தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.
இனிய இசையின் ராகங்களை ஒத்த மொழிகளை பேசும்
நல்ல வாசனையுடைய மேனியை உடைய
யாமளை யாகிய பச்சை கிளியே
முன் பிறவிகளில் நின் திருவருளை பெற
பலகோடி தவங்களை செய்தவர்கள்
இப்பூமியின் உள்ளசெல்வமாகிய அரசு செல்வம் போன்ற இவற்றை மட்டுமா பெறுபவர்கள்
யாவரும் மதிக்கின்ற தேவர்களுக்குறிய வானுலகத்தை
ஆளும் செல்வத்தையும் என்றும் அழியாத மோட்சமாகிய வீட்டையும்
அல்லவா பெறுவார்கள்.
