அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே மாணிக்கமே – மாணிக்கத்தின் ஒளியே அப்படி ஒளிரும் மாணிக்க கற்களால் செய்த ஆபரணத்தை அணிந்தவளே நீ அந்த ஆபரணம் அணிந்ததால் அந்த ஆபரணத்திற்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகி இருப்பவர்களுக்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகாமல் இருப்பவர்களுக்கு நோய் போன்றவளே உன்னை அணுகிய பக்தர்களுக்கு பிறவியெனும் நோயை போக்குபவளே,…