காத்திருக்கப் பழகு 3

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு  2

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு பயிர் விளையும் வரை காத்திரு உலையில் அரிசி வேகும் வரை காத்திரு காய் கனியும் வரை காத்திரு எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு. செடி மரமாகும் வரை காத்திரு

காத்திருக்கப் பழகு 1

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: தியானம் செய்… !!! நான் அழைக்கும் வரை காத்திரு’. நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். பசிக்கும் வரை காத்திரு உடல் நீர் கேட்கும் வரை காத்திரு காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு சளி வெளியேறும் வரை காத்திரு

உரையாடலின் ஒரு பகுதி 67

எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள நிதானம் வேண்டும். ஆற்றல் வேண்டும் அவகாசம் வேண்டும். இதனுடன் செயல்படும் போது அனுபவம் வரும் அந்த அனுபவமும் வேண்டும். இது எல்லாவற்றையும் விட புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத ஆசை வேண்டும். இதெல்லாம் இருந்தால் மட்டுமே பெண்ணை புரிந்து கொள்ள முடியும் அப்பவும் முழுமையாய் அல்ல எனக்கென்னவோ தோன்றுகிறது இங்கு உள்ள ஜீவ ராசிகளை முழுவதுமாய் தெரிந்து கொள்ள முடியாது என்று.

உரையாடலின் ஒரு பகுதி 66

 பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது என்பது மிக பெரிய விஷயம். அத்தனை சுலபத்தில் கைகூடாது அதனால் தான் தகுதியுள்ளவனுக்கே திருமணம் என்று இருந்தது தகுதியை நிரூபிப்பது இப்போது திருமணத்தில் மட்டுமல்ல எந்த துறையிலுமே இல்லையென்பது தான் தற்கால நிதர்சனம். ஒரு விதத்தில் யோசித்தால் பெண் மலிவாகிவிட்டாளோ என்ற தோன்றுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 65

ஒரு காலத்தில் அவதாரங்களுக்கு கூட பெண்ணிடம் தன்னை நிரூபிக்க தன் தகுதியை, தன் திறமையை வெளிகாட்ட வேண்டியிருந்தது வேறு ஒன்றுமில்லை ராமனைத் தான் சொல்கிறேன். சீதையை மணமுடிக்க வில் ஒடித்து தன்னை நிரூபிக்க வேண்டி வந்தது. காலங்கள் செல்ல, செல்ல கல் தூக்குவது, காளையை அடக்குவது என்று வந்தது. மாயாஜால கதைகளில் ஏழுமலை, ஏழு கடல் தாண்ட வேண்டியிருந்தது. இப்படி எல்லாம் தன்னை நிரூபித்தாலே திருமணம் காரணம் வேறு ஒன்றுமில்லை. 

மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.

மது அருந்த

மது அருந்த கற்றுக்கொள் மது இறைவன் தந்த வரம் புரியாமல் இருக்காதே மதுவுக்கு மரியாதை கொடு அதை ஒரு பிரசாதம் போல் நிதானமாய் அனுபவித்து சாப்பிடு, உடம்பு பளப்பளப்பாகும்.  மனசு வீரியம் கொள்ளும்.  உன்னுடன் நீ பேசுவதும் உனக்கு புலப்படும். நீ அதை குடித்தால் தவறல்ல, அது உன்னை குடித்தால் அதைவிட பெரிய தவறு வேறு இல்லை. ஒரு வேளை கண்ணதாசன் இப்படித்தான் மது அருந்தி வரம் பெற்று இருப்பாரோ!

சுக்கிரன் 8

சுக்கிரன் 7ல் உள்ள ஜாதகருக்கு மனைவிக்கும் அப்பாற்பட்டு வேற்றுமாதர் தொடர்பு ஏற்படும். சுக்கிரனும், சந்திரனும் ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்கும்போது இரு ஜாதகங்களிலும் சஷ்டாஷ்டகமாக இருக்கக்கூடாது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருப்பின் திருட்டு சுகம் அனுபவிக்கும் இயல்பு உண்டு.

சுக்கிரன் 7

சுக்கிரன் களத்திரகாரகன், சனி,செவ்வாய், ராகு இவர்களுடன் சம்பந்தப்பட்டு 7ம் வீட்டோன் 5ல் இருந்தால் காதல் திருமணம் அமையும். சுக்கிரனது பலவீனமும், 7ம் வீட்டோனின் பலவீனமும் கொண்ட ஜாதகர், தன் மனைவியின் செயலால்தான் சம்பாதித்ததை எல்லாம் இழக்க நேரிடும். சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் சனிதசையில் மாபெரும் செல்வமும், சுபிட்சமும் தொழில் மேன்மையும் ஏற்படும்.

சுக்கிரன் 6

சுக்ரன் பலமுடன் இருந்தால் லட்சுமீ பூஜை மூலமாக ஞானவொளி பிறக்கும். சுக்கிரன் லக்னத்தில் தனித்து நின்றால் இருதாரயோகம் ஏற்படலாம். சுக்கிரன் 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், கலைத்துறையில், நாடகம், போன்றவற்றில் ஏற்பட வைப்பர்.

சப்த முனீஸ்வரர் 5

நாதமுனி : தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி. சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகின்றன

சப்த முனீஸ்வரர் 4

தருமமுனி : தருமச் செயல்களை காத்து,தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி. ஜடாமுனி : வனங்களை காப்பவர்,ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.  

சப்த முனீஸ்வரர் 3

வாழமுனி : வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி. தவமுனி : தேவர்கள்,ரிஷிகள்,யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

சப்த முனீஸ்வரர் 2

மஹாமுனி : அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார்.வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் மஹாமுனி ஆவார்.

