அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே, என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே. மும் மூர்த்திகளின் தாயே உலகின் உயிர்கள் அனைத்திற்கும் பிறவி பிணியை போக்குவிக்கும் அருமருந்தே முற்பிறப்பின் நின் அடியார்களின் பின் சென்று அவர்களுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து பிறவி பிணியை நீக்கும் தவங்களை செய்து வைத்த நான் உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று…