந்தக் காலக் குறிப்புகள், ஆசனங்களிடையே ஏற்பட வேண்டிய ஓய்வையும் உள்ளடக்கியுள்ளது.  இந்தத் திட்டமும், கீழ்காணும் மற்ற இரண்டு திட்டங்களும், ஆரம்ப சாதகர்களுக்கல்ல, ஆசனம் நன்றாகப் பழகிய பின் ஏற்பட்டவையாகும் ஒரு மணிக்கு மேல் காலமிருந்தால் ஆனந்தரகஸ்யத்திலுள்ள  மற்ற ஆசனங்களுக்கு உபயோகிக்கவும்.  மேல் விதித்துள்ள ஆசனங்களில் நிற்கும் காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.  சேர்க்க வேண்டிய மற்ற ஆசனங்களில்.  கீழ்க்கண்ட வரிசை முக்கியமெனக் கருதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 77

ஆசனங்கள் செய்ய வேண்டிய நிமிடம்   செய்யவேண்டிய தடவை       தனுராசனம்                                        2                                  3                பஸ்சிமோத்தானாசனம்                  2                               …

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 7

புத்திமான் எல்லாக் காலத்திலும் கவனத்துடன் தனது ஆத்மாவை தியானிக்க வேண்டும்.  காணப்படாவிடடாலும் அது ஒன்றே உண்மை, வெளியுலகாய் அது விளங்கும் பொழுதும் ஸாக்ஷிமாத்திரமாகவே உளது. ஆகையால் அடையப்படுவது துக்கத்திற்குக் காரணம், அடைந்த மறுகணத்தில் அது ருசியற்றதாகிறது, அறிவிலிகளே அதை நாடுவர்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 6

மதிமயக்கம் நீங்கியவன் ஒன்றேயாகிய ஆத்ம ஞானத்தை வேறு ஞானத்துடனோ கருமத்துடனோ பிணைக்க விரும்புவதில்லை. ஆதிகாரணம் அஸத் எனக் கூறுபவன் மலடி மகனுடன் வியாபாரம் செய்பவன், கானல் நீரால் தாகத்தைத் தீர்த்துக் கொள்பவன்.   

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 5

காமத்திற்கும் கர்மத்திற்கும் காரணத்தை அறியாதவனுக்கே சோகமும், மோகமும் ஆகயத்தைப்போல் பரிசுத்தமான ஆத்மாவைக் காண்பவனுக்கில்லை. 

மனிதர்கள் தோன்றிய காலம் முதல்

ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்றுதான் காதல். இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் காதல் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்களால் காதல் என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை  எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது… எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது. இது விபத்தா,  தெரியாது. விதியா?  தெரியாது

 மாற்றத்திற்கான மூலம்

 மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்… செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

எண்ணங்களை

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால்  அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*

பயம் 8

எண்ணம் கடந்த காலத்தை பற்றி இருந்து நிகழ் கால நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் அது நுழைந்து நமக்கு பயம், பொறாமை, இன்பம், வருத்தம் போன்றவற்றை தந்து கொண்டேயிருக்கிறது. அதனால், நாம் நம் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி, ஒரே வழி எதை நாம் அனுபவிக்கின்றோமோ அதை அப்போதே மறந்து விடுவது இது கடினமாக தோன்றும் விஷயம் ஆனால் நம்மை நாம் கவனிப்பதன் மூலம் மிக எளிதாக கைவரக்கூடிய விஷயம் இதை முயன்று…

பயம் 7

எண்ணத்தின் முழு செயல்பாடும் கடந்த காலத்திலேயே வேர் பரப்பி ஊன்றி நிற்கிறது அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது நம்மை ந ல்லது, கெட்டது சரி, தவறு என்று நம்மை ஏதோ ஒன்றை தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திக்கிறது அதனால் நாம் நம் இயல்பு நிலையை இழக்கிறோம்

பயம் 6

நாம் வளர்ச்சி பாதையில் செல்ல திறமையாக திட்டமிடவும், செயல்படவும் வேண்டியுள்ளது.  இதை எண்ணமற்ற நிலையில் செய்யமுடியாது.  இப்போது நாம் எந்த முடிவுக்கு வருவது என்பது குழப்பமாகத்தான் இருக்கும்.  ஆனாலும், குழப்பம் தெளியவேண்டும் அதற்கு ஒரே வழி வினாவும், விசாரித்தலும்தான்.  நம் வாழ்க்கையில் எண்ணத்தின் இடம் என்ன என்ற விசாரிக்க ஆரம்பிக்க வேண்டும் அதில் நாம் எண்ணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் எண்ணம் நமது இயல்பான வாழ்க்கையில் குறிக்கிடாமல் இருப்பதற்கும் உள்ள எல்லைக்கோடு எது என்பதை கவனமாக உற்றுப்…

பயம் 5

இந்த கடந்த காலம், எதிர்காலம் என்பது எண்ணங்களால் ஆட்சி செய்யப்படுகிறது இந்த எண்ணங்களே பயத்தை நம்முள் விடாமல் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது. இதை நாம் நன்றாக முதலில் புரிந்து கொள்வோம் அடுத்ததாக நமது வளர்ச்சிக்கும், இந்த எண்ணங்களே காரணமாயும் உதவி செய்வதாயும் இருக்கிறது. இந்த விஷயத்தை நன்கு கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  நன்றாக இதை புரிந்து கொண்டபின் எண்ணங்கள் என்பது என்ன என்ற வினாவை நாம் முன் வைத்து சிந்தித்தால் வரும் பதில் எண்ணம்…

பயம் 4

மரண பயத்தை விட்டு விட்டு வேறு சில பயங்கள் எது என்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் வெளியே தெரிந்து விடுமோ எனும் பயம், நம்முடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில கொண்டு எதிர் கால சிந்தனையில் ஏற்படும் பயம்.  இதில் நாம் கவனித்து பார்த்தால் பயம் என்ற விஷயம் கடந்த காலத்தையோ, அல்லது எதிர்காலத்தையோ மையமாக கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

பயம் 3

ஒருவாறு சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு மரணமே மிக பெரிய பயமாய் இருந்திருக்கிறது இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.  உண்மையில் சொல்லப்போனால் மரணம் வரும் வினாடி வரை நீங்கள் வாழ்க்கையில் மரணத்தின் பயத்தை ஒத்தி வைத்திருக்கிறீர்கள் அதாவது மரண பயத்திலிருந்து தப்பித்து வந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம் நாம் நம்மிடம் உள்ள பல பயங்களில் இருந்து விடுபட அல்லது தற்காலிமாக வேணும் தப்பிக்க கோயில், மதம், கடவுள் போன்றவற்றின் துணையை கைக்கொண்டு வந்துள்ளோம் ஆனாலும் எத்தனையோ மதங்கள், கோயில்கள், கடவுள்கள், தத்துவங்களாலும்…

பயம் 2

இந்த பயம் பல சமயங்களில் மறைமுகமாகவும், சில சமயங்களில் மட்டுமே வெளிப்படையாகவும் உள்ளது.  பயம் ஏன் வருகிறது?  எப்படி  அந்த பயம் உருவாகிறது என்று நாம் சிந்தித்தால் மட்டுமே முழுமையாய் பயத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் அப்படி முழுமையாய் அறிந்து கொண்டபின் அந்த பயத்தை வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம், வேண்டாமென்றால் அந்த பயத்தை தூக்கி போட்டு விடலாம்.