சப்த முனீஸ்வரர்: 1

சிவமுனி : உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க, தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, உலக மக்களை காக்க படைத்தார். இவர்களில், சிவமுனி : சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17

7 – க்குரியவர் சாரம் பெற்று 8 – க்குரியவருடன் சேர்க்கை பெற்று 12 – இல் அமர்ந்தால், மனைவிக்கு நிரந்தர நோய்த்தொல்லை பீடிக்கும். இல்லறம் சோபிக்காது. மன அமைதி கெடும். சரிவர தூக்கம்வராது. 6 – இல் கேது 8 – க்குரியவர் சாரம் பெற்று, சாரநாதன் கேதுவுக்கு லாபம் பெற்று, கேதுவுக்கு நான்கு கேந்திரங்கலும் கிரகங்கள் நிற்கில், கேது தசாகாலம் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் பலம் ஏற்படும். 6 – க்குரியவர்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16

6 – இல் 8 – க்கரியவர் 3 – இல் கேது சாரம் பெற்று 9 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் நல்ல யோகம். இவர் தசையில் யோகம் தரும். இந்துடன் லக்கினாதிபதி லக்கினத்திற்கோ, சந்திரனுக்கு 11 – இல் இருப்பது மிக விசேஷம். சுக்கிரன் ( அ ) சனி இருவரில் ஒருவர் 6, 8, 12 – க்கு அதிபதியாகி 6, 8, 12 – ல் பரிவர்த்தனை பெற்றால், பெரும் ராஜயோகம் தரும்.…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15

2 – ல் ராகு, சனி, சந்திரன், சுக்கிரம் சேர்க்கை ஈனஸ்திரீகளால் கடன் ஏற்படும். 9 – இல் ராகு, 6 – க்குரியவர் சேர்க்கை பெற்று இருப்பின் விபசாரிகளால் கடன் ஏற்படும். 3 – க்குரியவர் நீச்சம் பெற்று, சனியால் பார்க்கப்பட்டு, 6 – க்குரியவர், 3 – க்குரியவர் சாரம் பெற்று, 8 – க்குரியவரால் பார்க்கப்பட்டால் 6 – க்குரியவர் திசையில் வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு பல வருடம் கழித்து ரோகம் நிவர்த்தியாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

2 – இல் பாவர், 10 – இல் பாவர் சுபர் சம்பாதிக்கும் பணத்தில் 25 சதவீதம் வீட்டிற்கு வரும். மீதி எல்லாம் கடன் விழுங்கும். 11, 12 – க்குடையவர் சேர்க்கை 12 – இல் ராகுவுடன் சம்பந்தப்பட்டால் விபசாரிகளால் கடன் ஏற்படும். 5, 9 – இல் குரு இருப்பின் சாப்பட்டு வகை, விருந்தினர் உபசாரம் சுப செலவுகளால் கடன் ஏற்படும். யாத்திரை வகை, புத்திர புத்திர வகை குடும்பச் செலவு இவைகளால் கடன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

புதன், சனி சேர்க்கை, வாத ரோகத்தால் தொல்லை தரும். எங்கு இருப்பினும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. 4, 5, 8,12 – ல் சுபர் சம்பந்தம் பெற்றால் இவர்கள் தசாபுத்தியில் கடன் தீரும். 2, 10, 11 – இல் பாவர் இருந்து பாவர் பார்த்தால், இவர்கள் தசாபுத்தி அந்திரங்களில் கடன் தொல்லை பொறுக்க முடியாது.

வித்தியாசமான கணக்குகள் 3 பெருக்கல்:

பெருக்கல்: மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை மனிதன் × கவலை = தற்கொலை மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி மனிதன் × இயலாமை = அவதி மனிதன் × அன்பு = மனிதாபிமானம் மனிதன் × ஆசை = வக்கிரம்

வித்தியாசமான கணக்குகள் 2 கழித்தல்:

மனிதன் – தன்னம்பிக்கை= தோல்வி மனிதன் – கவலை = உற்சாகம் மனிதன் – ஆனந்தம் = சோம்பல் மனிதன் – இயலாமை = முயற்சி மனிதன் – அன்பு = குரோதம் மனிதன் – ஆசை = அமைதி

வித்தியாசமான கணக்குகள் 1 கூட்டல்:

கூட்டல்: மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி மனிதன்+கவலை = கண்ணீர் மனிதன்+ஆனந்தம் = புன்னகை மனிதன்+இயலாமை = கோபம் மனிதன்+அன்பு = காதல் மனிதன்+ஆசை=காமம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 49

தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான், நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 48

இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 47

உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 46

ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 45

இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.

நாகரீக வாழ்க்கையின் கேடு

மலச்சிக்கல் வருவானேன்? உண்பது எளிதாயிருப்பது போல் மலக்கழிவும் சாதாரணமாய் ஏன் நடக்கக்கூடாது? சுலபமாய் இஷ்டம் போல் வாயில் பொருள்களைக் கொட்டிவிடுகிறோம். இவ்வளவு சுலபமாக மலத்தையும் கழிக்கச் சக்தியில்லையா?

சுந்தர யோக சிகிச்சை முறை 132

இப்பெருங்குடலை இரண்டு, மூன்று, நான்காவது சேக்ரல் நரம்புகள் ( SECRAL NERVES ) ஆளுகின்றன இடுப்புக்கிரந்திகள் வழியாக “ ஸிம்ப தெடிக் “ கும் (SYMPATHETIC SYSTEM ) வேலை செய்கின்றது. இந்நரம்புகள் எல்லாம் மிகப் பொடி நரம்புகளாக மலப்போக்குக் குழாய்  மேல் முடிகின்றன. இவைகளில் தான் முக்கிய செயல் சக்தியுண்டு.

சுந்தர யோக சிகிச்சை முறை 131

போக்கு உணர்ச்சி மலம் வெளித் தள்ளப்படத் தயாராகி கடைசி இடத்திற்கு வந்தவுடன் மலப்போக்கு உணர்ச்சி உண்டாகிறது.   மலம் அங்குள்ள நரம்பு முனைகளைத் தூண்டி உணர்ச்சி தருகிறது. பல காரணங்களால் இதை அலட்சியம் செய்கிறோம். பல தடைவைகள் தந்தியடித்து பதில் வராமலிருக்கவே நரம்புகள் வேலை நிறுத்தம் செய்கின்றன. மறுபடியும் உணர்ச்சி வருவதில்லை, மலமும் வெளிப்போவதில்லை. சிக்கல், நிலை உண்டாகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 130

