வரலாறு
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது
தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.
ஒரு வட்டம் போட்டு வாழ்வது தப்பில்லை ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று பிடிவாதம் பிடிப்பதுதான் தப்பு
வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…
56) சந்திரனும் 2 – க்குடையவரும் கூடி நிற்க, செவ்வாய் திரிகோணமடைய லக்கினாதிபதி நீச்சம் பெற்று, 3 – க்குடையவரோடு கூடி நிற்க ஆடையின்றி தரித்திரம். 57) சந்திரனும், 2, 6, 12 – க்குடையவர்களும் லக்கினத்திற்கு 2 – க்குடையவர்களும் ஆகிய நால்வரும் 6 – ல் நிற்க, மனத்துயரத்தோடு காலம் கழிப்பார்.
54) 4, 11 – க்குரியவர் கூடி 9 – இல் நிற்க, செவ்வாய் பார்க்க ( பி ) சந்திரன், செவ்வாய், 2, 4 – க்குரியவர்கள் நால்வரும் கூடி 2 – ல் நிற்க ( சி ) 6, 4, 11 – க்குரியவர்கள் 2 லிருந்து, சந்திரன் பார்த்து, லக்கினத்தில் குரு இருக்க ( டி ) சந்திரன், செவ்வாய், 9 , 11 – க்குரியவர் நால்வரும் திரி«£கணத்தில் நிற்க…
சந்திரன் பலமுள்ள ஆண்களுக்கு இவரது தசையில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். சந்திரன் 10ம் வீட்டோடு தொடர்பு இருந்தால் அரசு அந்தஸ்து உண்டு. சந்திரன் விரையத்தில் இருந்தால் மனநிலை பாதிக்கப்படும். சந்திரனிலிருந்து 6,7,8ஆம் வீடுகளில் கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தால் பாபாதி யோகம் ஏற்படும். சந்திரன், ராகு இருவரும் ஒன்று கூடி 8ல் இருந்தால் மனஅமைதி குறையும்.
கல்வி, வித்தை, பற்றி ஜோதிடம் நமக்கு எத்தனையோ விதிகளை கொடுத்திருக்கிறது. அந்த விதிகள் அனைத்தும் நம்மால் கை கொள்ள முடியாது. ஆனால் அதில் சில விதிகளையாவது அனுஷ்டிக்கலாம். அப்படி செய்வது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரமாகும். வித்யாரம்பம் என்று சொல்லப்படும் கல்வி கற்க ஆரம்பிக்கும் முதல் நாள் திருவோணம், புனர்பூசம், பூசம், மிருகசீரிஷம், அவிட்டம், ஸ்வாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, அஸ்தம், சித்தரை நட்சத்திரங்கள் முதல் தரமானது. அஸ்வினி, ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி…
கடவுள் அவனவனுக்கே உரிய பொருள். அத்தொடர்பே நிலையானது. இறைவனிடத்து அவனவன் கொள்ளும் அன்பின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு, ஒருவன் அவனை உணர்கிறான். அஞ்சற்க யாரோ ஒருவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பதாக எப்பொழுதும் எண்ணிக்கொண்டிரு.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.