சந்திரன் 9

சந்திரனுக்கு 5க்குடையவன் கன்னியில் சுக்கிரனுடன் இணைந்து பாவிகள் சம்பந்தம் பெற்றாலும் குழந்தையோகம் ஏற்படும். சந்திரன் 6ல் (ஸ்திரி சூதகத்தில்) வியாதியால் பீடிக்கப்படுவாள்., மரியாதை, பணிவு இராது, பகைவர்கள் அதிகம் இருப்பார்கள் அற்பமானப் பணமே சேரும். சந்திர பலம், ஜன்ம ராசியில் இருந்து, சந்திரன் உலவுகிற 2,5,9 ஆம் ராசியானால் மத்திமம் 4,8,12ஆம் ராசியானால் அசுபம், 1,3,6,7,10, 11 ராசிகளில் இருந்தால் சுபம்.

சந்திரன் 8

சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார்.  பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர்.  சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும்.  கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும்.  ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ  இருக்கக்கூடாது.

சந்திரன் 7

சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதியோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.

சந்திரன் 6

சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது.  பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.  இச்சுழற்சியில் பூமியைச் சுற்றுகிற சந்திரன், சூரிய பாதையில் குறிக்கிடும்.  இடம் வடபாகத்தில் அமைவது ராகு, தென்பாகத்தில் அமைவது கேது என அழைக்கபபடுகிறது. சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் தமது வாழ்க்கைத் துணையினை பிரிந்து வாழ்வர். சந்திரன் பலமுடன் இருந்தால் சிவ வழிபாட்டின் மூலம் ஞானஒளி பெறுவர். சந்திரன் சிம்மத்தில் நின்று குரு பார்வை பெற்றால் அரசியலில் முன்னோடியாக திகழ்வார். சந்திரனும், சுக்கிரனும் பலம் பெற்றால் மக்கள்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 15

2, 3 – க்குரியவர்கள் திரிகோணமடைய 8 – க்குடையவர் 3 – ல் இருந்து பார்க்க, அன்னியருடைய மனைவியை மனம் நோகாது புணரும் லீலா விநோதன். சந்திரனுக்கு 3 – இல் 7 – க்குடையவர்கள் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 14

 சுக்கிரனும், 2, 3 – குடையவர்களும், மூவரும் திரிகோணமடைய 5 – க்குரியவர் பார்க்க சாஸ்திரங்களில் வல்லவராயிருந்தும் நரி ஊளையிட்டால் பயப்படுவார்.  3, 5, 6 – க்குடையவர்கள் பலமடைந்து 12 – ல் நிற்க, ராஜசபையிலும் பந்துக்கள் சபையிலும், பயமும், வெட்கமும் உடையவர். 7 – ல் ராகு நிற்க, 7 – க்குடையவர் கேந்திரமடைய தன் மனைவியோடு மதன நூல் விதிப்படி லீலைகள் செய்து வாழ்வார்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 13

சுக்கிரன் 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் 3 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள், யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். 3 – க்குடையவர் பாவியுடன் கூடி 12 – ல் நிற்க, 12 – க்குடையவர் உச்சமடைய, வீரர்கள் யுத்தங்களை, சாகஸங்களை துரும்பாக மதிப்பார். செவ்வாயோடு சந்திரனுடன் கூடி 12 – ல் நிற்க, 3 – க்குடையவர் பார்க்க ராஜாங்கம் சென்று, வீரிய விஜயம் பெறுவார்.

சங்கு முத்திரை:-

முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை தவிர மற்ற வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும். பலன்கள்:- தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும். ஜீரணசக்தி அதிகரிக்கும்.…

மகாதேவர் ஆலயம்

கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவபெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடி. பரசுராமர் அமைத்த ஆலயம்

வெள்ளெருக்கு விநாயகர் கோவில்

சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.    

குலசை முத்தாரம்மன்

ஆலயத்தின் சிறப்புகள் சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்- முத்தாரம்மன். சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு எதிரே சிம்மம் உள்ளது இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது. அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற…

சுவாமிமலை

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு சுவாமிமலை தந்தை – மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.  

திருத்தணி

சூரபத்மனை வென்ற பிறகு, முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த இடம்  திருத்தணி சினம்கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும், செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.  

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.  

கட்டளையிட விரும்பாதே கீழ்ப்படிந்து நட

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகிறார்கள் கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராகஇல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்தநாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன்பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்

சொந்தக் காலில் நிற்க உதவுவதே உண்மைக் கல்வி

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாகஇருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்குஉதவிபுரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி, அதைக் கல்வி என்று சொல்வது பொருந்துமா ? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வியாகும்.

ஆதி. 11     சமணம்

இனி, சமணத்தைப் பற்றி பார்ப்போம்.  சமண மதத்தின் தத்துவங்களை உருவாக்கியவர் மகாவீரர் ஞானம் அடையும் முன் இவர் பெயர் வர்த்தமானர் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும் என்பதே சமண தத்துவத்தின் கருப்பொருள்  தத்துவங்களின் பயணம் உண்மையை தேடி அதாவது அறுதியான, இறுதியான உண்மையை தேடி இதில் அந்த உண்மையை சமண தத்துவம் எல்லாவற்றையும் விட்டு விடுதல் என்ற அடிப்படையில் உண்மையை நாடி பயணிக்கிறது. அதன், பார்வையில் கண்ணுக்கு, புலனுக்கு தெரியும் உலகமும் உண்டு.  கண்ணுக்கும், புலனுக்கும் தெரியாத சூட்சமமான…

ஆதி. 10 லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4

லோகாயதம் — சார்வாகர்கள் — நாத்திகம் 4  நம் புலன்கள் அறியாத காரணத்தால் தீர்மானமாக நாம் நம்பலாம் கடவுள் என்று ஒன்று இல்லையென்று.  கடவுள் இல்லையென்று ஆகிவிட்டதால் கர்மவினையும் இல்லை என்பதே இவர்கள் தத்துவம் சுருக்கமாக சொன்னால் பூதங்களின் இயல்பான குணவிசேஷத்தால் உள்ள கலப்புகளே பொருள்கள் அந்த பொருள்களை காண முடியும் உணர முடியும் சில கால கட்டத்தில் இணைந்த பூதங்கள் பிரிந்து வேறாக மாறுகின்றன இதில் மனிதனும் அடக்கம் அதனால் மனிதன் அனுபவிக்க பிறந்துள்ளான், அனுபவிக்கிறான்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 76

எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்?  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும்.  எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம்.  எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம்.  தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம், உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது, மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 75

 நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?   இதற்கு தினசரித் திட்டம் என்ன?  எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா?  ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில் எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்?  எவைகளை இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும்.  ஒரு நாள் விடுமுறை எடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும். நித்தியக் கடனாக…

சுந்தர யோக சிகிச்சை முறை 74

மனதிற்குச் சாந்தி அளிக்கிறது. பிராண உடலில் சமாதானமாக இயற்கைக்குகந்தவாறு பரவி, நிலைத்து வேலை செய்யத் தூண்டுகிறது. சளைக்காது அதிக வேலை, அதிகப்படிப்பு, அதிகச் சிந்தனை செய்ய உதவுகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் சக்தி பெற புத்தி, சாமார்த்தியத்தை அளிக்கிறது. இக்கவசத்தின் எண்ணற்ற பலன்களை எடுத்துரைக்க இயலாது.