ஆரோக்கிய காலங்களில் இச்சலனங்கள் நடக்கின்றன. நோயில் இவைகள் தடைபெறவே உள்ளிருக்கும் சாமான்கள் அழுகி, விஷங்களைக் கக்கி, அபாயத்திற்கிடமாகின்றன.  சிறுகுடல் சீகம் மூடி( LLEO CAECAL VALVE ) யிலிருந்து ரெக்டத்திற்குவர சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும். இங்கு வந்த பிறகு, சில மணி நேரம் தங்கியே ரெக்டத்திற்குள் செல்லுகின்றது. இங்கு அதிகச் சரக்கு சேரவே, இங்குள்ள  காலன் ம‍டிப்பு உயர்ந்து ரெக்டத்திற்குள் தள்ளி, மலத்தை வெளியேற்றுகிறது இந்த வேலைக்கு டயாப்ரமும் வயிற்றுச் சதைகளும் தேவையான இறுக்கத்தால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 129

ஆறில் ஒரு பங்கு ஜீரணத்தை உள்ளிழுக்கும் வேலை சீகத்திலும் “ ஏறு காலனி “ லும், நடக்க வேண்டும்.  அதற்காகவே இப்பாகங்களுக்கு மட்டும் இவ்வளவு சலனங்களுமுண்டு.   இக் “ காலனில் “ இதர பாகங்களுக்குத் தள்ளும் ( PERISTALSIS ) சக்தி மட்டும் தான் உண்டு.

சுக்கிரன் 5

சுக்ரன் லக்னத்தில் நின்றுவிடில் வசதிகளோடு நாகரீகமாக நாலுபேர் மெச்சும்படி வாழ்வர், சுக்கிரன், சனி இருவரும் 10 இடத்தில் இருப்பின் வீர்யசக்தி இழந்தவராய் இருப்பர். சுக்ரன், சந்திரன் சேர்ந்து 1,5,7,8,9மிடங்களில் இருந்தால் ஜாதகர் வாழ்க்கை துணையினை பிரிந்து வாழ நேரிடும்.

சுக்கிரன் 4

சுக்கிரன் நின்ற இராசிக்கு அடுத்த இராசியில் தனியே சந்திரனிருந்தால் திருமணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கையும், பார்வையும் எந்த வீட்டில் ஏற்பட்டாலும் ஆண், பெண் சுக வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் நாசமாகிவிடும். சுக்கிரன் செவ்வாயோடு ஆறாம்பாவதிபனோடு சேர்ந்து இருந்தால் மனைவி மூலம் துக்கம் ஏற்படும்.

சுக்கிரன் 3

சுக்கிரனோடு சனி, செவ்வாய் சேர்ந்து சனி, செவ்வாய் வீட்டில் நின்றால் இல்லறம் சிறக்காது, செல்வமும் இருக்காது. சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து 7, 8ல் இருப்பின் சில சமயம் கொலைபாதகம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கும். சுக்கிரனும் , செவ்வாயும், இராகுவும் ஒரே ராசியிலிருந்தால் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படக்கூடும்.

சுக்கிரன் 2

சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர், எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர். இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால், ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.

சுக்கிரன். 1

சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும் லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும், இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர். சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின் சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும். செழிப்போடும் வாழ்வர்.  சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.

வியாழன் 16

குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள். குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின் அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர். குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது.  குழந்தைகள் குணம் கெட நேரிடும். குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும், சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர். குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம்,…

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா..

ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். அந்த ஊரில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்…

அன்போடு 2

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான் இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்….? உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான் இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான் நான் எடை அதிகமாக…

அன்போடு…. 1  

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா நல்லா தானே இருக்கு என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   2

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.  இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.  குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   1

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.  அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.  ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’  ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள்.…

நல்லது கெட்டதுகளுக்கு யார் காரணம்? 

ஒருநாள், அந்த துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம். ‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா? ’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.  துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே…

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என்…

புகையிலை வரலாறு..

கி . பி. 1405 – ல் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழி காண புறப்பட்டார்.  அப்போது வழியில் மேற்கிந்திய தீவில் தங்க நேரிட்டது.  அவர் கியூபாவைச் சுற்றி பார்த்தபோது அங்கிருந்த கியூபா நகரவாசிகள் சோளத்தட்டை சருகைச் சுருட்டிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதைப் பார்த்த கொலம்பஸ் அதிசயித்து தான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.  அது உலகப் பழக்கமாகி விட்டது.  இதுதான் புகையிலை வரலாறு..

சைக்களில் சாதனை பயணம் செய்த இளம் பெண்

 நீ ஒரு பெண் உன்னால் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் முடியாது இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் அதையெல்லாம் தகர்த்து ஒரு பெண் 4,500 கிலோ மீட்டார் சைக்கிளில் பயணம் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர் பெயர் அனாஹிதா ஸ்ரீபிரசாத் என்ற இளம் பெண் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிரை இவர் வெற்றிபயணம். பெண்கள்  பாதுகாப்புப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டார். 2015ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கி சந்தித்த…

தலைநகரம் பிறப்பெடுத்தது எப்படி?

1639 – ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆக்ரா இந்தியாவுக்கு தலைநகராக இருந்தது. மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தனர். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார். 

எந்த மனிதன்

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான். பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

எந்தவிதக் கொள்கையும்

சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அடக்கம்

அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன் சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

6 – க்குடையவர், 7 – இல், 5 – க்குடையவர் 6 – இல் ராகுவுடன் சேர்ந்தால் நீர் வியாதி, இளைப்பு போன்ற ரோகமும், சத்துருக்களால் தொல்லையும் ஏற்படும். புத்திரங்களுக்கு நோய் ஏற்படும். 6 – க்குரியவர் 4, இல் 8, 11 – லிருப்பின் சூதாட்டம், ரேஸ், குடிப்பழக்கம் இவைகளால் கடன் ஏற்படும். மனைவி வர்க்கத்தில் அவமானம் தரும். மூத்திர இருச்சின ரோகம் ஏற்படும். மகரம், மிதுனம், லக்கினமாக குரு நீச்சம் பெற, சுக்கிரன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11

