அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…