பயம்.

பயம் இது எல்லோரிடமும் உள்ளது.  அனால் அது எற்படுவதற்குரிய சூழ்நிலைகளும் , பொருள்களும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. மற்றபடி பயம் என்பது பயம்தான். நீரை கண்டு பயப்படாதவன்  நெருப்பைக் கண்டு பயப்படலாம்.  பாம்பைக்கண்டு பயப்படாதவன் புலியைக் கண்டு பயப்படலாம். இதில் நாம் சற்று சிந்தித்துப்பார்த்தால் பயம் என்பது அதாவது பயம் எனும் உணர்வு தனியே நிற்பதில்லை.  அதாவது பயத்தால் தனியாக செயல்படமுடியாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் வேண்டும் அந்த பிடிமானம் என்பது இருட்டாய் இருக்கலாம்.  கொடிய…

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்

சந்தோஷம் என்பது 32

ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி நிறுவனங்களும், முறைபடுத்தப்பட்ட மதங்களும், பிரச்சாரங்களும், அரசியல் அமைப்புகளும் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதற்க்கு உதாரணம் இப்போதைய மக்கள் நிலையே போதுமானது.  அதனால், மனிதனுக்கு தற்போது அவனை காப்பாற்ற எதுவுமில்லை என்பதே தெளிவாக இருக்கிறது. அவனை காப்பாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதே தீர்வாக தெரிகிறது. 

சந்தோஷம் என்பது 31 

மனிதன் தன் இயல்பை, சுதந்திரத்தை, சுகத்தை, மறந்து அல்லது தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டது.  தனக்குள் இருக்கும் பல உணர்வு நிலைகளில் அவன் பல்வேறு துண்டுகளாக சிதறிபோய்விட்டான் இந்த துண்டுகள் இணைந்து மனிதன் முழுமையடைய வேண்டுமென்றால் எதனால் முடியும், எப்படி முடியும் .

சந்தோஷம் என்பது 30

அரசியளார்கள், மதகுருமார்கள், தனிதிறமை பொருந்தியவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று இருப்பவர்களாலும் இருந்தவர்களாலும் இது நாள் வரையில் உலகில் அமைதியையோ, மகிழ்ச்சியையோ, திருப்தியையோ மனிதனின் இயல்பான சுதந்திர நிலையினையோ கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை.

சந்தோஷம் என்பது 29

ஒரு விதத்தில் பார்த்தால் மனித இனம் ஒவ்வொரு விதத்தில் தேசிய, கலாசார, மத விஷயங்களில் பிளவு பட்டு இருக்கிறது.  பிளவுபட்டதை இணைந்து விடாமல் இருக்க தேசியமும், மதமும் தங்களால் முடிந்த அளவு போராடுகின்றது. இந்த குழப்பத்தை காணும் போது காணும் நபர் என்ன செய்வது, என்ன செய்வது என்று யாரை போய் கேட்பது இப்படிப்பட்ட பூனைகளுக்கு மணி கட்டுவது யார்  என்பதே வினாவாயும் தனக்குள் விவாதமாயும் இருக்கிறது.

சந்தோஷம் என்பது 28

எல்லா கோட்பாடுகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கின்றன எந்த விஷயத்திலும் எந்த தத்துவத்திற்க்கும் நீடித்த நிலையில் மதிப்போ, ஆதாரமோ, நம்பிக்கையோ இருப்பதில்லையென்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் இது, மதமாகட்டும், தத்துவமாகட்டும், நிறுவனமாகட்டும், தனிமனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் இந்த நிலையேதான் உள்ளது.  இந்த சூழ்நிலையில் இந்த குழப்பமும் சந்தேகமும், பதற்றமும் நிறைந்த உலகில் நாம் எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பதே நம் எதிரில் இருக்கும் வினா.

சந்தோஷம் என்பது 27

உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா?  அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது.  இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.

சந்தோஷம் என்பது 26

நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது.  அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.

சந்தோஷம் என்பது  25

சிருஷ்டியின் ரகசியத்தை எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது.  ஒன்று அதை எப்படியாவது கஷ்டப்பட்டு அறிந்து கொள்ளலாம் அல்லது அறியாமல் விட்டுவிடலாம் இவ்வளவுதான் முடியும் அதை, வாத, விவாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாது.  அப்படி நிரூபிக்க முடியாதது தான் சிருஷ்டியின் அழகு, அதிசயம் இதை தான் நம் முன்னோர்கள் இறைவன் என்றும் கடவுள் என்றும் சொன்னார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 73

உடலை வனப்புறச் செய்கிறது. ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது. ஆயுளை அதிகரிக்கின்றது. புலன்களை சுத்தம் செய்கிறது. மூளையை அபிவிருத்தி செய்கிறது. நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து, வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது. காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 72

உயிர்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீர்ய நிலையில் வைக்கிறது. ரத்தவோட்டத்தை சுறுசுறுப்பாக்கி, அசுத்தத்தை எளிதாக முற்றிலும் போக்குகிறது. ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. நோய் கிருமிகளைக்கொன்று, உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை, உன்னதம் பெற உதவுகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 4

 பகவான் வியாஸர் தமது குமாரருக்கு நீண்ட ஆலோசனையின் பயனாய்ப் பின்வருமாறு உபதேசித்தார், வேதத்தில்  இருவேறு மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன ஒன்று பிரவிருத்தி ( கர்மமார்க்கம் ), மற்றொன்று நிவிருத்தி ( ஞானஸந்நியாஸமார்க்கம் ). அத்விதீய பிராம்மீஸ்திதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தேவர்களும், அசுரர்களுக்கொப்பானவர்களே, அவர்களுடைய உலகங்களும் அசுரத்தன்மையுடையனவே.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 3

நாம் நாள்தோறும் கண்டனுபவிக்கும் உலகம் வியவகாரத்தில் உண்மையாகத் தோன்றினாலும் அடுத்த நொடியில் பொய்த்துப் போவதால் அது இருப்பில்லாத கனவுலகம் போன்றதேயாகின்றது. ஞானத்திற்கும் கருமத்திற்குமிடையே உள்ள வேற்றுமை மலை போன்று அசைக்க முடியாதது.

சந்தோஷம் என்பது  24

ஒரு சிறு குழந்தையை போல உடைகள் ஏதுமின்றி ,பொய் முகங்கள் ஏதுமின்றி அதாவது (பொய் முகங்கள் என்பது அறிவாளி, முட்டாள்,பணக்காரன், ஏழை, பண்டிதன், பாமரன், வேதாந்தி, அஞ்ஞானி, ஞானி, அப்பா, மகன், சகோதரன், கணவன், மனைவி, இது போல இன்னும் எத்தனையோ இருக்கின்ற அதிகார சின்னங்களும், உறவு சின்னங்கள் இன்றி.) அப்பட்டமாக நிர்வாணமாகி உண்மையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கடவுள் உன்னை பார்க்கும்படி நீ செய்தால் சந்தோஷம்  சாத்தியமே  எப்போதும் சந்தோஷமே இது சாத்தியமா?

