எரிந்து மறைதலும்,
எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.
எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்கலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும் அழிக்க முடியாது இது ஒளி கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மை, மரணமும் அப்படிதான் விலக்கவோ, மறுக்கவோ முடியாது.
பெண் மனதை ஆண் கணிக்க முடியாதா நிச்சயம் முடியாது உண்மையை சொன்னால் ஆண்களுக்கு அதில் அக்கறையோ, கவனமோ இல்லை நதியின் ஆழத்தை படகு அறியாது நீரின் போக்கில் செல்வதே அதற்கு சுலபம் அதன் பயனும் அதுதான். பெண் மிக புத்திசாலி எப்போதும் அவள் ஆண்களிடம் சிக்குவதே இல்லை சிக்கியது போலிருப்பாள் அதுதான் அவளுக்கு வசதியும் கூட.
அற்பம் என எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் புல்லும் வைரமும் ஒன்றுதான். இரண்டுக்கும் ஒரே மூலக்கூறு கார்பன் தான். இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இந்த பஞ்சபூதங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. இதை புரிந்துகொண்டால் நாம் பக்குவப்பட்டு விடலாம் பக்குவப்பட்டுவிட்டால் துன்பம் நம்மை அணுகுவதில் இருந்து தப்பிவிடலாம்
எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் தேவையில்லை எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தேவையில்லை எல்லா விமர்சனங்களுக்கும் வியாக்கியானம் தேவையில்லை அவற்றை விளக்க முயற்சிக்கையில் நாம் தர்க்கவாதியென முத்திரை குத்தப்படுவோம் பதில் கூறுகையில் நாம் எதையும் ஏற்றுக்கொள்ளாதவராகி விடுவோம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும் நம்மை பிறர் கேட்கும் கேள்விகளுக்கும் என்றும் வித்தியாசம் உண்டு ! வினா என்றுமே ஒன்று விடை என்றுமே வேறு கேட்பவரை பொறுத்து அது தன்னை உருமாற்றிக்கொள்ளும் ! சொல்லியும் விளக்கியும் அறிந்து கொள்ளமுடியாத நிறைய உணர்வுகள்…
காலம் எப்போதும்சொல்லிக்கொண்டிருக்கும் பாடங்களில் ஒன்று வலிமையைவிட நுட்பமே பலமும் பயனும் நிறைந்தது என்பது. ஒன்றை நீங்கள் அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை அடுத்தவர்கள் அறிந்த கொள்வது இயற்கைதானே.
ஆசை, பகை இரண்டும் காட்டினில் விளையும் நெருப்பைப் போல பரவிக்கொண்டே ஆற்றலை பெருக்கிக்கொண்டே இருக்கும் முடிவு என்னவென்று பார்த்தால் அவை அழித்துக்கொண்டே இருக்கும் இங்கு வரும் வினா எல்லாவிதத்திலும் அழித்தல் தவறா என்பதுதான் அதற்கு பதில் அழித்து பழகியது ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் அழிக்கும் எனென்னறால் அழிக்க வேண்டியது எதை என்பதை பற்றி சிந்திக்கும் அறிவு போய்விடும் அங்கு அகங்காரமும், ஆணவமும் குடிகொள்ளும் பிறகென்ன எல்லாம் அழியும். ஒரு விதத்தில் பார்த்தால் பகை வளர்க்காத அரசும் பலம்…
இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும். இதைத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் மன்னன் அன்று கொல்லுவான், தெய்வம் நின்று கொல்லும் என்று. எட்டுவழி சாலையோ , 2000, 3000 அடி ஆழத்தில் உள்ள எண்ணை வளங்களோ எவையாயினும் இதுவே விதி. விதை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை இடம் தராது. அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் பூமியில் நிலைத்து வாழ முடியாது. காரணம் இயற்கை அது தனக்கு எதிரானதாக கருதிக்கொள்கிறது.
அரசில் இருப்பவர்கள் எதை செய்தாலும் அது அவர்களின் சொந்த நலனுக்காக தான் இருக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் அன்றைய அரசர்கள் முதற்கொண்டு இன்றைய அரசாங்கம் வரை அப்படிதான் நடந்த கொள்கிறது.
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை நாளும் நமக்கு அது புரிவதில்லை நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் தான் நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வ லித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….
திருஒற்றியூரில் உள்ள எல்லை அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலில் அங்கே சென்று, அந்த தெருவிலே சுமார் 50 மீட்டர் தொலைவு சென்றால் அங்கே,பல கடை மற்றும் வீடுகளுக்கு இடையில் ஒரு கோவிலுக்கான வாயில் இருக்கும். அங்கே வழிகாட்டி பலகையும் இருக்கும். அதனுள்ளே 2 அல்லது 3 வீடுகள் தாண்டி சென்றால், ரோம மகரிஷி ஜீவசமாதி இருக்கும்.
வாழ்க பொருளுடன்.–
வளர்க அருளுடன்.