குணங்களின் தன்மை 1
தமோ குணம் – சோம்பாலன நிலை, எதையும் சாதிக்காத மந்தநிலை இதனால் தனக்கோ, பிறருக்கோ, உலகிற்க்கோ எந்த பெரும் பயனும் ஏற்படாது.
தமோ குணம் – சோம்பாலன நிலை, எதையும் சாதிக்காத மந்தநிலை இதனால் தனக்கோ, பிறருக்கோ, உலகிற்க்கோ எந்த பெரும் பயனும் ஏற்படாது.
உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம் அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய் என்று அர்த்தம்……! நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே
துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.
தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும்
அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……
நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…
நமக்கும் இவ்வுலகிற்க்கும் இவ்வுலகம் போல் அல்லது இதற்கும் மேற்பட்ட அண்ட பகிரண்டங்களையும் நாம் காண, அறிய, புரிய, உள்ள ஒரே கருவி நமது மனம் மட்டுமே உடல் பொறிகளும், புலன்களுடனேயே செயல்படும். ஆனால் மனம் இவைகள் இல்லாவிட்டாலும் செயல்படும் மனோவேகம் நம்மாள் கணக்கிட முடியாத வேகமாகும். இந்த அளவு ஆற்றல் உள்ள மனதை புரிந்து அதை நமக்கு பணியாளாகக்கொண்டால் நாம் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய முடியும். நாம் ஏமாந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நாம் அடைந்தது, அத்தனையும்…
அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’ என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்…
மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.
நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது? .
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.