சந்தோஷம் என்பது  23

இங்கு எல்லாவற்றையும் என்று நான் சொல்லுவது உன்னுடைய வாழ்க்கையை அதன் அழகை அதன் உன்னதத்தை சூரிய உதயம், அஸ்தமனம், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், தாமரையின் அழகு ரோஜாவின் வாசனை, வளர்ந்து தேயும் நிலவு, ஆர்பரித்து ஓடும் ஆறு ஓ என்று ஒசையுடன் விழும் அருவி உயர்ந்த சிகரங்களை கொண்ட மலை அதில் படர்ந்திருக்கும் பனி  இவைகளை ரசிக்க தெரிந்தால் உன் மனம் லேசாகிவிடும்.  பூரணம் அதில் நிரம்பி வழியும் அப்போது நீ உண்மையிலேயே, தாயை, தந்தையை,…

சந்தோஷம் என்பது  22

அன்பை அறிந்து கொண்டு அதில் திளைப்பவனுக்கு பணத்தின் அருமை, பெருமை, அதிகாரத்தின் ஆற்றல் போன்றவை ஏனோ தெரிவதில்லை.  மக்கள் ( உலகோர் ) பார்வையில் கையாலாகதவனாக எதிர்கால சிந்தனையற்றவனாக பிழைக்கத் தெரியாத அறிவிலியாகவே தென்படுவான். உன்னை சுற்றி இருக்கின்ற நடக்கின்ற விஷயங்களை ரசித்து பழகினால் ரசிப்பது எப்படி என்ற வித்தையை அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நீ பணத்தின் மீது உன்னுடைய எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு மோகம் கொள்ளமாட்டாய்

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 12

3 – ல் சுக்கிரன் நிற்க, 3 – க்குடையவர் சுக்கிரன் வீட்டில் நிற்க, முத்து, ரத்தினம், மாலையணியும் பொன் போன்ற தேகம் உடையவர். குரு 3 – இல் நிற்க, புதனுடன் 3 – க்குடையவர் கூடி பகை பெற்று செவ்வாய் பார்க்க ரத்தினமாலை அணிவார். லக்கினாதிபதியுடன் 2 – க்குடையவர் கூடி கேந்திரமடைய புதன் பார்க்க அழகான உடல், ரத்தினமாலை அணிவான். சந்திரன் நின்ற ராசிக்கு 2 – க்குடையவர் 12 – ல்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 11

சனி, சூரியன் சேர்க்கையை 3 – க்குடையவர் பார்க்க 12 – க்குடையவர் சேர பல சகோதரர்கள் இருந்தும் ஒற்றுமை குறையும். மனபேதங்கள் காணும். உயிர் சேதங்கள் ஏற்படும். 3 – க்குடையவரும், சனியும், கூடி 12 – ல் நிற்க, 8 – க்குடையவர் 3 – ல் நிற்க, சகோதரர்களைப் பெற்ற தாய்க்கு வீண் வேதனையும் பாவமும் தரும் சகோதரர்களாக வருவார்கள்.  3, 10 – க்குடையவர்கள்ள கூடி 8 – ல் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 10

 3 – க்குடையவரும், செவ்வாயும், சனி, மூவரும் சேர்ந்து 7 – இல் நிற்க ஒரு சகோதரர் இருந்தும் பயன் இல்லை. செவ்வாய், 3 – க்குடையவருடன் கூடி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய, 3 – ஆமிடம் சூன்யமாக இருக்க, சொப்பனத்திலும் சகோதரர் இல்லை.  3 – இல் ராகு நிற்க, 5 – ஆம் இடம் சூனியமாக செவ்வாய் 3 – க்குடையவருடன் கூடி நிற்க, முன்னும், பின்னும் சகோதரம் இல்லை.…

சந்திரன் 5

சந்திரன் புதனுடன் சேரும்போது மனநிலை பாதிப்பு, சித்த பிரமை ஏற்படுத்துகிறது. சந்திரன், செவ்வாயுடன் சேரும்போது ரத்த அழுத்த நோயை தருகிறது.  சந்திரன் சுக்கிரனுடன் சேரும்போது உணர்ச்சிவேகம் செய்து மனநிலை பாதிப்பை தருகிறது. சந்திரன் ராகு, கேது கிரகங்களுடன் சேரும்போது கிரஹணதோஷம் ஏற்படுகிறது. சந்திரன் ஒரு தினக்கோளாகும், சந்திரனது நக்ஷத்திரம் ரோஹிணி, அஸ்தம், திருவோணம்.

சந்திரன் 4

சந்திரனுக்கு 1, 4, 7, 10ல் செவ்வாய் இருக்கும் போது சந்திர மங்கள யோகம். சந்திரனுக்கு 1,4,7,10ல் சுக்கிரன் இருக்கும்போது மாளவ யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 1,4,7,10ல் புதன் இருக்கும்போது பத்திர யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 6,7,8 சுபகிரகம் இருக்கும்போது அதியோகத்தை தருகிறது.  சந்திரன் சனியுடன் சேரும்போதும், பார்க்கும்போதும் நரம்புதளர்ச்சி, வாத நோயை தருகிறது.

சந்திரன் 3

சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருக்கும்போது சகட யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 12ல் கிரகம் இருக்கும்போது சுனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2ல் கிரகம் இருக்கும்போது அனபா யோகத்தை தருகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இருந்தால் மகாசக்தி யோகம் ஏற்படுகிறது. சந்திரனுக்கு 2, 12ல் கிரகம் இல்லாமல் இருக்கம்போது கேமத்துரும யோகம் தருகிறது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  68

இதுவுமது …..  சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள்.  அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் …..  மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  67

சரீர ரக்ஷண உபதேசம் முதலில் மனிதன் சகல கருமங்களைவிட்டு சரீரத்தை பரிபாலிக்க வேண்டியது.  அவசியமாக இருக்கிறது சரீரமில்லாது சுபம், அசுபம், இல்லாமை இவைகள் எப்படி வாய்க்கும். சரீரத்தை பாதுகாக்க வேண்டிய முறை பட்டணத்தை படைத்தவன் பட்டணத்தை எவ்விதம் பரிபாலிக்கிறானோ அவ்விதம் மேதாவி ஆனவன் சரீரத்தை பாதுகாக்கவேண்டியது.  சரீரத்தை பாதுகாப்பவனது அகாலம் அகன்று காலமென்கிற பராக்கிற உச்சாஹம் இந்திரிய ஆயுர்பலம் முதலியவைகள் உண்டாகின்றது.