6, 12 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று இருப்பின் இளம் வயதில் குன்ம நோய் ஏற்படலாம். 6 – இல் சந்திரன், கேது சேர்க்கை இருப்பின் ரத்த குஷ்ட நோய் ஏற்படும். 1 – க்குரியவர் 8 – இல் சனி, புதன், ராகு சேர்க்கை மத்திம வயதிற்கு மேல் வாத ரோகம் ஏற்படும். 1- க்குரியவர் 6 – இல் ( அ ) 12 – க்குரியவர் 1 – இல் மிருகங்களால் பயம்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

6 – இல் செவ்வாய் இருந்து, 6 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று இருப்பின், இளம் வயதிலும், அந்திம வயதிலும் கடுமையான உஷ்ண நோய் உண்டாம். 6 – இல் குரு, 12 – இல் சந்திரன் இருப்பின் இளம் வயதில் வயிற்று வலி, குடல், நோய் உண்டாம். 6 – இல் இராகு, சந்திரன், சனி, இருப்பின், 1 – க்குரியவர் 6 – லிருப்பின் மத்திம வயதில் கொடி ரோகம் உண்டாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

சூரியன், செவ்வாய் பரிவர்த்தனம் பெற்றாலும், எதிர் கேந்திரம் பெற்றாலும், அம்சத்திலிருப்பினும், அடிதடி சண்டையில் தொல்லை ஏற்பட்டு கஷ்டம் ( அ ) மாரகம் ஏற்படலாம். 1, 2, 7 – ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பினும், சூரியனையோ ( அ ) செவ்வாய் பார்வை பெற்றாலும் கடுமையான நோய்கள் ஏற்படும். 8 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை ( அ ) 8 – இல் சனி 12 – இல் செவ்வாய் இருப்பினும்,…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 6

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 5

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 4

மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 3

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2

உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 1

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 44

மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 43

அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது; நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது. ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி , மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதனால் நம் மதத்திற்க்கு எந்தவித தீங்கும் இல்லை. அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும். ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல. உலகிலுள்ள அனைவரையும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 42

நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது. நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 41

நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உருவாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும் ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ;…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 40

விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 17

 நமது உடலில் உள்ள இரத்தத்தை முற்றிலுமாக தூய்மையான வீரியமுள்ள நல்ல இரத்தமாக மாற்றி வைத்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயை தாமாகவே குணப்படுத்திக் கொள்ளும். தன் உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும். இப்படி நம் உடலில் உள்ள இரத்தத்தைச் சுத்தமாக்குவது மூலமாக அனைத்து நோய்களையும் எந்தவொரு மருந்து, மாத்திரை, மருத்துவர், இல்லாமலும் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே உணவு குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று உழைப்பு, தூக்கம் இந்த ஐந்தையும் சரி…

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 16

இரத்தத்தில் எல்லாப் பொருளும் தேவையான அளவு தரமான பொருளாக இருந்தால் இரத்தம் தானாக ஊறும். நமது உடம்பில் உள்ள எலும்பு மஜ்ஜைகள் அதற்குத் தேவையான எல்லாப் பொருளும் கிடைத்தவுடன் 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தத்தை உருவாக்கும். இப்படி ஒவ்வொரு சொட்டாக உருவாக்க ஆரம்பித்து 120 நாட்களில் உடலில் உள்ள அனைத்து இரத்தத்தையும் மொத்தமாக புதிதாக மாற்றி விடும்.

இரதத்தைச் சுத்தம் செய்யும் வழி 15

உடல் உழைப்பு நமக்கு எவ்வளவு தேவை எப்படி உழைக்க வேண்டும் என்பது, உழைப்பின் மூலமாக இரத்தத்திற்கு, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருளை நல்ல முறையில் எப்படிக் கலப்பது என்பதைத் தெரிந்து கொள்வது ஐந்தாவது இரகசியம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 14

சுவாசிக்கும் காற்றை எப்படி சுவாசித்தால் காற்றில் உள்ள பொருள்கள் நல்ல பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைக் கற்றுக் கொள்வது மூன்றாவது இரகசியம். நமது தூக்கத்தை எப்படி ஒழுங்கு செய்தால் தூக்கம் மூலமாகக் கிடைக்கும் ஆகாய சம்பந்தப்பட்ட பொருள்கள் நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்கும் என்பதை கற்றுக் கொள்வது நான்காவது இரகசியம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 13

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகும். எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து நல்ல பொருள்களாக இரத்தத்தில் கலக்க வேண்டும் என்பதைகற்றுக் கொள்வது முதல் இரகசியம். குடிக்கும் நீரை எப்படிக் குடித்தால் நீரில் உள்ள பொருள்கள் நல்ல முறையில் ஜீரணமாகி இரத்தத்தில் கலக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது இரண்டாவது இரகசியம். 

 இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 12

உடல் உழைப்பு மூலமாக நமது இரத்தத்திற்கு நெருப்பு சக்தி கிடைக்கிறது. சாப்பிடும் உணவு மூலமாக இரத்தத்திற்கு மண் சம்பந்தப்பட்ட பொருள் கிடைக்கிறது, குடிக்கும் நீர் மூலமாக நீர் சம்பந்தப்பட்டபொருள் கலக்கிறது. சுவாசிக்கும் மூச்சுக்காற்று மூலமாக காற்று சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. தூக்கத்தின் மூலமாக ஆகாயம் சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. உழைப்பின் மூலமாக நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் கலக்கிறது. ஆக மொத்தம் இரத்தத்தில் மொத்தம் ஐந்து வகையான பொருள்கள் உள்ளது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 11

இரத்தத்தில் சூடு இருந்தால் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்போம் இரத்தத்தில் உள்ள சூடுதான் ஒருத்தருடைய சுறுசுறுப்புக்கு ஆதாரம். சிலர் கூறுவார்கள் நீ சின்ன பையன், இள இரத்தம். இரத்தம் சூடாக இருக்கிறது. அதனால் தான் நீ வேகமாக இருக்கிறாய். அமைதியாக இரு என்று கூறுவார்கள். நமக்கு 80 வயது 100 வயது ஆனாலும் இரத்தத்தை சூடாக வைத்திருப்பது எப்படி என்ற இரகசிய வித்தை தெரிந்திருந்தால் 100 வயதிலும் நாம் குழந்தையைப் போல சுறுசுறுப்பாக…

 இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 10

நாம் உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் உடல் முழுவதும் கொப்பளங்களும் புண்களும் வரும். உடலில் அசைவுகள் இருக்க வேண்டும். நாம் உழைக்க வேண்டும். உழைப்பு என்ற இயக்கம் இரத்தத்திற்கு உஷ்ணத்தைக் கொடுக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது ஏன் ஒரு இடத்தில் அமராமல் ‘துரு துரு’ வென ஏதாவதுஒரு வேலையை செய்து கொண்டேயிருக்கிறோம்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 9

நெருப்பு [உழைப்பு] இரத்தத்திற்கு சூடு தேவைப்படுகிறது. இரத்தம் சூடாக இருந்தால் தான் வீரியம். நாம் கை, கால் அசைப்பதன் மூலமாக உடலில் உள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அசைவுகள் என்ற உடல் உழைப்பைக் கொடுப்பது மூலமாக அது இயக்க சக்தியாக மாறி வெப்பசக்தியாக மாறி இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 8

 ஆகாய சக்தி என்ற காலியிடம் இரத்தத்தில் இருக்கிறது. இது குறையும் பொழுது நமக்கு தூக்கம் வரும். தூங்கினால் இது அதிகரிக்கும். அதிகரித்தால் நமக்கு சக்தி கிடைக்கும். எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூங்காமல் உலகத்தில் யாரும் உயிரோடு இருக்க முடியாது. எனவே தூக்கத்தின் மூலமாக இரத்தத்திற்கு ஆகாய சக்தி என்கிற சக்தி கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 7

ஆகாயம் [தூக்கம் நான்கு நாள் தூங்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? எனவே தூக்கமும் ஒரு மருந்து. தூக்கத்தின் மூலமாக ஆகாய சக்தி எனப்படும் காலியிடம் இரத்தத்தில் கலக்கிறது. உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் காலி இடம் இருக்கும். இரும்பில் கூட காலியிடம் இருக்கும். ஆனால் அது கண்ணுக்குத் தெரியாது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 6

நீர் நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள் சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது. இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர். எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன. தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா? எனவே தண்ணீரும் மருந்துதான். அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 5

உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம். ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம். எனவே காற்றும்ஒரு மருந்து தான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச்சென்று நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன. எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் காற்று வழியாக கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 4

காற்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. உணவு மட்டுமே மருந்து என்று கூறினால் உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா?

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 3

இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இது மண் சம்பந்தப் பட்ட பொருள்கள். நாம் சாப்பிடுகிற உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருள்கள் உள்ளது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருள்கள் எனப்படும்.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 2

இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.1. நிலம் [உணவு] [மண் நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 1

நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம். அந்த சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜைகள். அது சுரக்கும் நீரின் பெயர் சுத்தமான “இரத்தம்”. இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதே இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி

இதை புரிந்ஞசுக்க முடியுமா

இதை புரிந்ஞசுக்க முடியுமா – முடியுதா? மனிதர்களை அதிகம் நேசிக்க கூடாது.  உறவாகட்டும், நட்பாகட்டும் அதிகமான நேசிப்பு பிரச்சனையை தருது. பிரச்சனையில்லாம இருக்கனும்னா ஒரு எல்லையை வகுத்துக்கறது நல்லது. அது கணவன், மனைவி, காதலன், காதலி, அண்ணன், தம்பி, இன்னும் இப்படி எத்தனையோ எங்க பிரச்சனை வருதுன்னு பார்த்தா நேசிகப்படுகிறவர்களின் தனிமை கெடுது அதாவது ( INDUJUVALITY) கெடுது அதானல மனசோட மூலையில் சின்னதா வர்ர எதிர்ப்பு காலப்போக்குல வன்மமாகி,பெரிய மன உளைச்சல தந்துறுது இன்னொரு விஷயம்…

வாழ்க்கையின் ஓட்டமே

வாழ்க்கையின் ஓட்டமே அடுத்தவர்களின் அபிப்பராயத்தில் தானே முக்கால் பாகம் ஓடுது. இப்படி இருக்கும் போது அவரவர் வாழ்க்கை என்பது எது, ஏது அடுத்தவர்களின் அபிப்பராயத்தை ஒதுக்க முடியுமா? முடியாது என்றால் அவரவர் வாழ்க்கையை அடையாளம் காணுவது எப்படி? அடுத்தவர் நம்மை அடையாளம் கண்டு கொண்ட பின்தான் நாம் நம்மை அடையாளம் காணவேண்டுமா? அப்படி அடையாளம் கண்டாலும் மாறுதல் ஏதாவது இருக்குமா? அப்படி மாறுதல் இருந்தாலும் அதை வெளிப்படையாய் சொல்ல முடியுமா? சொல்லித்தான் ஆகவேண்டுமா புரியவில்லை காரணம் புரிந்து…

மனதை கொண்டு தேடும் முறை

ஆதிசேஷன் என்று சொல்கின்ற பொழுது அது ஒரு மிகப் பெரிய பாம்பு . அது ஆயிரம் தலைகளை உள்ளதாக இருக்கிறது, அது பாற்கடலில் மிதந்த வண்ணம் தன் உடலை நாராயணனின் படுக்கையாகவும் தன் தலையைக் குவித்து அவருக்கு குடையாக வைத்துள்ளது என்றால் அது ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாத விஷயம் ஆனால் சூக்‌ஷும நிலையில் வேறு பொருள் தெரியவரும் ஆயிரம் ஆசைகளை அடங்கிய நிலையில் தன்னிடம் அவற்றை பணிந்து, தலை குனிய வைத்து, அந்த ஆசைகள் எழ முடியாத…

வாழ்க்கை சுவையானது.

வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள். பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும் பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும் அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல இரட்டை வழிப் பாதைகள் அன்பில் வணிகத்திற்கு இடமில்லை வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

வெற்றி – இது ஒரு சொல் 4

பகிர்ந்து கொள்ளுதல் – இலக்கை அடைவதன் பயனை – அடைய பட்ட சூழ்நிலைகளை தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அது  மேலும் இலக்கை நோக்கி பயணிக்க உதவும் நிறைய பேருக்கு உந்து சக்தியாகவும் இருக்கும்.

