பழ மொழிகள் 9
ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.

ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.
கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன். பட்டவரைக்கும் பலன் உண்டு. முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.
நகமும் சதையும் போல் வாழ்க்கை. மாதா செய்த பாவம் மக்கள் தலையில். கொடுப்பதற்கும், சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். முட்டிக் கொள்ளும் முன்பே குனிய வேண்டும். எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்.
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை. கற்றவனிடத்தில் வித்தை காட்டாதே. புத்திமான் பலவான் ஆவான். நீள நீளத் தெரியும் மெய்யும், பொய்யும்.
வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பபடமாட்டான்
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,
நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!
கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…
நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
உணவுண்ட ஆறேழு மணி நேரத்திற்குப் பிறகே இவை செய்ய வேண்டும். உண்டவுடன் செய்தால் ஜீரணக்கருவிகள் கெடும். பயிற்சியும் சரியாக வராது. நெளலியை நின்றும் செய்யலாம் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாம் குதிகளைத் தூக்கி அவைமேல் உட்கார்ந்து கைகளைத் தொடைகளுக்குள் அடக்கமாய்ப் பூமியிலூன்றி, தலைநிமிர்ந்து நெளலி செய்யப் பழக வேண்டும். இந்த சாதனையில் அரை நிமிடம் வரை நிற்கப் பழகவும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.