ஆபத்தானது
நல்லவராக இருப்பது சிறந்தது தான்.. ஆனால், நல்லது கெட்டது தெரியாத நல்லவராக இருப்பது ஆபத்தானது
பசிக்கும் பொழுது உண்ணவேண்டும். நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன? நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன. தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.
மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம். விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன. வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன. இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும். சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன. விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை. வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.
நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே! கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம். மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
நமது வாழ்க்கை சிறந்ததாகவும், துாய்மையுடைவதாகவும் இருந்தால் மட்டும்தான். உலகமும் சிறப்பும், துாய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்,… நாம்அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக்கொள்வோமாக.
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல். இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறhர்கள். உயர்ந்த இலட்சியம்கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும்இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான்உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பதுமேலானது
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்துவருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும், சிந்தனையும், செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில்வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன்மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்லஎண்ணங்களும், செயல்களும், ஒரு நுாறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைஎப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக…
காலத்தினால் தான் அன்னபானாதிகள் முதலிய கருமங்கள் ஆகிறது விபரீதத்தினால் ஒரு காலமும் ஆகிறதில்லை. அகாலத்தினால் பிராணிகளுக்கு மரணம் முதலியவைகள் சம்பவிக்காது. அகாலத்தில் ஒருவனை நூறு பாணத்தினால் அடித்தாலும் அவனுக்கு சம்பவிக்கிறதில்லை, கால சம்பிராப்தியாகில் ஒரு துரும்பே வஜ்ராயுதம் போல் அவனைக் கொல்லும். அகாலத்தில் வருஷாதிகளால் பல புஷ்பங்கள் உண்டாகிறது போல் சலம், அக்கினி, விஷம், அஸ்திரம், ஸ்திரி, ராஜன் குலம் இவைகளால் மனிதர்களுக்கு அகாலமிருத்யு சம்பவிக்கிறதென்று பண்டிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
மேலும் காலமானது வருடங்களாகவும், அயனங்களாகவும், ருதுக்களாகவும், மாதங்களாகவும், பக்ஷங்களாகவும், வாரங்களாகவும், நாட்களாகவும், காலை, மத்தியானம், சாயங்காலம், இரவு, ஜாமம், நாழிகளாகவும் பரிணமித்து இருக்கின்றது. மேலும் லோபாதி குணங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கி பிராணிகளின் வாழ் நாட்களை காலமானது நாசஞ் செய்துக்கொண்டிருக்கின்றது. இந்த காலத்திற்கு எதிர்மாறு ஞான யோகாப்பியாசம் தவிர வேறு கிடையாது. ஆகையால் கால சக்கிரத்தை மீள இஷ்டப்படுகின்றவன் ஞான யோகாபியாசஞ் செய்ய வேண்டியது.
ஒப்புயர்வற்ற ஆனந்தத்தின் உறைவிடமாகிய பிரம்மத்தைப் பரத்துவமென உணர்ந்து உண்மையைக் கண்டு கொண்டவர்கள் அதில் சரண் புகுகின்றனர். நீரில் கரைந்து போன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது, நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்திலூடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரயங்களால் அறிய முடியாது. தீர்க்கதரிசியாகிற குருவின் கருணை நிறைந்த உபதேசத்தால் ஏற்படும் ஞானம் கண்விழிப்பால்தான் அறிய முடியும். அவ்வுபதேசமாவது, உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று, நீ பிரம்மமே.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.