வெற்றி – இது ஒரு சொல் 3

பின்பற்றுதல் – இலக்கைப் பற்றிய சிந்தனையும், தொடர்ந்து பயணிக்க தேவையான விஷயங்களை, விடாப்பிடியுடன் பின்பற்றுதல், இலக்கை அடைய முயற்சிக்கும், முயற்சியில் ஏற்படும் தடைகளை கண்டு சோர்வுறாமல் வைராக்கியத்துடன் உறுதியாய் இருந்து குறிக்கோளை நோக்கிப் பயணித்தல்.

வெற்றி – இது ஒரு சொல் 2

தெளிவு – உன்னுடைய குறிக்கோளில் உனக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து விடு உனக்குள் தெளிவை, உன்னுடைய குறிக்கோளில் தெளிவை உண்டாக்கிக்கொள்.  படைப்பு – உன்னுடைய குறிக்கோளை, அதை அடைந்த, அதில்அடைந்த வெற்றியை உனது மனதில் உருவாக்கு, – கொண்டாடு.

வெற்றி – இது ஒரு சொல், 1

வெற்றி – இது ஒரு சொல், ஆனால் இதை அடைய நீ என்னன்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? அது தெரிந்தால் அதாவது வெற்றிக்குப் பின் இருப்பவைகளை நீ தெரிந்து கொண்டால் உன் முன் வெற்றி நிற்கும், முதலாவது – பார் – எதை என்று நீ கேட்டால் உன்னை என்பதே பதில் முழுவதும் உன்னைப் பார்.  உன் அனுமதி வேண்டாமல், இயங்கும் ரத்த ஒட்டம் இதயத் துடிப்பு போன்றவற்றைப் பார். அப்போது உனக்குப் புரியும் இறைவ‍னின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 128

சக்தி இழுப்பு சீகத்தைப் பற்றி முன்னமேயே விவரித்தோம்  ஜீரணமான பொருள்கள் இதற்குள் தான் வந்து விழுகின்றன. இதில் விழும் குழம்பான பொருளிலிருந்து, நீர்ச்சத்து கிரகிக்கப்பட வேண்டும். மிகுதியானவை மேலே உயர்த்தித் தள்ளப்படவேண்டும். இக்காரியங்கள் கைகூட இப்பாகத்திற்குப் பலவிதமான சலன சக்தியுண்டு. அதாவது, மேலே தள்ளுவது ( PERISTALSIS ) கீழே தள்ளுவது ( ANTI PERISTALSIS ) பக்க ஆட்டம் எல்லாம் அமைந்திருக்கின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 127

இதை “ காலன் “ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றார்கள்.  இது சரியான பெயர்! இதை பய பக்தியாய் கவனிக்காவிட்டாலோ, கால ( யம ) னிடத்தில் கண்டிப்பாய் சேர்த்துவிடும் என்ற அர்த்தமிருப்பதால் இப்பாகத்தை நாமும் “ காலன் “ என்றே அழைப்போம். இதைப் பல பாகங்களாகப் பிரிக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தொழிலும் அமைப்பும் மாறுபடும் சீகம், ஏறு, இறங்கு காலன் குறுக்குக்காலன், சிக்மாய்ட் ( SIGMOID )  என்ற பாகங்கள் கடைசி பாகம், ரெக்டம் அல்லது மலக்குழாயில் சேர்ந்து…

சுந்தர யோக சிகிச்சை முறை 126

இ று க் க ம் – ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்பட வேண்டும். வயிற்றுக் குழியின் சதைச்சுவர்கள் சதா உள்ளடங்கிய கருவிகளை அமுக்குகின்றன. மேலே அமைந்திருக்கும் “ டயாப்ரமும் “ ஒவ்வொரு சுவாச உள்ளிழுப்புக்கும் கீழிறங்கி, வயிற்றுக்குழியில் அமைந்த கருவிகளை அமுக்கி இக்குழியில் வெளிச்சதைகளால் உண்டாக்கப்பட்ட இறுக்கத்தை அதிகப்படுத்துகின்றன. இந்த கூடத்தில் இக்குழியில், இவ்வளவு வைபவத்துடன், மலத்திற்கு ராஜாவாய் நிற்கிறது பெருங்கடல்,

சுந்தர யோக சிகிச்சை முறை 125

ஒவ்வொரு கருவியும் தம் தம்மிடத்தில் பெரிடோனியத்தில் நிறுத்தப் பட்டுள்ளது. இது வயிற்றுச் சுவரில் ஒட்டியிருந்தாலும், சில இடங்களில் அதைவிட்டுவிலகி, கருவிகளைப் போர்வை போல் மூடியும் சிலவற்றுடன்  ஒட்டிக்கொண்டும் இருக்கிறது பெருங்குடலில் இது பரவும் பொழுது, மேஸெண்ட்ரீஸ்  ( MESENTRIES ) என்று அழைக்கப்படுகிறது. இவைகள் ரத்தக் குழாய் போவதற்கு இடம் கொடுக்கின்றன. இந்த பெரிடோனியம் தனியாய் நிற்குமிடங்களிலெல்லாம் ஒரு விதமான வழுக்கும் ரசம் பரவி இருக்கிறது. இதன் மகிமையால் உள் அடங்கிய கருவிகள் மேலும், கீழுமாய் உறுத்தலின்றி…

சுந்தர யோக சிகிச்சை முறை 124

இக்குழியில் எங்கோ பெருங்குடல் அசைக்க முடியாமல் ஒட்டப்பட்டிருக்கிறதென்று நினைக்க வேண்டாம். இச்சதைப் பெட்டியின் உட்பாகத்தை மிருதுவாய் அமைக்க, பெரிடோனியம் ( PERITONEUM ) என்ற தெளிவு சதை  ( MEMBRANE ) கோணிப்பை போல் அமைந்து, பல அங்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இதன் மேல், ஒன்றன் மேலொன்றாய், கண்டபடி கருவிகள் குவித்து வைத்திருக்கப்படவில்லை.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 5

உணவு மூன்று வேளைதான் சாப்பிடுகிறோம் ஆனால் காற்று 24 மணி நேரமும் சுவாசிக்கிறோம் எனவே காற்றும்ஒரு மருந்து தான். காற்றில் உள்ள ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் மூக்கின் வழியாக நுரையீரலுக்குச்சென்று நுரையீரலின் வழியாக இரத்தத்தில் கலக்கின்றன எனவே இரத்தத்தில் காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள் காற்று வழியாக கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 4

காற்று உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். உண்மை. உணவு மருந்தாகச் செயல்படும். ஆனால் உணவு மட்டுமே மருந்தாகச் செயல்படாது. உணவை சரியான முறையில் ஜீரணம் செய்வதால் நோய்கள் குணப் படுத்தலாம். ஆனால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது .உணவு மட்டுமே மருந்து என்று கூறினால் உணவை மட்டும் சரியாக சாப்பிட்டு விட்டு மூக்கை அடைத்து வைத்துக் கொண்டால் உயிரோடு இருக்க முடியுமா?