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  66

அகலில் சம்பூரணமாய் எண்ணெயிருந்து எரிந்துக்கொண்டிருந்த வத்தியானது கையால் எப்படி அணைந்து போகிறதோ அவ்வண்ணம் சகலத்திற்கும் ஆதாரமாகிய வாயு ஆதாரமற்றதாகிறதினால் பிராணிகளுக்கு மரணம் சம்பவிக்கின்றது. இதற்கு ஆகந்துக மிருத்யு என்றுப்பேர்.  இது வைத்தியனுடைய மந்திர, தந்திர மங்களாசரணத்தினால் சாந்தியாகின்றது. மரணகாலம் சம்பவிக்கும்போது எந்த விதமான மருந்தும் பிரயோஜனப்படாது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 2

விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை.  உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை.  ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன.  எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 1

எப்படியோ மனிதப்பிறவியை, அதிலும் புருஷ சரீரத்தை, அடைந்து வேதத்தையும் கற்றுணர்ந்து அதன் பின்னும், ஒருவன் மூடனாய் முக்திக்கு முயலாவிட்டால், இவன் தற்கொலை செய்து கொண்டவனுக் கொப்பாகிறான். ஏனெனில் பொய்யான பொருள்களைப் பற்றிக் கொண்டு அவன் தன்னை மாய்த்துக் கொள்ளுகிறான். முக்திக்குதவும் சாதனங்களுள் பக்திதான் தலைசிறந்தது.  தன்னுடைய உண்மை நிலையில் நாட்டமே பக்தியெனப்படும்

காயப்படுத்தாமல்

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…

சுந்தர யோக சிகிச்சை முறை 71

உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன், நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ, யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது?  இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன? இந்த கேள்விகளுக்கு விபரமாக யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும். இந்தக்கவசத்தின் சக்தியையும், இது வேலை செய்யும் முறைகளையும் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 70

ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது.  இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை, உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது.  இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது.  வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத‍, நோய், தடுக்கும்.  சீர்திருத்தம், அமோக  சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும்.  அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 69

 ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன.  இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன.  ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல.  லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை. இதில் உணவு தயாரிக்கும் முறைகள்  சேர்க்கப்படும் பொருள்கள், நோய் பரவக் காரணமாகின்றன.  பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய, ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.

அபான வாயு முத்திரை

ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல் நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும். பலன்கள்:- 1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். 3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும். 4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும். 5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும். 6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும். 7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள்…

நாஷக் முத்திரை

சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும். 2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும். 3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும். 4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும். 5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.  வயதானவர்கள், ஆசனநிலையில் அமர…

சூரிய முத்திரை:

மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். 2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும். 3.தொப்பை குறையும்.       4.கொழுப்பை குறைக்கும் 5.உடல் பருமன் குறையும்      6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும் 7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும்   8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 9.பார்வைத் திறன் அதிகரிக்கும்     10.களைப்பைப் போக்கும். 11.ஆஸ்துமா,பீனிசம்…

அடக்குமுறையும் எதிர்ப்பும் வரவேற்கத் தக்கவையே

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். தனது காலத்தைவிட முற்போக்காகச் சிந்திக்கும்ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவேஎதிர்ப்பும், அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும்உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவுகடந்த நம்பிக்கைஉடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள்எல்லாம் மறைந்து போய்விடும்.  

கரடு முரடான பாதை

இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.

உன் வினை உன்னைச் சுடும்

பகை, பொறாமை ஆகியவற்றை  நீ  வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து  எப்போதும் விலகியிரு.

சண்டையிடுவதிலும், குறை சொல்வதும் வீண்

சண்டையிடுவதிலும், குறைசொல்லிக் கொண்டிருப்திலும் என்ன பயன் இருக்கிறது ? நிலைமையைச் சீர்படுத்திக் அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும்முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன்தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல்ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்றுகொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்தகடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 9

4, 9 – க்குடையவர்கள் 11 – ல் நிற்க, 11 – க்குடையவர், 3 – ல் நிற்க, சந்திரன் செவ்வாய்க்கு கேந்திரம் அடைய, 7 – க்குடையவர் பார்க்க, பேதமில்லாத துணைவர் உண்டு. சந்திரனுக்கும், லக்கினத்திற்கும், 3 – க்குடையவர்கள் கூடி திரிகோணமடைய குரு பார்க்க, செவ்வாய் திரிகோணமடைய புண்ணிய சகோதரர்கள் உண்டு. 3 – ல் புதன் நிற்க, 12 – ல் சனி நிற்க, 5 – ல் சூரியன் நிற்க,…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 8

7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க, 3 – க்குடையவர் கேந்திரமடைய குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு. செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து, அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய 3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு.  3 – க்குடையவர் திரிகோணமடைய, செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 7

 3 – இல் பாவர் இருக்க பாவர் பார்க்க, பிறந்த ஜாதகங்கள் எவ்வகையினாலும் தன் காரியத்தை சாதித்துக் கொள்ளுவான். பிறரின் பொருளை அபகரிப்பான். தவறான காரியங்களில் ஈடுபடுவான். தாய்க்கும், தந்தைக்கும் ஆபத்துக்களைத் தருபவன்.  3 – க்குரியவர், 9 – க்குரியவருடன் சேர்ந்து பாவரால் பார்க்கப்பட்டு இருந்தால், தாய், தந்தையை துன்புறுத்துவான். உடன் பிறப்புக்களுக்கு ஆகாதவன். காம இச்சையை எப்படியாவது தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவான். 3 – க்குரியவர், 8 – க்குரியவர், 7 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 6

3 – க்குரியவர் ராகு சாரம் பெற்று 8, 12 – லிருந்து 8 – க்குரியவருடன் சேர்ந்திருந்தால் மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில் உடன் பிறப்பு பிரிவினை, குடும்பம் பிரிந்து வாழுதல் குடும்பத்தில் தற்கொலை நிகழ்ச்சிகள் நடக்கும்.  3 – இல் 7 – க்குரியவர், 3 – க்குரியவர் 12 – லிருந்து, 10 – க்குரியவர் சாரம் பெற்று இருந்தாலும், அக் கிரக சாரத்தை பெற்று கிரகத்தால் பார்க்கப்பட்டாலும், இளம் வயதிலேயே பெண்…

சந்திரன் 2

சந்திரன் 6, 8, 12ல் நின்று மூன்று கிரகங்கள் நீசமடைந்து இருப்பின் மதி பேதம் ஏற்பட்டு வாழ ஏதுவுண்டு. சந்திரனுடன் குரு நின்று இருப்பின் 70 வயது வரை வாழ்வர். சந்திரனுடன், சூரியன் நின்றிடில் பெற்ற அன்னையே சந்தேகப்படுவர். சந்திரன் அல்லது சனி பெண் ராசிகளில் நிற்க.  ஆண் ராசிகளில் சூரியன் நின்றால் அலித்தன்மையுண்டு. சந்திரனுக்கு 1,4,7,10ல் குரு இருக்கம்போது கஜகேசரியோகத்தைத் தருகிறது.

சந்திரன் 1

                     கோள் செய்வதை நல்லவரும் செய்யார் சந்திரன் ஆட்சி உச்சமேறிய ஜாதகர்கள் குடும்ப க்ஷேமத்துடன் நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் லக்னத்தில் அமைந்தவர்கள் சிந்தனையாளர்கள், ஆய்வுசெய்து முடிவெடுப்பார். சந்திரனும், சூரியனும் சேர்ந்தால் அமாவாசை யோகத்தைத் தருகிறது. சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதி, தாயாரை குறிப்பிடுவது சந்திரன் நல்ல மனநிலை அடைய சந்திரன் கெடாமல் இருக்க வேண்டும். சந்திரன் குருவும் சேர்ந்தால் குரு சந்திர யோகத்தை தருகிறது.

