நினைத்தது
நினைத்தது நடக்காத சூழ்நிலையை எப்படி கையாள்கிறோம்… என்பதில் தெரிந்துவிடும் நம் முதிர்ச்சி

இராம கீதை – II* – ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் இடையிலான உரையாடல். இது உலகத்தை துறப்பதை காட்டிலும் ஞானத்தை ஈட்டுவதை வலியுறுத்தும் அனுபத்வைதிகளின் வேதமாகும். இது தத்வ சாரண்யத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ரிபு கீதை* – ரிபு முனிவர் அவரது சீடர் நிதாகருக்கு அறிவுத்தியவை. இது அத்வைத வேதாந்தத்தை கையாளும் ஒரு பாராட்டுக்குரிய கீதை. மேலும் சிவன் மற்றும் சைவ வழிபாடு தொடர்பான உபபுராணங்களில் ஒன்றாக சிவரஹஸ்ய புராணத்தின் இதயத்தை இது உருவாக்குகிறது.
ஜனக கீதை* – அரண்மனைக்கு அருகே சித்தர்கள் பாடிய பாடலைக் கேட்டபின் ஜனக மஹாராஜர் எழுதிய தனிப்பாடல். இராம கீதை – I* – ஸ்ரீராமருக்கும் அவரது சகோதரரான ஸ்ரீ லக்ஷ்மணருக்கும் இடையிலான உரையாடல். இது அத்வைத வேதாந்தத்தில் இருக்கும் ஜீவா, அவித்யா, ஈஸ்வர, மாயா போன்ற பல்வேறு கொள்கைகளையும், நித்திய ஜீவனான, ப்ரம்மத்தை உணர்ந்து கொள்ளும் வழிமுறையையும் விளக்குகிறது. இது ஆதியாத்மா இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அனு கீதை* – பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் தான் பகவத் கீதையை மறந்துவிட்டதால் அதை மீண்டும் சொல்லும்படி கேட்கும்போது, அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், அதை மறுபடியும் கூறுவது சாத்தியமில்லை என்று கூறி, கீதையின் தொடர்ச்சியாக இந்த கீதையை விளக்குகிறார். ப்ரம்ம கீதை* – வசிஷ்ட முனிவருக்கும் ஸ்ரீராமருக்கும் இடையிலான உரையாடல். இது யோக-வசிஷ்டத்தின் நிர்வாண ப்ரகரணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கீதையில், பிரம்மம், உலகம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் தன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
3 அவதூத கீதை* – ரிஷி தத்தாத்ரேயருக்கும் ஸ்கந்தனுக்கும் (கார்த்திகேயன்) இடையிலான உரையாடல். இது ஜீவன்முக்தா அல்லது முக்தியடைந்த ஆன்மாவின் மிக உயர்ந்த உணர்தல்களை வலியுறுத்துகிறது. 4 பகவத் கீதை* – மஹாபாரத போருக்கு முன்னதாக கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல். வாழ்வின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கீதையின் மிகப்பிரபலமான வடிவம் இது.
1 குரு கீதை* – சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்குமான உரையாடல். இது ஒரு ஆன்மீக ஆசானின் (குரு) அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் மையப்படுத்தி அவரது மகத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. இது ஸ்கந்தபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. 2 அஷ்டவக்ர கீதை* – ஜனக ராஜன் மற்றும் ரிஷி அஷ்டவக்ரருக்குமான உரையாடல் இது. இது அத்வைத வேதாந்தம், பற்று மற்றும் சுயம் உணர்தலைப் பற்றியது. இது மனித உடலின் பலவீனங்களுக்கு அப்பால் உள்ளார்ந்த ஆத்மாவின் மேன்மையையும், அதற்கு அஷ்டவக்ரரை அடையாளப்படுத்த, அதன் துன்பங்களையும்…
யதார்த்தமான உண்மை – தந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வேண்டுமென்றாலும் மகனை பள்ளியில் சேர்ப்பதென்றாலும் மகளுக்கு திருமணம் நடத்தி பார்க்க _வேண்டுமென்றாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் நடக்க வேண்டுமென்றாலும் பணம் தேவை. மனிதனின் அன்றாட வாழ்க்கை பணத்துடன் முடிச்சு போட பட்டிருக்கிறது. பணமானது எப்போதும் மனிதனின் நேர்மையை சோதித்துக் கொண்டே இருக்கும்.
பல பேருக்கு உறவு என்பது ரொம்ப உயர்வாயும் புனிதமாயும் தெய்வீக தன்மைமிக்கதாயும் ஆரம்பத்தில் மயக்கி காதலாகி செக்ஸில் முடியும் ஆனால் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டுமே செக்ஸில் ஆரம்பித்து பொறுப்புடன், வளர்ந்து கெளரவமான நட்பு எனும் பெயரால் காதல் எனும் அன்பில் முடியும். இதை புரிந்து கொள்ள மனம் கஷ்டப்படும். ஆனால் புரிந்து கொண்டால் மட்டுமே இதில் உள்ள நேர்மை உண்மை புரியும் புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.
தர்மத்தின் பல பரிணாமங்களை அறிவதற்கு 14 வித்தைகளை கற்க வேண்டும் அந்த 14 வித்தைகள் என்பது வேதங்கள் 4, வேதாதங்கள் 6 எழுத்துக்களின் தன்மையையும் உச்சரிப்பையும் விளக்குகிற சிட்சை இலக்கணத்தை விளக்குகிற சிட்சை இலக்கத்தை விளக்குகிற வியாகரணம் செய்யுள் விதிகளை காட்டுகிற சந்தஸ் எந்தெந்த வார்த்தைகள் உருவாகின்றன என்பதை கூறுகிற நிருக்தம் வான சாஸ்த்திரத்தை விளக்குகிற _சோதிடம், யாகங்களுக்கான உண்டான கல்பம் இந்த ஆறு அங்கங்களை கொண்டு வேதத்தை சரியாக ஒத வேண்டும் அதுவே _ஷடாங்கம் அதுவே…
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.