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 3

இரத்தம் என்பது உணவு மட்டும் கிடையாது. உணவு நேரடியாக இரத்தமாக மாறுவது கிடையாது. உணவு இரத்தத்தில் சில பொருட்களைக் கலக்கிறது. இது மண் சம்பந்தப் பட்ட பொருள்கள். நாம் சாப்பிடுகிற உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருள்கள் உள்ளது. இவை மண் சம்பந்தப்பட்ட பொருள்கள் எனப்படும்

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 2

.இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.1. நிலம் [உணவு] [மண்] நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன.

இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 1

நமது உடம்பில் ஒரு சுரப்பி உள்ளது. அது சுரக்கும் ஒரு நீரைக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்தலாம். அந்த சுரப்பியின் பெயர் எலும்பு மஜ்ஜைகள். அது சுரக்கும் நீரின் பெயர் சுத்தமான “இரத்தம்”. இரத்தத்தில் எல்லாப் பொருளும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பதே இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி

காலில் சங்கிலியுடன் அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர். இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார். ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம்…

திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில்

முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் இங்குள்ள கடலில் தினமும் நண்பகல் வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

ஸ்ரீவாஞ்சியம்

ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

ஸ்ரீதரஐயாவாள் திருமடம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை….கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன். ரொம்ப சரி…அது கழுகே தான், என்றான் அர்ஜுனன். மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை… என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே…! அது…

வியாழன் 15

குரு புத்திரகாரகர், 5ம் இடத்தில் புத்திர ஸ்தானத்தில் வீட்டில் வீற்றிருந்தால் அந்த ஜாதகர் ஒரே ஒரு புத்திரனைப் பெறுவர். குரு சந்திர கேந்திரத்தில் இருந்தால் ‘’ கஜ கேசரி யோகம் ‘’ ஏற்படும்.  செல்வம், பெயர், புகழ் ஏற்பட்டு செல்வாக்குடன் வாழ்வர். குரு, தன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ சந்திரனுக்கு, லக்னத்திற்கு கேந்திர கோணத்தில் இருப்பின், செல்வந்தராகவும், நீண்ட ஆயுள் உடையவராகவும் திகழ்வர். குரு சந்திரனுக்கு 6,8, 12ல் வீற்றிருந்தால் சகடை யோகம் உண்டாகிறது. சகடையோகத்தில்…

வியாழன் 14

குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நால்வரும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினதிலேயே இருப்பார்களானால் அப்பெண் மிக அதிர்ஷ்டசாலி, நற்குணவதி புத்திர பாக்கியத்துடன் வாழ்வர். வியாழனின் 5ம் வீட்டையோ அல்லது லக்னத்திற்கு 5ம் வீட்டையோ குரு, செவ்வாய் இருவரும் பார்ப்பின் புத்திர சோகத்தால் அந்த ஜாதகர் அவதிபடுவவர். குருவானவர் சந்திரனை கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ இருந்து பார்வை செய்யின் அந்த ஜாதகர் ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்று பல ஜோதிட புத்தகங்களை எழுதி பேறும் புகழும் பெறுவர்.

வியாழன் 13

குருவிற்கு 5ல் சூரியன் இருக்கும்போது வக்கிரம் ஏற்படுகிறது, வியாழனக்கு 9 ல்சூரியன், வரும்போது வக்கிரம் நிவர்த்தியாகிறது. குருவுக்கு 6,7,8ல்  சூரியன் இருந்தால் வியாழன் வக்கரம் பெற்ற இருக்கும். குரு, சனி, புதன், சந்திரன், செவ்வாய் கூடி 10மிடத்தில் இருப்பின் ஜாதகன் அவரது உழைப்பால் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.

வியாழன் 12

குருவின் பார்வையோ, சேர்க்கையோ 10மிடத்து அதிபனுக்கு இருந்தால் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். புதன் தொடர்பு இருப்பின் வங்கி ஆடிட்டராக திகழலாம். குருவுக்கு கேந்திர திரிகோணங்களில் செவ்வாய், சுக்கிரன், சனி நின்றால் யோகம் விருத்தியடையும். வியாழன் ஆட்சி, உச்சமேறி லக்கினத்தையோ, சந்திரனையோ பார்த்தோ, இணைந்தோ இருப்பின், நீதி தாண்டாத குண அமைப்பு இருக்கும்.

வியாழன் 11

குரு போன்ற சுப கிரகங்கள் நான்கு கேந்திரங்களில் தனித்தனியாக இருப்பின் அந்த ஜாதகர் ராஜயோகத்தை அடைவர். குரு விருச்சிக லக்னகாரகர்களுக்கு 3ம் இட நீசகுருவும் சரி, 9ம் இடம் உச்ச குருவும் சரி திருமண வாழ்க்கையில் குறைபாடுகள்தான் அதிகம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 39

நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 38

ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 37

அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 36

ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும்.

ஒவ்வொரு நாளும் காலம்

ஒவ்வொரு நாளும் காலம் நம் உடம்பை தின்று கொண்டிருப்பது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை காலன் மனிதனின் காலுக்கு அடியிலோ, முதுகுக்கு பின்னோ இருப்பதை அவன் அறிவதில்லை. மாயை மறைக்கிறது என்ற நினைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு என்ன நினைப்பது? எப்படி நினைப்பது?