சந்தோஷம் என்பது  21

அப்படி தியானத்தை பழகி கொண்டால் பணம், அதிகாரம் பிறருடன் ஒப்பிடுதல் போன்றவை உன்னிடம் தோன்றாது.  அப்போது நீ சுதந்திரமானவனாய், இன்பத்தில் மூழ்கியவனாக இருப்பாய் பணத்தை கொண்டு கட்டில் மெத்தை வாங்கலாம் நிம்மதியாக நிர்சிந்தையற்ற தூக்கத்தை வாங்கமுடியாது. பணத்தை கொண்டு அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது ஆனால் சிற்றின்பத்தை விலை கொடுத்து வாங்கலாம்.

சந்தோஷம் என்பது 20

நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு இன்னும் சொல்லப் போனால் உள்ளதை உள்ளபடி ஏற்று அந்தந்த கணங்களில் அப்படி அப்படியே வாழ்பவன் தனக்குள் உள்ள வெற்றிடத்தை அன்பு, சந்தோஷம் போன்றவற்றால் நிரப்பி கொள்கிறான். அது அவனிடம் முன்னமேயே உள்ளது அதை அவன் கண்டுகொள்கிறான், அதனால் அவனுக்கு மீண்டும் வெற்றிடம் உருவாதில்லை அவனள் இருக்கும் சந்தோஷம் இன்பம் போன்றவை வெளியில் இருந்த வந்தவையல்ல அவனுள்ளேயே எப்போதும் இருப்பவை அவன் அதை உருவாக்கவில்லை இருப்பதை உணரமட்டுமே செய்தான் இதற்கு தியானம் ஓர் அளவு…

சந்தோஷம் என்பது 19

பணம் இருந்தால் வீடு வாங்கலாம் பயணிக்க கார் வாங்கலாம் சமூகத்தில் அந்தஸ்தை அடையலாம்.  விமானத்தில் பறக்கலாம் உயர்தர உணவகங்களில் உணவு அருந்தலாம். இவை எல்லாம் உனக்கு என்ன விதமான மாற்றங்களை தரும் நீ இன்பமாயும், சந்தோஷமாயும் இருப்பதாய் தோன்றும்   ஆனால் அது எல்லாம் எத்தனை நேரம் எத்தனை நாள் அதன் பிறகு உனக்குள்  நீ ஒரு வெறுமையை உணருகிறாய் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதும் வெறுமையை உணருகிறாயே   ஏன் அப்படி உணருகிறாய் காரணம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 68

பசிக்கும் பொழுது உண்ணவேண்டும்.  நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன?  நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன.  தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 67

மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.  விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன.  வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.  இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும்.  சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன.  விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை.  வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 66

நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே!  கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம்.  மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.    

துாய்மைபபடுத்திக் கொள்

நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.

உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்

துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது

நடந்து முடிந்ததைப் பற்றி வருந்தாதே

உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  65

காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை.  அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள்  சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  64

மேலும் காலமானது  வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி  பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது  நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது.  இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர  வேறு கிடையாது.  ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 12

ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 11

எவர்கள் ஒப்புயர்வற்றதும் பரிசுத்தமானதுமான பிரம்மபாவத்தை நாடவில்லையோ அவர்கள் பிறவியில் மனிதர்களாயினும் வாழ்க்கையில் மிருகங்களுக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்க்கை வீண். காணும் உலகைக் காணதது போல் கருதி ஒருவன் அனைத்தையும் பிரம்மம் என்று உணரவேண்டும். புத்திமானாகிய அவன் தன் மனதைச் சிதானந்த ரஸத்தால் நிரப்பி அந்த எல்லையிலா ஆனந்தத்தில் எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.

ஆதி. 9 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம்

உண்மையில் அப்படி யாரும் இல்லை.   அதனதனின் குண இயல்புக்கு ஏற்ப இணைந்து விலகுகின்றன  அத்தனை தான் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் மூன்று விதமான வர்ணத்தில் இருந்தாலும் ஒன்று இணையும் போது அதற்கு சம்பந்தமே இல்லாத நிறம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் கடவுள் என்று கூறுவது அறிவுடைமை  ஆகுமா இது போலவே பூதங்களின் இணைவும், விலகுதலுமே இந்த பிரபஞ்ச உற்பத்திற்கு கடவுள் தேவையில்லை காரணம் கடவுள் இல்லை பூதங்களின் கலப்பே பிரபஞ்சம் அப்படிப்பட்ட கலப்பை  நம்…

ஆ தி. 8 லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 2

இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம். பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம். உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை காரணம் கடவுளை காணமுடியாது. நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம் பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம் இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை

ஆதி.7  லோகாயதம் —  சார்வாகர்கள் —  நாத்திகம் 1

கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.  எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு கடவுளும் தப்பவில்லை.   பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால் சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.   சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.  சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.  லோகாயதவாதிகளின் தத்துவம் புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே…

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்  மதுரை மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமோகூர் திருத்தலம். தனி சன்னிதியில் 16 கரங்களுடன் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் திருக்கோலம், பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் திவ்விய தரிசன காட்சியாகும். இவரது 16 கரங்களிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. இவரது பின்புறம் நரசிம்மர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்த சக்கரத்தில் உள்ள 6 வட்டங்களில் 154 எழுத்துக்களும், 48 இறைவன் திருவுருவங்களும் அமைந்துள்ளன. இவரை தரிசனம் செய்வதால் பில்லி, சூனியம், ஏவல், கொடும்…

108 திவ்யதேசங்களில்

108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

சூன்ய முத்திரை

நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் :- இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும். பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும். காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம் மற்றவர்கள்…

வாயு முத்திரை:-

ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.  பலன்கள்: வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும். பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.    தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும். மூட்டுவலி குணமாகும்.    குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும். இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

பிராண முத்திரை:

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும்.    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும்.   நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும் களைப்பு நீங்கும்     நரம்புத் தளர்ச்சி நீங்கும்    பக்கவாதம் குணமாகும்   நினைவாற்றல் அதிகரிக்கும் ஆஸ்துமா,…

தனஞ்சேருவது

ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள்  இவைகள் கிடைக்கும்.  

சந்தோஷம் என்பது  18

மனிதர்கள் பலத்திற்காகவும் உன்னைவிட நான் உயர்ந்தவன்  என்று காண்பிப்பதற்காகவும் பிறரை அதிகாரம் செய்வதற்காகவும் ஆசைப்படுகின்றனர் அதனாலேயே பணம் மனித சமுதாயத்தில் மிக முக்கிய ஒரு இடத்தில் அமைந்துவிட்டது அதனாலேயே கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் பணத்திற்க்கு வேண்டி என்று ஆகிவிட்டது மனிதனால் உருவாக்கப்பட்ட அந்த பணம் எனும் பூதம் முதலில் மனிதனக்கு அடியைாய் இருந்தது ஆனால் இப்போது மனிதன் அதற்கு அடிமையாகி விட்டான் இதில் வியப்பிற்குரிய  விஷயம் என்ன வென்றால் தான் அடிமையானதை மனிதன் உணராமல் தானே…

சந்தோஷம் என்பது 17

இந்த பணம் மனிதனுக்கு எதிர்கால பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை தருகிறது. அது அவனுக்கு பலத்தை தருகிறது.  மேலும் பணம் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. அதிகார தாகம் மனிதனை எப்போதும் விடுவதில்லை.  அதனால் மனிதனும் பணம் மேலும்  பணம், மேலும், மேலும் பணம் என்று சேகரிக்கும் எண்ணத்தையும் ஆசையையும் விடுவதில்லை.

