*விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள
ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது.
விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை
மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல,
விபீஷண கீதை நமக்கு உதவுகிறது.
*ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை.
*அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும்,
ஜீவத்மா பக்தி, துறவறம் மற்றும் குருவின் அருளால் பரமாத்மாவை அடையக்கூடிய வழிகளையும் விளக்குகிறார்
. இது வராஹ புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
*பாரத கீதை* – ஸ்ரீமத் பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை
இறைவனின் மகிமையை அழகாக வெளிப்படுத்துகிறது.
மனம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் ஒரு ஆர்வலர் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை விளக்குகிறது.
அதேவேளை பாரதனின் மகத்துவத்தை நமக்குக் காட்டுகிறது,
பாரத வர்ஷா என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் நாட்டிற்கு வழங்கப்பட்ட பொருத்தமாக பெயர்.