வெற்றியாளர்கள்

திறமையற்றவர் என்று யாரும் இல்லை தனக்கு எதில் திறமை என்று அறியாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம் அவர்களே உலகத்தோரின் கண்முன் தோல்வியாளர்களாக தென்படுகின்றனர். அவரவர்களுக்கு எதில் திறமை என்று அறிந்தவர்கள் அதை சரியான சந்தர்பத்தில் மிக சரியாக பயன்படுத்தி வெற்றியாளர்களாக உலகோர் முன் காட்சி அளிக்கின்றனர்.

லோகாதாய வாழ்க்கையினால்

உலகாதாய இலக்குகளை அடைய அதை பற்றிய வெளி உலக அறிவை பெற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் நம் வாழ்வை அதனோடு மட்டுமே என்று இருக்கும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கும் லோகாதாய பயனால் நம்முள் அகங்காரம் வளர்கிறது. அது நாம் பிறறை மதிக்க வேண்டும் மூத்தோர்களை குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது அது மட்டுமல்லாமல் சுய நலமும் எவேராடும் ஒட்டாத பண்பும் எதையும், எவரையும் மிக அலட்சியபடுத்தும் தன்மையும்…

நமது கலாச்சாரம் 3

நமது பெண்கள் மேலை நாட்டு பெண்கள் போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் (அதாவது உடை, ஒழுக்கம், வேலை, அறிவு) நாம் நமது கலாச்சாரத்தை இழந்துவிடுவோம் இது ஏனோ நமக்கு புரியவில்லை காரணம் நமது பெண்கள் தங்களின் தூய தவ வாழ்வை இழக்க நேரிடும் அதனாலேயே அந்த மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் வேண்டாம் என்று நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது.

நமது கலாச்சாரம் 2

ஏதாவது காரணம் சொல்லி நம் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டே இருந்தால் இழப்பு நமக்கும் நமது அடுத்த தலைமுறையினர்க்கும் அடுத்தது மிக முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும் தான்.

நமது கலாச்சாரம் 1

இந்திய நாட்டின் மிக பெரிய சொத்து எது என்று கேட்டால் அதனுடைய கலாச்சாரம் தான். கலாச்சாரம் என்று நாம் எதை குறிப்பிட்டு சொல்லுவது உண்மையில் நம்முடைய கலாச்சாரம் என்பது நம்முடைய வாழ்க்கை முறைதான் நம் வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் ஆகட்டும், உடையாகட்டும், பேச்சு அதாவது மொழி, கலை, தினசரி நாம் மேற்கொள்ளும் பணிகள் நமது நம்பிக்கைகள் இது அனைத்தும் சேர்ந்தது தான் நமது கலாசாரம்,

மயிலாடுதுறை மயூரநாதர் கங்கையில் நீராடிய பலன்

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்

திருவெள்ளியங்குடி கருடாழ்வார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

அருள்மிகு பருத்தியூர் ராமர் ஆலயம்,

 திருவாரூர் மாவட்டம் கொடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம், ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பரவசமூட்டும் பருத்தியூர் ராம பரிவாரம். ராமாயண சொற்பொழிவுகள் செய்து நூற்றிற்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது.

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில் இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள். இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

கல்வியின் பயன் 6

இது வரை சொன்னவற்றை தொகுத்தால் கல்வி அறிவை தர வேண்டும் அறிவு ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அன்பு அருளை தரவேண்டும் அருள் துறவை தரவேண்டும் துறவு வீடுபேற்றை தரவேண்டும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உரையில் இருந்து.

கல்வியின் பயன் 5

இப்போதய கல்வியின் முறை பொருளாதாரத்தைக் பெறுவதற்கு மட்டுமே அடிப்படை உந்து சக்தியாய் இருக்கிறது அந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் குறைவு ஆனால் ஒழுக்கத்திலும் அன்பிலும் இருந்து வாழ்ந்தவர்கள் அதிகம் இந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் மிக, மிக அதிகம் ஆனால் ஒழுக்கத்திலும், அன்பிலும் இருப்பவர்கள் இல்லையென்று சொல்லும் அளவிற்க்கு குறைவு. 

கல்வியின் பயன் 4

நம் முன்னோர்கள் கல்வி என்பது எதை செய்யும் அதை கொண்டு நாம் எதையெல்லாம் செய்யலாம் என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இப்போது நாம் சிந்திக்க வேண்டியது நமது கல்வி முறை நம்மை வீடு பேறு வரை அழைத்துச் செல்லுமா என்று சிந்தித்தால் கேள்விகுறிதான் பதிலாக இருக்கிறது.

கல்வியின் பயன் 3

அடுத்து ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அடுத்து அன்பு அருளை தரவேண்டும் அடுத்து அருள் துறவை தரவேண்டும், அடுத்து துறவு வீடு பேற்றை தரவேண்டும் இப்படி பார்க்கும் போது சரியான கல்வி நம்மை வீடு பேற்றிற்க்கு அழைத்து செல்லும்

கல்வியின் பயன் 2

அடுத்து அறிவானது ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கத்தை தராத அறிவு அறிவே அல்ல ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி அறிவு தந்து அந்த அறிவு ஒழுக்கத்தை தரவில்லையென்றால் அந்த கல்வியே தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்வியின் பயன் 1

கல்வியின் பயன் நம்மை எங்கே அழைத்துச் செல்லுமென்று பார்ப்போமேயானால் அது நம்மை முழுமைக்கு அழைத்து செல்வதை காணலாம். மனிதராக பிறந்த நாம் வீடு பேறு அடைவதே முழுமையாகும். அதற்கு அடித்தளமாய் மூலமாய் இருப்பது கல்வியாகும். கல்வி நமக்கு அறிவை தரவேண்டும். அறிவை தருவதே தரவேண்டியதே சரியான கல்வியாகும்.

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2  ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 1 

 ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.  குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.  குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு  கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.…

இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே 

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். ‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார். இரண்டு எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய…

எனக்கு சுமை குறையப்போகிறதா?

 ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ஏன்  எனக் கேட்டான் எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா?” என்றது.  நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

விதிமீறல்கள் இயற்கை 5

அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான் கால்கள்  இடறிக் கீழே விழுந்து விடுகிறோம்.. கொசு மாதிரி சாப்பாட்டுக் அலையக் கூடாது.  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வரவைக்கனும்..