சந்தோஷம் என்பது 16

அவன் மனம் எதிர்காலத்தை சிந்திக்கும் போது அதனுடன் இணைந்து பணமும் வந்து விடுகிறது.  மனிதன் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர்காலத்திலேயோ வாழ்ந்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறான். மனிதனைப் பொருத்தவரை பணம் ஒரு பாதுகாப்பு தன்னுடைய எதிர்காலத்திற்க்கு பணம் மட்டுமே பாதுகாப்பு எனும் எண்ணத்தில் இருக்கிறான். அதனால், மனிதனின் எண்ணம் எதைச் சுற்றி சென்றாலும் பணத்தின் ஊடேயே அவனது எண்ணம் பயனிக்கிறது. 

நமது விதியை நாமே நிர்ணயிக்கிறாம்

மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம்; தங்களுடன்வாழ்பவர்கள் மீதோ, அல்லது தெய்வத்தின் மீதோ சுமத்துகிறhர்கள். அல்லது புதிதாகஅவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக் கொண்டு, அதைத் தலைவிதி என்றுசொல்கிறார்கள். விதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே, அதன் பொருட்டு துாற்றுவதற்கும் ஒன்றுமில்லை, பாராட்டுவதற்கும் ஒன்றுமில்லை

நமது நிலைக்கு நாமே காரணம்

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம்இருக்க வேண்டும் என்று விரும்புகிறேhமோ, அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடையமுன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால்உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை. ஏனவே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆற்றலை வீணாக்காதே

சிந்தனையின் தொண்ணுாறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோஒரு போதும் தவறு செய்வதில்லை. நல்ல எண்ணங்களை கருவிகளாகக் கைக்கொள் * நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியே வலிமைமிக்க ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதானால், அந்தஎண்ணங்கள், செயலுக்கு வரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக,…

ஆதி.6        

உபநிடதம் உடல் உயிர் ஆன்மா பிரபஞ்சம் போன்ற பல்வேறு பொருள்களை ஆராய்கிறது அதன் தன்மைகளை இயக்கங்களை முழுவதும் நாம் உணர போதிக்கிறது. பிரம்மத்தைப் பற்றி அது முடிவாய் கூறுவது என்னவென்றால் அனைத்திற்க்கும் மூலமும், ஆதியும் அதுதான் அதை அறிவைக் கொண்டு விளக்க முடியாது உணரத்தான் முடியும் மேலும் அது கூறுவது அறிவால் எதை சிந்திக்க முடியாதோ ஆனால் எது அறிவை சிந்திக்க வைக்கிறதோ அதுவே பிரம்மம்.  இதோடு, உபநிடதத்துவத்தை  நிறுத்திவிட்டு மற்றொரு தத்துவமான லோகதாய தத்துவத்திற்க்குள் போய்…

ஆதி.5        

உபநிடதம் என்பது உண்மையை கண்டறிய  செய்யப்படும் பயணம் காரணம், காரியம், இவைகளுக்கு உண்டான தொடர்பு அல்லது தொடர்பு இல்லாது போன்றவற்றை கண்டறிய ஆவல் கொண்டு செய்யப்படும் பயணம்.  இதில் அண்ட சாராசரம் முதல் அணு வரை அறிய முற்படுவதே இலக்கு ஆனாலும் பொதுவாய் சொல்வதென்றால் ஆத்மானுபவம் அறிவதே, பெறுவதே நோக்கம், இலக்கு என்றும் கூறலாம். அது மட்டுமல்ல இயற்கை, மனிதன், இவைகள் உண்டாவதற்க்கு காரணமான மூல சக்தி, இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பை, தொடர்பின் விகிதங்களை, அறிய …

ஆதி.4        

என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும் மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.  இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால் வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும் முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது…

ஆதி.3

உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால் உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.  இது முரண்பாடான கருத்தாக தோன்றும் காரணம் முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று விஷயம் என்னவென்றால் வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம், உபநிடத்தில்…

ஒவ்வொரு கெட்ட குணங்களும்

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும் பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும் எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள். பசிக்கும் போது உணவருந்துங்கள்.

சூரியன் 8

சூரியன், புதன் சேர்க்கை ஜல ராசியான கடகம், விருச்சிகம், மீனமாகில் ( 4, 8, 12ல் ) இருப்பின் கெமிகல், எலக்ட்ரிகல், இன்ஜினீயரிங் துறையில் கல்வி பயின்றால் நல்லது. சூரியன், புதன் அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு வீடுகளில் 1, 5, 9 இருந்தால் மெகானிகல், இன்டஸ்டிரியல் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர். சூரியன், புதன் சேர்க்கை பூமி ராசியான ரிஷபம், கன்னி, மகரம் வீடுகளில் 2, 6, 10ல் இருந்தால் சிவில் இன்ஜினீயரிங்கில் சிறந்து விளங்குவர்,…

சூரியன் 7

சூரியன் மிதுனராசியில் இருப்பின் ஜோதிடத்தில் நாட்டம் ஏற்படும். சந்திரன் சிம்மத்தில் இருந்து புதன் பார்த்தால் அவர் ஜோதிடத்தில் புலமை பெற்றிருப்பர், புதன் கன்னிராசியில் இருப்பின் கவிஞராகவோ, ஜோதிடராகவோ திகழ்வார். சூரியன் 1,4, 7, 10 கேந்திரத்தில் அல்லது 10ம் வீட்டதிபதி கேந்திரத்தில் அல்லது குரு லக்னத்தில் அல்லது 4ம் இடத்தில் இருந்தால் சிறந்த மந்திரியாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பர். சூரியனுக்கு 12ல் சனி இருப்பின் நாஸ்திக வாதம்புரிவர். சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தோர் அல்லது 10மிடத்தில் இருப்போர் பலர்…

வியான முத்திரை:-

வியான முத்திரை:- ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:_ தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும். தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும். இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும். தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும். கண் எரிச்சல் உள்ளங்கை…

வருண முத்திரை

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும். சிறுநீரக கோளாறுகள் அகலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடல் வெப்பநிலையை சமப்படுத்தும் ரத்த ஓட்டம் சீராகும் தாகம் குறையும் சதைப்பிடிப்பு நீங்கும் குடல் அழற்சி நீங்கும் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும். அம்மை நோய்…

பிருத்திவி முத்திரை

பிருத்திவி முத்திரை:- மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும். முடிஉதிர்வைப் போக்கும். உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும். சிந்தனைத் தெளிவடையும். ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வாயுத் தொல்லை நீங்கும். உடல் வெப்பநிலை சமனடையும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 65

பிணி (நோய்) தடுக்கும் கவசம் எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும், தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது.  இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம், இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது. இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது. மேலும் பெரும்பாலோர் வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 64

                யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத!                 யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ.                 தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்!                 ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும்.  இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும்.  எப்பிணியும் துக்கமே,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 10

காரணமாகிற மண்ணைப்பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவது போல் பிரம்மத்தையறிந்தால்  உலகம் அறியப்பட்டதாகிறது. அனைத்தையும், பிரம்மமென்று அறிந்து கொண்ட ஞானிகளுக்கு தியானிப்பதற்கோ தியானிக்காமலிருப்பதற்கோ, பேசுவதற்கோ, செய்வதற்கோ, செய்யமலிருப்பதற்கோ என்ன இருக்கிறது?

