உங்களிடம் நீங்கள்
உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.

உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.
பல தப்புக்களை செய்து தப்பி விடுகிறது இளமை பாவம் அதற்கு தண்டனை அனுபவிக்கிறது முதுமை.
குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே. கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது. கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை. சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை. தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை
ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.
கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன். பட்டவரைக்கும் பலன் உண்டு. முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.
நகமும் சதையும் போல் வாழ்க்கை. மாதா செய்த பாவம் மக்கள் தலையில். கொடுப்பதற்கும், சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். முட்டிக் கொள்ளும் முன்பே குனிய வேண்டும். எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்.
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை. கற்றவனிடத்தில் வித்தை காட்டாதே. புத்திமான் பலவான் ஆவான். நீள நீளத் தெரியும் மெய்யும், பொய்யும்.
வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பபடமாட்டான்
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.