உரையாடலின் ஒரு பகுதி 101
தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.

தர்மம் தன்னை காப்பவர்களை தர்மம் காக்கும் தர்மத்தை அழிப்பவர்களை தர்மம் அழிக்கும் தர்மம் என்பது உண்மையான திருப்தியை தருவது, மகிழ்ச்சியை பரப்புவது.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான…
ப்ருத்ருஹரியின் நீதி சதகம் அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே விஷேச- ஞானலவ _துரீவிதக்தம் ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி.. இதன் பொருள் – அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம் அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம் மிக குறைவாகவே அறிந்து எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.
ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனதளவில் இறந்து போக தொடங்கினால் அதற்கு பிறகு அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது நிற்கவும் நிற்காது.
எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.
காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.
எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி. எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…
அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்
இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.
வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.