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 9

ஆகையால் நீ பிரம்மம்.  நான் பிரம்மம் அல்லன் என்பது மாயை.  மாயையினின்று உதிப்பது வேற்றுமை.  எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே வேர்.  பிரம்மம் ( மனதால் ) அறிய முடியாததென்றாலும், ஸ்வயம் பிரகாசமாயிருப்பதால் அனுபவிக்க முடியாததன்று. ( ஸத்யம் ஞானம் ஆனந்தம் ) பிரம்மும், ஸத்தியமும், ஞானமும் எல்லையற்றதாகும் என்ற வேதாந்த வாக்கியம் அதை விளக்குகிறது.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 8

 ஒரு பானைக்கும் மண்ணிற்கும் காரிய காரண சம்பந்தம் எப்பொழுதும் எப்படி இருக்கிறதோ அப்படியே வியவஹார உலகிற்கும், பிரம்மத்திற்கும் அதே சம்பந்தம் இருக்கிறது, இது சுருதியாலும், யுக்தியாலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பானை முதலிய மண்ணாலான பாண்டங்கள் எப்படி மக்கள் அறியாமற் போனாலும் மண்ணேயாகுமோ அப்படியே மக்கள் அறியாமற்போனாலும் அவர்கள் செய்யும் செயலெல்லாம் பிரம்மத்தினிடமே பிரம்மத்தின் மூலமே நிகழ்கின்றது.

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 5

3 – க்குரியவர் பலம் பெற்று 3 – இல், ராகு 8, 11 – க்குரியவரின் தொடர்பை பெற்று சுபரால் பார்க்கக்பபட்டால், இவர்களின் தசாபுத்தி அந்திர காலங்களில் எடுத்த காரியம் வெற்றி திடீர் தனப்பிராப்தி, ரேஸ் பந்தயம், சூதாட்டங்களில் லாட்டரி போன்றவகைளில் ஆதாயம் கிட்டும். 3 – இல் கேது அமர்ந்து லக்கினாதிபதி, குரு 9 – ஆம்பாவாதிபதி தொடர்பு கிடைத்தால், அன்னிய சகாயத்தால் முன்னேற்றமடைவர். உடன் பிறப்புக்களால் நன்மை இல்லை. மாமனார் வகை ஆதாயம்…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 4

3 –  ஆம் பாவதிபதி எந்த கிரகமோ, அந்த கிரகத்திற்கு பலம் பெற்ற கிரகம் நவாம்சப்படி மூத்தவர் எண்ணிக்கை ஆண் கிரகம் ஆனால் ஆண், பெண் கிரகங்களால் பெண், இதில் அலிக்கிரகங்களை தள்ளிவிட வேண்டும் எண்ணிக்கையில் மட்டும்.  3 – க்குரியவர் உச்சம் பெற்று, லக்கினாதிபதி, ராகு, குருவின் தொடர்பை பெற்று, 3 –  ஆமிடத்தை பாவர்கள் தீண்டினால் பல மாதர்களின் தொடர்பு கிடைத்துக்கொண்டே இருக்கும். இளம் வயது உள்ள பெண்களின் தொடர்பு அடிக்கடி கிடைக்கப்பெற்று இன்பமாக…

கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

பலம் பெற்ற 3 – ஆம் பாவாதிபதியோ, செவ்வாயோ, பலம் பெற்று மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளிலிருந்தால் அந்த ராசியை முதலாக கொண்டு, நவாம்சத்தில் அவர் உள்ள வீடுவரை எண்ணி வரும் எண்ணிக்கையை சொல்ல வேண்டும். மேற்படி கிரகம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியிலிருந்தால், அதற்கு 7 – ஆம் ராசியை முதலாக வைத்து, நவாம்சத்தில் எந்த ராசியில் உள்ளாரோ அது வரை எண்ணி உடன் பிறப்புக்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.…

மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர் 

ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால், இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒருவேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும்…

உன் கனவை நிறைவேற்று 

ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்

எல்லா ஆற்றல்களுக்கும் நீயே சொந்தக்காரன்

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று  மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க…

பாவம் போக்க

நம் முகத்தை முழுமையாக புருவ மையத்தில் கொண்டு வந்து, ஓடும் கலை வழியாக_காற்றை இழுத்து 3 மாத்திரை நிறுத்தி அடைத்த பாகம் வழியாக நிதானமாக விடவும். பின்பு மறுபடியும் புருவமையத்தில் நம் முகத்தைக் கொண்டு வந்து கண்களை திறக்கவும். _ பலன் — கண், காது , வாய், மூக்கால் செய்த பாவம் போகும். _

கீழாநெல்லிவேர்

கீழாநெல்லிவேர், திங்கட்கிழமை, சந்திரகலையில் வீட்டில் வைத்து இஷ்டதெய்வ படம் முன் வாசிசெய்ய காற்றுபேசும். தெய்வம் வீட்டில் நடமாடும்

ஆகாய முத்திரை:-

பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும். 1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்; 3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும். 4.உடல் கழிவுகள் வெளியேறும். 5.ஒற்றைத் தலைவலி குணமாகும். 6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும். 7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும். 8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். 9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும். 10.உடலில் ஜீவகாந்த ஆற்றல்…

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:

  கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். பலன்கள்:- 1.மனதை ஒருநிலைப்படுத்தும். 2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். 3.ஞாபக சக்தி அதிகாரிக்கும். 4.மனநோய், மனக்குழப்பம் தீரும். 5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும். 6.தலைவலி நீங்கும். 7.தூக்கமின்மை குணமாகும். 8.கவலை, கோபம் ஆகியவை விலகும். 9.தன்னம்பிக்கை அதிகரிக்கும். 10.மன அமைதி உண்டாகும். 11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும். 12 இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.  இம்முத்திரையை 20…

அஞ்சலி முத்திரை:-

நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும். இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.  பலன்கள் :- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும். உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும். உடல் முழுவதும் பிராண சக்தி…

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும்.  ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒற்றுமை

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது.   சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள் அவரைத் திட்டினார்கள்.  இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார்.  நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்.  நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்.  அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

உண்மைய ஒத்துக்கறியா?”

 “நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?” “ஐயா ஒத்துக்கறேன்யா!” “அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?” “ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!” “உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?” “ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க… ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி…

தலையில் சக்கரம் உள்ள நந்தியம்பெருமான்

வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும், ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை. நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.