அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே. பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர் நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து…
